புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/06/2023
by mohamed nizamudeen Today at 9:44 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:15 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by சிவா Yesterday at 10:28 pm
» சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 179 பேர் படுகாயம்
by சிவா Yesterday at 10:22 pm
» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Yesterday at 10:17 pm
» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Yesterday at 10:15 pm
» சந்திரயான்-3
by சிவா Yesterday at 10:10 pm
» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Yesterday at 10:07 pm
» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by சிவா Yesterday at 10:02 pm
» கருணாநிதி 100
by சிவா Yesterday at 9:59 pm
» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Yesterday at 9:43 pm
» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Yesterday at 8:58 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 8:54 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 8:42 pm
» திரிபலா சூரணம்
by சிவா Yesterday at 8:38 pm
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Yesterday at 8:34 pm
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Yesterday at 8:32 pm
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:46 pm
» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm
» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Yesterday at 6:48 am
» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Yesterday at 1:56 am
» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Yesterday at 1:49 am
» தமிழக செய்திகள்
by சிவா Yesterday at 1:41 am
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Yesterday at 1:38 am
» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Yesterday at 1:36 am
» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Yesterday at 1:33 am
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Yesterday at 1:17 am
» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Yesterday at 12:06 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Thu Jun 01, 2023 11:55 pm
» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Thu Jun 01, 2023 11:32 pm
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Thu Jun 01, 2023 11:28 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 9:32 pm
» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu Jun 01, 2023 9:23 pm
» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 7:14 pm
» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu Jun 01, 2023 6:37 pm
» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu Jun 01, 2023 3:41 pm
» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu Jun 01, 2023 3:35 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu Jun 01, 2023 3:35 pm
» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu Jun 01, 2023 3:28 pm
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Thu Jun 01, 2023 3:14 pm
» திரைப் பிரபலங்கள்
by heezulia Thu Jun 01, 2023 12:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Wed May 31, 2023 9:06 pm
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Wed May 31, 2023 9:05 pm
» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Wed May 31, 2023 8:55 pm
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Wed May 31, 2023 8:49 pm
» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Wed May 31, 2023 5:18 pm
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Wed May 31, 2023 4:26 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Wed May 31, 2023 4:14 pm
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Wed May 31, 2023 12:08 pm
by mohamed nizamudeen Today at 9:44 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:15 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by சிவா Yesterday at 10:28 pm
» சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 179 பேர் படுகாயம்
by சிவா Yesterday at 10:22 pm
» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Yesterday at 10:17 pm
» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Yesterday at 10:15 pm
» சந்திரயான்-3
by சிவா Yesterday at 10:10 pm
» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Yesterday at 10:07 pm
» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by சிவா Yesterday at 10:02 pm
» கருணாநிதி 100
by சிவா Yesterday at 9:59 pm
» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Yesterday at 9:43 pm
» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Yesterday at 8:58 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 8:54 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 8:42 pm
» திரிபலா சூரணம்
by சிவா Yesterday at 8:38 pm
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Yesterday at 8:34 pm
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Yesterday at 8:32 pm
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:46 pm
» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm
» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Yesterday at 6:48 am
» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Yesterday at 1:56 am
» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Yesterday at 1:49 am
» தமிழக செய்திகள்
by சிவா Yesterday at 1:41 am
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Yesterday at 1:38 am
» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Yesterday at 1:36 am
» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Yesterday at 1:33 am
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Yesterday at 1:17 am
» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Yesterday at 12:06 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Thu Jun 01, 2023 11:55 pm
» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Thu Jun 01, 2023 11:32 pm
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Thu Jun 01, 2023 11:28 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 9:32 pm
» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu Jun 01, 2023 9:23 pm
» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 7:14 pm
» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu Jun 01, 2023 6:37 pm
» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu Jun 01, 2023 3:41 pm
» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu Jun 01, 2023 3:35 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu Jun 01, 2023 3:35 pm
» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu Jun 01, 2023 3:28 pm
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Thu Jun 01, 2023 3:14 pm
» திரைப் பிரபலங்கள்
by heezulia Thu Jun 01, 2023 12:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Wed May 31, 2023 9:06 pm
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Wed May 31, 2023 9:05 pm
» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Wed May 31, 2023 8:55 pm
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Wed May 31, 2023 8:49 pm
» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Wed May 31, 2023 5:18 pm
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Wed May 31, 2023 4:26 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Wed May 31, 2023 4:14 pm
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Wed May 31, 2023 12:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
E KUMARAN |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
M. Priya |
| |||
Balaurushya |
| |||
rockdeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
shivi |
| |||
M. Priya |
| |||
rockdeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
Page 1 of 1 •

கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் பல வேலைகளைச் செய்து வருகின்றன. |
அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினித் தொழில்நுட்பத்தில் `ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ்' (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்கு இப்போது பெரும் பாய்ச்சலாகி இருக்கிறது. கணினித் தொழில்நுட்பத்தின் கொடையான இந்தச் செயற்கை நுண்ணறிவு, அடுத்தடுத்த பரிணாமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி காலத்தின் தேவை என்றாலும் கணினித் தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு மனிதர்கள் செய்யும் வேலையை இந்தச் செயற்கை நுண்ணறிவே செய்து விடும் நிலை ஏற்பட்டு பலரது வேலை பறிபோய் விடும் என்கிற அச்சமும் நிலவுகிறது. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, மனித ஆற்றலை அதனால் ஈடுசெய்ய இயலுமா, அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் என்னென்ன... |
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
“ஒரு ரோபோ இப்படித்தான் செயல்படும் என்று வரையறுக்கப் பட்டதை (programming) தாண்டி சுயமாக சிந்தித்தால் எப்படி யிருக்கும் என்கிற கற்பனைதான் `எந்திரன்’ திரைப்படம். ஓரளவில் இந்தச் செயற்கை நுண்ணறிவை `எந்திரன்’ படத்தின் சிட்டி ரோபோவோடு ஒப்பிடலாம். நமது தகவல்களை அடிப்படை யாக வைத்து நமக்கு எதுவெல்லாம் தேவைப்படும் என் பதை யூகித்து வழங்குவதுதான் செயற்கை நுண்ணறிவு செய்கிற வேலை.
கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் பல வேலைகளைச் செய்து வருகின்றன. எப்படி ஒரு குழந்தை பிறந்து வளர்கையில் நாம் ஒவ்வொன்றையும் பயிற்றுவிக்கிறோமோ, அதேபோல் கணிப் பொறித் தொழில் நுட்பத்திலும் உள்ளீடு (feed) செய்யப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தச் செயற்கை நுண்ணறிவு வேலை செய்கிறது. `கோடிங்' (Coding) வழியாக இதற்கு பயிற்றுவித்திருப்பார்கள்.
நீங்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் வாட்ச் ஒன்று வாங்கலாம் எனத் தேடுகிறீர்கள். அதன் பிறகு ஃபேஸ்புக்குக்குச் சென்றால் வேறொரு ஷாப்பிங் வெப்சைட்டின் வாட்ச் விளம்பரம் உங்களுக்குக் காண்பிக்கப்படும். அதுவும் நீங்கள் எந்த விலையில் தேடினீர்களோ அதற்கு நிகரான விலையில் காட்டும். இதுதான் செயற்கை நுண்ணறிவின் வேலை.
நம் தேவைகள், விருப்பங்கள் பற்றி செயற்கை நுண்ணறிவுக்கு எப்படி தெரியும்?
மெயில் ஐடிகள், சமூக வலைதளங்கள், மொபைல் சேவைகள் என நம்மிடமிருந்து செயற்கை நுண்ணறிவுக்குக் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில், நம் தேவை என்ன, நமக்கு எதன் மேல் நாட்டம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்குத் தொடர்புடையவற்றை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.
உதாரணமாக, கூகுள், ஃபேஸ் புக் ஆகியவற்றில் கணக்கு ஆரம் பிக்க நமது வயது, பாலினம் உள்ளிட்ட அடிப்படையான தகவல்களைக் கொடுத்திருப் போம். அந்தத் தகவலை அடிப் படையாகக் கொண்டு எந்தெந்த வயதினருக்கு எந்தெந்தப் பொருள்களின் மீது நாட்டம் இருக்கும் என்கிற யூகத்தில் அதற்கான விளம்பரங்களைக் காட்டும். ஃபேஸ்புக்கில் ‘உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியவர்கள்’ என சிலரது கணக்குகளை முகநூல் பரிந்துரைக்கும். எப்படி? நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் இன்னொரு நபரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இருவரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருந்திருக்கிறோம் என்பதை `ஜிபிஎஸ்' (GPS - Global Positioning System) மூலமாகக் கணக்கில்கொண்டு இந்தப் பரிந்துரையை முன்வைக்கும்.
செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலையைப் பறிக்குமா?
ஐடி துறையை எடுத்துக்கொண்டால் கோடிங் மற்றும் அக்கவுன்ட்ஸ் ஆகியவைதான் மிக முக்கியமான பணிகள். டேலி, மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் போன்ற மென் பொருள்கள் அக்கவுன்ட்ஸை எளிமையாகச் செய்து முடிக்கும்படியாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இப்போது செயற்கை நுண்ணறிவின் மூலம் அக்கவுன்ட்ஸை கணிப்பொறியே தன்னிச்சையாக மேற்கொள்ள முடியும். நாம் மேற்பார்வை மட்டும் பார்த்து அப்ரூவ் செய்தாலே போதுமானது. இதனால் மனித உழைப்பு பெரிய அளவுக்குத் தேவையில்லாமல் போகும். அதேபோல, ஒரு அப்ளிகேஷனைத் தயார் செய்ய வேண்டும் என்றால், இத்தனை ஆண்டுகளில் எழுதப்பட்ட கோடிங்கை அடிப்படையாக வைத்து செயற்கை நுண்ணறிவே கோடிங்கை எழுதி விடும். மனிதர்கள் அதனை மேற்பார்வை பார்த்தால் மட்டுமே போதுமானது. ஐடி துறை போல, இப்படி வங்கி முதல் மீடியா வரை ஒவ்வொரு துறையிலும் AI-யால் மனிதன் செய்த பணிகளைச் செய்ய முடியும். அதனால்தான், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி நிறைய பேருடைய வேலையை காலி செய்யும் என்கிற அச்சுறுத்தலாக மாறி நிற்கிறது.
பெருநிறுவனங்கள் பலவும் இந்தச் செயற்கை நுண்ணறிவை 2010ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பயன்படுத்தத் தொடங்கி விட்டன. பெரு நிறுவனங் களிடம் மட்டுமே இருந்த இந்த செயற்கை நுண்ணறிவு வசதி இன்றைக்கு `Open AI' செயலி மூலம் பொதுமக்களுக்குப் புழக்கத்துக்கு வந்திருக்கிறது.
`சாட்ஜிபிடி' (chatGPT) என்று சொல்லப்படுகிற, செயற்கை நுண்ணறிவுக்கான தளத்தில் சென்று அதனுடன் `சேட்' செய்யலாம். நாம் என்ன கேட்கிறோமோ அந்தத் தகவல்களை துல்லியமாக அது வழங்கும். ஹிமாச்சலில் சுற்றிப்பார்க்க என்னென்ன இடங்கள் இருக் கின்றன என்று கேட்டால் வரிசையாகப் பட்டியலிடும். ஓர் இடத்தைப் பற்றியோ, உணவைப் பற்றியோ ஒரு கட்டுரை கேட்டால் அசத்தலாகத் தரும். இப்படியாக இன்றைக்கு சிறு நிறுவனங்கள் கூட செயற்கை நுண்ண றிவைப் பயன்படுத்துகிற சூழலை `chatGPT' உருவாக்கியிருக்கிறது.
ஆகவேதான் இத்தனை காலமாக இல்லாமல் சமீபமாக செயற்கை நுண்ணறிவு வேலையைப் பறித்துவிடும் என்கிற குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.
மனிதனை வெல்ல முடியுமா?
காலத்துக்கு ஏற்றாற்போல் நவீனத் தொழில் நுட்பம் வருவது இயல்புதான். அதேபோல் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகிக்கொண்டுதான் இருக்கும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தால், மனித மூளையின் அளவுக்குச் செயலாற்ற முடியாது. செயற்கை நுண்ணறிவு என்பது இருக்கிற தகவல்களை அடிப்படையாக வைத்து நிகழ்த்தும் யூகமே தவிர, சுய சிந்தனை கிடையாது. அது தன்னிச்சையாக இயங்குகிறது என்றாலும் மனிதர்களின் மேற்பார்வையில்தான் இயக்கப்படுகிறது.
வேறு என்ன ஆபத்து?
`டீப்ஃபேக்ஸ்' (Deep Fakes) தொழில்நுட்பம்... அச்சுறுத்தும் இதன் பாதகம். இதன் மூலம் பொய்ச் செய்திகளை உருவாக்கி, மக்கள் குழுக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி, கலவரங்களை ஏற்படுத்த முடியும். நாடுகள், அரசியல் கட்சிகள், சாதிச் சங்கங்கள் என அந்தப் பிரதிநிதிகளின் பொய்யான வீடியோ, ஆடியோக்களை உருவாக்கி, மக்களைத் தூண்டி, போராட்டங்களை எரிய வைக்க முடியும். செயற்கை நுண்ணறிவைக் கொண்டு, நமக்குத் தெரிந்தவர்போல குரலை மாற்றி (voice morphing) பேசி, பணம் பறிக்க முடியும். இவ்வாறாக, சாமான்ய மக்களுக்கு உண்மை, பொய்யைப் பிரித்தறியும் சாத்தியத்தைச் செயற்கை நுண்ணறிவு வெகு தொலைவில் வைக்கும்.
தீர்வு என்ன?
செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும் சட்ட வரையறைகள், நிறுவனங்களுக்கான பொதுவான, பகிரப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள், உண்மை, பொய்யைப் பிரித்தறிய வைக்கும் முத்திரைகள் உள்ளிட்டவற்றை உருவாக்குவது காலத்தின் கட்டாயம். அதனால் தான், அதுவரை செயற்கை நுண்ணறிவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஆய்வுகளை நிறுத்திவைக்கக் கோரி உலகம் முழுவதிலும் இருந்து குரல்கள் எழுகின்றன.
நாம் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவத்துறை முதல் கலைத்துறை வரை செயற்கை நுண்ணறிவின் சாதகங்களால் பயன்பெறப் போகிறோம். கூடவே, இனி எந்தச் செய்தியிலும் பொய்க்கான சாத்தியம் வலுக்கிறது என்ற விழிப்புணர்வையும் நாம் பெற வேண்டும்.’’
குறிச்சொற்கள் #AI_தொழில்நுட்பம் #செயற்கை_நுண்ணறிவு #chatGPT #Artificial_intelligence |
விகடன்
ஸ்ரீஜா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33956
இணைந்தது : 03/02/2010
1950 -60 களில் திரு சுஜாதா எழுதிய "ஜீனோ " தொடர், நினைவுக்கு வருகிறது.
சிறிய சந்தேகம்
எப்பிடி இருப்பினும் AI க்கு ப்ரோக்ராம் எழுத மனித ஆற்றல் அவசியமல்லவா?
சிறிய சந்தேகம்
எப்பிடி இருப்பினும் AI க்கு ப்ரோக்ராம் எழுத மனித ஆற்றல் அவசியமல்லவா?

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்தையே பூண்டோடு அழிக்க வல்லதா?
செயற்கை நுண்ணறிவு மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஓப்பன் ஏஐ (OpenAI), கூகுள் டீப்மைண்ட் (Google Deepmind)-ன் தலைவர்கள் மற்றும் அத்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் (Centre for AI Safety) வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்ட இது போன்ற பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் .
"செயற்கை நுண்ணறிவின் காரணமாக மனித குல அழிவிற்கான ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, கொரோனா, அணு ஆயுதப் போர் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இது போன்ற அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என பலர் விமர்சித்துள்ளனர்.
ChatGPTஎன்னும் அரட்டை செயலியை உருவாக்கிய OpenAI இன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், கூகுள் டீப்மைண்ட் (Google DeepMind)-ன் தலைமை நிர்வாகி டெமிஸ் ஹஸ்ஸாபிஸ் (Demis Hassabis) மற்றும் Anthropic நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டரியோ அமோடி (Dario Amodei) ஆகியோர் செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் இந்த பதிவை ஆதரித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவினால் என்ன மாதிரியான பேரிடர்கள் ஏற்படும் என்பது குறித்த சில சூழ்நிலைகளை செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது.
• செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பல மென்பொருட்கள் மற்றும் மிண்அணு கருவிகளை பெரும் ஆயுதங்களாக சமூக விரோத கும்பல்கள் மற்றும் சில நாடுகளின் அரசுகள் பயன்படுத்தலாம்.
• செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவாக்கப்படும் தவறான தகவல்கள், சமூகத்தை சீர்குலைத்து "பலர் ஒன்றிணைந்து முடிவெடுப்பதை எதிர்மறையாக பாதிக்கும்."
• செயற்கை நுண்ணறிவின் சக்தி, மிகக்குறைவான கைகளில் அதிக அளவில் குவிந்து, உலக அரசுகள் பொதுமக்களை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கத் தொடங்கலாம். அவர்கள் மீது அடக்குமுறையை ஏவவும் உதவும்.
•Wall-E திரைப்படத்தில் காட்டப்பட்டது போல், மனிதர்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் நிலைமை ஏற்படும்.
அதிபுத்திசாலித்தனமான செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த டாக்டர் ஜாஃப்ரி ஹிண்டன், செயற்கை நுண்ணறிவு பாதுகாப்புக்கான மையத்தின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியரான யோசுவா பெங்கியோவும் இந்த அறிக்கைக்கு ஆதரவளித்துள்ளார்.
டாக்டர் ஜாஃப்ரி ஹிண்டன், பேராசிரியர் யோசுவா பெங்கியோ, மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் யான் லீகுன் ஆகியோர் செயற்கை நுண்ணறிவுத் துறையில் அவர்களின் அற்புதமான ஆரம்பகட்ட பங்களிப்புக்களுக்காக செயற்கை நுண்ணறிவின் தந்தைகள் என அழைக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி அவர்கள் மூவரும் கூட்டாக 2018-ம் ஆண்டின் டூரிங் விருதை வென்றனர். இது கணினி அறிவியலில் ஒருவரின் மிகச் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
ஆனால் மெட்டாவில் பணிபுரியும் பேராசிரியர் LeCun, மனித அழிவு குறித்த இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவைகளாகவே இருக்கின்றன என்ற கருத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
உண்மைகளுக்கு ஊறு விளைவிக்கும் தன்மை
இதே போல் செயற்கை நுண்ணறிவினால் மனிதகுலத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பதை பல வல்லுநர்கள் முழுமையாக ஏற்கவில்லை. இது போன்ற அச்சம் நம்பக்கத்தகுந்த வகையில் இல்லை என்கின்றனர் அவர்கள். ஏற்கெனவே நாம் எதிர்கொண்டு வரும் சவால்களை முறியடிப்பதற்கான பாதையிலிருந்து இது போன்ற அச்சங்கள் நமது கவனத்தை திசைதிருப்புவதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானியான அரவிந்த் நாராயணன், அறிவியல் புனைகதை போன்ற பேரழிவுக் காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை என்று பிபிசியிடம் கூறினார்: "தற்போதைய செயற்கை நுண்ணறிவின் திறன்கள், இது போன்ற ஆபத்துகளை ஏற்படுத்துமளவுக்கு பெரிய அளவில் ஆற்றல் பெற்றவையாக இல்லை என்கிறார் அவர். மேலும், இது போன்ற அதீத அச்ச உணர்வுகள் காரணமாக, செயற்கை நுண்ணறிவினால் ஏற்படப் போகும் சிறிய அளவிலான ஆபத்துக்களைப் பற்றி ஆய்வு செய்பவர்களின் கவனம் திசை திருப்பப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
ஆக்ஸ்போர்டின் இன்ஸ்டிடியூட் ஃபார் எதிக்ஸின் மூத்த செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் எலிசபெத் ரெனிரிஸ், செயற்கை நுண்ணறிவினால் நிகழ்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அதிகம் கவலைப்படுவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
"செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள், மென்பொருட்களும், கருவிகளும் தாமாகவே முடிவெடுக்கும் அளவைப் பரவலாக்கும். அது பாரபட்சமானதாக, வெறுப்பை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கலாம். அதே நேரம் நியாயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகள் எடுக்கப்படும் ஆபத்தும் உள்ளது," என்று அவர் கூறினார். அவை, "தவறான தகவல்களின் அளவு மற்றும் பரவலில் மிக மோசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். செயற்கை நுண்ணறிவு இதன் மூலம் எதார்த்தத்தை உடைத்து, பொது நம்பிக்கையை சீர்குலைக்கும்."
பல செயற்கை நுண்ணறிவு கருவிகள், மனிதர்களின் எண்ண ஓட்டங்களை அடிப்படையாகக் கொண்டே முடிவுகளை எடுக்கின்றன. அவற்றின் உள்ளடக்கம், உரைகள், கலை மற்றும் இசைக்கான முன்னுரிமைகள் என அனைத்தும், இக்கருவிகளை பயன்படுத்தி வருபவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒட்டிய அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. அதனால் அவை செயல்படும் விதமும் அதன் அடிப்படையிலேயே இருக்கும்.
இந்த செயற்கை நுண்ணறிவு என்பது பொதுமக்களின் பெரும் அளவிலான செல்வங்களை சொற்ப எண்ணிக்கையிலான தனியார் நிறுவனங்களுக்கு மாற்றும் செயல்களைச் செய்யவும் பயன்படுகிறது.
ஆனால் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையத்தின் இயக்குனர் டான் ஹென்ட்ரிக்ஸ், தற்காலத்தில் நிலவும் ஆபத்துகள் மற்றும் எதிர்கால அபாயங்களை சம்பந்தமற்ற விஷயங்களாக பாவித்து அணுகக்கூடாது என பிபிசியிடம் பேசிய போது தெரிவித்தார்.
"தற்போதைய சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, பிற்காலத்தில் ஏற்படும் பல ஆபத்துக்களை எதிர்கொள்ளப் பயனுள்ளதாக இருக்கும்," என்று அவர் கூறினார்.
மனிதனை மிஞ்சிய அறிவினால் ஆபத்து
அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை உடனடியாகத் தடுத்தது நிறுத்தவேண்டும் என கடந்த மார்ச் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் உள்ளிட்ட வல்லுநர்கள் கூட்டாக கையெழுத்திட்டு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவினால் மனித குலத்துக்கு ஆபத்து என்ற செய்தியின் மீது ஊடகங்கள் அதிக அளவில் தங்கள் கவனத்தைச் செலுத்தத் தொடங்கின.
அந்த கடிதத்தில், "செயற்கையாக உருவாக்கப்படும் மனங்கள் (non human minds)ஒரு கட்டத்தில் மனிதர்களை விட திறமை மிக்கவைகளாக மாறி, அதிக எண்ணிக்கையில் பெருகி, மனித இனத்தையே அழித்துவிடும் அளவுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மாறாக, தற்போதைய பிரச்சாரங்கள் தெளிவான வேண்டுகோளை முன்வைக்கின்றன. அவற்றின் படி, உடனடியாக இந்த ஆபத்துகள் குறித்த ஆலோசனையை அனைவரும் தொடங்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இந்த அறிக்கை, செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் ஆபத்துகளையும், அணு ஆயுதப் போரால் ஏற்படும் அபாயத்துகளையும் ஒப்பிடுகிறது. OpenAI, தனத வலைப்பதிவு ஒன்றில், அணு சக்தியைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் சர்வதேச அணு சக்தி நிறுவனம் செயல்படுவதைப் போலவே, செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தவும் உலக அளவில் ஒரு கட்டுப்பட்டு அமைப்பை உருவாக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு பற்றி கூடுதல் கவனம் செலுத்த பிரிட்டன் உறுதி
சாம் ஆல்ட்மேன் மற்றும் கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை இருவரும் அண்மையில் பிரிட்டன் பிரதமருடன் செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை பற்றி விவாதித்தவர்களில் இடம்பெற்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ரிஷி சூனக், செயற்கை நுண்ணறிவினால் சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார்.
"முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செயல்பட உதவுவது, நோயெதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடிப்பது போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவின் உதவி அளப்பரிய அளவில் இருந்தாலும், அதை பாதுகாப்புடன் பயன்படுத்தும் தேவை இருப்பதை மறுக்கமுடியாது," என்றார் அவர்.
"அதனால் தான், கடந்த சில நாட்களுக்கு முன் செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் வல்லுனர்களுடன் நான் ஆலோசனை நடத்தினேன். என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்தும், செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்க புதிதாகத் தேவைப்படும் சட்டங்கள் குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தப்பட்டது."
"கொரோனா தொற்றுநோய் அல்லது அணு ஆயுதங்களால் விளையும் ஆபத்துகளை செயற்கை நுண்ணறிவும் ஏற்படுத்தும் என்பது உள்ளிட்ட தகவல்கள் பொதுமக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளன. அதனால், செயற்கை நுண்ணறிவு குறித்த முடிவுகளை மேற்கொள்ளும் போது, அரசு அதில் மிகுந்த கவனம் செலுத்தும் என நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்."
அண்மையில் ஜி7 பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டிலும் இது குறித்துப் பேசி உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்த ரிஷி சூனக், விரைவில் அமெரிக்க அரசிடமும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1