புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 2 உலக ஆஸ்துமா தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 02, 2023 8:04 pm

மே 2 உலக ஆஸ்துமா தினம் 9cc61530-e848-11ed-a142-ab0e42bfd9c3

தூசி - மாறிவிட்ட வாழ்க்கை முறையின் காரணமாக இந்தியாவின் பல நகரங்களில் காற்றில் தூசியும் கலந்து மாசுபாடு காணப்படுகிறது. இந்த தூசியில் உள்ள சிறு துகளை சுவாசிப்பதால் தூண்டப்படும் விளைவினால் ஒவ்வாமை ஏற்படுகிறது.

புகை - சிகரெட் புகை, சமையல் புகை, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை என பல வகைகளில் வெளியாகும் புகையின் காரணமாகவும் ஒருவருக்கு #ஆஸ்துமா ஏற்படுகிறது.

வாசனை - வாசனை திரவியம், பாடி ஸ்பிரே, உணவு சமைக்கும் வாசனை, கழிவுகளின் வாசனை என ஏதாவது ஒரு வாசனையினால் ஒவ்வாமை தூண்டப்பட்டு ஆஸ்துமா ஏற்படுகிறது. பூக்களின் மகரந்த சேர்க்கை வாசனையாலும் இது தூண்டப்படும்.

உணவு - சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா பாதிப்பு தூண்டப்படுகிறது. பொதுவாக கத்திரிக்காய், மீன், இறால், கருவாடு உள்ளிட்ட கடல் உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்து. இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.

பழங்கள் - சிட்ரஸ் பழங்கள் என்று அழைக்கக்கூடிய எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துகுடி உள்ளிட்ட பழங்கள் வழியாகவும் இந்த ஒவ்வாமை தூண்டப்படுகிறது.

உணர்ச்சி - அதிகமாக உணர்ச்சிவயப்படுவதால் உணர்வுக தூண்டப்பட்டு ஆஸ்துமா ஏற்படும். அதனால் அதிகம் மகிழ்ச்சி, கவலை என எந்த உணர்வாக இருந்தாலும் கட்டுபடுத்த வேண்டும்.

வைரஸ் தொற்று - வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் போது ஏற்படும் ஒவ்வாமையை காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது.

ஆஸ்துமா பரம்பரை நோயா? தடுக்கும் வழிமுறைகள் என்ன ? - மருத்துவ நிபுணர் தரும் விளக்கம்


நீண்டகால ஒவ்வாமையினால் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக ஏற்படும் இளைப்பு நோயே ஆஸ்துமா எனப்படுகிறது.

அதிகப்படியான மூச்சுத் திணறல் அல்லது இளைப்பு, அதிகப்படியான இருமலால் ஏற்படும் தூக்கமின்மை, நெஞ்சில் ஏற்படும் வலி, இறுக்கம் ஆகியவற்றை ஆஸ்துமாவின் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் 2019ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலகளவில் சுமார் 262 மில்லியன் ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர். அந்த ஆண்டு மட்டும் 4.60 லட்சம் இறப்புகள் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது.

இது 2016ஆம் ஆண்டு ஆய்வை விட அதிகமானதாகும் (235 மில்லியன் ). இதில், சுமார் 15-20 மில்லியன் நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர்.

இந்தியாவில் சுமார் 15 முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் சுமார் 2 சதவீதம் பேரும் 12 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் ஒரு சதவீதத்தினரும் 15-49 வயது வரை உள்ள ஆண்களில் ஒரு சதவீதத்தினரும் பாதிக்கபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

குழந்தைகளுக்கு 4 % - 20 % வரை ஆஸ்துமா தாக்கம் காணப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்துமா இறப்புகள் பொருளாதார வளர்ச்சி குறைந்த மற்றும் நடுத்தர பொருளாதார வளர்ச்சி நாடுகளிலேயே அதிகமாக காணப்படுகிறது.

உலக ஆஸ்துமா தினம் ஏன் ?


ஆஸ்துமா நோயை தடுத்தல், சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆஸ்துமாவிற்கான உலகளாவிய அமைப்பு (The Global Inititive for Asthma - GINA) கடந்த 1993ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

இது, அமெரிக்காவின் தேசிய இதயம், நுரையீரல் மற்றும் ரத்த நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனம், மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஆஸ்துமா பாதிப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் குறைக்க உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணியாற்றி வருகின்றனர்.

ஜினா அமைப்பு தொடங்கி, முதல் சந்திப்பு மே மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபெற்றதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

யாருக்கெல்லாம் ஆஸ்துமா ஏற்படும்?


ஆஸ்துமா நோய் யாருக்கெல்லாம் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆஸ்துமா, அலர்ஜி மருத்துவ நிபுணர் டாக்டர் ஜி.கமல் பிபிசி தமிழிடம் பேசினார்.

ஆஸ்துமா ஏற்பட ஒவ்வாமை ஒரு காரணமாகிறது. சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசு, தொழிற்சாலை கழிவுகள் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

செய்யும் வேலை, அதாவது ஒவ்வாமை காரணிகள் உள்ளடக்கிய சூழலில் நீண்ட நாட்கள் இருப்பது, குறிப்பாக பஞ்சாலை, அதிக புகை வெளியேறும் தொழிற்சாலைகள், சிமெண்ட், கல் உடைக்கும் தொழிற்சாலைகளில் தகுந்த பாதுகாப்பின்றி தொடர்ந்து பணியாற்றுவது ஆகியவற்றால் ஆஸ்துமா ஏற்படும்.'' என்கிறார்.

பரம்பரையும் காரணமாகுமா ?


ஆஸ்துமாவிற்கு பரம்பரையும் ஒரு காரணமாகிறது. அதாவது பெற்றோர் அல்லது மூதாதையர் அல்லது குடும்பத்தில் ரத்த உறவினர்களில் யாருக்கேனும் இந்த நோய் தாக்கியிருந்தால், அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது.'' என்கிறார் டாக்டர் கமல்.

ஆஸ்துமா பாதிப்பை எப்படி தவிர்ப்பது?


ஆஸ்துமா பாதிப்பு என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. அதனால் இதை கட்டுப்படுத்த சில அம்சங்களை நாம் தவிர்க்க வேண்டும்.

ஒருவருக்கு ஆஸ்துமாவை தூண்டுவதற்கான காரணி என்ன, எதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது (Trigger Avoidance) என்பதை கண்டறிந்து அதை தவிர்க்க வேண்டும்.

உதாரணமாக சிலருக்கு தலையணை, மெத்தையில் உள்ள பூச்சிகள் காரணமாக ஒவ்வாமை ஏற்படும். அது போன்ற நபர்கள், மெத்தையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், வெயிலில் உலர்த்த வேண்டும்.

சிலருக்கு பனிக்காலத்தில், குளிர்ந்த காற்று டிரிக்கராக இருக்கும். அந்த நேரத்தில் காதுகளை நன்றாக சுற்றும்படியாக உடைகளை அணிய வேண்டும்.
புகை, தூசி, வாசனை போன்ற ஒவ்வாமையை தவிர்க்க மாஸ்க் அணிந்து கொள்ளலாம். கொரோனா காலத்தில் முக கவசம் அணியும் பழக்கத்தாலும், பொது முடக்கத்தின் விளைவாக குறைந்த காற்று மாசுபாடாலும் ஆஸ்துமா பாதிப்பு குறைவாக காணப்பட்டது. அதனால் முக கவசம் அணிந்து கொள்வது ஒவ்வாமையை தவிர்க்க உதவும்.

மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது மூலமாக இந்த பிரச்னையை தவிர்க்க முடியும்.

ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்களின் நண்பர்களோ, குடும்பத்தினரோ யாராக இருந்தாலும், அவர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டில் தூசி ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆஸ்துமா பாதிப்பை தவிர்க்க முடியாது.

ஆஸ்துமா முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பதால் நமது வாழ்வியல் நடவடிக்கைகளில் செய்யும் மாற்றங்கள் வழியாகவே ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

புகைப்பதைத் தவிர்க்க வேண்டும்


ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பிடிப்பதையும் அவர்களுக்கு அருகில் புகைபிடிப்பது மற்றும் புகை சூழலை தவிர்க்க வேண்டும். மகரந்தபாசிகள், பூஞ்சைகள் இருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும். சரியான இடைவெளியில் இந்த நோய்க்கான சிறப்பு மருத்துவரை அணுகி, சோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.

குறிப்பாக, ஆஸ்துமா சிகிச்சையில் முதன்மையானது இன்ஹேலர் வகை சிகிச்சை. பிரிவண்டார் (தடுப்பு) வகை, மற்றொன்று ரிலீவர் வகை என்று இரண்டு வகை இன்ஹேலர் வகை சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இது அனைவருக்கும் கட்டாமில்லை. நோய் தாக்கத்தின் அடிப்படையில் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும். நுரையீரல் செயல்திறன் பரிசோதனை அடிப்படையில் இதன் தேவையை கண்டறிய முடியும். இம்மினோதெரபி சிகிச்சையில் இன்ஹேலர் தேவைப்படுவதில்லை.

கவனத்தில் கொள்ள வேண்டியவை


ஆஸ்துமா பாதித்தவர்களை, குறிப்பாக குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தக் கூடாது. குழந்தைகளை அந்தந்த வயதிற்கேற்ற இயல்பான நடவடிக்கைளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆஸ்துமா பற்றிய சுய விழிப்புணர்வு, குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். நோய் பாதிக்கப்பட்டால் அச்சப்படத் தேவையில்லை. ஆரம்ப நிலையில் கண்டறிந்து, தொடர் சிகிச்சை எடுத்தால், கட்டுப்படுத்தலாம்

உட்புற ஆஸ்துமாவுக்கான காரணங்கள் என்ன?


பரம்பரை, மரபணு வழியாக இந்த ஆஸ்துமா வருகிறது. நமது தாய்வழி அல்லது தந்தைவழியில் உள்ள ரத்த சொந்தங்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், அதன் தொடச்சியாக உங்களுக்கும் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது.

சில சமயம் பரம்பரை ரீதியாக பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு ஆஸ்துமா தூண்டும் காரணியாக ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும்.

வழக்கமாக குழந்தைகள் அதிக நேரம் விளையாடி விட்டு வரும் போது அவர்களின் நெஞ்சு அடைப்பது போல உணர்வு ஏற்படும். அவர்களால் மூச்சு விட முடியாது. இது போன்ற அறிகுறிகள் ஆஸ்துமா பாதிப்புக்கானது.

புறக்காரணிகளால் ஆஸ்துமா ஏற்பட என்ன காரணம்?

ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட ஏராளமான புறக்காரணிகள் உள்ளன. இந்த புறக்காரணிகளால் தூண்டப்படும் ஒவ்வாமை ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஆஸ்துமா பாதிப்பின் அறிகுறிகள் என்ன?


ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இருக்கும் பொதுவான அறிகுறிகள் என சில வகைபடுத்தப்பட்டுள்ளன.

இருமல்
நெஞ்சு இறுக்கம்
மூச்சுத் திணறல்
Wheezing (பெருமூச்சு)

என்ன சிகிச்சை?


ஆஸ்துமா ஏற்படும் நபர்களுக்கு உரிய பரிசோதனைகளுக்கு பிறகு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆரம்ப நிலையில் நோயின் தன்மை உள்ளவர்களுக்கு இன்ஹேலர் மூலமாக மருந்துகள் எடுத்துக் கொண்டால் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

நோயின் தன்மை தீவிரமாக உள்ள நபர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கக்கூடும். அதை சரி செய்ய மூச்சுக் குழாய் பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இதை சரி செய்ய முடியும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக