புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயவு கூர்ந்து உங்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டாதீர்கள்
Page 1 of 1 •
விரக்தி மேலிடும் நிலையில் நமக்குள் கழிவிரக்கம் ஏற்படுவது இயல்புதான். ஆனால், அந்த உணர்விலேயே நாம் ஆழ்ந்துவிடக்கூடாது.
`இந்த நிமிடம் மகத்துவமானது. இந்த நிமிடத்தில் நான் செய்யும் செயல் எனக்கு மிகமிக முக்கியமானது.’ |
நாம் ஒவ்வொருவரும் மனதில் அழியாமல் பதித்துவைக்க வேண்டிய மந்திர வரிகள் இவை. இயன்றால் உங்கள் அலைபேசி அல்லது கணினியின் திரையில் அடிக்கடி உங்கள் பார்வையில் படும்படி இந்த வரிகளை டிசைன் செய்து வால்பேப்பராக வைத்துக்கொள்ளுங்கள்!
ஏன் அப்படி? காரணத்தை அறியுமுன் சில கதைகளைப் படித்துவிட்டு வருவோம்!
விஞ்ஞானி ஒருவர் இருந்தார். ஒருநாள், பலூன் ஒன்றில் ஏறி வானில் பறக்க ஆரம்பித்தார். சற்றுநேரத்தில் காற்றடிக்க ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக காற்றின் வேகம் அதிகரிக்கவே, பலூன் திசைமாறிச் சென்றது. விஞ்ஞானி தரையிறங்கத் தீர்மானித்தார். முன்னதாக ‘தான் எங்கு இருக்கிறோம்?’ என்பதை அறிய விரும்பினார்.
பலூன் சற்றுத் தாழ்வாகப் பறந்த நேரத்தில், கீழே ஒருவர் நிற்பதைக் கண்டார். அந்த மனிதரிடம், ``நான் எங்கே இருக்கிறேன் என்று சொல்ல முடியுமா?’’ என்று உரத்த குரலில் கேட்டார் விஞ்ஞானி.
தரையில் நின்றபடி அண்ணாந்து பார்த்த அந்த மனிதர் சொன்னார், ``நீங்கள் பூமியிலிருந்து சுமார் 50 அடி உயரத்தில் இருக்கிறீர்கள். பூமத்திய ரேகையிலிருந்து சுமார் 30 டிகிரி வடக்கில் உங்கள் பலூன் நிலைகொண்டிருக்கிறது.’’
இதைக் கேட்டதும் இக்கட்டான அந்த நேரத்திலும் விஞ்ஞானி பெரிதாகச் சிரித்துவிட்டார். பின்னர் தரையில் நின்றிருந்த மனிதரிடம் கேட்டார், ``நீங்கள் என்ன டேட்டா அனலிஸ்ட்டா?’’
விஞ்ஞானியின் யூகம் சரியாகே இருந்தது. அந்த மனிதர் `ஆமாம்’ என்று ஒப்புக்கொண்டார். விஞ்ஞானியின் கேள்விக்கு மிகத்துல்லியமான புள்ளிவிவரங்களையே கொடுத்தார் இந்த மனிதர். ஆனால், அதனால் என்ன பயன்? விஞ்ஞானி எதிர்பார்த்தது, அவருடைய பலூன் பறந்து கொண்டிருக்கும் இடம் எது, எந்த ஊரின் அருகில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளவே!
எப்போதும், மற்றவர்களின் இடத்தில் நம்மை வைத்து, அவர்களது நிலையையும் பிரச்னைகளையும் துன்பங்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே மேற்சொன்ன கதை!
வறியவர் ஒருவரைக் காண்கிறீர்கள். அவர் தனது வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் ஒரு வேலை வாங்கிக் கொடுக்கிறீர்கள் அல்லது ஏதேனும் தொகை கொடுத்து, சிறுவியாபாரம் செய்துகொள்ள வழி ஏற்படுத்தித் தருகிறீர்கள் என்றால், அது உள்ளுணர்வோடு கூடிய அன்பின் வெளிப்பாடு. அவருடைய இடத்திலிருந்து அவரின் நிலையை யோசித்ததால் ஏற்படும் உள்ளுணர்வின் வெளிப்பாடு. மாறாக, வறியவரைக் கண்டதும் ஒருபொழுது உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுகிறீர்கள் எனில், அது வெறும் இரக்கத்தின் வெளிப்பாடு... அவ்வளவே!
இரக்க உணர்வும் பிறர்மீது நாம் கொள்ளும் பரிவைக் குறிப்பதே! இருப்பினும், இது மேலோட்டமான உணர்வு. இந்த உணர்வால் பிறருக்கு அதிக பயன் எதுவும் ஏற்படாது.
சிலர் இருக்கிறார்கள்... தன்மீதே இரக்கம் கொள்வார்கள். இப்படி நம்மீதே நமக்குள் ஏற்படும் இரக்கத்தைக் கழிவிரக்கம், சுயபச்சாதாபம் என்று சொல்லலாம். எல்லோருக்கும் ஏதோவொரு தருணத்தில் ஏற்படக்கூடிய, தவிர்க்கமுடியாத உணர்வு இது; ஆனால் தவிர்க்கப்பட வேண்டிய உணர்வு!
நமக்குள் கழிவிரக்கத்தைப் பெருகவிட்டால், நம்மீதே நாம் இரக்கம் காட்டிக்கொண்டிருந்தால், அந்த உணர்வு நம்மை அடுத்து நகரமுடியாதபடி முடக்கிப்போட்டுவிடும்.
சரி... நமக்குள் கழிவிரக்கம் ஏற்படுவது ஏன்?
இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. ஒருநாள், குட்டி ஒட்டகம் தன் தாயிடம் கேட்டது, `‘நம் முதுகின் மேல் மூட்டை போன்று திமில் இருக்கிறதே, ஏன்?’'
தாய் ஒட்டகம் பதில் சொன்னது, ``நாம் பாலைவன மிருகங்கள் இல்லையா? பாலைவனத்தில், தண்ணீர் கிடைப்பது அரிது; சிற்சில இடங்களில், மிகக் குறைவாகக் கிடைக்கும் தண்ணீரைச் சேமித்து வைக்கவே இந்தத் திமில்!’’
`‘சரி... இவ்வளவு நீண்ட கால்களும், உருண்ட பாதங்களும் எதற்கு?’’
`‘பாலைவன மணலில் எளிதாக நடப்பதற்கு!’’
`‘சரி... நம் தோல், இவ்வளவு தடித்தும் சுருக்கங்களுடனும் இருப்பது ஏன்?’’
`‘பாலைவனத்தில் பகலில் கடும் வெப்பம், இரவில் கடும் குளிர். இந்தத் தட்பவெப்பத்தைத் தாங்கிக்கொள்ள ஏதுவாக, நமக்கு தடித்த தோல் அமைந்திருக்கிறது.’’
‘`நம் கண் இமைகள், இவ்வளவு பெரிதாக, நீண்டு இருக்கின்றனவே... ஏன்?’’
`‘பாலைவனத்தில் அவ்வப்போது சுழற்காற்று வீசும். மணற்புழுதி பறக்கும். அதிலிருந்து நம் கண்களைக் காக்கவே இமைகள் இப்படி அமைந்திருக்கின்றன.’’
`‘நம் பற்கள், அகன்றும், தட்டையாகவும் இருக்கின்றனவே?’’
`‘பாலைவனத்தில், தடித்த - முட்கள் உள்ள தாவரங்களே நமக்கு உணவாகக் கிடைக்கும். அவற்றை மென்று தின்பதற்கு ஏற்ற வகையில், நம் பற்கள் இப்படி அமைந்திருக்கின்றன.’’
தாய் ஒட்டகத்தின் விளக்கங்களைக் கேட்டு, சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்த குட்டி, நிறைவாக ஒரு கேள்வி கேட்டது,
``பாலைவனத்தில் வாழ்வதற்கான அரிய திறன்களைக் கொண்ட நாம், இப்போது இந்த மிருகக்காட்சிச் சாலையில் என்ன செய்கிறோம்?''
இந்தக் கதையைப் பலரும் அறிந்திருக்கக்கூடும். இந்தக் கதையில் வரும் ஒட்டகங்களைப் போலவே `பொருந்தாத பணியில், பொருந்தாத இடத்தில் இருக்கிறோமே’ என்று சிலருக்குக் கழிவிரக்கம் தோன்றலாம்.
இவ்வளவு திறமைகள் இருந்தும், கடுமையாய் உழைத்தும் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சிலர் சுயபச்சாதாபம் கொள்ளலாம். இதேபோல் வேலையின்மை, வறுமை, இல்லறத்தில் பிரச்னைகள், குடும்பச் சிக்கல்கள், தொழிலில் தோல்வி என எவ்வளவோ காரணங்கள் உண்டு, நமக்குள் கழிவிரக்கத்தை ஏற்படுத்த.
விரக்தி மேலிடும் நிலையில் நமக்குள் கழிவிரக்கம் ஏற்படுவது இயல்புதான். ஆனால், அந்த உணர்விலேயே நாம் ஆழ்ந்துவிடக்கூடாது. அது, எதிர்மறை எண்ணங்களையும் தாழ்வு மனப்பான்மையையும் வளர்க்கும்; நம் திறமைகளை மழுங்கச் செய்துவிடும். எதிர்மறையாக எண்ணுவதிலேயே பெரும்பாலான நேரம் கழிந்துபோகும்; கடந்த காலத்தில் நிகழ்ந்து முடிந்த செயல்களின் விளைவுகளைப் பற்றியும், எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் துயரங்களைப் பற்றியுமே யோசிக்கத் தலைப்படுவோம். அழகான, மகிழ்ச்சியான, இணக்கமான, இதமான, நம்பிக்கை தரும் நல்ல விஷயங்களை அரிதாகவே நினைவில்கொள்வோம். இந்த நிலை கூடாது அல்லவா?!
‘`நான் இளைஞனாக இருக்கும்போது பத்துக் காரியங்கள் செய்தால், அதில் ஒன்பது, தோல்வியில் முடிந்ததையே கண்டேன்’’ என்கிறார் அறிஞர் பெர்னாட்ஷா. ஆனால், அவர் அதற்காகக் கழிவரக்கம் கொள்ளவில்லை; தன்மீது இரக்கம் கொண்டிருக்கவில்லை. வேறு என்ன செய்தார்?
``வாழ்க்கையில் தோல்விகளை விரும்பாத நான், ‘ஒன்பது முறை வெற்றிபெறுவது எப்படி?’ என்று யோசித்தேன். அப்போது, எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது. ‘தொண்ணூறு முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும்!’ என்பதே அது. ஆகவே, எனது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டேன்!’’ என்று அவர் தனது வெற்றியின் ரகசியத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.
ஆகவே நாமும் கழிவிரக்கத்தில் கரைந்துபோகாமல், வெற்றிக்கான முயற்சிகளை முன்னெடுப்போம். அதற்கு, ஒவ்வொரு நொடியும் - நிமிடமும் நமக்கு மிக முக்கியம்!
ஒருமுறை தன் சீடர்களிடம், ``மனிதனின் ஆயுள் எவ்வளவு?’’ என்று கேட்டார் புத்தர். `60 வருடம்...’, `80 வருடம்...’, `இல்லை 65 வருடங்கள்தாம்’ என்றெல்லாம் பதில் சொன்னார்கள் சீடர்கள்.
புத்தர் புன்னகையோடு கூறினார், ``ஒரு மனிதனின் ஆயுள், ஒரு மூச்சு விடும் நேரம்! ஒரு மூச்சு விடும் நேரம் என்பது ஒரு கணப்பொழுது ஆகும். ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழ்வதே வாழ்க்கை. நொடி நொடியாக மனிதன் அர்த்தமுள்ள வாழ்வை அனுபவிக்க வேண்டும்!’’
விகடன்
Similar topics
» தயவு கூர்ந்து உதவுங்கள்
» கால்நடைகள் மீது இரக்கம் காட்டுதல்
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» உங்கள் ஃபோன் திரையைப் பார்ப்பது உங்கள் கண்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்
» சமூக விரோத சக்திகள் மீது காவல்துறை தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது
» கால்நடைகள் மீது இரக்கம் காட்டுதல்
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» உங்கள் ஃபோன் திரையைப் பார்ப்பது உங்கள் கண்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்
» சமூக விரோத சக்திகள் மீது காவல்துறை தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|