புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்...
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடந்த, சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
சிலவற்றை நாம் ஒழிக்கதான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்கக் கூடாது; ஒழித்து கட்ட வேண்டும். அதுபோல்தான் சனாதனம். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்.
சனாதனம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இது சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என்று பொருள். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.
எதுவும் நிலையானது கிடையாது. எல்லாவற்றையும் கேள்வி கேட்க உருவானது, கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க., இயக்கங்கள்.
வள்ளலார் ஏற்றிய அடுப்பில் இருந்து நெருப்பு எடுத்து, பள்ளிகளில் காலை உணவு திட்டம் என்ற அடுப்பை, முதல்வர் பற்ற வைத்துள்ளார். சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்தது.
இன்று பெண்கள் விளையாட்டு போட்டிகளில், சாதனை படைத்து வருகின்றனர்; மகளிர் சுய உதவிக்குழு வழியாக கடன் பெற்று, தொழில் செய்கின்றனர்.
சனாதனம், பெண்களை உடன்கட்டை ஏற வைத்தது. குழந்தை திருமணம் நடந்தது. ஆனால் திராவிடம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் ஏற்பாடு செய்துள்ளது.
கல்லுாரி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்க உள்ளது.
கைவினை கலைஞர்களை ஊக்குவிப்பதாகக் கூறி, 'விஸ்வகர்மா' என்ற திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வருகிறது. இதையே குலக் கல்வி திட்டம் என ராஜாஜி, 1956ல் கொண்டு வந்தார்.
மத்திய அரசு கொண்டு வரும் விஸ்வகர்மா திட்டத்தை, தி.மு.க., கடுமையாக எதிர்க்கும். குலக் கல்வி திட்டம் கொண்டு வந்த ராஜாஜி பதவி விலகியது போல், மோடி வரும் தேர்தலில் படுதோல்வி அடைவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
''கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போல், சனாதனத்தை (இந்து மதத்தை) ஒழிக்க வேண்டும்,'' என, அமைச்சர் உதயநிதி கூறினார். |
சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடந்த, சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
சிலவற்றை நாம் ஒழிக்கதான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்கக் கூடாது; ஒழித்து கட்ட வேண்டும். அதுபோல்தான் சனாதனம். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்.
சனாதனம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இது சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என்று பொருள். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.
எதுவும் நிலையானது கிடையாது. எல்லாவற்றையும் கேள்வி கேட்க உருவானது, கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க., இயக்கங்கள்.
வள்ளலார் ஏற்றிய அடுப்பில் இருந்து நெருப்பு எடுத்து, பள்ளிகளில் காலை உணவு திட்டம் என்ற அடுப்பை, முதல்வர் பற்ற வைத்துள்ளார். சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்தது.
இன்று பெண்கள் விளையாட்டு போட்டிகளில், சாதனை படைத்து வருகின்றனர்; மகளிர் சுய உதவிக்குழு வழியாக கடன் பெற்று, தொழில் செய்கின்றனர்.
சனாதனம், பெண்களை உடன்கட்டை ஏற வைத்தது. குழந்தை திருமணம் நடந்தது. ஆனால் திராவிடம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் ஏற்பாடு செய்துள்ளது.
கல்லுாரி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்க உள்ளது.
கைவினை கலைஞர்களை ஊக்குவிப்பதாகக் கூறி, 'விஸ்வகர்மா' என்ற திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வருகிறது. இதையே குலக் கல்வி திட்டம் என ராஜாஜி, 1956ல் கொண்டு வந்தார்.
மத்திய அரசு கொண்டு வரும் விஸ்வகர்மா திட்டத்தை, தி.மு.க., கடுமையாக எதிர்க்கும். குலக் கல்வி திட்டம் கொண்டு வந்த ராஜாஜி பதவி விலகியது போல், மோடி வரும் தேர்தலில் படுதோல்வி அடைவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயநிதி கருத்து திரிப்பு: அமித் மாளவியா மீது 4 பிரிவுகளில் திருச்சியில் வழக்குப் பதிவு
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த (02.09.23)-ம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சனாதன தர்மத்தை பற்றி பேசியதை, பா.ஜ.க வின் அகில இந்திய தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா, உதயநிதி ஸ்டாலின் பேச்சை திரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பின்பற்றி வரும் 80 சதவீதம் மக்களின் இன படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று பொய் செய்தியினை (02.09.23)-ம் தேதி உதயநிதி பேசிய காணொளியினை திரித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இவரின் இந்த பதிவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், தான் ஒருபோதும் பொதுமக்களின் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், சனாதன தர்மத்தின் கோட்பாடுகளில் ஜாதி மத பாகுபாடுகள் இருக்கிறது என்றும், சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்றும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசி வருவதாகவும், கொரோனா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் மனிதர்களுக்கு தீங்கிழைப்பது போல சனாதன தர்மம் சமுதாய தீங்கிற்கு பொறுப்பாகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அமைச்சர் உதயநிதியின் காணொளியினை திரித்து பதிவிட்ட பாஜக தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.வி. தினகரன் என்பவர் கடந்த (06.09.23)-ம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பற்றி பேசியதை பா.ஜ.க வின் அகில இந்திய தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை திரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பின்பற்றி வரும் 80 சதவீதம் மக்களின் இன படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று ட்விட் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது போன்ற பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்தவேண்டும் என்றும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சின் சாராம்சத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாகவும், தெளிவாக பதிலளித்த பின்பும் அரசியல் உள்நோக்கத்துடன் அரசியல் சுய லாபத்திற்காகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை வேண்டுமென்றே திரித்து, தொடர்ந்து இருபிரிவினருக்கு இடையே வன்முறையினை தூண்டும் வகையிலும், மாறுபட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட பல்வேறு பிரிவினருக்கு இடையில் வெறுப்பை தூண்டும் வகையிலும், சகோதரதுவத்தின் மாண்பினை குலைக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வரும் அமித் மாளவியாவும், அவர் தலைமையில் உள்ள பா.ஜ.க. அகில இந்திய தொழில் நுட்ப அணியினரும் இந்த பொய் செய்தியினை தொடர்ந்து பரப்பி வருகின்றனர் என்றும், ஆகவே அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என காவல் ஆணையர் காமினியிடம் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் அமித் மாளவியா என்பவர் மீது மாநகர குற்றப்பிரிவில் சட்டப்பிரிவுகள் 153 (கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே செயல்படுதல்), 153 (A) (வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகையை வளர்தலும், ஒற்றுமைக்கு குந்தகமான செய்கைகளை செய்தலும்), 504 (உட்கருத்துடன் அமைதியின்மையை வேண்டுமென்றே நிந்தித்தல்), 505 (1) (b) (பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல்) இ.த.ச.வின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாஜக தேசிய பிரமுகர் மீது திருச்சி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞரணி சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சனாதன விரோத சவாலை எதிா்கொள்ளுங்கள்: அமைச்சா்களுக்கு பிரதமா் மோடி அறிவுரை
சனாதன தா்மம் குறித்த எதிா்க்கட்சித் தலைவா்களின் அவதூறு கருத்துகளுக்கு தக்க பதிலடி அளித்து சனாதன விரோத சவாலை எதிா்கொள்ளுங்கள் என மத்திய அமைச்சா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.
ஜி20 மாநாட்டு தயாா்நிலை தொடா்பாக ஆலோசிக்க புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்களிடம் இவ்வாறு தெரிவித்தாா்.
மேலும், ‘பாரதம்’ பெயா் விவகாரம் தொடா்பான அரசியல் குழப்பதைத் தவிா்க்குமாறும், ஜி20 மாநாட்டின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்தும் அவா் எடுத்துரைத்தாா்.
செப்.9, 10-இல் ஜி20 உச்சி மாநாடு: ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், நிகழாண்டுக்கான அதன் உச்சி மாநாடு தில்லியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. அமெரிக்க அதிபா் பைடன், பிரான்ஸ் அதிபா் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனா்.
தக்க பதிலடி: இந்நிலையில், ஜி20 மாநாட்டின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அதன் தயாா்நிலை குறித்து ஆலோசனை நடத்த பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை புதன்கிழமை கூடியது. கூட்டத்தில் மத்திய அமைச்சா்களிடம் பேசிய பிரதமா் மோடி, ‘சனாதன தா்மம் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கும் தலைவா்கள் மற்றும் அவா்களின் கட்சிகளை அமைச்சா்கள் அம்பலப்படுத்த வேண்டும். உண்மையை மக்கள்முன் கொண்டு வர வேண்டும். சனாதன தா்மம் குறித்த எதிா்க்கட்சித் தலைவா்களின் அவதூறு கருத்துகளுக்கு
தக்க பதிலடி அளித்து சனாதன விரோத சவாலை அமைச்சா்கள் எதிா்கொள்ள வேண்டும்’ என்றாா்.
‘பாரதம்’ குறித்து விவாதம் வேண்டாம்: ஜி20 மாநாட்டையொட்டி வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவா் விருந்து அளிக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு வெளியிடப்பட்ட அழைப்பிதழில் ‘பாரத குடியரசுத் தலைவா்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்தியா என்ற பெயரை ‘பாரதம்’ என மாற்ற வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு மசோதா தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக செய்தி பரவியது. இந்நிலையில், இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமா், இவ்விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சிகளுடன் அரசியல் விவாதத்தில் ஈடுபடுவதை அமைச்சா்கள் தவிா்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
ஜி20 மாநாட்டில் பின்பற்ற...: இதைத் தொடா்ந்து, ஜி20 மாநாட்டுக்காக இந்தியா வருகைதரும் உலகத் தலைவா்களுக்கு எந்த விதத்திலும் சிரமம் ஏற்படாததை உறுதிப்படுத்த மத்திய அமைச்சா்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்தாா்.
அதன்படி, ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் இரண்டு நாள்களும் (செப்.9, 10) அனைத்து மத்திய அமைச்சா்களும் தில்லியில் இருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்து முடிக்க வேண்டும்.
மாநாடு நடைபெறும் பாரத் மண்டபம் மற்றும் இதர கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குத் தங்களின் சொந்த வாகனத்தில் வராமல், பிரத்யேகமாக அரசு ஏற்பாடு செய்துள்ள பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
அதேபோன்று, ஜி20 இந்தியா கைப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து, வெளிநாட்டு பிரமுகா்களுடன் உரையாடும்போது அதன் மொழிப்பெயா்ப்பு மற்றும் பிற வசதிகளைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் உள்ளிட்ட முக்கிய அறிவுறுத்தல்களைப் பிரதமா் மோடி வழங்கினாா்.
மாநாட்டில் பங்கேற்க வருகைதரும் உலகத் தலைவா்களை இந்திய அரசு சாா்பில் மத்திய அமைச்சா்கள் வரவேற்க உள்ளனா். அவ்வாறு, உலகத் தலைவா்களை வரவேற்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், அது தொடா்பான விவகாரங்கள் குறித்து வெளியுறவு செயலா் வினய் மோகன் குவாத்ரா அமைச்சா்களிடம் விளக்கினாா்.
அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்பாக சுமாா் ஒரு மணிநேரம் நடந்த முறைசாரா கூட்டத்தில், இந்தியாவுக்கும், அதன் உலகளாவிய அடையாளத்துக்கும் ஜி20 உச்சி மாநாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என மத்திய அமைச்சா்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
சனாதன தா்மம் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கும் தலைவா்கள், அவா்களின் கட்சிகளை அமைச்சா்கள் அம்பலப்படுத்த வேண்டும். உண்மையை மக்கள்முன் கொண்டு வர வேண்டும். சனாதன தா்மம் குறித்த எதிா்க்கட்சித் தலைவா்களின் அவதூறு கருத்துகளுக்கு தக்க பதிலடி அளித்து சனாதன விரோத சவாலை அமைச்சா்கள் எதிா்கொள்ள வேண்டும். அதே வேளையில், ‘பாரதம்’ பெயா் குறித்து விவாதம் வேண்டாம்.---பிரதமா் மோடி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார்: 5 பிரிவுகளில் வழக்கு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் மீது மதுரை காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா நேற்று முன்தினம் (செப். 4) அறிவித்திருந்தார்.
உதயநிதியின் தலையை யாரும் கொண்டு வரவில்லை என்றால், என் கையால் அவரின் தலையைத் துண்டிப்பேன். உதயநிதி தலையைத் துண்டிக்க எனது வாளையும் தயார் செய்துள்ளேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார் பரமஹன்ஸ் உடன் பியாஸ்ராய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற சனாதனத்தை ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, கரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.
சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஒழிக்க வேண்டும் என்ற தலைப்பு பொருத்தமானது என்றும், டெங்கு, மலேரியா, கரோனா போன்றவற்றை எதிர்க்கக்கூடாது ஒழிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயநிதியின் சனாதன கருத்துக்கு இரு சொற்களில் அறிவுறுத்திய பிரதமர்
புதுதில்லியில் ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு இரு சொற்களில் "அளவுடன் எதிர்வினையாற்றுமாறு" பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்கள் கூட்டத்தில், "வரலாற்றை ஆராயாமல், அரசியலமைப்பில் உள்ள உண்மை தகவலை பேசுங்கள். சனாதன சர்சைக்கு தற்கால சூழல் குறித்தும் பேசுங்கள்” என்று அமைச்சர்களிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாரதம் குறித்த சர்சை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி தனது அமைச்சர்களை எச்சரித்ததாகவும், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று அறிவுறுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, கரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
மேலும், சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஒழிக்க வேண்டும் என்ற தலைப்பு பொருத்தமானது என்றும், டெங்கு, மலேரியா, கரோனா போன்றவற்றை எதிர்க்கக்கூடாது ஒழிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு பேசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மேலும், புது தில்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு அளிக்கும் விருந்துக்கான அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக, பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இவரைப் போன்ற முட்டாள்கள் இருந்தால் எப்படி மாநிலம் உருப்படும் என அமைச்சர் சேகர்பாபு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமைச்சர் சேகர் பாபு ’சனாதனம் என்பது வாழைப்பழத்தின் தோல் என்றும் இந்து மதம் என்பது வாழைப்பழம் என்றும் வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட வேண்டும் என்றும் தெரிவித்தார்
இந்த உதாரணத்துக்கு கருத்து தெரிவித்த அண்ணாமலை ’இனிமேல் கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கும்போது கடைக்காரரிடமே வாழைப்பழத்தின் தோலை உரித்துக்கொடுங்கள் என்று கேட்க வேண்டும்
அதேபோல் அறநிலை துறை கோவிலுக்கு வாழைப்பழம் வாங்க போது, சென்னையில் இருந்தே வாழைப்பழத்தின் தோலை உரித்து அதன் பின்னர் கோவில்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். இது போன்ற முட்டாள்கள் எல்லாம் அமைச்சர்களாக இருந்தால் எப்படி மாநிலம் உருப்படும் என்றும் அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி மீது மும்பையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு முற்போக்கு சங்கத்தினர் சார்பாக, “சனாதன ஒழிப்பு மாநாடு” நடந்தது. இந்த மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், மாநில விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “சனாதன தர்மத்தை கொசு, டெங்கு, மலேரியா உடன் ஒப்பிட்டு பேசியதுடன் இதனை ஒழித்துக் கட்ட வேண்டும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதற்கு எதிராக மாநில பாஜக சார்பில் கடும் எதிர்வினைகள் ஆற்றப்பட்டன. மேலும், காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது.
உதயநிதியின் பேச்சுக்கு திமுக அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவ சேனா, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உதயநிதிக்கு எதிராக தள்ளி நிற்கின்றன.
இந்த நிலையில், தாம் சனாதன ஒழிப்பு குறித்து பேசவில்லை; எதிர்ப்பு பற்றிய கருத்துகளைதான் பதிவு செய்தேன் என உதயநிதி விளக்கம் அளித்தார்.
எனினும் இந்த விவகாரம் ஓய்ந்தப்பாடில்லை. தற்போது உதயநிதி மீது மும்பை மிரா சாலை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மதக் குழுக்கள் இடையே பகைமையை தூண்டுதல், மத உணர்வுகளை தீங்கிழைவிக்கும் வகையில் புண்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 295 ஏ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எதிர்க்கட்சி தலைவர் கூறியபடி --திசை மாற்றும் செய்தி.
மாநிலத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் /குறைமிகு ஆளுமை/ லஞ்ச குற்றச்சாட்டுகளில்
இருந்து திசை திருப்ப உத்தி.
இப்போது எல்லோரும் சனாதன தர்மம் பேசுவதால் மற்ற குறைபாடுகளை
மறந்துள்ளனர். அரசுக்கும் நிம்மதி. அதுதான் அவர்கள் வேண்டப்பட்டது.
மாநிலத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் /குறைமிகு ஆளுமை/ லஞ்ச குற்றச்சாட்டுகளில்
இருந்து திசை திருப்ப உத்தி.
இப்போது எல்லோரும் சனாதன தர்மம் பேசுவதால் மற்ற குறைபாடுகளை
மறந்துள்ளனர். அரசுக்கும் நிம்மதி. அதுதான் அவர்கள் வேண்டப்பட்டது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|