புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_c10அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_m10அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_c10அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_m10அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_c10அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_m10அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_c10அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_m10அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_c10அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_m10அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jun 23, 2023 8:13 pm

அழகிய அந்தமான்!
நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிஞர் சி. சக்திவேல் அவர்கள் எழுதியுள்ள ‘அழகிய அந்தமான்’ நூல் படித்தேன், வியந்தேன், மகிழ்ந்தேன். இவ்வளவு நாளாக அந்தமான் என்றால், அந்த சிறைச்சாலை மட்டுமே நினைவிற்கு வரும். இந்த நூல் படித்து முடித்தவுடன் அந்தமான் சென்று அவசியம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. அந்தமான் பற்றி தமிழில் வந்துள்ள முழுமையான நூல் மட்டுமல்ல, ஆகச் சிறந்த நூல் இது.

பல புள்ளி விபரங்களுடன் அந்தமான் மாவட்டம், நிக்கோபார் மாவட்டம் உள்ள தீவுகளில் பரப்பளவு எவ்வளவு என துல்லியமாக பட்டியலிட்டு உள்ளார். பல வண்ணப்புகைப்படங்கள் அற்புதமாக அச்சாகி உள்ளன. நேரில் சென்று பார்த்த உணர்வைத் தரும் வணணப்படங்கள் நனிநன்று.

நூலாசிரியர் சில ஆண்டுகள் அங்கு வாழ்ந்து பணியாற்றிய காரணத்தால் அந்தமானை சுற்றிப்பார்த்து அங்குலம் அங்குலமாக ரசித்து நூலாக்கி உள்ளார். பயணக்கட்டுரை போல இல்லாமல் வித்தியாசமான, விளக்கமான, தெளிவான நடையில் நூலை அமைத்துள்ளார். ‘அந்தமானைப் பாருங்கள் அழகு’ என்ற திரைப்படப்பாடலும் என் நினைவிற்கு வந்தது. கவிதை நூல் என்றால் உடன் படித்து விடுவேன். கட்டுரை நூல் என்பதால் தாமதம் ஆகி விட்டது. இவ்வளவு நாள் படிக்காமல் வைத்து விட்டோமே என மனம் வருந்தினேன்.

அந்தமான் சென்றவர்கள் படித்து, மலரும் நினைவுகளை மலர்விக்கலாம். இனி அந்தமான் பார்க்க இருப்பவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் நூல். சுற்றுலாத் துறையின் சார்பில் அந்தமான் அரசாங்கமே வெளியிட்ட நூல் போல உள்ளது. அவ்வளவு தகவல்கள் நூலில் உள்ளன. தகவல் களஞ்சியமாக உள்ளது.

அந்தமானில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் பற்றிய விரிவான விளக்கமான தகவல்கள் அடங்கி உள்ள நூல். நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிந்தது. புகைப்படங்கள் எடுத்தல், பார்த்த இடங்களை நினைவில் வைத்து எழுதுதல் என அற்புதமான உழைப்பை உணர்ந்தேன்.

வெளிநாட்டு சொகுசுக் கப்பல், பல தீவுகளின் படங்கள், செல்லுலர் சிறைச்சாலைக்குள் உள்ள தியாகிகளின் நினைவுச் சின்னம், கடலடியில் உள்ள பவளங்கள், கார்பன் முனை கடற்கரை, காந்தி பூங்கா, நிக்கோபார் கிராமம் வண்ணப்படங்கள் பிரமிக்க வைத்தன. உணவு உற்பத்தி, மக்கள் வாழ்க்கை, ஆதிவாசிகள் தகவல்கள் உள்ளன.

அந்தமானுக்கு வந்து சென்ற தமிழறிஞர்கள் பட்டியல் கண்டு வியந்தேன். பதச்சோறாக அவை மட்டும் உங்கள் பார்வைக்கு :

பாவலரேறு பெருஞ்சித்திரனார், க.ப. அறவாணர், எழுத்தாளர் ஜெயகாந்தன், தமிழ்க்குடிமகன் தவத்திரு குன்றக்குடி அடிகளார், குமரி அனந்தன், இந்துமதி, புலமைப்பித்தன், கவிஞர் சுரதா, ஈரோடு தமிழன்பன், தமிழ்மொழிக் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சாலமன் பாப்பையா, பேராசிரியர்
கு. ஞானசம்பந்தன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் அந்தமான் சென்று வந்துள்ளனர். உரையாற்றியும் மகிழ்ந்துள்ளனர்.

நூலாசிரியர் கவிஞர் சி. சக்திவேல் அவர்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 34 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார். அங்கு கற்பித்த அனுபவம், வாழ்ந்த அனுபவம், நேரில் கண்டு ரசித்த அனுபவம் என அனைத்தையும் எழுத்தாக்கி வெற்றி பெற்றுள்ளார்.

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் வளரும் தாவரம், வாழும் கடலடி உயிரினங்கள், பறவை, கடற்கரை, சுற்றுலாக் காலம், எப்படி வருவது, போக்குவரத்து விபரம் அங்குள்ள விதிமுறைகள் - எல்லாம் விபரமாக எழுதி உள்ளார். அந்தமான் சுற்றிப்பார்க்க உதவிடும் கையேடு என்றே சொல்லலாம்.

இலக்கியம் பற்றியும் எழுதி உள்ளார். முதல் தமிழ் நூல், தமிழர் சங்கம் வெளியிட்ட நூல்கள் பட்டியல், அந்தமானில் வெளிவந்த தமிழ் நூல்களின் பட்டியல், ஆய்வுக்கட்டுரைகளின் பட்டியல், அந்தமான் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பட்டியல், மலையாளம், ஆங்கிலம் இந்தி எழுத்தாளர்கள் பட்டியல், தமிழர் வார இதழ்கள், பிறமொழி இதழ்கள், கலை மற்றும் நாடகங்கள் குறித்து, விளையாட்டு பற்றியும் இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன.

அந்தமானில் பல்லாண்டுகள் வசித்த காரணத்தால், உற்றுநோக்கி ஆராய்ந்து தேடி அறிந்து நூலை வடித்துள்ளார். ‘அழகிய அந்தமான்’ என்பது முற்றிலும் பொருத்தமே. உண்மையிலேயே அழகிய அந்தமான் தான் என்பதை உணர வைத்த நூல் இது. அந்தமான் பற்றி இவ்வளவு விரிவாக, இதுவரை வேறு எந்த நூலும் தமிழில் வரவில்லை என்று அறுதியிட்டு கூறலாம். இந்த நூலை எழுதியதற்காக அந்தமான் அரசாங்கம் இவருக்கு உயரிய விருதை வழங்கலாம். சுற்றுலா வளர்ச்சிக்கு உதவிடும் உன்னத நூல். நூலாசிரியர் கவிஞர்
சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்.



View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக