புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை – உன்னில் நீ! Poll_c10சிறுகதை – உன்னில் நீ! Poll_m10சிறுகதை – உன்னில் நீ! Poll_c10 
5 Posts - 71%
Manimegala
சிறுகதை – உன்னில் நீ! Poll_c10சிறுகதை – உன்னில் நீ! Poll_m10சிறுகதை – உன்னில் நீ! Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
சிறுகதை – உன்னில் நீ! Poll_c10சிறுகதை – உன்னில் நீ! Poll_m10சிறுகதை – உன்னில் நீ! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை – உன்னில் நீ! Poll_c10சிறுகதை – உன்னில் நீ! Poll_m10சிறுகதை – உன்னில் நீ! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சிறுகதை – உன்னில் நீ! Poll_c10சிறுகதை – உன்னில் நீ! Poll_m10சிறுகதை – உன்னில் நீ! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சிறுகதை – உன்னில் நீ! Poll_c10சிறுகதை – உன்னில் நீ! Poll_m10சிறுகதை – உன்னில் நீ! Poll_c10 
11 Posts - 4%
prajai
சிறுகதை – உன்னில் நீ! Poll_c10சிறுகதை – உன்னில் நீ! Poll_m10சிறுகதை – உன்னில் நீ! Poll_c10 
9 Posts - 4%
Jenila
சிறுகதை – உன்னில் நீ! Poll_c10சிறுகதை – உன்னில் நீ! Poll_m10சிறுகதை – உன்னில் நீ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிறுகதை – உன்னில் நீ! Poll_c10சிறுகதை – உன்னில் நீ! Poll_m10சிறுகதை – உன்னில் நீ! Poll_c10 
3 Posts - 1%
jairam
சிறுகதை – உன்னில் நீ! Poll_c10சிறுகதை – உன்னில் நீ! Poll_m10சிறுகதை – உன்னில் நீ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிறுகதை – உன்னில் நீ! Poll_c10சிறுகதை – உன்னில் நீ! Poll_m10சிறுகதை – உன்னில் நீ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிறுகதை – உன்னில் நீ! Poll_c10சிறுகதை – உன்னில் நீ! Poll_m10சிறுகதை – உன்னில் நீ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சிறுகதை – உன்னில் நீ! Poll_c10சிறுகதை – உன்னில் நீ! Poll_m10சிறுகதை – உன்னில் நீ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை – உன்னில் நீ!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 28, 2024 8:35 pm

சிறுகதை – உன்னில் நீ! Main-qimg-5e8557d82e96c0ae0fb2dbb108e625ec
-
ஓவியம்; ஜி.கே. மூர்த்தி

-கிருஷ்ணா

அலுவலகத் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தான் விஸ்வநாதன்.

படித்துக்கொண்டிருந்தான் என்பதைவிட புத்தகத்தை விரித்தபடி வெறித்துக்கொண்டிருந்தான் என்பதுதான் உண்மை.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் அதிகாரி பதவி கிடைக்கும். அதனால் சம்பளமும் கணிசமாக உயரும். அந்தஸ்தும் ஏற்படும்.

எல்லாம் தெரிந்தும் அவன் மனம் புத்தகத்தில் பதிய மறுத்தது. மனத்தில் இனம்புரியாத தளர்ச்சி. இன்று, நேற்று ஏற்பட்டதல்ல இது. சில காலமாகவே இப்படித்தான். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் தடங்கல். மனம் வெறுத்துப்போனது.

அலுவலகத் தேர்வு ஐந்து முறைதான் எழுத முடியும். அதற்குள் ‘பாஸ்’ செய்துவிட வேண்டும். இது விஸ்வநாதனுக்கு நாலாவது தடவை.

வெற்றி பெறுவோமா என்று மனம் சஞ்சலப்பட்டது. வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருந்தும் உள்ளத்தில் ஒரு பயம், தெளிவின்மை.

“என்னடா விஸ்வா, புத்தகம் கையிலே, புத்தியோ வேறு எங்கேயோ அலையற மாதிரி இருக்கு!” என்று கேட்டபடி அவன் அறைக்குள் நுழைந்தான் ஸ்ரீனிவாசன்.

உடன் வேலை பார்ப்பவன். போன வருடம் பதவி உயர்வு பெற்றவன் – இந்த பரீட்சையில் தேர்வு பெற்றதால். விஸ்வநாதன் சொன்னான் தன் தயக்கத்தை, பயத்தை, வாழ்க்கையின் பிடிப்பற்ற தன்மையை. அவனை ஒரு நிமிடம் பார்த்தபடி யோசித்தான்.

”எனக்கும் இதே மாதிரி பிரச்னை இருந்தது விஸ்வநாதன். ஆனால் இப்ப இல்லை.”

“எப்படி மனசுல புத்துணர்ச்சி வந்தது?” ஆவலாய்க் கேட்டான்.

”ம்… சரி. ஒரு வழி சொல்றேன். இன்னிக்கு மாலை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன். தயாராயிரு என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான்.

அவன் மாலை நாலு மணிக்கு வந்தபோது,

“எங்கடா போறோம்?” என்றான் விஸ்வநாதன் அடக்க முடியாமல்.

”எனக்குத் தெரிஞ்சவரிடம். அவர் சொன்னபடி செஞ்சா எல்லாமே வெற்றிதான்.”

“ஏதாவது தாயத்து கொடுப்பாரா?”

“பொறுமை வேணும் நண்பா” என்றான் சிரித்துக்கொண்டே.

“அந்த இடம் வீடு மாதிரியும் இருந்தது. கோயில் போலவும் இருந்தது.

நாற்காலி, முகம் பார்க்கும் கண்ணாடி, பாத்திரங்கள். இத்யாதிகள் ஒரு பக்கமாய். மறுபக்கம் கிருஷ்ணரின் விக்ரகம் கொண்ட கோயில் போன்ற அமைப்புடன் சிறிய பீடம் இருந்தது.

புல்லாங்குழல் கிருஷ்ணர் நீல நிறத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.

மடத்தில் இருப்பதுபோல ஓர் அமைதி அந்த அறையில்.

அறையின் மேற்குக் கோடியில் ஒரு வாசல்.

அதன் வழியே ஒரு முதியவர் வந்தார். கதர் வேட்டி மட்டும் இடுப்பில். நீண்ட தாடி. முடிச்சு விழுந்த தலைமுடி. தீர்க்கமான கண்கள், ஒல்லியான தேகம்.

அவர் கண்களை ஒரு விநாடிக்கு மேல் சந்திக்க முடியவில்லை.

“வணக்கம் சார்” என்றான் விஸ்வநாதன் அலுவலக தோரணையில்.

“சார் இல்லை; சாமி” என்று திருத்தினான் ஸ்ரீனிவாசன்.

”உட்காருங்க” என்றார்.

மூவரும் தரையில் அமர்ந்தனர்.

”சாமி இவன் என் நண்பன். அமைதி வேண்டி உங்களிடம் வந்திருக்கான்.”

“அப்படியா?” என்றார் சாதாரணமாய்.

விஸ்வநாதன் தன் மனநிலையைச் சொன்னான்.

“சில சமயம் எங்கேயாவது ஓடிப்போயிடலாமான்னு தோணாது சாமி.”

“போயேன்!”

“சாமி…?”

“அந்த கிருஷ்ணரைப் பார். என்ன தெரிகிறது?”

”கிருஷ்ணர் தெரிகிறார். அவர் உருவம் தெரிகிறது” என்றான் குழப்பம் விலகாமல்.

”அவரின் உருவம் தெரிவதைக் குழந்தை கூடச் சொல்லிவிடும். இன்னும் ஆழ்ந்து பார்.”

“நீலநிறம் தெரிகிறது. புல்லாங்குழல் தெரிகிறது.”

“இன்னும் ஆழ்ந்து பார்.”

”கிருஷ்ணரின் புன்னகை தெரிகிறது. புல்லாங்குழலை வாசிப்பது போன்ற பாவம் முகத்திலும், கையிலும் தெரிகிறது.”

“இன்னும் பார்… புல்லாங்குழலின் இனிமையான ஓசை கேட்கவில்லை? ஆஹா…” என்று கண்ணை மூடி ரசித்தார்.

விஸ்வநாதன் மனத்திலும் ஒரு நிமிடம் குழலோசை கேட்பது போன்ற பிரமை ஏற்பட்டது.

மனத்தினுள் சுகமான அமைதி நிலவியது.

சுவாமி கண்ணைத் திறந்து அவனைப் பார்த்துச் சிரித்தார்.

“இந்தா” என்று ஒரு பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து எதையோ கையிலெடுத்துக் கொடுத்தார்.

“இதில் ஏழு மாத்திரை இருக்கிறது. தினம் ஒன்றாய்ச் சாப்பிட்டு வா. உன் பிரச்னை தீரும்” என்று எண்ணிக் கொடுத்தார்.

அது வெள்ளையாய் வட்ட வடிவில் இருந்தது.

இருவரும் விடைபெற்று வெளியே வந்தனர்.

“ஸ்ரீனிவாசா, இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் என் பயம் விலகுமா?” என்றான் விஸ்வநாதன்.

“மாத்திரை இல்லை. சாமி கொடுத்த பிரசாதம். இனிமே நீ எதைச் செய்தாலும் ஜெயம்தான்” என்று முதுகில் தட்டிக் கொடுத்தான்.

ஒரு வாரத்தில் விஸ்வநாதனின் வாழ்க்கையே மாறிவிட்டது.

அலுவலகத் தேர்வை அமர்க்களமாக எழுதிவிட்டான். நாள் முழுதும் ஒரு புத்துணர்ச்சி அவன் உடலில். செயலில் உறுதியும், வேகமும் தெரிந்தன. அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது.

‘எல்லாம் சாமி கொடுத்த மாத்திரையின் சக்திதான்’ என்று நினைத்துக் கொண்டான்.

ஏழு மாத்திரையையும் சாப்பிட்ட பின்பு மீண்டும் ஸ்ரீனிவாசனுடன் சாமியைத் தேடிச்செல்ல நினைத்தான் – நன்றி சொல்ல.

அதற்குள் அலுவலக டூர் வேலை வந்துவிட, தன் சார்பாய் சுவாமிக்கு நன்றி சொல்லி விடும்படி ஸ்ரீனிவாசனிடம் கூறினான்.

”வாப்பா” ஸ்ரீனிவாசனை அன்புடன் வரவேற்றார் சுவாமி.

“சாமி, என் நண்பன் வாழ்க்கையிலே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திட்டீங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே …”

”அப்படியா? நல்லது” என்றார் சாதாரணமாய்.

”நீரிலிருக்கும் மீனும், ஓட்டிலிருக்கும் நத்தையும், மனசிலிருக்கும் நம்பிக்கையும் வெளியே போய்ட்டா கலக்கம்தான் நண்பனே” என்றார் கிருஷ்ணர் விக்ரஹத்தைப் பார்த்தபடி.

“உண்மைதான் சாமி. இப்ப விஸ்வநாதன் மனசுல எதையும் சாதிக்க முடியுங்கற நம்பிக்கை வந்திருச்சு,’ ஸ்ரீனிவாசன். என்றான்

“அப்படியா?”

“ஆமாம். எல்லாம் நீங்க கொடுத்த மாத்திரை… இல்லை.. பிரசாதத்தோட சக்திதான் சாமி” என்றதும் கடகடவென நகைத்தார்.

“சக்தி மாத்திரையில் இல்லை நண்பா. அவரவருக்குள்தான் இருக்கிறது.”

“என்ன சாமி சொல்றீங்க?”

“நான் கொடுத்த மாத்திரை வெறும் சர்க்கரை வில்லை” என்றவரை பிரமிப்புடன் பார்த்தான் ஸ்ரீனிவாசன்.

“போன வருஷம் உனக்குக் கொடுத்ததும் அதுவேதான். அதை இப்போது அவனிடம் சொல்லாதே – சமயம் வரும்போது சொல்லிக்கலாம். அதுவரைக்கும் அவனுக்குள் இருக்கும் அவன் வளரட்டும்… நீ வளர்ந்தது போல”

பரிவான புன்னகையுடன் அவர் சொன்னார்.

பின்குறிப்பு:-

கல்கி 04 அக்டோபர் 1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்… அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக… எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

– ஆசிரியர், கல்கி ஆன்லைன்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 21, 2024 1:17 pm

சிறுகதை – உன்னில் நீ! 3838410834 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக