புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
95 Posts - 66%
heezulia
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
5 Posts - 3%
prajai
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
473 Posts - 52%
heezulia
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
20 Posts - 2%
i6appar
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
13 Posts - 1%
prajai
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_m10செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 25, 2023 12:55 am

செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் _1298510

பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவை 300 உறுப்பினர்களும் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 28-ம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று முறைப்படி அறிவித்தார்.

அத்துடன், சுதந்திரத்தின் போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக பிரிட்டிஷாரிடம் இருந்து நேரு பெற்றுக் கொண்ட செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படும் என்று அவர் தெரிவித்தார். மக்களவை சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோலை பிரதமர் மோடி நிறுவுவார் என்றும் அமைச்சர் அமித்ஷா கூறினார்.

பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா விடுதலை பெறும் நிகழ்வில் இடம்பிடித்த சோழர் கால செங்கோல், இந்திய ஜனநாயகத்தின் அடுத்தக்கட்ட வரலாற்று நிகழ்விலும் இடம் பிடிக்கிறது. அத்துடன் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிரந்தரமாக வீற்றிருக்கவும் போகிறது.




சோழர் கால செங்கோலின் சிறப்பு


செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் 181fe010

* செங்கோல் என்ற சொல் தமிழில் செம்மை என்ற சொல்லில் இருந்து தருவிக்கப்பட்டது. இதற்கு நேர்மை என்று பொருள்.

* இந்த செங்கோலின் உச்சியில் கம்பீரமான பார்வையைக் கொண்ட புனிதமாக நந்தி இருக்கும்.

* இந்திய துணைக்கண்டத்தில் பல நூற்றாண்டுகளாக நீடித்த பேரரசுகளில் முதன்மையாக திகழ்ந்த, தமிழ் மண்ணை மையமாகக் கொண்ட சோழப் பேரரசில் ஆட்சியாளர் அதாவது வழிவழியாக மன்னர்கள் மாறும் போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக கடைபிடிக்கப்பட்ட பாரம்பரிய வழிமுறை இது.

* ஆட்சி பீடம் ஏறும் போது பாரம்பரிய குருவோ அல்லது முன்பு ஆட்சியில் இருந்த மன்னனோ புதிய ஆட்சியாளரிடம் செங்கோலை ஒப்படைப்பார்.

* செங்கோலைப் பெறுபவர் நியாயமாகவும், நடுநிலையுடனும் ஆட்சி புரிவதற்கான ஆணையைப் பெறுகிறார்.

* கடைசியாக சொல்லப்பட்டதுதான் முக்கிய விஷயம். மக்களுக்கு சேவை புரிவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இதனை மறக்கவே கூடாது.




1947-ல் நேருவிடம் செங்கோல் ஒப்படைப்பு


* இந்தியா விடுதலை பெற்ற போது, பிரிட்டிஷாரிடம் இருந்து ஆட்சி கைமாறியதைக் குறிக்கும் வகையில், இந்த சோழர் கால நடைமுறை பின்பற்றப்பட்டது.

* தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை மடாதிபதி செங்கோலை மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து பின் அவரே வாங்கிக் கொண்டார்.

* அந்த செங்கோல் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

* 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவில் ஜவஹர்லால் நேருவிடம் கொடுப்பதற்காக அவரது இல்லத்தை நோக்கி செங்கோல் ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டது.

* சோழர் கால பாரம்பரிய முறைப்படி, ஓதுவார் தேவாரத் தொகுப்பில் இருந்து கோளறு பதிகத்தின் 11-வது வரியான "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே" என்று பாடி திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரான் ஸ்வாமிகள் தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை நேருவிடம் ஒப்படைத்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 25, 2023 1:06 am

இந்த தேசம் சுதந்திரம் அடைந்தபோது இரு துண்டுகளாகியிருந்தது, இந்துக்களின் தேசத்தில் நாங்கள் வாழமுடியாது அது இந்து தேசம் என சொல்லி பாகிஸ்தானை வாங்கி கொண்டு சென்றார் ஜின்னா.

சென்றவர்கள் அவர்கள் முறைபடி சம்பிரதாயபடி இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தானை ஸ்தாபித்தார்கள்.

இப்பக்கம் இந்து இந்தியா உருவானது, இந்தியா சுதந்திரம் பெறும்போது இந்துநாடுதான் .

இந்துக்களின் நாடாகத்தான் அறியபட்டது அதில் ஆச்சரியம் ஏதுமில்லை, இந்துநாடு என்றே அது முழுக்க அடையாளத்தோடு இருந்தது.

பின் 1950ல் சட்டங்களை தொகுக்கும் போதுதான் "சமய சார்பற்ற தேசம்" என தன்னை அடையாளபடுத்தியது.

இதெல்லாம் ஏன் என்றால் யாரிடமும் பதிலே கிடையாது, கேட்டால் சங்கி மதவிரோதி.

அப்படி இந்து இந்தியாவாக அறியபட்ட அந்த இந்தியாவின் சுதந்திரத்தை எப்படி அறிவிப்பது என மவுண்ட்பேட்டன் இந்தியர்களிடமே கோரினான்.

இந்த அதிகாரமாற்றம் இந்தியாவின் பாரம்பரியபடி நடக்கட்டும், அதுதான் நல்லது. எந்நிலையில் இந்தியாவினை பிரிட்டன் பெற்றுகொண்டதோ அந்த கலாச்சாரபடியே விட்டுவிட்டு நாங்கள் வெளியேற வேண்டும் என்றான்

இந்து ஆச்சாரபடி சுதந்திரம் வழங்க வேண்டும் என முடிவு செய்யபட்டது

ஆம் பிரிட்டிஷ்காரன் நேருவுக்கு அந்த நல்ல விஷயத்தை சொன்னான் மவுண்ட்பேட்டன், இது இந்து தேசம் என்பது அவனின் சரியான நம்பிக்கை. நாத்திரகரான நேரு விஷயத்தை ஆத்திரகரான ராஜாஜியிடம் விட்டுவிட்டார்..

ராஜாஜி தேர்ந்த ஞானி, குறைசொல்லமுடியா இந்து, அவர் இந்துமரபுபடி ராஜகுருதான் செங்கோலை அரசனிடம் கொடுத்து ஆட்சிமாற்றத்தை செய்வார், அந்த மரபுபடி நாமும் செய்யவேண்டும் என்றார்.

அத்தோடு திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டார், அப்பொழுது அந்த சன்னிதானத்தின் இளையபீடம் பண்டார சுவாமிகள் ஒரு செங்கோலுடன் டெல்லி சென்றார்.

ஆம், அப்பொழுது இந்து இசை ஒலிக்க , மங்கல வாத்தியங்கள் முழங்க, கங்கை நீர் தெளிக்கபட, திருவாவ‌டுதுறை ஆதீனமே செங்கோல் மாறும் நிகழ்வினை நடத்தி வைத்தார்கள்.

அப்பொழுது திருஞான சம்பந்தரின் தேவார வரிகள் ஓதப்பட்டன‌.

திருநனிப்பள்ளி தேவாரத்தில் இருந்து இந்த வரிகளும்

“இடுபறை யொன்ற அத்தர் பிரான்மேல் இருந்து
இன் இசையால் உரைத்த பனுவல்,
நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க
வினை கெடுதல் ஆணை நமதே “
என்றும்.

திருவேதிக்குடி தேவாரத்தில் இருந்து இந்த வரிகளும்

“சிந்தை செய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்-
வெய்தி இமையோர் அந்தவுலகெய்தி
அரசாளும் அதுவே சரதம்
ஆணை நமதே”

கோளறுபதிகத்தில் இருந்து இந்த வரிகளும்

“தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்,
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே”
என ஓதப்பட்டன‌

ஆம், மும்முறை ” அரசாள்வார் ஆணை நமதே” என உரக்க சொன்னபடி , ஆம் தமிழில் சொன்னபடி செங்கொல் கைமாறி ஆட்சி இந்தியாவிடம் ஒப்ப்படைக்கபட்டது
எவ்வளவு பெருமை இது?

எவ்வளவு அர்த்தமான வரி இது?

“அரசாள்வார் ஆணை நமதே” என டெல்லியில் உரக்க தமிழில் பாடபட அதன் அர்த்தம் இதர மொழிகளில் சொல்லபட மிக உருக்கமான நெகிழ்ச்சி கண்ணீர் அங்கே பெருகிற்று

பிரிட்டிஷாரே அந்த அர்த்தம் கண்டு புன்னகை சிந்தினான், எந்த இதுமதத்தை அழிக்க முயன்றானோ அது தன்னை மீட்டு நின்ற தருனம் அது, பட்டொளி வீசி எழுந்த நிமிடம் அது.

ஆம், இப்படி இந்து முறைபடி தமிழ் தேவாரம் பாடித்தான் “அரசாளும் ஆணை நமதே” என்ற திருஞான சம்பந்தரின் வார்த்தையோடுதான் சுதந்திரம் பெற்றோம்
இது வரலாறு, அந்த காட்சிபடம் இன்றும் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு, டெல்லி மியூசியத்திலும் உண்டு.

இப்படியெல்லாம் தமிழ் இந்து டெல்லிவரை கோலோச்சி, தமிழ் தேவாரம் பாட பெற்ற சுதந்திரம் இது “அரசாள்வார் ஆணை நமதே” என சொல்லி விடுதலை பெற்ற தேசமிது.

சரி, அந்த படம் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு, அந்த செங்கோல்?

அது மறைந்தது, நேரு அதை எங்கோ வீசிவிட்டு தன் அலுவலகத்தில் மவுண்ட்பேட்டன், டல்ஹவுசி என யார் படத்தை எல்லாமோ மாட்டி வைத்து அழகு பார்த்தார்.

சீன பிரதமராக இந்தியா வந்த சூ என் லாய் இதை கண்டு வாய்விட்டு சிரித்தான் "நீங்கள் இந்த பிரிட்டிஷ்காரனை எதிர்த்து போராடி சிறை சென்றீர்கள், இப்போது அவன் படத்தையே வைத்திருக்கின்றீர்கள்" என அவன் கேட்டபோது நேருவிடம் பதில் இல்லை.

அதன்பின்னும் நேரு திருந்தவில்லை ,சீனன் அடித்து திருத்த முயன்றான்.

பின் அந்த செங்கோல் பற்றி தகவலே இல்லை, காங்கிரஸ் இந்து நாடு எனும் பெயரை மறைத்தது அப்படியே அது நிரந்தரமாக மறைய செங்கோலையும் மறைத்தது

ஆனால் காலம் அதனை மறைக்கவில்லை, அது பிரக்யாராஜ் காட்சிமாளிளையில் இருந்தது.

மோடி இப்போது அதனை அடையாளம் கண்டு மீட்டெடுத்து புதிய பாராளுமன்ற கட்டடத்தில் அந்த வரலாற்று பொக்கிஷத்தை வைப்போம் என்கின்றார்.

இந்த ஒரு விஷயத்துக்காக அவரை காலில் விழுந்தே வணங்கலாம், ஏன் விழுந்தே கிடக்கலாம்.

நாமும் இந்திய குடிமக்களாக நல்ல இந்துமக்களின் மரபில் உரக்க சொல்லலாம்.

"வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே."
ஆம் "வேந்தனும் ஓங்குக .. வேந்தனும் ஓங்குக.."
பாரத வேந்தனும் ஓங்குக.......

காசி துலங்க துலங்க தேசம் எப்படியெல்லாம் துலங்கும் என்றால் இப்படித்தான்.

சிவனடியார்களாக வாழ்ந்த தமிழக சோழ மன்னர்களின் மரபில் , அவர்கள் ஆட்சியின் அடையாளமாக வைத்திருந்த செங்கோலின் வடிவம் இன்று தேசத்தின் அடையாளமாக மாறுவதெல்லாம் இது சிவபூமி என்பதை அழுத்தமாக சொல்கின்றது.

சோழர்கள் தாங்கள் ராமபிரானின் வாரிசுகள் என்றதும், இந்த அரசபதவி என்பது மதத்தை தர்மத்தை காக்க என சொல்லி கல்வெட்டுகளில் வெட்டி வைத்ததும் அர்த்தமில்லாமல் இல்லை, அதெல்லாம் தெய்வத்தின் பரிபூரண அனுகிரஹம்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 25, 2023 1:09 am

திமுக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் தேசத்தின் புதிய பாராளுமன்ற கட்டட விழாவினை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார்கள் இவ்வரிசையில் மம்தா, கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆம் ஆத்மியும் உண்டு.

ஜனாதிபதி அந்த மன்றத்தை திறக்கவில்லை அதனால் புறக்கணிக்கிறோம் என இவர்கள் சொன்னாலும் உண்மையில் விஷயம் வேறு.

அந்த வைபவத்தை வேத முறைபடி சிருங்கேரி மடாதிபதி நடத்தி வைக்கின்றார், பாரம்பரிய இந்துமுறைபடி நடக்கும் இந்த விழாவில் பங்கேற்றால் தங்களை தாங்கும் சிறுபான்மைகள் பொங்கிவிடும் என்பதால் இவர்கள் இப்படி தலைமறைவு ஆகின்றார்கள்.

இந்து வேதமுறையினை எதிர்க்கின்றோம் என இவர்களால் வெளிபடையாக சொல்லமுடியாது சொன்னால் அப்பாவி இந்து விழித்துகொண்டு விரட்டி அடிப்பான்.

இதனால் அடிக்கமுடியாத பந்தை ஓடவிட்டு பார்ப்பது இல்லை முதுகில் வாங்கி கொண்டு நிற்கும் பேட்ஸ்மேன் போல நிற்கின்றார்கள்...

இவர்கள் இப்படியே பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தால் இன்னும் நல்லது.

1947ல் சுதந்திரம் வாங்கும் போது காஷ்மீர கவுல் பிராமணர் நேருவும் ராஜாஜியும் வைதீக முறைபடிதான் அதே பாராளுமன்றத்தில் நிகழ்வு நடத்தி செங்கோலை வாங்கினார்கள்..

தமிழக திருவாடுதுறை ஆதீனம்தான் அந்த மாபெரும் விடுதலை அறிவிப்பை ஆட்சி மாற்றத்தை வைதீக முறைபடி நடத்தி வைத்தது.

அதாவது வேதவழி நிகழ்ச்சியினை அந்த காங்கிரஸ்தான் நடத்தியது.

அன்று அப்படி இருந்த காங்கிரஸ் இன்று வேதவழி , இந்து பாரம்பரிய முறை என்றாலே தன் கூட்டணிகளுடன் தலைமறைவு ஆகின்றது என்றால் எந்த அளவு அது இந்துதுவேஷத்தில் இறங்கிவிட்டது என்பதை புரிவது கடினமல்ல‌.

இந்துஸ்தானின் பாராளுமன்றம் இந்து வேத முறைபடிதான் திறக்கபட வேண்டும் அவ்வழியில் சிருங்கேரி மடம் அதை செய்கின்றது.

எப்படியோ தர்மபுரி எம்பி இனி பாராளுமன்றம் செல்லமாட்டார் என தமிழகம் நம்புகின்றது, அது நடக்கட்டும்.

நிச்சயம் தமிழ்நாட்டு பாஸ்டர்களை அழைத்து அங்கே சென்று "எங்கடா கிறிஸ்தவன்? எங்கடா சீக்கியன்" என கத்தமுடியாது காரணம் புதிய பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகம், யாரேனும் அத்துமீற முயன்றால் தானியங்கி முறையில் துப்பாக்கிகள் தானாகவே சுடும் ஆபத்து உண்டு...



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 25, 2023 1:18 am

புதிய நாடாளுமன்ற கட்டடம் பழைய கட்டடத்தில் இருந்து எப்படி வேறுபட்டது?



கட்டடக் கலைஞர் பிமல் பட்டேலின் கீழ் அகமதாபாத்தைச் சேர்ந்த எச்.சி.பி வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. புதிய கட்டமைப்பு – மே 28-ம் தேதி திறக்கப்பட உள்ளது – புதிய கட்டடம் டாடா புராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்டது.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மே 28, ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். “புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மேலும், புதிய கட்டடம் தன்னம்பிக்கை இந்தியாவின் (ஆத்மநிர்பர் பாரத்) உணர்வைக் குறிக்கிறது” என்று மக்களவை அறிக்கை கடந்த வாரம் தெரிவித்தது.

பிரதமர் மோடி டிசம்பர் 10, 2020-ல் புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அதன் கட்டுமானப் பணிகள் ஜனவரி 2021-ல் தொடங்கியது. அகமதாபாத்தை தளமாகக் கொண்ட எச்.பி.பி வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் மேலாண்மை கட்டடக் கலைஞர் பிமல் பட்டேலின் கீழ் வடிவமைக்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகில் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்டுள்ளது.

நெருங்கி வரும் திறப்பு விழா நாள், தற்போதைய கட்டடத்திற்கும் புதிய கட்டடத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளைப் பார்ப்போம்:

அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்க முடியும்

.

தற்போதுள்ள நாடாளுமன்ற மாளிகைக்கு அடுத்துள்ள புதிய கட்டடத்தில், லோக்சபாவில் 888 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 300 பேரும், முறையே 543 மற்றும் 250 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்க முடியும்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது.


புதிய நாடாளுமன்ற கட்டடம் சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அதேசமயம், பழைய நாடாளுமன்ற கட்டடம் 560 அடி (170.69 மீட்டர்) விட்டம் கொண்ட வட்ட வடிவ கட்டடம். அதன் சுற்றளவு ஒரு மைலில் மூன்றில் ஒரு பங்கு அல்லது 536.33 மீட்டர் அளவை உள்ளடக்கியது. கிட்டத்தட்ட ஆறு ஏக்கர் (24,281 சதுர மீ) பரப்பளவு ஆகும்.

கூட்டு அமர்வுகளுக்கு பயன்படுத்தப்படும் லோக் சபா அறை


புதிய கட்டடத்தில் தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் உள்ளது போல் மத்திய மண்டபம் இல்லை. அதற்கு, பதிலாக லோக்சபா அறை கூட்டு அமர்வுகளுக்கு பயன்படுத்தப்படும்.

புதிய கட்டடத்தில் அதிநவீன தொழில்நுட்பம்


மத்திய விஸ்டா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பழைய கட்டடத்தில், தற்போதைய தீ பாதுகாப்பு விதிமுறைகளின்படி வடிவமைக்கப்படாததால், தீ பாதுகாப்பு பெரும் கவலையாக இருந்தது. பல புதிய மின்சார கேபிள்கள் இணைந்து தீ ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், நீர் விநியோக பாதைகள், கழிவுநீர் பாதைகள், ஏர் கண்டிஷனிங், தீயணைப்பு, சிசிடிவி, ஆடியோ-வீடியோ சிஸ்டம் போன்ற சேவைகளில் காலப்போக்கில் கூடுதலாகத் திட்டமிடப்படவில்லை, அவை கசிவுகளுக்கு வழிவகுத்தது. அது கட்டடத்தின் ஒட்டுமொத்த அழகியலை அழித்தது.

இதற்கிடையில், புதிய கட்டடத்தில், உறுப்பினர்களின் வாக்களிக்கும் வசதிக்காக பயோமெட்ரிக்ஸ், டிஜிட்டல் மொழி விளக்கம் அல்லது மொழிபெயர்ப்பு அமைப்புகள் மற்றும் நிரல்படுத்தக்கூடிய மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது. அரங்குகளின் உட்புறங்களில் விர்ச்சுவல் ஒலி உருவகப்படுத்துதல்கள் பொருத்தப்பட்டு எதிரொலியின் சரியான அளவுகளை அமைக்கவும், எதிரொலிகளை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டட அமைப்பின் தோற்றம்: தற்போதைய மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாறுபட்ட வடிவமைப்புகள்.


தற்போதைய நாடாளுமன்ற கட்டடம், காலனித்துவ கால கட்டடம், பிரிட்டிஷ் கட்டடக்கலை நிபுணர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. அதேசமயம் புதிய கட்டடம் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட எச்.சி.பி வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் நிர்வாகம் மற்றும் கட்டடக் கலைஞர் பிமல் படேல் அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் விஸ்டா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, புதிய நாடாளுமன்ற கட்டடமும், மறுசீரமைக்கப்பட்ட கட்டடமும், தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று இருக்கும் அனைத்து வசதிகளையும் இணைக்க பயன்படுத்தப்படும்.

சுவாரஸ்யமாக, சனாதன் பரம்பரை மற்றும் வாஸ்து சாஸ்திரம் ஆகியவை கிட்டத்தட்ட 5,000 கலைத் பொருட்களுக்குப் பின்னால் வழிகாட்டும் கொள்கைகளாக உள்ளன – ஓவியங்கள், அலங்காரக் கலை, சுவர் ஓவியங்கள், கல் சிற்பங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் – புதிய நாடாளுமன்ற கட்டடம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இந்தியன் எக்ஸ்பிரசுக்கு தெரியவந்துள்ளது.

மேலும், ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் ஒரு கூட்டு மத்திய செயலகம், ராஜ்பாத் மறுசீரமைப்பு, புதிய பிரதமர் இல்லம், புதிய பிரதமர் அலுவலகம், புதிய துணை குடியரசுத் தலைவர் இடம் ஆகியவை அடங்கும். பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானம் கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் (1921-1927) ஆனது. பழைய நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்க ரூ 83 லட்சம் செலவானது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 25, 2023 9:23 pm



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 26, 2023 12:56 pm

தமிழர்தம் செங்கோல் மரபு பெருமைப்படுத்தப்படுவது நன்று! அதே நேரத்தில் அச் செங்கோலைச் செய்த பொற்கொல்லர்கள் பெயரை இருட்டடிப்புச் செய்துள்ளது சரிதானா? உழைப்புக்கும் அறிவுக்கும் இவ்வளவுதான் நாம் தரும் இடமா?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 26, 2023 6:33 pm

Dr.S.Soundarapandian wrote:தமிழர்தம் செங்கோல் மரபு பெருமைப்படுத்தப்படுவது நன்று! அதே நேரத்தில் அச் செங்கோலைச் செய்த பொற்கொல்லர்கள் பெயரை இருட்டடிப்புச் செய்துள்ளது சரிதானா? உழைப்புக்கும் அறிவுக்கும் இவ்வளவுதான் நாம் தரும் இடமா?
மேற்கோள் செய்த பதிவு: undefined

பலரின் உழைப்பு நிச்சயமாக இருந்திருக்கும். ஆனால் 1947 இல் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் குணம் பரவலாக இருந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.
தஞ்சை பெரிய கோவிலை ராஜ ராஜா சோழன் கட்டினான் என்றால், அவரின் மேற்பார்வையில் கட்டியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெயரை பொறிக்கமுடியாது அல்லவா!

இப்போதெல்லாம் கழிவறைகள் கட்டினாலும் (ஆதாயம் பெற்றும் )அதற்கு விளம்பரம் தேடுகின்றனர்.   அந்த காலத்து ஜனங்கள் இந்த பெயர் தற்பெருமைக்கு ஆளாகாதவர்கள்.

அய்யா இது எந்தன் சொந்த கருத்து.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 6:48 pm

‘செங்கோலை’ வாக்கிங் ஸ்டிக்காக வைத்திருந்த காங்கிரஸ்; ஆதீனங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட பின் மோடி தாக்கு



பிரயாக்ராஜின் ஆனந்த் பவனில் ‘செங்கோல்’ வாக்கிங் ஸ்டிக்காக வைக்கப்பட்டு இருந்ததற்காக காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை விமர்சித்து, நாளை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட உள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனங்களைச் சந்தித்து, அவர்களிடம் இருந்து செங்கோலை பெற்றுக்கொண்டார். இன்று தேசியத் தலைநகரான டெல்லிக்கு வந்த ஆதீனங்களை தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

“புனிதமான செங்கோலுக்கு சுதந்திரத்திற்குப் பிறகு உரிய மரியாதையும், கௌரவமான இடமும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இந்த செங்கோல் பிரயாக்ராஜ் ஆனந்த் பவனில் வாக்கிங் ஸ்டிக்காக காட்சிக்கு வைக்கப்பட்டது. உங்கள் ‘சேவகரும்’ எங்கள் அரசும் செங்கோலை ஆனந்த் பவனில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளன” என்று பிரதமர் மோடி கூறினார்.

“இந்தியாவின் பாரம்பரியத்தின் சின்னமான செங்கோல் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாம் கடமையின் பாதையில் நடக்க வேண்டும், பொதுமக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதை இந்த செங்கோல் நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்,” என்று பிரதமர் மோடி கூறினார்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் “செங்கோல்” நிறுவப்படும்.

ஆதீனங்கள் ‘மந்திரங்கள்’ ஓதுவதற்கு மத்தியில் மற்ற சிறப்பு பரிசுகளையும் வழங்கினர்.

“செங்கோல்” அதன் பெயரை தமிழ் வார்த்தையான ‘செம்மை’ என்பதிலிருந்து பெற்றது, அதாவது நீதி. செங்கோல் சுதந்திரத்தின் வரலாற்று சின்னமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதைக் குறிக்கிறது.

அதிகாரப்பூர்வ ஆவணத்தின்படி, சுதந்திரத்திற்கு முந்தைய நாள் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் ஆதீனங்களால் ஒப்படைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரம் கைமாறுவதைக் குறிக்கும் வகையில் எந்த விழாவை நடத்த வேண்டும் என்பது குறித்து விரைவில் பிரதமராக இருந்த நேரு, சி ராஜகோபாலாச்சாரியாரிடம் ஆலோசனை நடத்தினார்.

உயர் பூசாரிகளால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட, ஒரு மன்னரிடமிருந்து மற்றொரு மன்னருக்கு மாற்றும் சோழ வம்சத்தின் பாரம்பரியத்தை ராஜகோபாலாச்சாரி பரிந்துரைத்தார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவுக்கு முந்தைய வாரத்தில், செங்கோல் காங்கிரஸுக்கும் பா.ஜ.க.,வுக்கும் இடையே சமீபத்திய ஃப்ளாஷ் பாயிண்ட் ஆனது.

மவுண்ட்பேட்டன் பிரபு, சி ராஜகோபாலாச்சாரி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் செங்கோலை ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு அதிகாரத்தை மாற்றியதன் அடையாளமாக குறிப்பிட்டதற்கு “ஆவண ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்று காங்கிரஸ் தகவல் தொடர்பு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.

அவர்களின் கருத்துப்படி, “ஜனாதிபதி (திரௌபதி) முர்முவை முற்றிலுமாக ஓரங்கட்டிவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை அவரே திறந்து வைக்கும் பிரதமரின் முடிவு, பாரதூரமான அவமானம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்” என 20 எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்வைப் புறக்கணிக்கும் முடிவை அறிவித்துள்ளன. .

இருப்பினும், ஜே.டி(எஸ்), பி.எஸ்.பி, தெலுங்கு தேசம் போன்ற தேசிய ஐனநாயக கூட்டணியில் இல்லாத கட்சிகள் உட்பட 25 கட்சிகள் புறக்கணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன, மேலும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக