புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
மகரம் ( சித்திரை முதல் பங்குனி வரை)
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2
தேவை பொறுமை (55/100)
உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் வருடத்தின் பிற்பகுதியில் கேதுவும், வருட துவக்கத்தில் மூன்று மாதம் குருவும் நல்ல பலன்களைத் தரும் வகையில் உள்ளனர். அஷ்டமத்து சனி இன்னும் ஐந்து மாதங்களில் முடிகிறது என்பதால், அதுவரை பொறுமையாக இருக்கவும். கோபதாபம் குறைந்து சாந்த எண்ணம் மேலோங்கும். வீடு, வாகனம் சார்ந்த வகையில் இருப்பதைப் பாதுகாத்தாலே போதுமென்ற நிலை இருக்கும். அஷ்டமத்து சனியினால் செப்டம்பருக்குப் பிறகு அபிவிருத்தி பணிகளை செய்தால் போதும்.
மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகார வக்ரகதியாக கும்பராசியில் அமர்வு பெறுகிறார். இதுகாலம் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியும், தாராள பணவரவும், குடும்பத்தில் மங்கல நிகழ்வும் ஏற்படும். உங்கள் உடல்நலத்துடன் புத்திரர்களின் உடல்நலமும் பாதிக்கப்படக் கூடும். பூர்வ சொத்தில் வருமானம் சுமாரான அளவில் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சிக்குவதற்கு வாய்ப்புண்டு. குடும்பத் தேவைகளுக்காக சேமிப்பு பணத்தைச் செலவு செய்வதும் கடன் பெறுவதுமான தன்மை இருக்கும். தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. வெளிநாடு வேலைவாய்ப்பிற்கு குறைந்த அனுகூலமே உள்ளது.
தொழிலதிபர்கள்: இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், காகிதம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பால் பொருட்கள், வாசனைத் திரவியம், வீட்டு அலங்காரப் பொருட்கள், பிளாஸ்டிக், மரத்தொழில் செய்வோர் கடும் முயற்சி செய்தாலும் அளவான லாபமே சம்பாதிக்க முடியும். பால்பொருட்கள், மோட்டார் உதிரிப்பாகங்கள், உழவுத்தொழில் கருவிகள், உற்பத்தி செய்பவர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து தாராள பணவரவு பெறுவர். மற்றவர்களுக்கு இவர்களை விட வருமானம் அதிகமாக இருக்கும். அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முற்பட வேண்டாம். தொழிலில் புதிய பார்ட்னர்களையும் சேர்த்தாலும் சிரமமே.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மின்னணு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்து, காய்கறி, பழம், பேக்கரி, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள், அழகுசாதனப் பொருட்கள், கட்டுமானப் பொருள், அலங்காரப் பொருட்கள், பால் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் சுமாரான வளர்ச்சி காண்பர். மற்றவர்களுக்கு இவர்களை விட அதிக லாபம் இருக்கும். நிர்வாகச் செலவு அதிகரித்து கடன் வாங்கும் நிலை ஏற்படும்.
பணியாளர்கள்: அரசு, தனியார்துறையில் பணிபுரிபவர்கள் சோம்பல் அதிகரிப்பால் பணியில் தொய்வு ஏற்பட்டு அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவர். சிலருக்கு ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படும் கிரகநிலை உள்ளது. கவனம். இயந்திரம், கொதிகலன், மின்சாரம், தொழில்நுட்ப பணி போன்றவற்றில் உள்ளவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சகபணியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்ற நிர்வாகத்திடம் கடன் வாங்க வேண்டி வரும். சலுகைகள் பெரிய அளவுக்கு இராது. மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு பார்வையால் குறைகள் விலகி வளர்ச்சித் தன்மை ஏற்படும்.
மாணவர்கள்: தகவல்தொழில் நுட்பம், சிவில் இன்ஜினியரிங், விவசாயம், மருத்துவம், சினிமா தொழில்நுட்பம், மாடலிங், இசை, நடனம், ஓவியம், கேட்டரிங், அழகுக்கலை, சட்டம் உட்பட பல்வேறு துறையில் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு படிப்பு பின்தங்கும். படிப்புக்குரிய செலவுக்கும் திண்டாட்டமாகவே இருக்கும். பயணங்களின் போது பாதுகாப்பு அவசியம் தேவை.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்களின் பணிகளில் தொய்வு ஏற்படும். நிர்வாகம் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் பணியாற்றி அவர்களால் கண்டிக்கப்படவும் வாய்ப்புண்டு. பணம் கொடுக்கல், வாங்கலில் எவருக்காகவும் பொறுப்பேற்ககூடாது. குடும்பப் பெண்கள் வீட்டுச் செலவுக்கு திண்டாட வேண்டியிருக்கும். புத்திரர்களை ஒழுங்குபடுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான லாபமே காண முடியும். அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டால் பிரச்னையும் பணஇழப்புமே ஏற்படும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் உதவியுடன் அரசியலில் பலம்பெறும் வாய்ப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். பணச்செலவு அதிகரிக்கும். எதிரியின் தொந்தரவால் சில அனுகூலங்களை பெறுவதற்கு தாமதமாகும். புத்திரர்களின் விருப்பத்தை அரசியலில் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் வரும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் அரசு தொடர்புடைய அனுகூலங்களை எளிதாக பெறுவீர்கள். தகுதிக்கு மீறிய விவகாரங்களில் தலையிட்டு கெட்ட பெயரும், சட்ட சிக்கலும் வரும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் சுமாரான வருமானமே காண்பர்.
விவசாயிகள்: மகசூல் சுமாராகவே இருக்கும். சாகுபடி செலவு மிகவும் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் சுமாரான அளவிலேயே பணம் கிடைக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் அனைத்து வகையிலும், வளர்ச்சியும், வருமானமும் கூடும். இது காலம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சியும் நடைபெற வழிபிறக்கும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.
செல்ல வேண்டிய தலம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்
பரிகாரப் பாடல்:
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடும் தனதடி வழிபடும் அடியவர்
கடிகணபதி வரஅருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2
தேவை பொறுமை (55/100)
உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் வருடத்தின் பிற்பகுதியில் கேதுவும், வருட துவக்கத்தில் மூன்று மாதம் குருவும் நல்ல பலன்களைத் தரும் வகையில் உள்ளனர். அஷ்டமத்து சனி இன்னும் ஐந்து மாதங்களில் முடிகிறது என்பதால், அதுவரை பொறுமையாக இருக்கவும். கோபதாபம் குறைந்து சாந்த எண்ணம் மேலோங்கும். வீடு, வாகனம் சார்ந்த வகையில் இருப்பதைப் பாதுகாத்தாலே போதுமென்ற நிலை இருக்கும். அஷ்டமத்து சனியினால் செப்டம்பருக்குப் பிறகு அபிவிருத்தி பணிகளை செய்தால் போதும்.
மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகார வக்ரகதியாக கும்பராசியில் அமர்வு பெறுகிறார். இதுகாலம் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியும், தாராள பணவரவும், குடும்பத்தில் மங்கல நிகழ்வும் ஏற்படும். உங்கள் உடல்நலத்துடன் புத்திரர்களின் உடல்நலமும் பாதிக்கப்படக் கூடும். பூர்வ சொத்தில் வருமானம் சுமாரான அளவில் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சிக்குவதற்கு வாய்ப்புண்டு. குடும்பத் தேவைகளுக்காக சேமிப்பு பணத்தைச் செலவு செய்வதும் கடன் பெறுவதுமான தன்மை இருக்கும். தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. வெளிநாடு வேலைவாய்ப்பிற்கு குறைந்த அனுகூலமே உள்ளது.
தொழிலதிபர்கள்: இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், காகிதம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பால் பொருட்கள், வாசனைத் திரவியம், வீட்டு அலங்காரப் பொருட்கள், பிளாஸ்டிக், மரத்தொழில் செய்வோர் கடும் முயற்சி செய்தாலும் அளவான லாபமே சம்பாதிக்க முடியும். பால்பொருட்கள், மோட்டார் உதிரிப்பாகங்கள், உழவுத்தொழில் கருவிகள், உற்பத்தி செய்பவர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து தாராள பணவரவு பெறுவர். மற்றவர்களுக்கு இவர்களை விட வருமானம் அதிகமாக இருக்கும். அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முற்பட வேண்டாம். தொழிலில் புதிய பார்ட்னர்களையும் சேர்த்தாலும் சிரமமே.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மின்னணு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்து, காய்கறி, பழம், பேக்கரி, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள், அழகுசாதனப் பொருட்கள், கட்டுமானப் பொருள், அலங்காரப் பொருட்கள், பால் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் சுமாரான வளர்ச்சி காண்பர். மற்றவர்களுக்கு இவர்களை விட அதிக லாபம் இருக்கும். நிர்வாகச் செலவு அதிகரித்து கடன் வாங்கும் நிலை ஏற்படும்.
பணியாளர்கள்: அரசு, தனியார்துறையில் பணிபுரிபவர்கள் சோம்பல் அதிகரிப்பால் பணியில் தொய்வு ஏற்பட்டு அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவர். சிலருக்கு ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படும் கிரகநிலை உள்ளது. கவனம். இயந்திரம், கொதிகலன், மின்சாரம், தொழில்நுட்ப பணி போன்றவற்றில் உள்ளவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சகபணியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்ற நிர்வாகத்திடம் கடன் வாங்க வேண்டி வரும். சலுகைகள் பெரிய அளவுக்கு இராது. மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு பார்வையால் குறைகள் விலகி வளர்ச்சித் தன்மை ஏற்படும்.
மாணவர்கள்: தகவல்தொழில் நுட்பம், சிவில் இன்ஜினியரிங், விவசாயம், மருத்துவம், சினிமா தொழில்நுட்பம், மாடலிங், இசை, நடனம், ஓவியம், கேட்டரிங், அழகுக்கலை, சட்டம் உட்பட பல்வேறு துறையில் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு படிப்பு பின்தங்கும். படிப்புக்குரிய செலவுக்கும் திண்டாட்டமாகவே இருக்கும். பயணங்களின் போது பாதுகாப்பு அவசியம் தேவை.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்களின் பணிகளில் தொய்வு ஏற்படும். நிர்வாகம் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் பணியாற்றி அவர்களால் கண்டிக்கப்படவும் வாய்ப்புண்டு. பணம் கொடுக்கல், வாங்கலில் எவருக்காகவும் பொறுப்பேற்ககூடாது. குடும்பப் பெண்கள் வீட்டுச் செலவுக்கு திண்டாட வேண்டியிருக்கும். புத்திரர்களை ஒழுங்குபடுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான லாபமே காண முடியும். அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டால் பிரச்னையும் பணஇழப்புமே ஏற்படும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் உதவியுடன் அரசியலில் பலம்பெறும் வாய்ப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். பணச்செலவு அதிகரிக்கும். எதிரியின் தொந்தரவால் சில அனுகூலங்களை பெறுவதற்கு தாமதமாகும். புத்திரர்களின் விருப்பத்தை அரசியலில் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் வரும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் அரசு தொடர்புடைய அனுகூலங்களை எளிதாக பெறுவீர்கள். தகுதிக்கு மீறிய விவகாரங்களில் தலையிட்டு கெட்ட பெயரும், சட்ட சிக்கலும் வரும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் சுமாரான வருமானமே காண்பர்.
விவசாயிகள்: மகசூல் சுமாராகவே இருக்கும். சாகுபடி செலவு மிகவும் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் சுமாரான அளவிலேயே பணம் கிடைக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் அனைத்து வகையிலும், வளர்ச்சியும், வருமானமும் கூடும். இது காலம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சியும் நடைபெற வழிபிறக்கும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.
செல்ல வேண்டிய தலம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்
பரிகாரப் பாடல்:
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடும் தனதடி வழிபடும் அடியவர்
கடிகணபதி வரஅருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
கும்பம் ( சித்திரை முதல் பங்குனி வரை)
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3
கவனம் (45/100)
உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் வருட முற்பகுதியில் கேதுவும், வருடத்தின் பிற்பகுதியில் ராகுவும் அபரிமிதமான நற்பலன்களைத் தரும் நிலையில் உள்ளனர். குரு, சனியினால் ஏற்படும் அனுகூலக்குறைவை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும். இனிமையாக பேசுவதால் மட்டுமே சிரமங்களை தவிர்க்க இயலும். பணவரவு நன்றாக இருக்கும்.
வீடு, வாகன வகையில் அபிவிருத்தி பணிகள் செய்வது இப்போதைக்கு நல்லதல்ல. புத்திரர்கள் சேர்க்கை சகவாசத்தால் கெட்டுப்போக வழியுண்டு. கடன் வசூலாகும். பொன், பொருள் சேர்க்கை எதிர்பாராத வகையில் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட துன்பம் விலகும். வழக்கு விவகாரத்தில் அனுகூல வெற்றி உண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதும் சேர்ந்து கொள்வதுமாக இருப்பர். வரும் புரட்டாசியில் சனி பெயர்ச்சியாகி அஷ்டமச்சனி என்ற நிலை பெறுகிறார். இதனால் தகுதிக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டு பணம், பொருளை இழக்க நேரிடும். தொழில் சார்ந்த வகையில் இருக்கும் அனுகூலத்தை பாதுகாத்துக் கொள்வது சிறந்தது. வெளிநாடு வேலை வாய்ப்பில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தொழிலதிபர்கள்: கல்வி நிறுவனம், ரியல் எஸ்டேட் அதிபர்கள், வாகன விற்பனையாளர்கள், ஸ்டீல் பொருட்கள், காகிதம், அலங்காரப் பொருட்கள், உணவு பண்டங்கள், மலைத்தோட்ட பயிர், கட்டுமானப் பொருட்கள், குளிர்பானம் உற்பத்தி செய்பவர்கள் தங்கள் டீலர்களை இழக்க நேரிடும். தொழிலாளர்களாலும் பிரச்னை ஏற்பட்டு உற்பத்தி குறையலாம். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பொருட்களை சந்தைப்படுத்த ஆகும் செலவும் கூடும். அலைச்சல் அதிகரிக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, பழங்கள், குளிர்பான வகைகள், மலர்கள், காய்கறி, இறைச்சி, மருந்து, பால் பொருட்கள், பலசரக்கு, சணல் பொருட்கள், இரும்பு, பாத்திரம், உணவு பண்டங்கள், சமையல் எண்ணெய், மசாலா வகைகள், மின்சார உபகரணம் வியாபாரம் செய்பவர்களுக்கு மிகப்பெரிய லாபம் எதிர்பார்ப்பதற்கில்லை. பழைய வாடிக்கையாளர்கள் சிலர் இடம் மாறிப் போக வழியுண்டு. அவர்களிடம் கனிவாகப் பேசி தக்க வைத்துக் கொள்ளுங்கள். தகுதிக்கு மீறிய வகையிலான கடன் வாங்கும் நிலை சிலருக்கு வரலாம். போட்டி இருக்கும் என்றாலும் அது தாக்குப்பிடிக்க கூடிய அளவில் அமையும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு, நிர்வாகத் தரப்பில் நெருக்கடி அதிகரிக்கும். அவர்கள் தரும் பணியைச் செய்வதில் தடங்கல் ஏற்பட்டு, அவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும். சம்பளத்தை விட செலவு அதிகரிக்கும். கடன் தொல்லைக்கு ஆளாகலாம். இந்த சமயத்தில் பொறுமையாக அனைத்தையும் சகித்துக் கொள்வதே எதிர்காலத்துக்கு நல்லது. சகபணியாளர்களுடன் தேவையற்ற விவாதம் ஏற்பட்டு பின்னடவை ஏற்படுத்தும். செப்டம்பரில் நிகழும் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அஷ்டமத்து சனியாக இருப்பதால், இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
மாணவர்கள்: பிரிண்டிங் டெக்னாலஜி, மருத்துவம், பவுதிகம், ரசாயனம், கம்ப்யூட்டர், தகவல் தொழில் நுட்பம், கேட்டரிங், நிர்வாகப் படிப்புகள், சிவில் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்கல், சட்டம், வெல்டிங், டர்னிங், பயோகெமிஸ்ட்ரி மாணவர்கள் படிப்பில் பின்தங்க நேரிடும். மற்றவர்கள் சுமாராகப் படிப்பர். ஆன்மிக நம்பிக்கையுள்ளவர்கள் கிரக நிலை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், வேலைகளை அன்றாடம் முடிக்க முடியாத அளவுக்கு பணிப்பளு கூடும். முடிக்காத பணிகளுக்காக அதிகாரிகளின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். சலுகைகள் அதிகமாக இருக்காது. சம்பள உயர்வு சுமாராகவே இருக்கும். குடும்பப் பெண்கள் கணவருடன் சுமூக உறவு கொள்வர். குடும்பச் செலவுக்கு திண்டாட்டமாகவே இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள், கூடுதல் மூலதனம் இட்டால் அதை இழக்க நேரிடும். பணிப்பளு அதிகரிக்கும். பொறுமையாக நடப்பதன் மூலம் இருக்கிற வியாபாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
அரசியல்வாதிகள்: அரசியலில் எதிர்வரும் குறுக்கீடுகளை சமாளிக்க அதிக சிரமப்பட வேண்டியிருக்கும். ஆதரவாளர்கள் பணம் கேட்டு நச்சரிப்பர் அல்லது கோரிக்கைளை நிறைவேற்றும்படி வலியுறுத்தி தொல்லை தருவர். அரசு தொடர்புடைய பணிகள் அவ்வளவு எளிதில் நடக்காது. எதிரிடையாக செயல்படும் ஒருவர் உங்களுக்கு மறைமுகமாக உதவ முன்வருவார். புத்திரர்களால் இடைஞ்சல் ஏற்படும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் முன்னேற்றத்தை எதிர்பார்க்க இயலாது.
விவசாயிகள்: விவசாயபணிகளில் ஆர்வக்குறைவு ஏற்பட்டு மகசூல் குறையும். சாகுபடி செலவு கூடுதலாகும். கால்நடை வளர்ப்பிற்கு செலவு கூடினாலும், அதற்கேற்ற வருமானம் பெறுவீர்கள். நிலம் தொடர்பான விவகாரங்களில் அனுகூலத் தீர்வு பெற ராகுபெயர்ச்சி உறுதுணையாக இருக்கும். சுபநிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்துவீர்கள்.
பரிகாரம்: அம்பாளை வழிபடுவதால் பணச்சிக்கல் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும்.
செல்ல வேண்டிய தலம்: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில்
பரிகாரப் பாடல்:
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியின் அணிக்கழகே அணுகாதவர்க்கு
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே!
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3
கவனம் (45/100)
உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் வருட முற்பகுதியில் கேதுவும், வருடத்தின் பிற்பகுதியில் ராகுவும் அபரிமிதமான நற்பலன்களைத் தரும் நிலையில் உள்ளனர். குரு, சனியினால் ஏற்படும் அனுகூலக்குறைவை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும். இனிமையாக பேசுவதால் மட்டுமே சிரமங்களை தவிர்க்க இயலும். பணவரவு நன்றாக இருக்கும்.
வீடு, வாகன வகையில் அபிவிருத்தி பணிகள் செய்வது இப்போதைக்கு நல்லதல்ல. புத்திரர்கள் சேர்க்கை சகவாசத்தால் கெட்டுப்போக வழியுண்டு. கடன் வசூலாகும். பொன், பொருள் சேர்க்கை எதிர்பாராத வகையில் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட துன்பம் விலகும். வழக்கு விவகாரத்தில் அனுகூல வெற்றி உண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதும் சேர்ந்து கொள்வதுமாக இருப்பர். வரும் புரட்டாசியில் சனி பெயர்ச்சியாகி அஷ்டமச்சனி என்ற நிலை பெறுகிறார். இதனால் தகுதிக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டு பணம், பொருளை இழக்க நேரிடும். தொழில் சார்ந்த வகையில் இருக்கும் அனுகூலத்தை பாதுகாத்துக் கொள்வது சிறந்தது. வெளிநாடு வேலை வாய்ப்பில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தொழிலதிபர்கள்: கல்வி நிறுவனம், ரியல் எஸ்டேட் அதிபர்கள், வாகன விற்பனையாளர்கள், ஸ்டீல் பொருட்கள், காகிதம், அலங்காரப் பொருட்கள், உணவு பண்டங்கள், மலைத்தோட்ட பயிர், கட்டுமானப் பொருட்கள், குளிர்பானம் உற்பத்தி செய்பவர்கள் தங்கள் டீலர்களை இழக்க நேரிடும். தொழிலாளர்களாலும் பிரச்னை ஏற்பட்டு உற்பத்தி குறையலாம். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பொருட்களை சந்தைப்படுத்த ஆகும் செலவும் கூடும். அலைச்சல் அதிகரிக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, பழங்கள், குளிர்பான வகைகள், மலர்கள், காய்கறி, இறைச்சி, மருந்து, பால் பொருட்கள், பலசரக்கு, சணல் பொருட்கள், இரும்பு, பாத்திரம், உணவு பண்டங்கள், சமையல் எண்ணெய், மசாலா வகைகள், மின்சார உபகரணம் வியாபாரம் செய்பவர்களுக்கு மிகப்பெரிய லாபம் எதிர்பார்ப்பதற்கில்லை. பழைய வாடிக்கையாளர்கள் சிலர் இடம் மாறிப் போக வழியுண்டு. அவர்களிடம் கனிவாகப் பேசி தக்க வைத்துக் கொள்ளுங்கள். தகுதிக்கு மீறிய வகையிலான கடன் வாங்கும் நிலை சிலருக்கு வரலாம். போட்டி இருக்கும் என்றாலும் அது தாக்குப்பிடிக்க கூடிய அளவில் அமையும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு, நிர்வாகத் தரப்பில் நெருக்கடி அதிகரிக்கும். அவர்கள் தரும் பணியைச் செய்வதில் தடங்கல் ஏற்பட்டு, அவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும். சம்பளத்தை விட செலவு அதிகரிக்கும். கடன் தொல்லைக்கு ஆளாகலாம். இந்த சமயத்தில் பொறுமையாக அனைத்தையும் சகித்துக் கொள்வதே எதிர்காலத்துக்கு நல்லது. சகபணியாளர்களுடன் தேவையற்ற விவாதம் ஏற்பட்டு பின்னடவை ஏற்படுத்தும். செப்டம்பரில் நிகழும் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அஷ்டமத்து சனியாக இருப்பதால், இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
மாணவர்கள்: பிரிண்டிங் டெக்னாலஜி, மருத்துவம், பவுதிகம், ரசாயனம், கம்ப்யூட்டர், தகவல் தொழில் நுட்பம், கேட்டரிங், நிர்வாகப் படிப்புகள், சிவில் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்கல், சட்டம், வெல்டிங், டர்னிங், பயோகெமிஸ்ட்ரி மாணவர்கள் படிப்பில் பின்தங்க நேரிடும். மற்றவர்கள் சுமாராகப் படிப்பர். ஆன்மிக நம்பிக்கையுள்ளவர்கள் கிரக நிலை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், வேலைகளை அன்றாடம் முடிக்க முடியாத அளவுக்கு பணிப்பளு கூடும். முடிக்காத பணிகளுக்காக அதிகாரிகளின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். சலுகைகள் அதிகமாக இருக்காது. சம்பள உயர்வு சுமாராகவே இருக்கும். குடும்பப் பெண்கள் கணவருடன் சுமூக உறவு கொள்வர். குடும்பச் செலவுக்கு திண்டாட்டமாகவே இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள், கூடுதல் மூலதனம் இட்டால் அதை இழக்க நேரிடும். பணிப்பளு அதிகரிக்கும். பொறுமையாக நடப்பதன் மூலம் இருக்கிற வியாபாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
அரசியல்வாதிகள்: அரசியலில் எதிர்வரும் குறுக்கீடுகளை சமாளிக்க அதிக சிரமப்பட வேண்டியிருக்கும். ஆதரவாளர்கள் பணம் கேட்டு நச்சரிப்பர் அல்லது கோரிக்கைளை நிறைவேற்றும்படி வலியுறுத்தி தொல்லை தருவர். அரசு தொடர்புடைய பணிகள் அவ்வளவு எளிதில் நடக்காது. எதிரிடையாக செயல்படும் ஒருவர் உங்களுக்கு மறைமுகமாக உதவ முன்வருவார். புத்திரர்களால் இடைஞ்சல் ஏற்படும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் முன்னேற்றத்தை எதிர்பார்க்க இயலாது.
விவசாயிகள்: விவசாயபணிகளில் ஆர்வக்குறைவு ஏற்பட்டு மகசூல் குறையும். சாகுபடி செலவு கூடுதலாகும். கால்நடை வளர்ப்பிற்கு செலவு கூடினாலும், அதற்கேற்ற வருமானம் பெறுவீர்கள். நிலம் தொடர்பான விவகாரங்களில் அனுகூலத் தீர்வு பெற ராகுபெயர்ச்சி உறுதுணையாக இருக்கும். சுபநிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்துவீர்கள்.
பரிகாரம்: அம்பாளை வழிபடுவதால் பணச்சிக்கல் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும்.
செல்ல வேண்டிய தலம்: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில்
பரிகாரப் பாடல்:
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியின் அணிக்கழகே அணுகாதவர்க்கு
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே!
மீனம் ( சித்திரை முதல் பங்குனி வரை)
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி
சமநிலை (65/100)
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் குரு, ராகுவும், ஆறாம் இடத்தில் சனி பகவானும் அனுகூல பலன் தரும் வகையில் உள்ளனர். இதே கிரகங்கள் வருட பிற்பகுதியில் சாதக குறைவான இடங்களில் அமர்ந்து செயல்படுவர். இதனால் வாழ்வில் முன்னேற்றமும் சிரமமும் சமஅளவில் கலந்திருக்கும்.
சாமர்த்தியமாக பேசி காரியம் சாதித்து கொள்வீர்கள். பணவரவு சேமிக்கும் அளவு கிடைக்கும். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், புதிய சொத்து வாங்குவதுமான நன்னிலை உண்டு. புத்திரர்கள் தகுதி, திறமையை வளர்த்து படிப்பிலும், பொது அறிவிலும் முன்னேற்றம் பெறுவர். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்து சிறந்த வாழ்வு நலம் பேணுவர். உடல்நலம் நன்றாக இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு, திருட்டு காரணமாக பணஇழப்பு ஏற்படும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகாரவக்ரகதியாக கும்பராசியில் அமர்வு பெறுகிறார். இந்த சமயங்களில் செயல்களில் தடுமாற்றம், கூடுதல் செலவு, உடல்நலக்குறைவு போன்ற எதிர்மறை பலன்கள் ஏற்படும். வெளிநாடு வேலை வாய்ப்புக்கு முயற்சித்தால் தடங்கல் ஏற்படும்.
தொழிலதிபர்கள்: கல்வி, நிதிநிறுவனம், தொழிற்பயிற்சி கல்லூரி, சிமென்ட் ஆலை அதிபர்களும், ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களும், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிகல், மின்னணுசாதனங்கள், தங்கநகை, உணவு பண்டங்கள், சமையல் எண்ணெய், தண்ணீர் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் தொழிலில் சிறப்பான வளர்ச்சியும், தாராள பணவரவும் பெறுவர். அபிவிருத்தி பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். வருடத்தின் முற்பகுதியில் சுறுசுறுப்பாக செயல்புரிந்து அதற்கு உரிய ஆதாயபலனை கணிசமாக பெறுவீர்கள். பிற்பகுதியில் தொழிலில் தேக்கம் ஏற்படவும் லாபம் குறையவும் வாய்ப்புண்டு. மே, ஜூன், ஜூலை மாதங்களில் சுபச்செலவு அதிகரிக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஸ்டேஷனரி, மாவு, பர்னிச்சர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பெயின்ட், விவசாய இடு பொருட்கள், மருந்து, தானியம், உடற்பயிற்சி கருவி, மீன், இறைச்சி, அலங்காரப் பொருட்கள், காகிதப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் அபிவிருத்தி காண்பர். தாராள பணவரவு கிடைக்கும். அபிவிருத்தி பணிகள் எளிதாக நிறைவேறும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் வியாபாரத்தில் கவனக்குறைவு ஏற்படும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி பணி இலக்கை பூர்த்தி செய்வர். இதனால், தாராள பணவரவு கிடைத்து சேமிப்பு வளரும். குறிப்பாக கல்வித்துறை, நிதி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருமானம் பெறுவர். பதவி உயர்வு, சலுகைகள் எளிதாக கிடைக்கும். சக பணியாளர்களுடன் நட்புறவு வளரும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் பணியில் குறுக்கீடு வரும். துணிவுடனும், சமயோசிதமாகவும் செயல்படுவதால் சிரமங்களை தவிர்க்கலாம்.
மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம், ஆசிரியர் பயிற்சி, நிதிமேலாண்மை, பிசினஸ் மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர், அனிமேஷன், இலக்கணம், இலக்கியம், ஜர்னலிசம், இசை, சினிமா தொழில்நுட்பம், ஓவியம் உள்ளிட்ட துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள், லட்சிய மனப்பான்மையுடன் செயல்பட்டு தரத் தேர்ச்சி பெறுவர். படிப்பிற்கான பணவசதி நிறைவாக கிடைக்கும். சகமாணவர்கள் படிப்பில் உறுதுணை புரிவர். மே, ஜூன், ஜூலை மாதங்களில் சிறிதளவு கவனக்குறைவும், ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வமும் இருக்கும்.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், தகுதி, திறமையை நன்கு பயன்படுத்தி பணியை சிறப்புற நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை எளிதாக கிடைக்கும். வருட பிற்பகுதியில் பணியில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குடும்ப பெண்கள், கணவரின் நல் அன்பும் தேவையான பணவசதியும் பெற்று மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு நடத்துவர். ஆபரண சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள், கூடுதல் சந்தை வாய்ப்பு கிடைத்து தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி பெறுவர்.
அரசியல்வாதிகள்: சாமர்த்தியமாக செயல்புரிந்து அரசியலில் தனக்கென சிறப்பிடம் பெறுவீர்கள். ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் நடந்து கொள்வர். எதிரிகள் தொல்லை தந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பதவிப் பொறுப்பு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். அதிகாரிகளிடம் முன்வைக்கும் கோரிக்கை முறையாக நிறைவேற்றப்படும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் கூடுதல் மூலதனத்துடன் வளர்ச்சி பணியை நிறைவேற்றுவர். நம்பகமான பணியாளர்களின் உதவி பலமாக கிடைக்கும்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அம்சங்கள் அனுகூலமாக அமையப் பெறுவீர்கள். மகசூல் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் வருட முன்பகுதியில் அபிவிருத்தியும், வருமானமும் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் திட்டம் நிறைவேறும். வருடபிற்பகுதியில் பணவரவு குறையும்.
பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் பணவரவு கூடும்.
செல்ல வேண்டிய தலம்: சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயில்
பரிகாரப் பாடல்:
அஞ்சல் என்று அருளும் அன்பே போற்றி
தஞ்சம் என்பவரைச் சார்வோய் போற்றி
பங்கயத்து உறையும் பாவாய் போற்றி
செங்கண்ணன் மார்பில் திகழ்வோய் போற்றி
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி
சமநிலை (65/100)
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் குரு, ராகுவும், ஆறாம் இடத்தில் சனி பகவானும் அனுகூல பலன் தரும் வகையில் உள்ளனர். இதே கிரகங்கள் வருட பிற்பகுதியில் சாதக குறைவான இடங்களில் அமர்ந்து செயல்படுவர். இதனால் வாழ்வில் முன்னேற்றமும் சிரமமும் சமஅளவில் கலந்திருக்கும்.
சாமர்த்தியமாக பேசி காரியம் சாதித்து கொள்வீர்கள். பணவரவு சேமிக்கும் அளவு கிடைக்கும். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், புதிய சொத்து வாங்குவதுமான நன்னிலை உண்டு. புத்திரர்கள் தகுதி, திறமையை வளர்த்து படிப்பிலும், பொது அறிவிலும் முன்னேற்றம் பெறுவர். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்து சிறந்த வாழ்வு நலம் பேணுவர். உடல்நலம் நன்றாக இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு, திருட்டு காரணமாக பணஇழப்பு ஏற்படும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகாரவக்ரகதியாக கும்பராசியில் அமர்வு பெறுகிறார். இந்த சமயங்களில் செயல்களில் தடுமாற்றம், கூடுதல் செலவு, உடல்நலக்குறைவு போன்ற எதிர்மறை பலன்கள் ஏற்படும். வெளிநாடு வேலை வாய்ப்புக்கு முயற்சித்தால் தடங்கல் ஏற்படும்.
தொழிலதிபர்கள்: கல்வி, நிதிநிறுவனம், தொழிற்பயிற்சி கல்லூரி, சிமென்ட் ஆலை அதிபர்களும், ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களும், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிகல், மின்னணுசாதனங்கள், தங்கநகை, உணவு பண்டங்கள், சமையல் எண்ணெய், தண்ணீர் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் தொழிலில் சிறப்பான வளர்ச்சியும், தாராள பணவரவும் பெறுவர். அபிவிருத்தி பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். வருடத்தின் முற்பகுதியில் சுறுசுறுப்பாக செயல்புரிந்து அதற்கு உரிய ஆதாயபலனை கணிசமாக பெறுவீர்கள். பிற்பகுதியில் தொழிலில் தேக்கம் ஏற்படவும் லாபம் குறையவும் வாய்ப்புண்டு. மே, ஜூன், ஜூலை மாதங்களில் சுபச்செலவு அதிகரிக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஸ்டேஷனரி, மாவு, பர்னிச்சர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பெயின்ட், விவசாய இடு பொருட்கள், மருந்து, தானியம், உடற்பயிற்சி கருவி, மீன், இறைச்சி, அலங்காரப் பொருட்கள், காகிதப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் அபிவிருத்தி காண்பர். தாராள பணவரவு கிடைக்கும். அபிவிருத்தி பணிகள் எளிதாக நிறைவேறும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் வியாபாரத்தில் கவனக்குறைவு ஏற்படும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி பணி இலக்கை பூர்த்தி செய்வர். இதனால், தாராள பணவரவு கிடைத்து சேமிப்பு வளரும். குறிப்பாக கல்வித்துறை, நிதி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருமானம் பெறுவர். பதவி உயர்வு, சலுகைகள் எளிதாக கிடைக்கும். சக பணியாளர்களுடன் நட்புறவு வளரும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் பணியில் குறுக்கீடு வரும். துணிவுடனும், சமயோசிதமாகவும் செயல்படுவதால் சிரமங்களை தவிர்க்கலாம்.
மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம், ஆசிரியர் பயிற்சி, நிதிமேலாண்மை, பிசினஸ் மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர், அனிமேஷன், இலக்கணம், இலக்கியம், ஜர்னலிசம், இசை, சினிமா தொழில்நுட்பம், ஓவியம் உள்ளிட்ட துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள், லட்சிய மனப்பான்மையுடன் செயல்பட்டு தரத் தேர்ச்சி பெறுவர். படிப்பிற்கான பணவசதி நிறைவாக கிடைக்கும். சகமாணவர்கள் படிப்பில் உறுதுணை புரிவர். மே, ஜூன், ஜூலை மாதங்களில் சிறிதளவு கவனக்குறைவும், ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வமும் இருக்கும்.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், தகுதி, திறமையை நன்கு பயன்படுத்தி பணியை சிறப்புற நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை எளிதாக கிடைக்கும். வருட பிற்பகுதியில் பணியில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குடும்ப பெண்கள், கணவரின் நல் அன்பும் தேவையான பணவசதியும் பெற்று மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு நடத்துவர். ஆபரண சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள், கூடுதல் சந்தை வாய்ப்பு கிடைத்து தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி பெறுவர்.
அரசியல்வாதிகள்: சாமர்த்தியமாக செயல்புரிந்து அரசியலில் தனக்கென சிறப்பிடம் பெறுவீர்கள். ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் நடந்து கொள்வர். எதிரிகள் தொல்லை தந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பதவிப் பொறுப்பு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். அதிகாரிகளிடம் முன்வைக்கும் கோரிக்கை முறையாக நிறைவேற்றப்படும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் கூடுதல் மூலதனத்துடன் வளர்ச்சி பணியை நிறைவேற்றுவர். நம்பகமான பணியாளர்களின் உதவி பலமாக கிடைக்கும்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அம்சங்கள் அனுகூலமாக அமையப் பெறுவீர்கள். மகசூல் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் வருட முன்பகுதியில் அபிவிருத்தியும், வருமானமும் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் திட்டம் நிறைவேறும். வருடபிற்பகுதியில் பணவரவு குறையும்.
பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் பணவரவு கூடும்.
செல்ல வேண்டிய தலம்: சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயில்
பரிகாரப் பாடல்:
அஞ்சல் என்று அருளும் அன்பே போற்றி
தஞ்சம் என்பவரைச் சார்வோய் போற்றி
பங்கயத்து உறையும் பாவாய் போற்றி
செங்கண்ணன் மார்பில் திகழ்வோய் போற்றி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|