புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 14%
Manimegala
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
11 Posts - 4%
prajai
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
9 Posts - 4%
Jenila
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 2%
Rutu
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
jairam
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 11, 2023 1:22 am

காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? GR25SNn

காதல், திருமணம் போன்ற உறவுகளில் இணை கொலை செய்யப்படும் சம்பவங்கள் இந்திய சமூகத்தில் தொடர் கதையாகி வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூரில் 21 வயதான சத்யஸ்ரீ என்ற பெண் அவர் பணிபுரியும் மருத்துவமனையில் வைத்தே அவரது காதலனால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தையும் அந்தத் தொடர்கதையின் ஓர் அங்கமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஒருவருடன் காதல் அல்லது திருமண உறவில் இருக்கும்போது, அவர் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தான மனிதரா என்பதை என்னென்ன அறிகுறிகளை வைத்துக் கண்டுபிடிக்க முடியும்? எப்போது சுதாரித்துக்கொள்ள வேண்டும்?

இதுகுறித்த புரிதல் இன்னும் அதிகமாகக் கிடைக்க வேண்டிய தேவை இந்திய சமூகத்தில் நிலவுகிறது.

அறிகுறிகளை முன்பே காட்டும் காதலன்



அன்றைய தினம் தனது மகளை யாரோ ஓர் இளைஞர் கத்தியால் குத்திவிட்டார் என்ற தகவலை அறிந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பம் விரைந்தது.

ஆனால், அவர்கள் உடற்கூராய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுமே நிலைமையை உணர்ந்த சத்யஸ்ரீயின் மாற்றுத்திறனாளி தந்தை அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.

கல்லூரிக் காலத்தில் இருந்தே நரேந்திரனும் சத்யஸ்ரீயும் ஃபேஸ்புக் மூலம் நட்பாகிப் பழகி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், சமீபகாலமாக பேச்சைக் குறைத்துக்கொண்ட சத்யஸ்ரீயை அவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

அவரைக் கொல்லப்போவதாக நரேந்திரன் எச்சரித்ததாகவும் அதை சத்யஸ்ரீ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தெரிய வந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அப்படியிருந்த சூழலில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற எச்சரிக்கைகளை பெண்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது ஆபத்தானது என எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த்.

கொலை செய்வதாக எச்சரிப்பதற்கும் முன்பே பல அறிகுறிகள் வெளிப்படுவதாகவும் அதைப் பெண்கள் முன்கூட்டியே உணர்ந்து சுதாரித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

உயிரைப் பறிக்கும் உறவை எப்படி தெரிந்துகொள்வது ?



காதல் என்று வந்துவிட்டால் பெரும்பாலும் ஒருவரின் தீய பண்புகள் பெரிதாகத் தெரியாது. அதைக்கூட பாசிடிவ் ஆகவே பார்க்கும் மனப்போக்கு காதலர்களுக்கு வந்துவிடும்.

எடுத்துக்காட்டாக ஒருவர் “நீ எனக்கு மட்டும்தான்” எனக் கூறி உரிமை கொண்டாடுவதை காதலில் உள்ள ஆணோ, பெண்ணோ ரசிக்கின்றனர்.

இந்த உறவு நாட்கள் செல்லச் செல்ல “பொசசிவ்” ஆக மாறிவிடுவதாகக் கூறுகிறார் மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த்.

“யாரிடமேனும் பேசினால் சந்தேகப்படுவது, செல்போனை எடுத்து உளவு பார்ப்பது, கால் வெயிட்டிங் போகும்போது சந்தேகிப்பது போன்றவை ஆரம்பத்தில் காதலாகத் தெரிந்தாலும் பின்னாளில் அதுவே பெரிய மன அழுத்தமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது,” என்றார்.

டாக்சிக் உறவுகளை இரு வகைப்படுத்தலாம். ஒருவரைப் பணத்துக்காகவோ, உடல் தேவைகளுக்காகவோ பயன்படுத்திய பிறகு விட்டுச் செல்வது. மற்றொன்றில் பிரிந்துவிட்டதால் அவரது வாழ்வை சீரழித்துவிட வேண்டும் என்ற உணர்வு. இவை இரண்டுமே மோசமான உறவில் இருப்பதைக் குறிக்கும்," எனக் கூறுகிறார் மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த்.

எப்போது உஷாராக வேண்டும்?



உணர்வுரீதியாக துன்பப்படுத்தி வேடிக்கை பார்க்கும் இணை உடல்ரீதியாக துன்பப்படுத்தவும் துணியுமா என்பதை முன்கூட்டியே அறிய வேண்டும். அது ஒருவேளை இதுபோன்று கொலை வரை கொண்டு செல்லக்கூடும். அது காதலனாக இருந்தாலும், கணவராக இருந்தாலும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார் மருத்துவர் சித்ரா அரவிந்த்.

பெற்றோரிடம் கிடைக்காத அன்பையோ, பாசத்தையோ வேறு ஒருவரிடம் கண்டுவிட்டதாக எண்ணி பூரிப்படையும் பெண்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

“பாத்துப் போ, பத்திரமா ரீச் ஆனதும் டெக்ஸ்ட் பண்ணு, இருட்டாயிருச்சு இன்னும் வீட்டுக்குப் போகாம என்ன பண்ணுற?'

இப்படி உரிமையோடு திட்டுதல் மற்றும் ஆதரவான வார்த்தைகளில்தான் சில பெண்கள் எளிதில் சிக்குவதாகவும், அவர்களுக்கு அந்த உறவில் ஒருவேளை ஏதும் தப்பாக இருந்தால் வெளியே வரத் துணிச்சல் இருக்காது," என்றும் சொல்கின்றார்.

ஒருவேளை உடல் தேவைக்காக எனில் அது குறிப்பிட்ட சில மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்றும் கூறியுள்ளார் மன நல மருத்துவர் சித்ரா.

"காதலிக்கும் நபர் திருமணப் பேச்சு எடுத்தால் தட்டிக் கழிக்கும் நபராக இருந்தால் பெண்கள் எச்சரிக்கையாகப் பழக வேண்டும்.

பழகிய ஓரிரு மாதங்களில் தங்களை முழுக்க முழுக்க பாசிடிவ் ஆகவும், காதலித்தால் இவரைத்தான் காதலிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துபவராக இருந்தால் அவர் அதற்கெனவே காய்களை நகர்த்தி ஏதேனும் காரியம் சாதிக்க விரும்பும் நபராக இருக்கலாம்."

காதலில் நெருக்கம் இருக்கும் என்றாலும், காதலிக்கத் தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே உடல் ரீதியாக உறவுகொள்ளும் அளவு நெருக்கம் காட்டும்போது அதில் பெண்கள் கவனமாக இருப்பது அவசியம் என அறிவுறுத்துகிறார் மருத்துவர் சித்ரா அரவிந்த்.

ஆக்ரோஷம் மிக்கவராக இருப்பவர்களிடம் காதல் உறவில் உள்ள பெண்கள் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படக் கூடும் என்பதை எதிர்பார்க்கலாம்.

காதலிக்கும்போதே அடிப்பது, தகாத வார்த்தைகளில் பேசுவது, சந்தேகப்படுவது போன்ற குணங்கள்தான் டாக்சிக் உறவுக்கான அறிகுறிகள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார் மருத்துவர் சித்ரா அரவிந்த்.

'நீ இல்லையென்றால் உயிரை மாய்த்துக் கொள்வேன்' எனக் கூறுவதும் டாக்சிக் உறவுதான்



“நீ இல்லாவிட்டால் செத்துவிடுவேன்” அல்லது “என்னை விட்டுவிட்டு யார்கிட்டயாவது பேசினால் உன்னைக் கொன்றுவிடுவேன்.'

இத்தகைய வார்த்தைகள் உறவின் தொடக்கத்தில் இனிமையாகத் தெரிந்தாலும், எச்சரிக்கையாக வேண்டியதற்கான சமிக்ஞையாக இவற்றைப் பார்க்க வேண்டும் என்று மருத்துவர் சித்ரா அரவிந்த் வலியுறுத்துகிறார்.

"மனித வாழ்வின் இயல்புகளைப் புரிந்தவர்கள் இதைக் கூற மாட்டார்கள், ஒரு சில மனரீதியான பாதிப்புள்ளவர்களே இப்படிக் கூறுவார்கள் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாகச் சொல்லியோ அல்லது அதற்காக முயன்றோ, ஒருவரை கட்டாயப்டுத்தி காதலை ஏற்கவோ, தொடரவோ வைத்தால் அவர்களைப் பெண்கள் கவனத்தோடு கையாள வேண்டும்.

காதல் என்பது தன்னையோ பிறரையோ காயப்படுத்தாமல் அன்பு செலுத்துவதே என்பதை முதலில் காதலிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

காதலில் பக்குவம் எதைக் குறிக்கிறது?



யாரோருவர் தனது அன்றாடப் பணிகளை பாதிக்காமல் காதலிக்கிறாரோ அதுவே முதிர்ச்சியான அல்லது பக்குவமான காதல் என்று கூறியுள்ளார் மருத்துவர் சித்ரா அரவிந்த்.

உதாராணமாக "எந்த வேலையும் செல்லாமல் 24 மணிநேரமும் போனிலேயே இருவரும் பேசிக் கொண்டிருப்பது முதிர்ச்சியான காதல் இல்லை.

அவரவருக்கு என படிப்பு, பணி, குடும்பம், கடமை எனப் பலவும் உள்ளன. அவற்றையும் பார்ப்பதற்கான நேரம் தேவை என்பதைப் புரிந்துகொள்ளும் இணையாக இருந்தால் நல்லது," என்று விளக்குகிறார்.

பிரிவைக் கையாளுவது எப்படி?



ஒருவர் தன்னுடன் காதலையோ, திருமணத்தையோ அல்லது எந்த உறவையேனும் தொடர விருப்பமில்லை எனக் கூறிவிட்டுச் சென்றால் அதை ஏற்கும் பக்குவத்தை அடைந்தவர்கள் இதுபோன்று கொலை செய்யும் அளவு துணிய மாட்டார்கள் எனச் சுட்டிக்காட்டினார்.

அதோடு, “தனது முன்னாள் இணை வேறொரு வாழ்க்கைத் துணையையோ காதலையோ தேர்வு செய்தாலும்கூட அவரைக் கொல்லும் அளவு துணியாத நபரும், தனது வாழ்வின் கடமைகளை அடுத்தடுத்து பார்த்து சரியாகச் செய்யும் நபருமே பிரிவைக் கையாளத் தெரிந்துகொண்டவர்கள்,” எனவும் தெளிவுபடுத்தினார் மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த்.

பிபிசி




காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Mon Sep 11, 2023 1:32 am

ஐயா கத்தி எடுத்து தான் கொலை செய்ய வேண்டும் என்பது இல்லை. வார்த்தையால் கூட. இதில் ஆண் என்ன பெண் என்ன அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 11, 2023 1:36 am

Anthony raj wrote:ஐயா கத்தி எடுத்து தான் கொலை செய்ய வேண்டும் என்பது இல்லை. வார்த்தையால் கூட. இதில் ஆண் என்ன பெண் என்ன அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


மிகவும் அருமை. தங்களை கருத்தில் 1௦௦% உடன்படுகிறேன்.



காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 11, 2023 4:55 pm

காதலும் தொடரும் --கொலைகளும் தொடரும்.
மனைவிமார்கள் கள்ளக்காதலன் மூலம் கணவனை கொலைசெய்வதும்,
கல்யாணமாகாமல் ஆண் பெண்--கணவன் மனைவியாக வாழ்வதும்
யாராவது ஒருவர் கொலை செய்யப்படுவதும் நாம் தினமும் படிக்கும் செய்தியாகிவிட்டது.

அதுதான் தற்கால நடைமுறையோ என சந்தேகமே தலை தூக்குகிறது.
இன்னும் என்னென்னவோ காணப்போகிறோமோ தெரியவில்லை. சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக