புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரக நீரின் மகத்துவம்  Poll_c10சீரக நீரின் மகத்துவம்  Poll_m10சீரக நீரின் மகத்துவம்  Poll_c10 
21 Posts - 66%
heezulia
சீரக நீரின் மகத்துவம்  Poll_c10சீரக நீரின் மகத்துவம்  Poll_m10சீரக நீரின் மகத்துவம்  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரக நீரின் மகத்துவம்  Poll_c10சீரக நீரின் மகத்துவம்  Poll_m10சீரக நீரின் மகத்துவம்  Poll_c10 
63 Posts - 64%
heezulia
சீரக நீரின் மகத்துவம்  Poll_c10சீரக நீரின் மகத்துவம்  Poll_m10சீரக நீரின் மகத்துவம்  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சீரக நீரின் மகத்துவம்  Poll_c10சீரக நீரின் மகத்துவம்  Poll_m10சீரக நீரின் மகத்துவம்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சீரக நீரின் மகத்துவம்  Poll_c10சீரக நீரின் மகத்துவம்  Poll_m10சீரக நீரின் மகத்துவம்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரக நீரின் மகத்துவம்


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sun May 07, 2023 7:03 pm

10 நாளில் மிகப்பெரிய வித்தியாசத்தை காட்டும் சீரக நீர்..*

உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இருக்க வேண்டும், நோய்கள் இன்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தண்ணீருக்கு பதில் சீரக நீர் அருந்தினாலே போதும்.

சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சீரகம் பற்றி பல்வேறு குறிப்புகள் உள்ளன. ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, மருத்துவ பயன்கள் நிறைந்த சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்தோ, அல்லது வெந்நீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வந்தால் 10 நாளில் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காண முடியும்.

சீரகத்தில் மிகக் குறைவான கலோரியே உள்ளது. மற்ற எந்த ஒரு பானத்தைக் காட்டிலும் சீரக நீர் கலோரி குறைந்ததாகவும் ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் விளங்குகிறது.

ஏராளமான ஆன்டிஆக்ஸிடண்ட் இதில் உள்ளது. உடலில் ஏற்படக் கூடிய ஆக்ஸிடேடிவ் ஸ்டிரெஸ் பாதிப்பை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

தினமும் சீரக நீர் அருந்துவது செரிமானப் பணி சீராக உதவும். செரிமானம் சரியாக நடந்தால், உடலின் அத்தனை உறுப்புகளுக்கும் சரியான வகையில் ஊட்டச்சத்து சென்று சேரும். உள் உறுப்புக்கள் ஆரோக்கியம் மேம்படும்.

சீரக நீர் புரதம், கொழுப்பு, சர்க்கரையை சிதைத்து உடலுக்குத் தேவையான வகையில் மாற்றும் செயல்பாட்டுக்கு துணை செய்கிறது. இதனால் செரிமானக் குறைபாடு, வயிறுப்பூக்கு, குமட்டல், வாந்தி போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கான வாய்ப்பு குறைகிறது.

சீரக நீர் உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைத் தூண்டுகிறது. இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது. வயிறு தொப்பை பிரச்னை உள்ளவர்கள் சீரக நீர் அருந்தி வருவது நல்லது.

சீரக நீர் சில வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் காரணமாக உடலில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன.

இன்சுலின் சென்சிடிவிட்டியைக் மேம்படுத்தும் ஆற்றல் சீரக நீருக்கு உள்ளது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வர விரும்புகிறவர்கள் சீரக நீர் அருந்தலாம். டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.

சீரக நீர் அருந்துவது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தைக் காக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடண்ட் மற்றும் நுண்கிருமி எதிர்ப்பு திறன் சருத்தை பாதுகாக்கிறது.

நன்றி கோரா ....

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 07, 2023 7:56 pm

கேரளாவில் அனைவரும் தினமும் சீராக நீர் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். நாமும் தினமும் குடித்து நம் அகத்தை சீராக்குவோம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 08, 2023 6:58 pm

ஜப்பானில் எல்லோரும் மித வெந்நீர்தான் குடிப்பார்களாம்.

கேரளாவில் இன்றும் என்றும் "சுக்கு வெள்ளம்தான் "  (சீரக நீர்)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 12, 2023 9:40 pm

சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி? | How To Prepare Cumin Water?


சீரகத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற பல சத்துகள் இருப்பதால் தினமும் சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதுவும் கோடைக்காலத்தில் உடலுக்குத் தேவையான குளிர்ச்சியைக் கொடுப்பதில் சீரகத்திற்கு மிக முக்கியப் பங்கு உள்ளது.

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஃபிரிட்ஜ் தண்ணீரை அல்லது மண்பானைத் தண்ணீரை பருகி, தாகத்தை போக்கிக் கொள்கிறோம் பலர். ஆனால் வெதுவெதுப்பான சீரகத் தண்ணீரை பருகி, கோடைக்காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியை கொண்டுவர முடியும் என்கிறார், சித்தமருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் மருத்துவர் ஜெ. ஸ்ரீராம். சீரகத் தண்ணீரை எப்படி பருக வேண்டும்... அதன் பயன்கள் என்ன என்பது பற்றி விவரிக்கிறார் அவர்...

’’சீரகம் என்பது சமையலறையில் நாம் பயன்படுத்தும் மிக முக்கிய சமையல் பொருள். இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற பல சத்துகள் உள்ளன. கோடைக்காலத்தில் உடலுக்குத் தேவையான குளிர்ச்சியைக் கொடுப்பதில் சீரகத்திற்கு மிக முக்கியப் பங்கு உள்ளது.

சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி?


சீரகம் உடலுக்கு நன்மையைத் தரக்கூடியது என்றாலும் அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொள்வது கூடாது. தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அதிகமாக எடுத்துக்கொள்வது உடலில் சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கிவிடும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் அளவிற்கு மட்டும் சீரகத்தை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பின்பு பருகவும். இப்படி கொதிக்க வைத்த நீரை ஆறவிடாமல் பிளாஸ்கில் ஊற்றி வைத்துப் பருகலாம். இப்படி ஒருமுறை கொதிக்க வைத்த நீரை 12 மணி நேரம் வரை வைத்து பருகலாம். அவ்வப்போது ஃபிரெஷ்ஷாக சீரகம் போட்டு கொதிக்கவைத்தும் பருகலாம்.

வழக்கமாக, கொதிக்கவைத்த நீரை பருகும்போது நீரில் இருக்கும் தாதுப்புகள் ஆவியாகிவிடும் என்பதால் அது சுவை இல்லாமல் இருக்கும். ஆனால் சீரக தண்ணீரை கொதிக்கவைக்கும் போது சீரகத்தில் உள்ள சத்துகள் நீருடன் remineralization ஆவதால் குடிப்பதற்கு சுவையாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

சீரக தண்ணீரின் பலன்கள்...


* கோடைக்காலத்தில் அதிகமாக வியர்க்கும்போது அதிகளவில் பொட்டாசியம் வெளியேறும். சீரக தண்ணீரை பருகுவதன் மூலம் அதனை ஈடு செய்யலாம்.

* செரிமான பிரச்னையை சரி செய்யும்.

* உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

* சீரண சக்தியை மேம்படுத்தும்.

பேதி நிற்க..


சீரகம் -2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதனை, எண்ணெய் விடாமல் வெறுமனே வறுத்துப் பொரிந்ததும், அடுப்பை அணைத்து அதே சூடான சட்டியில் 2 ஸ்பூன் தேனை விடவும். அப்போது சீரகம் பொங்கும். அந்த நேரத்தில், 200 மிலி தண்ணீரை ஊற்றி மீண்டும் அடுப்பை பற்றவைத்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி வடித்து, இளம் சூட்டில், 1/2 எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து குடிக்கவும். இதன் மூலம் பேதி நிற்கும். தேவைப்பட்டால் 2 அல்லது 3 முறை குடிக்க, சூட்டினால் வரும் பேதி நிற்கும்.

யாரெல்லாம் பருகலாம்


சிறுநீரகப் பிரச்னை, சிறுநீரகத்தில் நாள்பட்ட அல்லது குறைந்தளவு பாதிப்பு உள்ளவர்கள், சீரகத் தண்ணீரை பருகக் கூடாது.

மற்றபடி சிறுவயது குழந்தைகள் முதல் அனைவரும் பருகலாம். கோடைக்காலம் என்றில்லாமல் வருடம் முழுவதும் சீரகத் தண்ணீரைப் பருகலாம்.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக