புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
''கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போல், சனாதனத்தை (இந்து மதத்தை) ஒழிக்க வேண்டும்,'' என, அமைச்சர் உதயநிதி கூறினார். |
சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடந்த, சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
சிலவற்றை நாம் ஒழிக்கதான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்கக் கூடாது; ஒழித்து கட்ட வேண்டும். அதுபோல்தான் சனாதனம். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்.
சனாதனம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இது சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என்று பொருள். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.
எதுவும் நிலையானது கிடையாது. எல்லாவற்றையும் கேள்வி கேட்க உருவானது, கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க., இயக்கங்கள்.
வள்ளலார் ஏற்றிய அடுப்பில் இருந்து நெருப்பு எடுத்து, பள்ளிகளில் காலை உணவு திட்டம் என்ற அடுப்பை, முதல்வர் பற்ற வைத்துள்ளார். சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்தது.
இன்று பெண்கள் விளையாட்டு போட்டிகளில், சாதனை படைத்து வருகின்றனர்; மகளிர் சுய உதவிக்குழு வழியாக கடன் பெற்று, தொழில் செய்கின்றனர்.
சனாதனம், பெண்களை உடன்கட்டை ஏற வைத்தது. குழந்தை திருமணம் நடந்தது. ஆனால் திராவிடம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் ஏற்பாடு செய்துள்ளது.
கல்லுாரி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்க உள்ளது.
கைவினை கலைஞர்களை ஊக்குவிப்பதாகக் கூறி, 'விஸ்வகர்மா' என்ற திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வருகிறது. இதையே குலக் கல்வி திட்டம் என ராஜாஜி, 1956ல் கொண்டு வந்தார்.
மத்திய அரசு கொண்டு வரும் விஸ்வகர்மா திட்டத்தை, தி.மு.க., கடுமையாக எதிர்க்கும். குலக் கல்வி திட்டம் கொண்டு வந்த ராஜாஜி பதவி விலகியது போல், மோடி வரும் தேர்தலில் படுதோல்வி அடைவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
"ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தை அழிப்பதே இனப்படுகொலை எனப்படும். 'சனாதன தர்மத்தை' ஒழிக்க உதயநிதி யார்?" என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல், சனாதனத்தை ஒழிக்க வேண்டும்,'' என, அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: கிறிஸ்துவ மதம் அல்லது இஸ்லாமிய மதம் வருவதற்கு முன்பே சனாதன தர்மம் என்ற வார்த்தை இருந்தது. 'சனாதன தர்மம்' என்றால் நிலையான தத்துவஞானம். நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
நேற்று உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாட்டின் 142 கோடி மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். ஏனென்றால் நேற்று ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான வெறுப்பை அவர் காட்டி உள்ளார்.
அவர் ஒரு உரையைப் படித்துக்கொண்டிருந்தார். அது உணர்வுபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தை அழிப்பதே இனப்படுகொலை எனப்படும். 'சனாதன தர்மத்தை' ஒழிக்க உதயநிதி யார்?. சனாதன தர்மத்தை' ஒழிக்க வேண்டும் என்றால், கோவில்கள் மற்றும் மதச் சடங்குகள் அனைத்தும் அழிந்து விடும். இவ்வாறு அவர் பேசினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சனாதனம் பற்றி விமர்சனம்; உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை: வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளது பின்வருமாறு:-
சென்னையில் நேற்று (சனிக்கிழமை) ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்’ என்ற பெயரில், இந்து மத எதிர்ப்பையே முழுநேர தொழிலாகக் கொண்ட அமைப்பு ஒரு கூட்டம் நடத்தியுள்ளது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தனது இந்து மத வெறுப்பை கக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவின்போது எனது மனைவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என பிரகடனம் செய்த உதயநிதி,
“சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது. மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாதது என்று பொருள். எதுவும் நிலையானது அல்ல. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.
எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காவே கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட இயக்கமும் உருவானது. வீட்டுப் படிக்கட்டை தாண்டக் கூடாது என சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தியது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா காய்ச்சல் போன்றவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அதுபோல ஒழிக்கப்பட வேண்டியதே சனாதனம்” என்று பேசியிருக்கிறார்.
10 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து, தமிழ்நாட்டு மக்களால் திமுக விரட்டப்பட்டிருந்தது. அப்போது திமுகவில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று நீலிக் கண்ணீர் வடித்தவர்தான் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். சனாதனம் என்பது நீடித்து நிலைத்து நிற்கும் ஒரு வாழ்வியல் நெறி. அறம். தத்துவம். சனாதன தர்மமே இன்று இந்து மதம் என்றழைக்கப்படுகிறது.
சனாதனம் என்ற பெயர் மட்டுமல்ல, திராவிடம், கருணாநிதி, உதயசூரியன், உதயநிதி எல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள்தான். இந்து மதத்திற்கென்று எந்தத் தலைவரும் இல்லை. இந்து மதம் போன்று கட்டற்ற சுதந்திரம் கொண்ட மதம் எதுவும் இல்லை. இங்கு தனி மனிதனும் கடவுள் ஆகலாம். அவ்வளவு சுதந்திரம். இந்து மதம் சந்தித்தது போன்ற மாற்றங்களை உலகில் எந்த மதமும் சந்தித்திருக்காது. காலம் தோறும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டதால்தான் பல்லாயிரம் ஆண்டுகள் முயற்சித்தும் இந்து மதத்தை யாராலும் அழிக்க முடியவில்லை. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று கடவுளையே கேள்வி கேட்ட மதம் இந்து மதம்.
ஆனால் கட்சிக்குள் கேள்வி கேட்டதற்காக எம்ஜிஆரையும், வைகோவையும் விரட்டி அடித்தது தான் திமுகவின் வரலாறு. திமுகவில் மட்டும் எதுவும் மாறாது. கருணாநிதி அவரது மகன் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி என்றுதான் தலைமைக்கு வர முடியும். இப்போது உதயநிதியின் மகனுக்கும் பாசறை தொடங்கியிருக்கிறார்கள். இப்படி ஒரு குடும்பத்தைத் தவிர மற்றவர்கள், தலைமைப் பதவிக்கு வர முடியாத ஒரு இயக்கம் திமுக. இப்படிப்பட்ட திமுக தான் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. ஆனால், கட்டற்ற சுதந்திரம் கொண்ட சனாதன தர்மமான இந்து மதத்தை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது என்கிறார் உதயநிதி.
வீட்டு படிக்கட்டைக் கூட தாண்ட முடியாமல் பெண்களை அடிமையாக வைத்திருந்தது சனாதனம் என்கிறார் உதயநிதி. திமுகவுக்கு வாரிசு அரசியலில்கூட ஆணாதிக்கம் தான். கருணாநிதியின் அரசியல் வாரிசான ஸ்டாலினுக்கு மகள் இருந்தும், மகன் உதயநிதியைத்தான் அரசியல் வாரிசாக்கியுள்ளார். ஸ்டாலினியின் மகள் அதாவது உதயநிதியின் தங்கை இன்னும் வீட்டு படிக்கட்டைகூட தாண்ட முடியாமல் தான் இருக்கிறார். ஆனால், உதயநிதி வீட்டுப் படிக்கட்டை தாண்டி, திரைத்துறை, கட்சி, ஆட்சி என அதிகாரத்துக்கு வந்து விட்டார். குடும்பத்திலேயே பெண்களுக்கு சமூக நீதியை நிலைநாட்ட முடியாதவர்கள், சனாதனத்தின் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். திமுகவில் பெண்ணுரிமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது சகோதரி கனிமொழியின் மனசாட்சிக்குத் தெரியும்.
கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா காய்ச்சல் போன்றவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அதுபோல ஒழிக்கப்பட வேண்டியதே சனாதனம்” என்றும் உதயநிதி பேசியிருக்கிறார்.
அருவருக்கத்தக்க, ஆணவமிக்க, சமூகத்தில் வெறுப்பை விதைக்கும் பேச்சு இது. உலகெங்கும் 110 கோடிக்கும் அதிகமான மக்கள் பின்பற்றக்கூடிய ஒரு மதத்தை, கொசு, டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டு அவமானப்படுத்தி இருப்பதை ஏற்க முடியாது. இந்து மதத்தை இழிவுபடுத்தும், அவமதிக்கும் இந்த பேச்சை காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஒரு அரங்கில் தான் உதயநிதி பேசியிருக்கிறார். திமுகவோடு கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? உதயநிதியின் இந்த வெறுப்பு பேச்சோடு காங்கிரஸ் கட்சி உடன்படுகிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவு படுத்திய இந்த பேச்சுக்காக, உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஓட்டு வங்கி அரசியலுக்காக சனாதன தர்மத்தை கையிலெடுப்பதா ? அமித்ஷா கண்டனம்
புதுடில்லி: சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் அமித்ஷா பேசியதாவது: திமுக நிர்வாகிகள் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர். கடந்த சில நாட்களாக சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் கையிலெடுத்து ஓட்டு வங்கி அரசியல் செய்கின்றனர். ஹிந்து மக்களுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் சனாதனத்தை அவமதிப்பு போல் என்பதையே இவரது பேச்சு காட்டுகிறது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை விட ஹித்து அமைப்புகள் மோசமானது என்று ராகுல் பேசுகிறார். எதிர்கட்சிகள் ஹிந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். "இந்தியா" கூட்டணியினர் ஹிந்துக்களை வெறுக்கின்றனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
அமைச்சர் உதயநிதி பேச்சு
சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசுகையில் கோவிட் ,டெங்கு, கொசுக்களை ஒழிப்பது போல் சனாதனதர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு ராஜஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
ஹிந்து சேனா புகார்
டில்லி காவல் நிலையத்தில் ஹிந்து சேனா அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். அமைச்சர் உதயநிதியின் பேச்சு ஹிந்துக்கள் மனதை புண்படுத்துவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
பா.ஜ., தலைவர் கண்டனம்
பா.ஜ., தேசியத்தலைவர் ஜேபி நட்டா பேசுகையில், திமுக.,வும் காங்கிரசும் ஹிந்துக்களை அவமதிக்கின்றன. ஓட்டு வங்கி மற்றும் மற்றவர்களை திருப்திபடுத்தும் அரசியலில் அக்கட்சிகள் ஈடுபடுகின்றன என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்நிலையத்தில் வழக்கறிஞர் புகார்
சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். என தெரிவித்திருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சனாதன தர்மத்துக்கு எதிராக மக்களை தூண்டக்கூடியதாகவும், இழிவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளது. இந்து மதத்தை கொசு, டெங்கு, கரோனா, மலேரியா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, அவற்றை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். ஒரு இந்து என்ற வகையில் எனது உணர்வுகளை அவர் புண்படுத்தி இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தின் மீதான அவரது வெறுப்பையே வெளிப்படுத்தி இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் அவர், தான் எடுத்துக்கொண்ட பிரமாணத்திற்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார். சமூகத்தின் இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் அவரது பேச்சு உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும், அதை தூண்டுவதாகவும் உள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியது. எனவே, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். சனாதனத்தை அழிக்க வேண்டுமானால் கோயில்களை அழிக்க வேண்டும். கலாச்சார, மத பழக்கவழக்கங்களை அழிக்க வேண்டும்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு திமுகவினர் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக தோன்றலாம்.
ஆனால் உதயநிதி பேச்சின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தோமானால், திமுகவின் கொள்கை என்ன என்பதை அவர் தெளிவாக விளக்கியுள்ளார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களையும் மேடையில் வைத்துக் கொண்டு அவர், சனாதன தர்மத்தை கொசு, டெங்குவுடன் ஒப்பிட்டு பேசுகிறார். எவ்வளவு வெறுப்புணர்வுடன் பேசுகிறார். இவர் ஏற்கனவே நான் பெருமைமிகு கிறிஸ்தவர் எனக் கூறியுள்ளார். நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இருந்தாலும் மற்ற மதங்களை இழிவு படுத்துவதற்கு எனக்கு உரிமை கிடையாது. ஆனால் உதயநிதியின் பேச்சு அவரது வெறுப்புணர்வை மட்டுமே காட்டுகிறது.
தமிழ்நாடு ஆன்மீக பூமி, கோவில்களின் பூமி. 1941 ஈவே ராமசாமி நாயக்கர் வெள்ளையர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் தரக் கூடாது என பேசினார்.
திமுக அவருடைய கொள்கைகளை பின்பற்றும் கட்சி. அதன் பிறகு இவர்கள் திராவிட ஸ்தான் பற்றி பேசினார்கள். முகமது அலி ஜின்னாவை சந்தித்து நீங்கள் பாகிஸ்தானை எடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் திராவிட ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறோம் என பேசினர்.
ஆனால் அம்பேத்கர் ஆரிய, திராவிட இனவாதம் இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி என பேசினார். இந்த வாதம் எப்படி பிறந்தது இதனால் தான் நேற்றைய எனது டிவிட்டில் கிறிஸ்தவ மிஷனரி என்ற வார்த்தையை நான் பயன்படுத்தி இருப்பேன்.
ராபர்ட் கிளார்ட் என்பவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவர் திருநெல்வேலியை பிரிக்க விரும்பினார். நாடார் சமூகத்தை இழிவாக பேசினார். அவ்வாறு அவர் எழுதிய புத்தகம் கடும் எதிர்ப்பிற்கு பிறகு தடை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் ஆரிய திராவிடர் இனவாதம் பேசினார். அதன்பிறகு வந்த ஜி.யு போப் திருக்குறள் உட்பட தமிழ் இலக்கியங்கள் அனைத்திலிருந்து ஆன்மீக விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். முல்லர், ஜான் மார்ஷல் ஆகியோர் ஆரிய திராவிட இனவாதம் பேசினர்.
1800 முதல் 1900 வரை தமிழ்நாட்டில் மதம் மாற்றம் செய்ய வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் இதனை பரப்பினர். இது போன்ற வரலாறு இந்தியாவில் கிடையாது. கிறிஸ்தவ மிஷனரிகள் இந்த கருத்தை பரப்பினர். ஈ.வே ராமசாமி நாயக்கரும், திமுகவும் அதனைப் பின்பற்றி இவ்வாறு பேசுகின்றனர்
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு திமுகவினர் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக தோன்றலாம்.
ஆனால் உதயநிதி பேச்சின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தோமானால், திமுகவின் கொள்கை என்ன என்பதை அவர் தெளிவாக விளக்கியுள்ளார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களையும் மேடையில் வைத்துக் கொண்டு அவர், சனாதன தர்மத்தை கொசு, டெங்குவுடன் ஒப்பிட்டு பேசுகிறார். எவ்வளவு வெறுப்புணர்வுடன் பேசுகிறார். இவர் ஏற்கனவே நான் பெருமைமிகு கிறிஸ்தவர் எனக் கூறியுள்ளார். நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இருந்தாலும் மற்ற மதங்களை இழிவு படுத்துவதற்கு எனக்கு உரிமை கிடையாது. ஆனால் உதயநிதியின் பேச்சு அவரது வெறுப்புணர்வை மட்டுமே காட்டுகிறது.
தமிழ்நாடு ஆன்மீக பூமி, கோவில்களின் பூமி. 1941 ஈவே ராமசாமி நாயக்கர் வெள்ளையர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் தரக் கூடாது என பேசினார்.
திமுக அவருடைய கொள்கைகளை பின்பற்றும் கட்சி. அதன் பிறகு இவர்கள் திராவிட ஸ்தான் பற்றி பேசினார்கள். முகமது அலி ஜின்னாவை சந்தித்து நீங்கள் பாகிஸ்தானை எடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் திராவிட ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறோம் என பேசினர்.
ஆனால் அம்பேத்கர் ஆரிய, திராவிட இனவாதம் இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி என பேசினார். இந்த வாதம் எப்படி பிறந்தது இதனால் தான் நேற்றைய எனது டிவிட்டில் கிறிஸ்தவ மிஷனரி என்ற வார்த்தையை நான் பயன்படுத்தி இருப்பேன்.
ராபர்ட் கிளார்ட் என்பவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவர் திருநெல்வேலியை பிரிக்க விரும்பினார். நாடார் சமூகத்தை இழிவாக பேசினார். அவ்வாறு அவர் எழுதிய புத்தகம் கடும் எதிர்ப்பிற்கு பிறகு தடை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் ஆரிய திராவிடர் இனவாதம் பேசினார். அதன்பிறகு வந்த ஜி.யு போப் திருக்குறள் உட்பட தமிழ் இலக்கியங்கள் அனைத்திலிருந்து ஆன்மீக விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். முல்லர், ஜான் மார்ஷல் ஆகியோர் ஆரிய திராவிட இனவாதம் பேசினர்.
1800 முதல் 1900 வரை தமிழ்நாட்டில் மதம் மாற்றம் செய்ய வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் இதனை பரப்பினர். இது போன்ற வரலாறு இந்தியாவில் கிடையாது. கிறிஸ்தவ மிஷனரிகள் இந்த கருத்தை பரப்பினர். ஈ.வே ராமசாமி நாயக்கரும், திமுகவும் அதனைப் பின்பற்றி இவ்வாறு பேசுகின்றனர்
(ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின், 'சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்' என்ற கருத்துக்கு, வழக்கறிஞர் வினீத் ஜிண்டால்,
"...இது, 'சனாதன தர்மத்துக்கு' எதிரான மற்றும் வன்முறையைத் தூண்டும் அறிக்கை. இது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
டெல்லி போலீஸ் கமிஷனர், வடமேற்கு டிசிபி மற்றும் டெல்லி போலீஸ் சைபர் செல் மற்றும் அவர் மீது தகுந்த பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்...
இப்படிப்பட்ட நபருக்கு பொருத்தமான இடம் சிறை தான்.
இவரை அங்கு அனுப்ப எங்களால் முடிந்த முயற்சியை மேற்கொள்வோம். கூடிய விரைவில் கம்பிகளுக்குப் பின்னால் இவர் இருப்பார்."
"...இது, 'சனாதன தர்மத்துக்கு' எதிரான மற்றும் வன்முறையைத் தூண்டும் அறிக்கை. இது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
டெல்லி போலீஸ் கமிஷனர், வடமேற்கு டிசிபி மற்றும் டெல்லி போலீஸ் சைபர் செல் மற்றும் அவர் மீது தகுந்த பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்...
இப்படிப்பட்ட நபருக்கு பொருத்தமான இடம் சிறை தான்.
இவரை அங்கு அனுப்ப எங்களால் முடிந்த முயற்சியை மேற்கொள்வோம். கூடிய விரைவில் கம்பிகளுக்குப் பின்னால் இவர் இருப்பார்."
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின், 'சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்' என்ற கருத்துக்கு, ராஜ்யசபா எம்.பி.யும், பா.ஜ., தலைவருமான சுஷில் மோடி, "உதயநிதி ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.. சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறார்.
ராகுல் காந்தி ஒரு பக்கம். 'நஃப்ரத் கே பஜார் மெய்ன் மொஹபத் கி துகான்', இன்னொரு பக்கம் அவர்களின் கூட்டணிக் கட்சியான தமிழ்நாட்டின் முக்கியத் தலைவர் ஒருவர், 'சனாதன தர்மத்தை' முற்றிலுமாக ஒழிக்கச் சொல்கிறார். இது தேச விரோதச் செயல்..." என்றார்..
ராகுல் காந்தி ஒரு பக்கம். 'நஃப்ரத் கே பஜார் மெய்ன் மொஹபத் கி துகான்', இன்னொரு பக்கம் அவர்களின் கூட்டணிக் கட்சியான தமிழ்நாட்டின் முக்கியத் தலைவர் ஒருவர், 'சனாதன தர்மத்தை' முற்றிலுமாக ஒழிக்கச் சொல்கிறார். இது தேச விரோதச் செயல்..." என்றார்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின், 'சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்' என்ற கருத்துக்கு, ராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திரதாஸ்,
"...'சனாதன தர்மத்தை எக்காரணம் கொண்டும் ஒழிக்க முடியாது. 'சனாதன தர்மம்' பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. சனாதன தர்மத்தின் உண்மையான அர்த்தம் அவருக்கு (உதயநிதி ஸ்டாலின்) புரியவில்லை, அவர் என்ன சொன்னாலும் அது முற்றிலும் தவறு என்று கூறியுள்ளார்..
"...'சனாதன தர்மத்தை எக்காரணம் கொண்டும் ஒழிக்க முடியாது. 'சனாதன தர்மம்' பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. சனாதன தர்மத்தின் உண்மையான அர்த்தம் அவருக்கு (உதயநிதி ஸ்டாலின்) புரியவில்லை, அவர் என்ன சொன்னாலும் அது முற்றிலும் தவறு என்று கூறியுள்ளார்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
जो सनातन मिटा नहीं लंकेश की तलवार से,
जो सनातन मिटा नहीं कंस की हुंकार से,
वह सनातन क्या मिटेगा स्टालिन की सरकार से!
எந்த சனாதனத்தை லங்கேஷின் வாளால் அழிக்க முடியவில்லையோ,
கன்சனின் கர்ஜனையால் அழியாததோ,
அந்த சனாதனம் ஸ்டாலின் அரசால் அழிக்கப்படுமா?
Harsh Pansari
जो सनातन मिटा नहीं कंस की हुंकार से,
वह सनातन क्या मिटेगा स्टालिन की सरकार से!
எந்த சனாதனத்தை லங்கேஷின் வாளால் அழிக்க முடியவில்லையோ,
கன்சனின் கர்ஜனையால் அழியாததோ,
அந்த சனாதனம் ஸ்டாலின் அரசால் அழிக்கப்படுமா?
Harsh Pansari
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|