புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Harriz |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசியல்வாதிகளும் அமலாக்கத் துறையும் | செய்தித் தொகுப்புகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தமிழக அரசியல் களம் மிகவும் வித்தியாசமாக தென்படுகின்றது, இது தமிழக வரலாற்றிலே மிகப் பெரும் திருப்பம்.
செந்தில்பாலாஜி, பொன்முடியினை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் மேலான வழக்குகளும் தூசுதட்டபடுவது இனி அரசியலில் சம்பாதிக்கமுடியாது , பணம் சுருட்டும் அரசியல் முடிவுக்கு வருவது போல தோன்றுகின்றது.
பணம் ஒன்றுதான் திராவிட கொள்கையின் பலம் என்பதான் அதன் அடிமடியிலே வெட்டு விழுகின்றது.
பொன்முடி மேல் வெளிச்சம் கொடுக்கும் வழக்கு விவரங்கள் சாதாரணம் அல்ல, மண்குவாரியில் அவர் செய்திருக்கும் முறைகேடுகளும் இன்னும் பல குற்றச்சாட்டும் அதிரத்தான் வைக்கின்றன.
திராவிட திமுகவின் ஆணிவேரே மண் கடத்தல், கல்குவாரி நில ஆக்கிரமிப்பு என்பது ரகசியம் அல்ல...
அவ்வகையில் இந்த நகர்வுகள் இனி தமிழகத்தின் எல்லாப் பக்கமும் தாக்கத்தை ஏற்படுத்தலாம், மணல் கல் என அட்டகாசம் செய்யும் எல்லா தரப்புமேலும் பெரும் வழக்குகள் பாயலாம்.
ஆக புதுப் புது விவகாரங்கள் இனி வெடிக்கும், இதுகாலமும் சுகமாக இருந்தது சம்பாதித்தது போல் இனி அவர்கள் சுகமாகவும் இருக்கமுடியாது சம்பாதிக்கவும் முடியாது.
பொன்முடி விவகாரம் ஒரு தொடக்கம் போலத்தான் தெரிகின்றது, இனி அடுத்தடுத்து அதிரடிகள் தொடரலாம்..
எப்படியோ இம்மாதிரி சுரண்டல், ஊழல், சட்டவிரோத முறைகேடுகளெல்லாம் ஒழிந்து எதிர்காலத்தில் சுத்தமான அரசியலும் நல்ல தலைவர்களும் உருவாக வாய்ப்பிருப்பது போல் தெரிகின்றது...
நாம் முன்பே சொன்னதுபோல தன் வரலாற்றிலே முதன் முறையாக உண்மையான சவாலை திராவிடம் சந்திக்கின்றது, அதை கடப்பது எளிதானது போல் தெரியவில்லை...
தமிழக அரசியல் களம் மிகவும் வித்தியாசமாக தென்படுகின்றது, இது தமிழக வரலாற்றிலே மிகப் பெரும் திருப்பம்.
செந்தில்பாலாஜி, பொன்முடியினை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் மேலான வழக்குகளும் தூசுதட்டபடுவது இனி அரசியலில் சம்பாதிக்கமுடியாது , பணம் சுருட்டும் அரசியல் முடிவுக்கு வருவது போல தோன்றுகின்றது.
பணம் ஒன்றுதான் திராவிட கொள்கையின் பலம் என்பதான் அதன் அடிமடியிலே வெட்டு விழுகின்றது.
பொன்முடி மேல் வெளிச்சம் கொடுக்கும் வழக்கு விவரங்கள் சாதாரணம் அல்ல, மண்குவாரியில் அவர் செய்திருக்கும் முறைகேடுகளும் இன்னும் பல குற்றச்சாட்டும் அதிரத்தான் வைக்கின்றன.
திராவிட திமுகவின் ஆணிவேரே மண் கடத்தல், கல்குவாரி நில ஆக்கிரமிப்பு என்பது ரகசியம் அல்ல...
அவ்வகையில் இந்த நகர்வுகள் இனி தமிழகத்தின் எல்லாப் பக்கமும் தாக்கத்தை ஏற்படுத்தலாம், மணல் கல் என அட்டகாசம் செய்யும் எல்லா தரப்புமேலும் பெரும் வழக்குகள் பாயலாம்.
ஆக புதுப் புது விவகாரங்கள் இனி வெடிக்கும், இதுகாலமும் சுகமாக இருந்தது சம்பாதித்தது போல் இனி அவர்கள் சுகமாகவும் இருக்கமுடியாது சம்பாதிக்கவும் முடியாது.
பொன்முடி விவகாரம் ஒரு தொடக்கம் போலத்தான் தெரிகின்றது, இனி அடுத்தடுத்து அதிரடிகள் தொடரலாம்..
எப்படியோ இம்மாதிரி சுரண்டல், ஊழல், சட்டவிரோத முறைகேடுகளெல்லாம் ஒழிந்து எதிர்காலத்தில் சுத்தமான அரசியலும் நல்ல தலைவர்களும் உருவாக வாய்ப்பிருப்பது போல் தெரிகின்றது...
நாம் முன்பே சொன்னதுபோல தன் வரலாற்றிலே முதன் முறையாக உண்மையான சவாலை திராவிடம் சந்திக்கின்றது, அதை கடப்பது எளிதானது போல் தெரியவில்லை...
"அமலாக்கத்துறைக்கு வாஷிங் மெஷின் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்" - செந்தில் குமார், தி மு க,எம் பி. சரி! அப்படியானால், தி மு கவிற்கு ஊழல் அழுக்கு மூட்டை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். |
செந்தில் பாலாஜியை விசாரிப்பது என்பது மிக மிக அவசியம் - அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் வாதம்
வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.
அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த இயலவில்லை.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. கடந்த சில தினங்களாக இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார். மற்றொரு மூத்த வக்கீல் முகில் ரோத்தகி நேற்று ஆஜராகி வாதாடினார்.
இன்று (புதன்கிழமை) இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. தலைமை வக்கீல் துஷார்மேத்தா ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழல் உள்பட பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜி மீது கொடுக்கப்பட்டுள்ளன. அந்த புகார்கள் மீது விசாரணை நடத்த விடாமல் செந்தில்பாலாஜி அனைத்து வகைகளிலும் தடுத்தார். தனிப்பட்ட முறையில் அவரை விசாரணை நடத்த வேண்டியது மிக மிக அவசியமாகும்.
செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பெற முயற்சி செய்தபோது அவர் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. எனவேதான் அவரை கைது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதிக்க வேண்டும். அப்படி விசாரித்தால்தான் பல்வேறு விஷயங்களுக்கு தீர்வு காண முடியும். ஒருவர் கோர்ட்டு காவலில் இருக்கும் போது அவரை ஒப்படைக்கும்படி ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்ய முடியாது.
இவ்வாறு தலைமை வக்கீல் வாதாடினார்.
இத்துடன் வக்கீல்கள் வாதம் இன்று முடிந்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக அவருக்கு சொந்தமான இடங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கோவையில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சூப்ரவைசராக உள்ள முத்துபாலன் என்பவரது வீட்டில் கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போன்று திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருண் இல்லத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அருண் அசோசியேட் நிறுவனம் கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜின் குடும்பத்தினருக்கு பங்களா கட்டி கொடுத்து வரும் நிறுவனம் என கூறப்படுகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
மல்டி லெவல் கோலாபேரேஷன் என்று இதற்கு தான் பெயரா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக டிஜிபி ஆஜராக உத்தரவு
செந்தில் பாலாஜி மீதான மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தொடர்ந்த வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டின்போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த வி. செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் 30.7.2021-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக தா்மராஜ் உள்ளிட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், உயா்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சம்பந்தப்பட்ட மத்திய குற்றப் பிரிவு காவல் துறை அதிகாரிகள் செயல்படுத்த தவறியதாகக் கூறி, ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதேபோன்று, செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறையின் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு கடந்த மே 16-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் மத்திய குற்றப் பிரிவு விசாரணை அதிகாரி மேலும் விசாரணை நடத்தி இரு மாதங்களில் கூடுதல் / இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இரு மாதங்கள் முடிவடைந்த நிலையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய பல்வேறு விவகாரங்களில் விரிவான விசாரணையை மேற்கொள்ளும் தேவை உள்ளது. இந்த விவகாரத்தில் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு முன் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மற்றும் ஏஜென்டுகளின் வங்கி கணக்கு விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
வேலைக்கு தோ்வு செய்யப்பட்ட, செய்யப்படாதவா்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, விவரங்கள் பெறப்படுவது, மின்னணு பதிவுகள் ஆய்வு, மனுதாரா்கள், ஏஜென்டுகள், குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் இடையேயான பணப் பரிவா்த்தனைகள் பகுப்பாய்வு செய்யப்படுவது உள்பட பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதனால், அறிக்கை தாக்கல் செய்வதற்கு 6 மாதம் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையில், எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை அவர்களே(டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர்) இந்த விவாகாரத்தில் நேரில் வந்து கேட்கட்டும் என்றும், 6 மாத அவகாசம் எல்லாம் வழங்க முடியாது. குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும். உரிய காரணங்களை தெரிவித்தால் கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை செப்.30க்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்பாலாஜி சகோதரர் மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
கரூர்: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மனைவி நிர்மலாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.
கரூர் புறவழிச் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பங்களா வீடு தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நிர்மலாவின் பெயரைக் குறிப்பிட்டு அமலாக்கத் துறை நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார், அவரது மனைவி நிர்மலா பெயரில் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டில் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இரண்டு வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கினர்.
சோதனை நடைபெற்ற நிலையில், இந்த பங்களா வீடு கட்டுவது தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அசோக் குமார் மனைவி நிர்மலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
30 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
சென்னை: தமிழகத்தில் மணல் குவாரிகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை, திண்டுக்கல்லைச் சோ்ந்த தொழிலதிபா் வீடுகள் உள்பட 30 இடங்களில் செவ்வாய்க்கிழமை அமலாக்கத் துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீா்வளத் துறை அலுவலகத்திலும் சோதனை நடத்திய அமாலக்கத் துறையினா், அங்கிருந்து ஓா் அதிகாரியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.
தமிழகத்தில் நீா்வளத் துறையின் கீழ் சுமாா் 15 ஆற்று மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இதில் 12 மணல் குவாரிகள் மட்டும் முழுமையாக ச் செயல்படுகின்றன. இந்த மணல் குவாரிகளில் இருந்து மணலை பெறுவதற்கு நீா்வளத் துறையின் பிரத்யேகமான இணையதளத்தில் (டிஎன் சாண்ட்) பதிவு செய்து, பணத்தை செலுத்தி ரசீது பெற்று, அந்த ரசீது மூலம் சம்பந்தப்பட்ட குவாரியில் மணலை லாரிகளில் பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்.
அரசு ஒப்பந்தம்: இந்த குவாரிகளில் அரசு ஒரு யூனிட் மணல் ரூ.1,000-க்கு விற்கிறது. ஆனால், குவாரிக்குள் லாரிகள் செல்ல முடியாது என்பதால், அங்குள்ள யாா்டுக்கு மணல் கொண்டுவரப்பட்டு, அங்கு லாரிகளில் ஏற்றப்படுகிறது. இதற்காக கூடுதல் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.650 பெறப்படுகிறது.
சாதாரணமாக ஒரு லாரியில் 3 யூனிட் மணல் வரை ஏற்ற முடியும் என்பதால், மூன்று யூனிட் மணல் யாா்டில் ரூ.8,000 வரை விற்கப்படுகிறது. ஆற்றில் இருந்து மணலை எடுத்து வந்து யாா்டில் மணலை இருப்பு வைத்து, லாரியில் ஏற்றுவதற்கு தனியாருக்கு அரசு ஒப்பந்தம் வழங்குகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகளில் இந்த ஒப்பந்தப் பணியை புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சோ்ந்த தொழிலதிபா் எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் வசிக்கும் தொழிலதிபா் ரத்தினம் ஆகியோா் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
போலி ரசீதுகள்: இந்நிலையில், இணையவழியில் அரசுக்கு பணம் செலுத்தப்பட்டு பெயரளவில் மட்டும் மணல் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்தன. பெரும்பாலான குவாரிகளில் போலி ரசீதுகள் மூலமாகவும், ரசீதுகள் இல்லாமலும் மணல் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகாா் கூறின. இதன்மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதில் அரசு இணையதளம் பெரும்பாலான நாள்களில் தொழில்நுட்பக் காரணங்களால் செயல்படாமலேயே இருப்பதால், மணல் வியாபாரிகள் மூலம் போலி ரசீது பெற்று அதிக விலைக்கே வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனா்.
அரசுக்குச் சொந்தமான குவாரிகளில் சட்டவிரோதமாக மணலை விற்பதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பும் செய்யப்படுகிறது.
குவாரிகள் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்படும் பணம் தொடா்பாக அண்மையில் அமலாக்கத் துறை விசாரணை செய்ததில், அங்கு நடைபெறும் விதிமுறைகள் மீறல்கள்அனைத்தையும் கண்டறிந்தது.
அமலாக்கத் துறை சோதனை: இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த முறைகேட்டில் தொடா்புடைய தாக கருதப்படும் புதுக்கோட்டை தொழிலதிபா் எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல்லைச் சோ்ந்த தொழிலதிபா் ரத்தினம் ஆகியோருக்கு சொந்தமான மற்றும் தொடா்புடைய இடங்கள் உள்பட 30 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.
சென்னையில்...: சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள ராமச்சந்திரன் வீடு, அண்ணாநகரில் உள்ள ஆடிட்டா் பி.சண்முகராஜ் அலுவலகம், வீடு, முகப்பேரில் அரசா் தெருவில் உள்ள பொதுப் பணித் துறை பொறியாளா் திலகம் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறை அதிகாரி விக்டா் நாகராஜ் வீடு, ஆலந்தூரில் உள்ள நீா்வளத் துறை அதிகாரி முத்துசாமி வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா்.
சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீா்வளத் துறை அலுவலகத்தில் அமலாக்கத் துறையைச் சோ்ந்த 10 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில் அங்கிருந்து பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் அங்கிருந்து ஓா் அதிகாரியை விசாரணைக்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனா்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தில் உள்ள எஸ்.ராமச்சந்திரன் வீடு, நிஜாம் குடியிருப்பில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள ஓா் அலுவலகம், ஏஎம்ஏ நகரிலுள்ள மணிவண்ணன் என்பவா் வீடு, மழவராயன்பட்டி
யிலுள்ள ராமச்சந்திரன் உறவினா் வீரப்பன் வீடு, கந்தா்வகோட்டை அருகேயுள்ள புனல்குளம் சண்முகம் என்பவரின் குவாரி ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டனா். புதுக்கோட்டையில் மட்டும் சுமாா் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
30 இடங்களில் சோதனை: திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள ராமச்சந்திரனின் உறவினரும் தொழிலதிபருமான ரத்தினம் வீடு, ஹனிபா நகரில் உள்ள ரத்தினத்தின் மைத்துனா் கோவிந்தன் வீடு, திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் உள்ள ராமச்சந்திரனுக்கு சொந்தமான மணல் குவாரி, வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பாலாற்றில் உள்ள ராமச்சந்திரனுக்கு சொந்தமான குவாரி ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது.
சோதனையின்போது, மணல் அள்ளப்பட்ட இடங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கிருந்த ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா். இதனால், மணல் அள்ளும் பணி அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்தச் சோதனை மாநிலம் முழுவதும் சுமாா் 30 இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சோதனை மாலையில் நிறைவு பெற்றது. இதில் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தி.மு.க எம்.பி ஆ.ராசாவின் பினாமி நிறுவனங்கள் என்று கூறி 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது.
தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2010 செப்டம்பர் வரையில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக ஆ.ராசா மீது சி.பி.ஐ கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. அதில், ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, மருமகன் பரமேஷ், கோவை ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியான சாதிக் பாஷாவின் மனைவி ரெஹா பானு மற்றும் ஆ.ராசாவின் நண்பர்கள், உறவினர்கள் என மொத்தம் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர், 2ஜி வழக்கு விசாரணையின்போது, பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள், முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போது ஆ.ராசா உட்பட 6 பேர், ரூ.5.53 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக சி.பி.ஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்தநிலையில், ஆ.ராசாவின் பினாமி நிறுவனங்கள் என்று கூறி 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, தி.மு.க எம்.பி., ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளன. ஆ.ராசா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் இந்த சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|