புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat 18 Jul 2020 - 17:37

18.07.2020

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் 9oCBmpqfSwqm10Fb9RrN+vaali, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் N6UHK4hHSA2ShD8LqypU+vaalee
இன்னிக்கி பாடலாசிரியர் வாலியின் நினைவு தினம்.

வாலிக்கும், எம்.ஜி.ஆருக்கும் நடந்த டயலாக்.  படித்து ரசிங்க.

படத்தின் வேலையெல்லாம் முடிஞ்சு படம் ரிலீசாகுற ஸ்டேஜ்.  படத்துல அத்தன பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்.ஜி.ஆர். சொல்லிட்டிருந்தார்.  

அவருக்கு வாலி ரொம்ப பிடிக்கும்ல?  அவர கொஞ்சம் கலாய்க்கலாம்னு நெனச்சு வாலிட்ட பேசினார்.

MGR : இந்தப் படத்துல பாட்டெல்லாம் நல்லா வந்திருக்கு.  ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போடா போறதில்ல.

வாலி சிரிச்சுட்டு ஒண்ணும் சொல்லல.


எம்.ஜி.ஆர். : அட, என்ன ஆண்டவரே, (எம்.ஜி.ஆர். அப்படித்தான் வாலியைக் கூப்பிடுவார்) நெசமாத்தான் சொல்றேன்.  உங்க பேர் வராது.

வாலி : என் பேரைப் போடாம இந்தப் படத்தை ரிலீஸ் செஞ்சுருவீங்களா?

எம்.ஜி.ஆர். : அப்படியா, அப்படி நான் ரிலீஸ் செஞ்சுட்டா!!!

வாலி : எப்டி முடியும்?  சொல்லுங்க பார்ப்போம்.  இந்தப் படத்தோட பேர் 'உலகம் சுற்றும் வாலிபன்.'  இதுல 'வாலி' ங்கறத எடுத்துட்டா 'உலகம் சுற்றும் பன்' ன்னு வரும்.  'மக்கள் திலகம் நடிக்கும் உலகம் சுற்றும் பன்' னுன்னா போஸ்ட்டர் ஓட்டுவீங்க?

எம்.ஜி.ஆர். லக்க லக்கன்னு, இல்ல இல்ல கல கலன்னு சிரிச்சுட்டு வாலி முதுகுல தட்டி அவர அணச்சுகிட்டாராம்.  நல்லாயிருக்குல்ல?


Baby Heerajan

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 18 Jul 2020 - 19:41


வாலிப வாலி
-------------------
"ஐயா மெட்டுக்குப் பாட்டா, இல்ல பாட்டுக்கு மெட்டா?"

"ரெண்டும் இல்ல, துட்டுக்கு பாட்டு."
-
இந்த நேர்காணலை யாராலும் மறக்க முடியாது.
முன்பொரு காலத்தில், வாலி அவர்கள் தந்த அருமையான,
தைரியமான பதில் இது.

'வாலிப வாலி' என்று தமிழ் திரை உலகில் பெயர் பெற்று
நான்கு தலைமுறைகளாய் தமிழ் திரைப்ப்பாடல்களும்
பல படைத்தவர் டி. எஸ். ரங்கராஜன் என்கிற வாலி.

இவர் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும் பாடல்கள்
புனைந்துள்ளார் என்பது சிறப்பு. இவர் நடிப்பிலும் சளைத்தவர்
அல்ல. 'முயலுக்கு மூணு கால்', 'பார்த்தாலே பரவசம்', 'ஹே ராம்'
போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வாழ்ந்த வரை சிந்தனையாலும் படைப்புகளாலும் வாலிபராக
வாழ்ந்தவர்
வாலி மறைந்தாலும், அவர் புகழ் நீடூழி வாழ்க !!!
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 18 Jul 2020 - 19:42

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் LhFHNlPeSpS50wgi0gOi+1z70cva
-
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் 1z70cv13
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் CsJ903YgTuCWo7zB046e+1z70cva(1)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 18 Jul 2020 - 19:48

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் 10697277_835124773179056_5810301513640932966_o.jpg?_nc_cat=109&_nc_sid=dd9801&_nc_ohc=ZXB6TgRZqc8AX-Rh6ix&_nc_ht=scontent.fymy1-1
--
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் 83XwYlx4ThWqqW2RNQeH+10551645_812725082085692_419264513469283851_o

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat 18 Jul 2020 - 21:20

18.07.2020
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் 3aCa9wGARpyvKobUbtYH+csjayaraman

ஸ்ரீரங்கத்ல வாலியின் fரெண்ட் வீட்டு கல்யாணத்துக்கு சிதம்பரம் CS ஜெயராமன் கச்சேரிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. ஜெயராமனை book செஞ்ச ம்யூஸிக் டைரக்ட்டர் ராமமூர்த்தி, வாலி கூடத்தான் நீங்க திருச்சிக்கு போறீங்கன்னு ஜெயராமன்கிட்ட சொல்ல மறந்துட்டாராம்.

ஜெயராமனுக்கும் வாலிக்கும் அறிமுகமில்ல. ஆனா வாலிகூட ஜெயராமன் காரில் போறார்.

அப்போது ஜெயராமன் கச்சேரில பாடபோற பாட்டை ஆலாபனை செஞ்சு பாக்கிறார். அதைக் கேட்ட வாலி, "பலே"னு பாராட்டியிருக்கார். ரெண்டு பேரும் பரஸ்பரம் பேசும் போது வாலி, தான் பாட்டு எழுதுபவர் எனக் கூற, அவர் எழுதிய முருகன் பாட்டை கேட்டுட்டு

"இந்த பாட்டை நான் ஏற்கனவே கேட்டிருக்கேன். நீங்க எழுதியதுன்னு தெரியாது. நல்லா எழுதுறீங்க. நீங்க ஏன் சினிமால பாட்டு எழுத கூடாது? உங்க எழுத்து அர்த்தமுள்ளதாக இருக்கு தம்பி, நீங்க முயற்சி பண்ணுங்க. இப்போ காலம் ரொம்ப கெட்டுப்போச்சி. விஸ்வநாதன் ராமமூர்த்திகிட்ட யாரோ வாலின்னு ஒருத்தன் அதிகமா பாட்டெழுதுறானாம். ஒரே கட்சிப்பாட்டா இருக்கு. அவன் எழுத்துக்கு உங்க எழுத்து எவ்வளவோ பெட்டெர்"னு சொன்னார்.

திண்டிவனத்ல டீ பிரேக்கிற்காக கார் நின்னுச்சு. அப்போ சில சிறுவர்கள் ஓடிவந்து "டேய்... கவிஞர் வாலிடா.." என ஆட்டோகிராப் வாங்கியிருக்காங்க.

அதைக் கண்ட ஜெயராமனுக்கு ஷாக். அவர் தர்ம சங்கடத்திற்கு ஆளாகி..

"நீங்கதான் வாலின்னு தெரியாம பேசிட்டேன். நீங்களாவது உங்க பெயரை சொல்லியிருக்கலாமே" என்றாராம்.

"நீங்க கேக்கவே இல்லியே"னு சிரித்திருக்கிறார் வாலி.

"ஹ்ம்ம்ம்.. காவேரி தண்ணிக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்த்திதான்" என வாலி கன்னத்த கிள்ளியிருக்கிறார் ஜெயராமன்.


Baby Heerajan

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 18 Jul 2020 - 21:50

-
ஜெயராமன் கோயில் நகரமான சிதம்பரத்தில்
பிறந்தார். இவரது தந்தையார் சுந்தரம்பிள்ளை
பிரபலமான கர்நாடக இசை வாய்ப்பாட்டுக்
கலைஞர்.

இவர் தி. மு. க தலைவரும் முன்னாள் தமிழ்நாடு
முதலமைச்சருமான மு.கருணாநிதியின் முதல்
மனைவி பத்மாவதியின் அண்ணனும்,
மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார்.

தொடக்கத்தில் கருணாநிதி ஒரு திரைக்கதை
எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமாவதற்குக்
காரணமாக இருந்தவர் ஜெயராமன்.
-
-------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 18 Jul 2020 - 21:50


சி. எஸ். ஜெயராமன் பாடிய சில பாடல்கள் இங்கு
பட்டியலிடப்பட்டுள்ளன:

கா கா கா (பராசக்தி 1952) - பாடல் : உடுமலை நாராயணகவி,
இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்
-
நெஞ்சு பொறுக்குதில்லையே (பராசக்தி 1952) - பாடல் : பாரதியார்,
இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்
-
அன்பினாலே (பாசவலை 1956) - பாடல் : அ.மருதகாசி,
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி, தயாரிப்பு : மார்டன் தியேட்டர்ஸ்
-
உள்ளம் ரெண்டும் ஒன்று (புதுமைப்பித்தன் 1957) -
பாடல் : T.N.ராமைய்யாதாஸ், இசை : G.ராமநாதன்,
தயாரிப்பு : சிவகாமி பிக்சர்ஸ்
-
விண்ணோடும் (புதையல் 1957) உடன் பாடியவர் :
பி.சுசிலா - பாடல் : ஆத்மநாதன், இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி,
தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்
-
குற்றம் புரிந்தவன் (ரத்தக்கண்ணீர் 1958) - பாடல் : ஆத்மநாதன்,
இசை : C.S.ஜெயராமன், தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்
-
ஈடற்ற பத்தினியின் (தங்கப்பதுமை 1958) - பாடல் : பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம், இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி, தயாரிப்பு :
ஜீபிடர் பிக்சர்ஸ்
-
இன்று போய் நாளை (சம்பூர்ண ராமாயணம் 1958) -
பாடல் : ஆத்மநாதன், இசை : K.V.மகாதேவன்,
தயாரிப்பு : M.A.V பிக்சர்ஸ்
-
தன்னைத் தானே (தெய்வப்பிறவி 1960) -
பாடல் : உடுமலை நாராயணகவி, இசை : R.சுதர்சனம்,
தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்
-
அன்பாலே தேடிய (தெய்வப்பிறவி 1960) -
பாடல் : உடுமலை நாராயணகவி, இசை : R.சுதர்சனம்,
தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்
-
சிரித்தாலும் (களத்தூர் கண்ணம்மா 1960) - பாடல் : கண்ணதாசன்,
இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : AVM
-
நீ சொல்லாவிடில் (குறவஞ்சி 1960) - பாடல் : R.கிருஷ்ணமூர்த்தி,
இசை : T.R.பாப்பா, தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்
-
பெண்ணே உன் கதி (பொன்மாலை 1960) - பாடல் : மாயவநாதன்,
இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்
-
வண்ணதமிழ் (பாவைவிளக்கு 1960) - பாடல் : அ.மருதகாசி,
இசை : K.V.மகாதேவன், தயாரிப்பு : ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்
-
காவியமா (பாவைவிளக்கு 1960) - பாடல் : அ.மருதகாசி,
இசை : K.V.மகாதேவன், தயாரிப்பு : ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்
-
-------------------------

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun 6 Aug 2023 - 1:23

05.08.2023

நடிகர் KR ராமசாமி அவர்கள் நினைவு நாள்   [1914 - 1971]

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் DtalFFH                              , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் B2bsPCH

கும்பகோணம் ராமபத்திரன் ராமசாமி. நடிப்பிசை புலவர் அறிஞர் அண்ணா கொடுத்த பட்டம். தமிழ் நாடகம் & சினிமா நடிகர் & பாடகர். மதுரை பாய்ஸ் கம்பெனில சேந்து 6 வயசிலேயே நாடகத்தில நடிக்க ஆரம்பிச்சார். 13 வயசில TKS சகோதரர்கள் நாடக குழூல சேந்தார். எட்டு வருஷமா இந்த கம்பெனீல வேல செஞ்சார். இவர் நடிச்ச மேனகா நாடகம் படமா எடுத்தபோதும் சின்ன ரோல்ல நடிச்சார். ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சது 1944ல பூம்பாவை படத்தில. படங்கள்ல நடிச்சாலும், நாடகங்கள்ல நடிக்கிறத விடல.

அப்புறமா NS கிருஷ்ணன் நாடக குழூல சேந்தார். கலைவாணர் ஜெயிலுக்கு போன நெலமையில அவர் மேல வச்சிருந்த அன்பின் காரணமாக கிருஷ்ணன் நாடக சபாவை 1946ல ஆரம்பிச்சார். அறிஞர் அண்ணா மேல ராமசாமி அதிகமான மதிப்பு, மரியாதை, அன்பு வச்சிருந்தார். ராமசாமி சொந்தமா நாடக குழுவை ஆரம்பிச்ச பிறகு, அண்ணா வேலைக்காரி, ஓர் இரவு நாடகங்களை எழுதி கொடுத்தார். வேலைக்காரி நாடகம் 1949ல படமா எடுத்தபோது, ராமசாமி அதுல நடிச்சு ப்ரபலமானார். அண்ணாவின் செல்லப் பிள்ளைன்னு இவரை சொன்னாங்க. வேலைக்காரி படத்தின் அபார வெற்றிக்கப்புறம், புராண இதிகாச படங்கள்ல நடிக்க  ஊஹூம் சொல்லிட்டார்.

1935ல மேனகா படத்தில ராமசாமி ஒரு பிச்சைக்காரனா ஆக்ட் குடுத்தார். இதே  படம் 1955ல வந்தபோது அவர் ஹீரோ. நடிகர் திலகம் 1954ல நடிச்ச படம் மனோகரா 1930ல நாடகமா நடத்தப்பட்டுச்சு. அந்த நாடகத்தில ஹீரோ ராமசாமி, அம்மா ராணியா நடிச்சது நடிகர் திலகம். ஆச்சரியமா, வேடிக்கையா இல்ல?

இவரை பற்றி அறிஞர் அண்ணா சொன்னது : "நண்பர் கே ஆர் ராமசாமி கலை உலகில் ஒரு கருவூலம். காசுக்காக மட்டுமே நடிக்காத ஒரு கடமை வீரர். நிலம் பிளந்து விழ நேர்ந்தாலும் நெஞ்சம் குலையாத ஒரு கொள்கை தங்கம். என்னுடையா கலையுலக ஆர்வம் கருகிவிடாமல் காய்த்திடவும், கனிந்திடவும் இன்று எனக்கு ஊக்கமூட்டுபவர், உதவி வருபவர், என் இனிய நண்பர்". - தி இந்து நாளிதழ்

கலைஞர் கருணாநிதி சொன்னது : "அண்ணாவின் நீண்ட வசனங்களை பேசி உணர்ச்சி ததும்ப பேசி உயிரூட்டியவர் ராமசாமி. சரித்திர, புராண நாடகங்களே வெற்றி பெறும் என்றிருந்த காலகட்டத்தில் வேலைக்காரி, ஓர் இரவு சமூக நாடகங்களை தொடர்ந்து எட்டு மாதங்கள் நடத்தி வெற்றி கண்டவர்". - தி இந்து நாளிதழ்

அந்த காலத்தில அறிஞர் அண்ணாவை தோழர் அண்ணாதுரை னு சொன்னாங்க. அறிஞர் அண்ணா னு கூப்பிட காரணமாயிருந்தவர் ராமசாமிதான். ஓர் இரவு நாடகம் தஞ்சாவூர்ல அரங்கேறிய சமயத்தில அந்த நாடக போஸ்ட்டர்ல 'கதை உரையாடல் - அறிஞர் அண்ணா'னு போட்டு விளம்பரம் செஞ்சது இவர்தான்.

ஜெயலலிதா, எம் ஜி ஆர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி என  தமிழக முதலமைச்சர்கள்கூட கலையுலக சம்பந்தம் வச்சிருந்தார் ராமசாமி.


KR ராமசாமி 1.30க்கு அப்புறம் வசனம் மட்டும் பேச வாராரு
மதனா எழில் ராஜா நீ வாராயோ பருவமிதே பயன் இதுவே இன்பம் தாராயோ ஜிக்கி & வசனம் கே ஆர் ராமசாமி  

செல்ல பிள்ளை  1955 \ R சுதர்சனம் \ கு மா பாலசுப்ரமணியம்  

பெண் வேஷத்தில இருப்பவர் கே ஆர் ராமசாமியை பாலையா லவ்வுறார்.
உருவங்கண்டு ஏமனசு உருகுது மனசு உருகுது காள பருவங் கண்டாசை பெருகுது ஆசை பெருகுது - கே ஆர் ராமசாமி & TMS

நீதிபதி   1955 / விஸ்வநாதன் ராமமூர்த்தி / மருதகாசி


பேபி மீண்டும் சந்திப்போம்

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun 6 Aug 2023 - 22:37

06.08.2023

வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் நினைவு நாள்   1941 - 2016

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் ALYdkbI                              , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் DHPUq86

டைரக்ட்டர், கதாசிரியர் & நடிகர். அப்பா வக்கீல். ஆனா சுந்தரம் படிக்கல. அதனால  சின்ன வயசிலேயே பேக்டரில வேல செஞ்சார்.1955ல டன்லப் டயர் பேக்டரில சேந்தார். அதே சமயத்தில YG பார்த்தசாரதி நடித்திட்டு இருந்த யுனைட்டெட் அமெச்சூர் கலைஞர்கள் குழூல  எடுபுடி வேல செஞ்சார். அங்க இருந்ததால ட்ராமா, சினிமா மேல ஆச வந்துச்சு. 

சொந்த வாழ்க்கைல நடந்த நிகழ்ச்சிகளுக்கு கண்ணு, காது, மூக்கு வச்சு, பூ முடிச்சு, பொட்டு வச்சு அலங்காரமாக்கி, அதை இன்டெரெஸ்டிங்கா சொன்னார். அவரோட நண்பர்களுக்கு அவர் சொன்ன முறை பிடிச்சிருந்துச்சு. நேரம் கெடச்சபோ நாடகங்களை எழுத ஆரம்பிச்சார். இப்படித்தான் சிறந்த கதை, வசனம் எழுதுறவரா உருவெடுத்தார். இவர் கதை எழுதின ஒரு நாடகத்துக்கு 1962ல MGR வந்தார். அந்த நாடகத்தை பாத்த அவர், "இந்த கதை எழுதிய பையன் பெரீயாளா வருவான்"னு சொல்லி வாழ்த்தினார். டயர் கம்பெனி, நாடகம்னு சுத்திட்டு இருந்தார். 

ஒரு தடவ, தான் எழுதிய கதையை YG பார்த்தசாரதிகிட்ட கொடுத்தார். அவர் அதை படிச்சிட்டு "யோவ், ப்ரமாதமான கதைய்யா. இதுக்கு சிவாஜி கணேசன் நடிச்சா சூப்பரா இருக்கும்யா. ட்ரை செஞ்சு பாரு"னு சொன்னார். சிவாஜியை எப்படி போய் பாக்குறதுன்னு முழிச்சார். சுந்தரம் இந்த கதையை தன் சகோதரிக்கிட்ட சொன்னார். அவங்க பக்கத்து வீட்டு மாமிகிட்டன்னு கதை காது காதா கேட்டு, கடேசில விழுந்தது ஒருத்தர் காதுல. அவர் என்னான்னா சிவாஜி கணேசனின்  ஆடிட்டர். அடுத்து அந்த கதையை கேட்ட காது சிவாஜி கணேசன்தானே. "அந்த பையனை வரச்சொல்லுங்க"னு சிவாஜி சொல்லிட்டார். அப்போலே இருந்துதான் சுந்தரம் வாழ்க்கைக்கு நல்ல காலம் பொறந்துச்சு. 

ஆனாலும் சுந்தரத்துக்கு ஒரு கவலை. அவர்கிட்ட கம்பெனி யூனிஃபாமை தவிர வேற டிரஸ் இல்ல. எப்படி சிவாஜியை போய் பாக்குறது. நண்பர் ஒருவர்கிட்ட ட்ரெஸ் வாங்கி போட்டுக்கிட்டு புறப்பட்டார். வேற வழி? அப்டி இப்டீன்னு சிவாஜியை போய் பாத்தார். "நீ ஏங்கூடவே  இரு. கதையை டெவலப் பண்ணு"னு சொன்னார். சிவாஜி எங்க போனாலும் சுந்தரமும் கூடவே போனார். கதையை டெவலப் செஞ்சு முடிச்சுட்டார். நாடகம் மேடையேறுச்சு. சிவாஜி நடிச்சார். அவ்ளோதான் நாளுக்கு நாள் கூட்டமோ கூட்டம்தான். நாடக இடைவேளைல ஜனங்கள் சிவாஜியின் தலை மறையுற வரைக்கும் மாலை போட்டுட்டே இருந்தாங்க. சிவாஜி அதைல்லாம் கழத்தி சுந்தரத்துக்கு போட்டார். "கதையை எழுதியவன் இவன்தான். இவன் பேர் சுந்தரம். இனிமே இவன் சுந்தரம் இல்ல. வியட்நாம் வீடு சுந்தரம்" னு சொன்னதுதான். கைத்தட்டலோ தட்டல்தான். 

இந்த நாடகம் அரங்கேறாத ஊரே இல்ல. எல்லா ஊர்லயும் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்தான். தன்னோட கம்பெனி சிவாஜி ப்ரொடக் ஷன் மூலமா டைரக்ட்டர் P மாதவனை வச்சு அந்த நாடகத்தை படமா எடுத்துட்டார் சிவாஜி. நாடகம் மாதிரியே படமும் சக்க போடு போட்டுச்சு. 

1970ல வியட்நாம் வீடு படத்துக்கு முதல் முதலா கதை, வசனம் எழுத ஆரம்பிச்சதால அந்த படத்தோட பேர் சேந்துக்கிச்சு. டைட்டில்ல இவர் பேர் K சுந்தரம். 

இவரோட கதைகள் வேற மொழிகள்லயும்  படமாக்கினாங்க. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களுக்கு கதை எழுதினார். குடும்ப பாங்கான கதை எழுதுறதுல பலே கதாசிரியர்.  1998ல  இருந்து டீவி  சீரியல்கள்லயும்  நடிச்சார். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு புடிச்ச கதாசிரியர். 

விருதுகள் :
தமிழ்நாடு மாநில சினிமா விருது - சிறந்த வசனகர்த்தா - வியட்நாம் வீடு 1970

அறிஞர் அண்ணா விருது 1991 - கௌரவ விருது 
 

ஞானப்பறவை 1991 - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - வியட்நாம் வீடு சுந்தரம்
 

பயணம் - திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - வியட்நாம் வீடு சுந்தரம்
ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம் அதுதான் காதல் பண்பாடு

பயணம்    1976 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்     

கௌரவம் - கதை, வசனம் & டைரக் ஷன் - வியட்நாம் வீடு சுந்தரம்
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா காலம் மாறினால் கௌரவம் மாறுமா நெவர்
கௌரவம்  1973 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
 

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed 9 Aug 2023 - 0:49

08.08.2023

நடிகர் SV ராமதாஸ் அவர்கள் நினைவு நாள்      [1921 - 2004] 
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் LB3hBPm                                             , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் CxMsouH

அநேகமா வில்லனாவே நடிச்சவர். சில படங்கள்ல குணசித்திர ரோல்ல நடிச்சார். சில தெலுங்கு படங்கள்லயும் நடிச்சார். பட்டதாரி. நடிக்க ஆசைப்பட்டு 20 வயசில சென்னைக்கு ஓடி போய்ட்டார்.  ஹார்பர்ல சூப்பர்வைசரா வேல செஞ்சுட்டே நடிப்பு வாய்ப்பு தேடிட்டு இருந்தார். ஹார்பர்ல நடந்த நாடகங்கள்ல நடிச்சார். ஹார்பர் நாடக குழூல நாடக காவலர் நடிகர் மனோகர். அவர் நடத்திய இலங்கேஸ்வரன் நாடகத்தில ராமதாஸ் ராமர் & மனோகர் ராவணன். 

இந்த நாடகத்தை டைரக்ட்டர் MV ராமன் பார்த்தார். ராமதாசின் நடிப்பு பிடிச்சிருந்துச்சு. 1962ல  தான் டைரக்ட் செஞ்ச கொஞ்சும் சலங்கை படத்தில நடிக்க சிபாரிசு செஞ்சார். ராமதாஸ் ஜெமினி கணேசனின் அப்பாவா நடிச்சார். அப்டியே தொடர்ந்து படங்கள்ல நடிச்சார். சொந்தமா நாடக குழு வச்சிருந்தார். நடிக்கிறதுக்கு முன்னால இதுல நடிகர் பார்த்திபன் இருந்தார். 

நடிகர் அசோகனின் உதவியால முதல் முதலா 1965ல ஆசை முகம் MGR படத்தில நடிச்சார். 1964ல கர்ணன் படத்தில ப்ராமணர் வேஷத்தில வந்து கர்ணன்கிட்டயிருந்து கவச குண்டலங்களை வாங்கிட்டு போன இந்திரனாக நடிச்சார். இதை பாத்த ஒரு விமர்சகர் "இவர் இனிமேல் ராமதாஸ் இல்ல. குரல்தாஸ்"னு புகழ்ந்தார். ராமதாஸின் குரலுக்கு கெடச்ச வெகுமதி. 

'சேவல் கூவுகிறது ஞாயம் பிறக்கிறது' னு கருப்பு வெள்ளைல ஒரு படம் எடுத்தார். அந்த படத்தை யாரும் வாங்க தயாரா இல்ல. ஏன்னா அந்த சமயத்தில கலர் படம் வர ஆரம்பிச்சிருந்த காலம். ராமதாசுக்கு லட்சக்கணக்குல நஷ்ட்டம். 
 

கர்ணன்கிட்டயிருந்து கவச குண்டலங்களை வாங்கிட்டு போன இந்திரன்

கர்ணன்  1964
 

பேபி மீண்டும் சந்திப்போம்

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக