புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
81 Posts - 67%
heezulia
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
viyasan
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
273 Posts - 45%
heezulia
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
18 Posts - 3%
prajai
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_m10'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 07, 2023 8:28 pm

'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? சிதம்பரம் தீட்சிதர் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டதா?



'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன? 2WVXTmK

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்குக் கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் இரு விரல் பரிசோதனை முறை 2013இல் இருந்து தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதால் அந்தப் பரிசோதனை செய்யப்படவில்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆனால் தீட்சிதர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் ரவி தங்களது பிரச்னைகளுக்காகப் பேசுவது நம்பிக்கை தருவதாகக் கூறுகின்றனர்.

ஆளுநர் ரவி சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், சிதம்பரம் கோவில் தீட்சிதர் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்குக் கட்டாய கன்னித்தன்மைக்கான இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அது செய்யப்பட்டதால், சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஆளுநர் கூறிய இருவிரல் பரிசோதனை முறை என்பது இந்தியா முழுவதும் 2013இல் இருந்து தடை செய்யப்பட்ட பரிசோதனை என்பதால், அதைச் சிறுமிகளுக்கு நடத்தவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''குழந்தைத் திருமணத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறுமிகளுக்கு மருத்துவ உதவியும் தேவையான பரிசோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டது என்பது முற்றிலும் தவறானது.

பெண்களின் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் இருவிரல் பரிசோதனை முறை தடை செய்யப்பட்டு நெடுங்காலம் ஆகிவிட்டது,'' என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

இரு விரல் பரிசோதனை என்பது என்ன?


பாலியல் வன்கொடுமை வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரு விரல் பரிசோதனை செய்யும் முறை 2013 வரை தொடர்ந்தது. இதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பைவாய் வழியாக மருத்துவர் இரண்டு விரல்களைச் செலுத்தும்போது, அங்குள்ள தசைகள் தளர்ச்சியாக இருப்பதை உணர்த்தினால், கன்னித்திரை கிழிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

இந்தப் பரிசோதனை குறித்து விளக்கிய மகப்பேறு மருத்துவர் ஏ.ஆர். சாந்தி, பெண்களின் கன்னித்தன்மையை உறுதி செய்வதற்கு இந்த இரு விரல் பரிசோதனை பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டது என்கிறார்.

''இந்தச் சோதனை முறையில் பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் காயங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்படும். மருத்துவரின் இரண்டு விரல்களை பிறப்புறுப்பின் உள்ளே செலுத்தி பரிசோதிக்கப்படும்.

அதன்போது அந்தப் பெண்ணின் ஹைமன் - கன்னித்திரை கிழிந்திருந்தால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் விளையாட்டு வீராங்கனைகள், அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள், அதிகமாக ஏறி இறங்கி, பாரம் தூக்கி வேலை செய்யும் பெண்களுக்கு ஹைமன் ஏற்கெனவே கிழிந்திருக்கும் வாய்ப்பு இருப்பதால், ஹைமன்- கன்னித்திரையைப் பொறுத்து மட்டுமே வன்கொடுமை நடந்தது பற்றிய இறுதி முடிவுக்கு வர இயலாது,'' என்கிறார்.

இரு விரல் பரிசோதனை ஏன் அறிவியல் முறையல்ல என்பதை விளக்கிய அவர், இரு விரல்கள் உட்செல்லும்போது தசைகள் தளர்ச்சியாக இருப்பதை வைத்து பலமுறை அவர் உடலுறவுக்கு ஆட்பட்டவர், வன்கொடுமைக்கு ஆட்பட்டவர் என்று முன்பு சொல்லப்பட்டது என்கிறார்.

ஆனால் இந்த முறையில், ஏற்கெனவே பாலியல் உறவில் இருக்கும் பெண், திருமணமான பெண்களுக்கு இருவிரல் பரிசோதனை செய்தால் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனரா என்பதைக் கண்டறிய முடியாது என்றும் சொல்கிறார்.

மேலும், "ஒரு பெண் பாலியல் வன்கொடுமை தனக்கு நேர்ந்தது என்று கூறும்போது அவர் அந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா என்று மட்டும்தான் பார்க்க வேண்டும். மாறாக அந்தப் பெண், ஏற்கெனவே திருமணமானவரா, பாலியல் உறவு வைத்துக் கொண்டவரா, பாலியல் தொழிலாளியா போன்ற கேள்விகள் வன்கொடுமை குற்றச்சாட்டு நடந்ததா இல்லையா என்ற வழக்கிற்கு அவசியப்படாத ஒன்று," என்கிறார்.

''பாலியல் வன்கொடுமை என்பதற்கான புதிய சட்டரீதியான வரையறையில் Non Penetrative sex-ஐ உள்ளடக்கி திருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவிரல் பரிசோதனை முறையின் பொருத்தப்பாடு இதில் இல்லை.

இந்தச் சோதனை செய்யப்படும்போது, ஏற்கெனவே பாலியல் வன்கொடுமையால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட பெண்கள், இருவிரல் பரிசோதனை செய்வதால் மீண்டும் மற்றொரு முறை அந்தப் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற காரணங்களால் இம்முறை பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தடை செய்யப்பட்டது,'' என்கிறார் மருத்துவர் சாந்தி.

தடை செய்யப்பட்டது எப்படி?


"இரு விரல் பரிசோதனை முறை அறிவியல் ஆதாரமற்றது, பிற்போக்குத்தனமானது" என்று 2013இல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததை அடுத்து இந்த முறை தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2013இல் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபர், ஒரு சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி அடங்கிய அமர்வ தீர்ப்பளித்தபோது, இரட்டை விரல் பரிசோதனை முறை என்பது அறிவியலுக்குப் புறம்பான பரிசோதனை முறை என்றும் இந்தச் சோதனை முறையைப் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை தடை செய்யப்பட்டது.

தீட்சிதர் குழந்தைகளுக்கு என்ன பரிசோதனை நடத்தப்பட்டது?


தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை நடத்தப்படவில்லை எனில் என்ன விதமான மருத்துவப் பரிசோதனை தீட்சிதர் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமாரிடம் கேட்டோம்.

''இரட்டை விரல் பரிசோதனை என்பது மிகவும் பழைய முறை. அதைச் செய்யக்கூடாது என விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதனால், இந்த முறை சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைத் திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சிறுமியருக்குச் செய்யப்படவில்லை.

தற்போது விசாரணை நடைபெற்று வருவதால், பரிசோதனை முறைகள் குறித்து விவரிக்க முடியாது. ஆனால் தடை செய்யப்பட்ட பரிசோதனை செய்யப்படவில்லை என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

அதோடு, தீட்சிதர் குடும்பத்தினர் புகார் தெரிவித்தபோது, என்ன சொல்லியிருக்கிறார்களோ, அதை அடிப்படையாகக் கொண்டுதான் தேவையான மருத்துவப் பரிசோதனையைச் செய்திருப்பார்கள்,'' என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்பதால், விசாரணை குறித்து பிற தகவல்களைச் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய சமூக நலத்துறை செயலர் சுஞ்சோங்கம் ஜாதக் சிரு, தீட்சிதர் குடும்பத்தினரிடம் குழந்தைத் திருமணம் நடத்தக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

ஆளுநர் நடந்துகொள்ளும் விதம் சரியா?


இதற்கிடையில், தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை நடைபெற்றதாக ஆளுநர் தற்போது கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகச் சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரான ஹென்றி திபேன் பேசுகையில், ''ஆளுநர் ரவி காவல்துறையில் பணியற்றியவர், கூடுதலாக ஆளுநர் என்ற பொறுப்பில் அவர் தற்போது இருப்பதால் தடை செய்யப்பட்ட பரிசோதனை நடைபெற்றுள்ளதை அறிந்திருந்தும் பல நாட்கள் மௌனம் காத்தது வியப்பளிக்கிறது,'' என்கிறார்.

குழந்தைகள் மீதான உரிமை மீறல் ஏற்பட்டிருந்தால், அதை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்றும் விதிமீறல்கள் நடைபெற்ற தகவல்கள் தெரிய வந்த பிறகு, ஆளுநரின் தலையீடு இருந்திருந்தால், அதுகுறித்து அவர் விளக்குவதுதான் சரியாக இருக்கும் என்றும் கூறுகிறார் ஹென்றி.

''ஆளுநர் ரவி பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதேபோல, இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது, இதை இவர் எப்படிக் கையாண்டார், யார் மூலமாகக் குழந்தைகளுக்கு நீதி கிடைக்க முயன்றார் என்ற தகவலைத் தருவதுதான் சிறந்தது,'' என்கிறார் அவர்.


''ஆளுநர் எங்களுக்காகப் பேசுகிறார்''


பெயர் சொல்ல விரும்பாத இரண்டு தீட்சிதர்கள் பிபிசி தமிழிடம் தங்களது பிரச்னைகளை ஆளுநர் பேசியது மிகவும் நம்பிகை தருவதாகத் தெரிவித்தனர்.

தங்களது அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று கூறிய அவர்கள், ஏற்கெனவே வழக்கு நடந்து வருவதால், மீண்டும் சர்ச்சை உருவாவதை விரும்பவில்லை என்கிறார்கள்.

''நங்கள் சிறுபான்மை மக்கள். எங்கள் குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் அக்கறைப்படுவதைவிட நாங்கள் அக்கறை செலுத்துவோம்.

ஆளுநர் ரவி எங்களுக்காகப் பேசுகிறார் என்பது எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. இந்த வழக்கு பதிவானதில் இருந்து நாங்கள் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்,'' என்றார்.

குழந்தைத் திருமணம் நடைபெற்றது உண்மையா என்றும் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடைபெற்றதா என்றும் கேட்டபோது, ''எங்கள் சமூகம் மோசமாக நடத்தப்படுகிறது,'' என்றார்கள்.

பரிசோதனை குறித்து மீண்டும் கேட்டபோது, ''நாங்கள் பிறகு பேசுகிறோம். இந்த வழக்கு பற்றி நாங்கள் வழக்கறிஞர்களோடு பேசிக்கொண்டு இருக்கிறோம்,'' என்று தெரிவித்தனர்.

பிபிசி


திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 08, 2023 6:55 pm

Code:
தங்களது அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று கூறிய அவர்கள், ஏற்கெனவே வழக்கு நடந்து வருவதால், மீண்டும் சர்ச்சை உருவாவதை விரும்பவில்லை என்கிறார்கள்.

''நங்கள் சிறுபான்மை மக்கள். எங்கள் குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் அக்கறைப்படுவதைவிட நாங்கள் அக்கறை செலுத்துவோம்.

ஆளுநர் ரவி எங்களுக்காகப் பேசுகிறார் என்பது எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. இந்த வழக்கு பதிவானதில் இருந்து நாங்கள் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்,'' என்றார்.

குழந்தைத் திருமணம் நடைபெற்றது உண்மையா என்றும் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடைபெற்றதா என்றும் கேட்டபோது, ''எங்கள் சமூகம் மோசமாக நடத்தப்படுகிறது,'' என்றார்கள்.

பரிசோதனை குறித்து மீண்டும் கேட்டபோது, ''நாங்கள் பிறகு பேசுகிறோம். இந்த வழக்கு பற்றி நாங்கள் வழக்கறிஞர்களோடு பேசிக்கொண்டு இருக்கிறோம்,'' என்று தெரிவித்தனர்.

என்ன கொடுமை இது.
எவ்வளவு காலமாக நடக்கின்றது.
எந்த திராவிட அரசும் இதை கண்டுகொள்ளவில்லையா?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Wed May 17, 2023 4:24 pm

.

பிபிசி
[/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined

அரசியல் பற்றி பேசும் அளவு உங்கள் அரசியலில் வரிட்சயமில்லை!!

இருப்பினும் ஒரு நாட்டின் சிறுபான்மை இனத்தை சார்ந்தவாராக இருப்பதால் இச்சம்பவத்தை பற்றி என் எண்ணத்தை பதிவிட விரும்புகிறேன்.

ஒர் இனத்தின் தலைமையின் அதிகாரத்திற்காக அதன் மக்கள் மீது இழைக்கபடும் வன்முறை அவ்வினத்தின் நன்மை ஆகாது.

இனத்தை காப்பதற்காக குழந்தை திருமணம் நியாயம் ஆகாது.

இத்தவறுக்கான தண்டனை மிகவும் கடுமையாக இருக்க வேண்டும். அதோடு சரியான குற்றவாளிக்கே அளிக்கபட வேண்டும் என இறைவனிடமே மண்றாட வேண்டும்.

சிவா, T.N.Balasubramanian and ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக