புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
14 Posts - 70%
heezulia
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
8 Posts - 2%
prajai
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
4 Posts - 1%
mruthun
கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_m10கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..!


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 25, 2010 1:56 pm

1.மானாமதுரை..


அதிகமான பிரபலம் இல்லையென்றாலும் சொந்த ஊரைப்பற்றி சொல்ல வேண்டியது என் கடமை.

மானாமதுரை - சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம்,தமிழகத்தின்
ஒரு சட்டமன்ற தொகுதி. வைகை ஆறு இங்கு மட்டும் வடக்கு தெற்காக ஓடி நகரை
இரண்டாக பிரிக்கிறது மதுரையை தவிர்த்து பெரும்பாலும் ஆற்றுக்கு இருபுறமும்
ஒரே நகரம் இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு பெரிய சிவாலயம்
ஆனந்தவள்ளி-சோமநாதர் ஆலயம், ஒரு பெரிய பெருமாள் கோவில் மற்றும் சிறிய
ஆலயங்கள் நிறைய உள்ளன. சிவாலயத்தில் பிரமேந்திராள் என்னும் சித்தர் சமாதி
உள்ளது அவருக்கு ஆண்டு தோறும் ஆராதனை விழா நடைபெறும் அதில் பிரபலமான
பாடகர்கள் அனைவரும் பங்குபெறுவர். 2 கிறிஸ்தவ தேவலாயங்கள் , 2 மசூதிகள்
உள்ளன. எங்கள் ஊரின் மண் சார்ந்த தொழில்கள் அதிகம் ஊரில் செங்கல்
தயாரிக்கும் இடங்கள் மட்டும் 50 யை தொடும். மேலும் எல்லாவகை மண்பாண்டங்கள்
கிடைக்கும். இசைக்கு பயன்படும் கடம் என்னும் பானை எங்கள் ஊரில் மட்டுமே
தயாரிக்கப்படுகிறது.

வழி: மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.


2.கானாடுகாத்தான் அரண்மனை


இங்குள்ள அரண்மனை பர்மா தேக்கு மரம் கொண்டு நிலைக்கதவு, ஜன்னல்
போன்றவைகள் கலைநயத்தோடு உருவாக்கப்பட்டது. இச்சிறப்பு பெற்ற பங்களாவில்
தான் சண்டக்கோழி, சின்னஜமீன், ராஜகுமாரன், உன்னைத்தேடி உட்பட ஏராளமான
சினிமாக்கள் இங்கு படமாக்கப்பட்டன. இதை கண்டு ரசிக்க ஜெர்மன், இத்தாலி,
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்
வந்து செல்கின்றனர். காரைக்குடியிலிருந்து 8 கி.மீ.,தொலைவில்
கானாடுகாத்தான் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருச்சி செல்லும் பஸ்களில்
சென்று கானாடுகாத்தானில் இறங்கி கொள்ளலாம்.


திறக்கும் நேரம்: காலை 9.30 மாலை 4.30 மணி. அனுமதி இலவசம்.


3.ராமேஸ்வரம்


ராமநாதபுரத்திலிருந்து 54 கி.மீ., துõரத்தில் உள்ளது ராமேஸ்வரம்
ராமநாத சுவாமி கோயில். இதன் மூன்றாம் பிரகாரம் மிகவும் நீளமானது. 22
தீர்த்தங்கள் உள்ளன. அக்னிதீர்த்த கடலில் தீர்த்தமாடும் பக்தர்கள்
இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி செல்கின்றனர். சுவாமி சன்னதியில்
தினம்அதிகாலை 5.10 மணி ஸ்படிகலிங்க அபிஷேகம் முக்கியமானது. தீர்த்தங்களில்
நீராட நபர் ஒன்றுக்கு ரூ.7 கட்டணம். சுவாமி சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம்
ரூ.25, அம்பாள் சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.10, ஸ்படிக லிங்க
தரிசனம் ரூ.15, சுவாமி சன்னதி மேடையில் அமர்ந்து தரிசனம் செசய்ய ரூ.50,
கங்காபிஷேகம் செய்ய ரூ.30, சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ20,பஞ் சாமிர்த
அபிஷேகம் செய்ய ரூ 750. ருத்ராபிஷேகம் செய்ய ரூ.900, 108 சங்காபிஷேகம்
செய்ய ரூ 1000,108 கலச அபிஷேகம் செய்ய ரூ.1000, 1008 சங்காபிஷேகம் அல்லது
கலச அபிஷேகம் செய்ய ரூ 5,000 கட்டணமாகும். ராமேஸ்வரத்திலிருந்து 18
கி.மீ., துõரத்தில் உள்ளது

திறக்கும் நேரம்: காலை 5.30 பகல் 1 மணி, மாலை 4.30 இரவு 9 மணி..


4.தஞ்சை பெரிய கோயில்


உலக பாரம்பரிய சின்னமான தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு கடந்த
நிலையிலும் கலை, கட்டிட வடிவமைப்பு, சிற்பம், ஓவியம் என பலவற்றிலும் பழம்
பெருமையை வெளிப்படுத்தி வருகிறது.


தஞ்சையை ஆண்ட சோழப்பெருமன்னன் சுந்தரசோழன், வானவன்மாதேவியின் இரண்டாம்
மகனாக பிறந்த அருண்மொழிச்சோழன் எனும் ராஜராஜன் ஆயிரம் ஆண்டுக்கு முன்
தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டினார். எந்த தொழில் நுட்ப வசசதியும் இல்லாத
காலத்தில் மிக பிரமாண்டமான பெருவுடையார், பெரியநாயகியை மூலவராக கொண்ட
பெரிய கோயிலை எழுப்பினார். 212 அடி உயரமுடைய விமான மண்டபத்தை
பார்த்துக்கொண்டே இருக்கலாம்.



கோபுர உச்சியில் 26க்கு 26 அடி சதுரத் தளத்தில் 80 டன் எடை கொண்ட
விமானம் அமைந்துள்ளது. வாயில் எதிரே 19.5 அடி நீளம், 81.4 அடி அகலம், 12
அடி உயரம் கொண்ட ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி
அமைக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் துõரத்தில்
கோயில் அமைந்துள்ளது. காலை ஆறு முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை மூன்று
முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.


பெரிய கோயிலை இணைத்தவாறு அமைந்துள்ள சிவகங்கை பூங்கா உள்ளது.


திறக்கும் நேரம்: காலை 6 இரவு 8.30 மணி


5.மாத்துõர் தொட்டிப்பாலம்


திற்பரப்பில் இருந்து திருவட்டார் வந்த பின்னர் மாத்துõர் என்ற
கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தொட்டிப்பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல்,
கால்வாய் விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலுள்ளது
விசேஷ அம்சம். ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம். அடிக்கடி சினிமா
படப்பிடிப்பு நடக்கிறது. 1240 அடி நீளமும், 103 அடி உயரமும் கொண்ட இந்த
பாலம் 29 பில்லர்களை தாங்கி நிற்கிறது. இதன் மீது நின்று பார்த்தால்
கண்ணுக்கு எட்டிய துõரம் வரை பச்சை பசேலென காட்சி தரும். கட்டணம்
கிடையாது. இங்கு தங்கும் வசதி இல்லை. அருகிலுள்ள மார்த்தாண்டத்தில்
தங்குவதற்கு லாட்ஜ்கள் உள்ளன. மேலும், 18 அடி உயரமுடைய அனுமான் மற்றும்
பெண் விநாயகர் சிற்பம் கொண்ட சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், பாம்பை
மூலவராகக் கொண்ட நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன்
கோயில் ஆகியவை பிரசித்தி பெற்ற இடங்கள் ஆகும்.


6.கூந்தகுளம்


நெல்லை மாவட்டம் நான்குநேரியை அடுத்துள்ள கூந்தகுளத்திற்கு வெளிநாட்டு
பறவைகள் வருகின்றன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் செங்கால்நாரை,
கூழக்கடா, ஒயிட் ஐபீஸ் உள்ளிட்ட பறவைகள் வருகின்றன. ஆண்டுதோறும் தை
அமாவாசையில் இங்கு கூடு கட்டும் பறவைகள் ஆடி அமாவாசை வரையிலும் தங்கி
இங்கேயே குஞ்சு பொறித்து பின்னர் குஞ்சுப்பறவைகளை அழைத்துக்கொண்டு
செல்கின்றன. நெல்லையில் இருந்து ரெட்டியார்பட்டி வழியே சுமார் 25
கி.மீ,துõரத்தில் உள்ளது. எப்போதாவதுதான் அரசு பஸ்கள் செல்கின்றன. சொந்த
வாகனத்தில் செல்வது நல்லது. சிறிய கடைகள் மட்டுமே உள்ளன. பைனாகுலர்
வசசதியுடன் சுற்றுலா துறையின் மையம் இங்கு செயல்படுகிறது.


7.ஆழியாறு அணை


மேற்குத் தொடர்ச்சி மலை யின் அடிவாரத்தில், பொள்ளாச்சியில் இருந்து 26
கி.மீ., தொலைவில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. ஆழியாற்றின் குறுக்கே
அமைந்துள்ள இந்த அணையில் 196.83 சதுர கி.மீ., பரப்பளவில் பெய்யும் மழை
நீர் தேங்குகிறது.


ஆழியாறு அணையில் பொதுப்பணித்துறையினரால் பராமரிக்கப்படும் பூங்கா
உள்ளது. அணையின் அருகில், தமிழ்நாடு மீன்வளர்ச்சித் துறையினரால்
பராமரிக்கப்படும் , இந்தியாவின் இரண்டாவது பெரிய வண்ணமீன் காட்சியகம்
உள்ளது. அணையில், படகு சவாரி உள்ளது.



நபர் ஒன்றுக்கு 15 ரூபாய் கட்டணம். அணையில் இருந்து ஒரு கி.மீ.,
தொலைவில், "மங்கிபால்ஸ்' உள்ளது. மங்கிபால்ஸ் 20 மீட்டர் உயரமுள்ளது.
மூலிகைகள் கலந்து வரும் நீரில் குளித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும்.
அணைப்பகுதியில், ஆய்வுமாளிகை உள்ளது. இங்கு மூன்று அறைகள் உள்ளன. ஒரு
அறையில் இருவர் தங்கலாம். அதற்கு கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்
படுகிறது. கூடுதல் நபருக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலாப்பயணிகள் பொள்ளாச்சியில் தங்கி, ஆழியாறுக்கு செல்லலாம்.


8.கொடைக்கானல்


மதுரையில் இருந்து 115 கி.மீ., மற்றும் கோவையிலிருந்து 130
கி.மீ.,தொலைவில் கொடைக்கானல் உள்ளது. பஸ் வசதி இருக்கிறது. கொடைக்கானல்
ரோடு வரை ரயிலிலும் வரலாம். இங்கிருந்து 80 கி.மீ., பிற வாகனங்களில் செல்ல
வேண்டும்.


கொடைக்கானலில் 24 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஏரியில் படகு சவாரி செய்யலாம்.
பிரையண்ட் பூங்காவில் அனைத்து வகையான பூக்களையும், செடிகளையும் பார்த்து
பரவசப்படலாம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடக்கும் கோடை விழாவில் மலர்
கண்காட்சி நடத்தப்படும். ஏரியிலிருந்து 32 கி.மீ.,தொலைவில்
சோலார்பிசிக்கல் அப்சர்வேட்டரி உள்ளது. கடல் மட்டத்திலிருந்து கொடைக்கானல்
2 ஆயிரத்து 133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சோலார் பிசிக்கல்
அப்சர்வேட்டரி கடல் மட்டத்திலிருந்து


2 ஆயிரத்து 343 மீட்டர் உயரத்தில் உள்ளது. கொடைக் கானல் மலையில் இதுவே
அதிகபட்ச உயரமாக கருதப்படுகிறது. வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை
பார்ப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



கோக்கர்ஸ் வாக், குறிஞ்சி ஆண்டவர் கோயில், டெலஸ்கோப் ஹவுஸ், கிரீன்
வேலி வியூ (பசுமை பள்ளத்தாக்கு) பில்லர் ராக், தற்கொலை முனை, சைலண்ட் வேலி
வியூ(அமைதி பள்ளத்தாக்கு) பேரிஜம் லேக் வியூ, பெய்ரி பால்ஸ், செட்டியார்
பார்க், செண்பகனுõர் மியூசியம், வெள்ளி நீர்வீழ்ச்சி போன்றவை பார்த்து
ரசிக்கும் இடங்களாக உள்ளன.


ஓட்டல் தமிழ்நாடு, கால்டன் ஓட்டல், ஓட்டல் அஸ்டோரியா, கோடை ரிசசார்ட்
ஓட்டல், ஸ்டெர்லிங் லேக் வியூ, கோடை இன்டர்நேஷனல், ஸ்டெர்லிங் வேலி வியூ,
தாஜ் வில்லா, ஓட்டல் சியோன், ஓட்டல் கிளிப்டன், வைகை ஓட்டல், இன்டர்நேஷனல்
டூரிஸ்ட் லாட்ஜ், வேலி வியூ, ஓட்டல் பேலஸ், ஓட்டல் சசங்கீத் போன்றவை தமிழக
சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்ட தங்கும் விடுதிகளாக
அறிவிக்கப்பட்டுள்ளளன.


ஏப்ரல், மே, ஜூன் மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சீசன்.
இந்த மாதங்களில் தங்குவதற்கு இடம் கிடைப்பது சிரமம். ஒவ்வொரு ஆண்டும் மே
மாதம் கோடை விழாவும், டிசம்பரில் குளிர்கால விழாவும் கொண்டாடப்படும்.
சைக்கிள், குதிரை, படகு சவாரி செய்யலாம். படகு சவாரிக்கு ரூ.80 ம், குதிரை
சவாரிக்கு ரூ.100 ம் சைக்கிளில் சுற்றி பார்க்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.5
ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


9.மலைக்கோட்டை


திருச்சியின் மையப்பகுதியில் கண்ணுக்கும், மனதுக்கும் விருந்தளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டை கம்பீரமாக அமைந்துள்ளது.


83 மீட்டர் உயரம், 344 படிகட்டுகளை கொண்டு மலைக்கோட்டை உச்சியில்
சரித்திர புகழ்மிக்க உச்சி விநாயகரும், அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும்,
நடுவில் தாயுமானசுவாமியும் உள்ளனர். இங்கு ஏழாம் நுõற்றாண்டை சேர்ந்த
பல்லவர் கால குகைக் கோயில், கல்வெட்டுகள், வரலாற்று சிற்பங்கள் என
ஆயிரமாண்டு பழமை வாய்ந்த விஷயங்கள் உள்ளன.



மலைக்கோட்டையை சுற்றியுள்ள கடைவீதிகள் ஆடை, அணிகலன், எலக்டரானிக்ஸ்,
வீட்டு உபயோக பொருள் விற்பனைக்கு பெயர்பெற்றது. எனவே, பயணிகள் இந்த
கடைவீதிகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல தவறுவதில்லை.
மலைக்கோட்டை அருகே சத்திரம், மத்திய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் சுற்றுலா
பயணிகள் தங்குவதற்கான ஓட்டல்கள் உள்ளன. ரூ.200 முதல் வசதிக்கேற்ப தங்க
இடம் உண்டு. மலைக்கோட்டை அருகில் நத்தர்ஷா பள்ளிவாசல் மற்றும் டவுன்ஹால்
அரசு அருங்காட்சியகம் ஆகியவையும் உள்ளன.


உச்சிப் பிள்ளையார் சன்னதி திறக்கும் நேரம்: காலை 6 இரவு 8.30 மணி.


தாயுமானவர் சன்னதி திறக்கும் நேரம்: காலை 5.30 பகல் 12 மணி, மாலை 4 இரவு 8.30 மணி


10.குட்டி கோடம்பாக்கம் கொடிவேரி அணை


பவானிசாகர் அணை கட்டுவதற்கு முன்பே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி
அணை கட்டப்பட்டது. 17ம் நுõற்றாண்டில் மைசூர் அரசர்களால் கட்டப்பட்ட
கொடிவேரி அணை, சத்தியமங்கலத்தில் இருந்து கிழக்கே ஒன்பது கி.மீ.,
துõரத்திலும், கோபியில் இருந்து மேற்கே 24 கி.மீ., துõரத்திலும்
அமைந்துள்ளது. "குட்டி கோடம்பாக்கம்' என்றழைக்கப்படும் இந்த அணை 496 அடி
நீளம் கொண்டது. அணையில் ஏராளமான சினிமா படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. "இது
நம்ம ஆளு' என்ற சினிமா இந்த அணையை பெரிதும் மையமாக வைத்து எடுக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பு அணையில் இருந்து விழும் நீர்வீழ்ச்சியில்
குளிக்க சுகமாக இருக்கும்.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Jan 25, 2010 2:54 pm

கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! 677196

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Jan 25, 2010 2:55 pm

கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! 677196 கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! 677196 கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! 678642



கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Jan 25, 2010 3:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 3:33 pm

தெரிந்து கொண்டோம்!!! நன்றி!!!



கேள்விப்பட்ட இடங்கள்.... கேள்விப்படாத தகவல்கள்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக