புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
34 Posts - 43%
heezulia
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
2 Posts - 3%
prajai
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
1 Post - 1%
Saravananj
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
398 Posts - 49%
heezulia
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
26 Posts - 3%
prajai
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_m10அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Nov 18, 2017 9:42 am

ஒரு நல்ல சினிமாவை கொடுக்க வேண்டும் என்ற ஒரு கலைஞனின் பிடிவாதம் தான் இந்த'அறம்'. காட்சி மொழியை மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறார். ஒரு சில காட்சிகளைத் தவிர மற்ற அனைத்து காட்சிகளிலும் ஒரு பிரேம் கூட வீண் இல்லை.காட்சிகளைப் பிரித்து புகைப்படங்களாக மாற்றினால் ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு கதை சொல்லும். அசலான வாழ்க்கையை காட்சிப்படுத்தி இருக்கிறார், இயக்குனர் மீஞ்சூர் கோபி. கதை சொல்லும் முறையிலும் , உருவாக்கத்திலும் அவ்வளவு நேர்த்தி.

கதையின் களத்தை , கதை மாந்தர்களின் வாழிடத்தை மிக நெருக்கமாக படம்பிடித்திருக்கிறார். விளையாட்டுகளில் திறமையிருந்தும் அடுத்த கட்டத்திற்கு போக முடியாதது , எளிய மக்களின் படுக்கை அறை, வீடு , குளிக்கும் முறை , மருத்துவமனை செலவீனத்திற்கு பயந்து மெடிக்கலில் மருந்து வாங்குவது , எளிய மக்கள் வரை பரவியிருக்கும் எப்பாடு பட்டாவது பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் கலாச்சாரம், அந்த கேக் வாங்க முன்பிருந்தே திட்டமிடுவது, வாழ்விற்கு நெருக்கமான குலதெய்வ வழிபாடு , சிப்பி சலிக்கும் வேலை , பிளாஸ்டிக் பையில் டீ வாங்கி வந்து குடிப்பது , ஏலச்சீட்டு நடத்துவது , கடைக்கோடி மக்களின் வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு , ஒரு பிரச்சனை என்றால் ஊரே ஒன்று கூடுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்பது, ராக்கெட் ஏவுதளம் பற்றிய குறிப்புகள் என சிறப்பாக காட்சிபடுத்தி இருக்கிறார்.

கதையின் மையப்புள்ளியான அந்த நொடியை மிகத் திறமையாக கட்டமைத்து இருக்கிறார்.திரைமொழியின் சாத்தியங்களைப் புரிந்து கொண்ட ஒருவரால் தான் இவ்வாறு பதிவு செய்ய முடியும். முதலிலேயே குழந்தை காணாமல் போய் பிறகு கிடைப்பது , பாம்பு , தண்ணீர் தட்டுப்பாடு , அடுத்த முறை காணாமல் போவது , அப்போது பாம்பு சட்டையைக் காண்பிப்பது என நம்மை வேறு கோணத்தில் சிந்திக்க வைத்துவிட்டு திடீரென்று அந்த அதிர்ச்சியைத் தருவது என மிரட்டியிருக்கிறார். அந்த நொடியில் அதிர்ச்சியும் என்னையறியாமலேயே கண்ணீரும் வந்து விட்டது. அருகில் படம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி , மகளை இறுக அணைத்துக் கொண்டார். இப்போதும் அந்த நொடியை யோசிக்கும் போது பதைபதைப்பும் கண்ணீரும் வருவதை தடுக்க முடியவில்லை. அதற்கு பிறகான காட்சிகளும் பதைபதைப்புடனும் , நம்பும்படியாகவும் படமாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இப்படத்தில் காட்டப்பட்டவாறு ஒரு குழந்தையை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை.

மிகச்சிறப்பான, அழகான, திறமையான ஒளிப்பதிவு. எளிய மக்களின் வாழ்க்கையை படம்பிடித்த விதம் அவ்வளவு அழகு. அடுத்து குழிக்குள் செல்லும் கேமரா , அந்தக் குழந்தையை நம்பும்படி காட்டியது என பெரும் உழைப்பைச் செலவழித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர், ஓம் பிரகாஷ்.

படத்திற்கு வேகத்தையும் , திரையை விட்டு வேறு எதையும் சிந்திக்க விடாமலும் செய்கிறது, ஜிப்ரானின் இசை. இந்த படத்திற்கு இசை பெரும் பலம். எல்லோரும் சொல்வது போல அந்த டிவி விவாத நிகழ்வு தேவையில்லாததாக இருக்கிறது. படத்தின் வேகத்தைக் குறைப்பதுடன் , பார்வையாளர்களுக்கு கவனச் சிதறலையும் ஏற்படுத்துகிறது. ரூபனின் படத்தொகுப்பு அவ்வளவு கச்சிதம்.

மதிவதனி விசாரனை செய்யபடுவதுடன் ஊடாக விரியும் காட்சிகள் என கதை சொல்லலும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. காட்சிகளின் ஊடாக உணர்வுகளைக் கடத்துவது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் இந்த திரைப்படத்தின் நிறைய காட்சிகளில் கதைமாந்தர்களின் உணர்வுகளை எளிதாக நமக்கு கடத்தி விடுகிறார், இயக்குனர்.

அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தையும் , மாவட்ட ஆட்சியர் போன்றவர்கள் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் , சட்டம் மக்களுக்கானது என்பதையும் , ஐனநாயகத்தில் மக்களின் பங்கேற்பு தான் முக்கியம் என்பதையும் , ஓட்டரசியலையும் நுட்பமான அரசியலுடன் வெளிப்படுத்த முயன்றிருக்கிறது , இத்திரைப்படம்.

குழந்தையின் அம்மாவாக நடித்திருக்கும் சுனு லட்சுமி குழந்தைகளின் அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். ஏக்கத்தை , அதிர்ச்சியை , சோகத்தை , பதைபதைப்பை அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குழந்தைகளின் அப்பாவாக வரும் ராமச்சந்திரன் துரைராஜ் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அதிலும் தானும் ஒரு முன்னால் கபடி வீரர் என நினைவுபடுத்தும் காட்சி சிறப்பு.

இப்படியொரு திரைப்படத்தைப் பார்க்க பார்வையாளர்களைத் திரையரங்கிற்கு வரவழைத்ததில் நயன்தாராவின் பங்கு மிக முக்கியமானது. இத்திரைப்படத்தின் ஒரு இடத்தில் கூட நயன்தாரா சிரிக்கும்படியான காட்சி இல்லை. மக்களுக்கு பணியாற்றுவதில் ஒரு பிடிவாதமான, நேர்மையான மாவட்ட ஆட்சியரை கண்முன் நிறுத்துகிறார்.

ஒரு செய்தியாக கடந்து போகும் விசயத்தை மக்களுடன் , மக்களுக்கான அரசியலுடன் , மக்களுக்கான உணர்வுகளுடன், அதிகாரத்தின் மீதான கேள்விகளுடன் திரைப்படமாக கொடுத்திருக்கும் இயக்குநர், மீஞ்சூர் கோபி அவர்களுக்கு நன்றி !

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 02, 2024 3:50 pm

அறம் - ஒரு கலைஞனின் அறம் ! 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக