புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10 
32 Posts - 51%
heezulia
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10 
27 Posts - 43%
mohamed nizamudeen
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10 
32 Posts - 51%
heezulia
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10 
27 Posts - 43%
mohamed nizamudeen
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்


   
   

Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 07, 2023 1:06 am

First topic message reminder :

வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?


வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.

எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.

அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.

மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 05, 2023 2:07 am

ஏலக்காயின் மருத்துவ பயன்கள்


ஏலக்காய் ஒரு முக்கியமான மூலிகைப் பொருள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.


உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இரவில் ஏலக்காய் சாப்பிட்டு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால் எடை மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

ஏலக்காயை உட்கொள்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றை தடுக்கிறது.

ஏலக்காய் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சுவாசத்தை மேம்படுத்துகிறது. ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளில் இருந்து ஏலக்காய் நிவாரணம் அளிக்கிறது.

ஏலக்காயை உட்கொள்வதால் தூக்கமின்மை பிரச்சனையை குறைப்பது மட்டுமின்றி தூங்கும் போது குறட்டை விடுவதும் சரியாகிறது.

ஏலக்காய் சிறுநீரகத்தில் உள்ள அசுத்தங்களை அகற்ற உதவுகிறது மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.

கரும்புள்ளிகளை குறைத்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஏலக்காய் உதவுகிறது.

ஏலக்காயை சாப்பிட்டு வந்தால், முடி உதிர்தல், உடைதல் போன்ற பிரச்சனைகள் குறைந்து, முடி வலுவடையும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 11, 2023 12:41 am

கடுமையான உடற்பயிற்சி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?


உடற்பயிற்சி என்பது உடல் நலனுக்கு மிகவும் முக்கியம் என்றாலும் உடலை மிகவும் வருத்தி கடுமையாக உயர்ச்சி செய்யக்கூடாது என்றே மருத்துவ ஆலோசர்கள் தெரிவித்துள்ளனர்

உடற்பயிற்சி என்பது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதாலும் உடலில் எந்த விதமான நோயும் வரக்கூடாது என்பதற்காகவும் செய்யப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் உடலை அழித்துக் கொள்ளும் அளவிற்கு மிகவும் வருத்தி செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பலர் மாரடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அதேபோல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஊக்க மருந்துகள் ஊசிகள் ஆகியவற்றையும் முயற்சிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் உடற்பயிற்சி ஆபத்தானது என்ற எண்ணத்தை கொள்ள வேண்டாம் என்றும் எதையுமே அளவோடு செய்தால் எந்த வித ஆபத்தும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் தகுந்த பயிற்சியாளரை அருகில் வைத்துக் கொண்டு செய்வது மிகவும் முக்கியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 11, 2023 12:42 am

அதிகமாக பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?


பழ வகைகள் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளை அளிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அதேசமயம் அதிகமாக பழங்கள் சாப்பிடுவதும் உடலுக்கு நன்மை அளிப்பதல்ல. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்..

பழங்களில் விட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம் என பல்வேறு வகையான சத்துக்களும் அடங்கியுள்ளது. தினம்தோறும் ஒரு பழம் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் பிரக்டோஸ் லிபோஜெனசிஸ் எனப்படும் செயல்பாடு கல்லீரலில் கொழுப்பை அதிகரிக்கிறது.

இவ்வாறு அதிகரிக்கும் கொழுப்பினால் கல்லீரல் நோய்கள் உண்டாகும் ஆபத்து உள்ளது.

அதிக பழங்கள் சாப்பிடுவதால் அதிகரிக்கும் ப்ரக்டோஸ் உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பை ஊக்குவிக்கிறது.

மேலும் அதிகமான பழங்கள் சாப்பிடுவதால் நீர்ச்சத்து அதிகரித்து வயிற்றுபோக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒரு சில பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் ஏப்பம், வாயு தொல்லைகள் ஏற்படலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு கப் பழங்கள் என்பது அமெரிக்க உணவுத்துறையால் பரிந்துரைக்கப்படுகிறது. பழ சாலட்டுகள் போன்றவை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

பெரும்பாலும் ப்ரூட் சாலட்டுகளை காலை நேரத்தில் சாப்பிடுவதும், இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 11, 2023 12:43 am

இளநீர் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?


தற்காலத்தில் குளிர்பானங்கள் குடிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில் குளிர்பானத்திற்கு செலவழிக்கும் காசை இளநீரில் செலவளியுங்கள் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கோடை சூட்டை தணிப்பதில் இளநீர் முக்கிய பங்கு ஆற்றுகிறது என்பதும் தாகத்தை தணிக்கும் இளநீர் எதிர்ப்பு சக்தியை அளிப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை எண்ணற்ற நன்மைகளை மனிதர்களுக்கு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த கலோரி, குறைந்த சர்க்கரை கொண்ட பானம் என்பதால் இளநீரை சர்க்கரி நோயாளிகள் கூட குடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது இளநீரின் வழுக்கை என்பது புரதச்சத்து நிறைந்தது என்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.

குறிப்பாக கர்ப்பிணிகள் நீர் இழப்பு, தலைவலி, கால் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்திக்கும்போது இளநீரை குடித்தால் உடனே குணமாகும். வயிற்றுப்போக்கு அம்மை நோய் காலரா போன்றவர்களுக்கு இளநீர் ஒரு சிறந்த டானிக் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இளநீர் குடல் புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 11, 2023 12:44 am

குழந்தைகளின் கண் கோளாறுக்கு செல்போன் தான் முக்கிய காரணம்.


செல்போன் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்டாலும் குழந்தைகளின் கையில் செல்போன் கொடுப்பதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் குழந்தைகளின் கண் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து இது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் பெரும்பாலான குழந்தைகளின் கண் பாதிப்புக்கு செல்போன்தான் காரணம் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

குழந்தைகள் அதிக நேரம் செல்போன்களில் கேம் விளையாடுவது திரைப்படங்கள் பார்ப்பது ஆகியவை காரணமாக கண் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

குழந்தைகள் அதிக நேரம் செல்போன்களை பார்த்தால் பார்வை கோளாறு மங்கலான பார்வை போன்ற பிரச்சனைக்கு ஆளாகும் நேரிடும் என்றும் எனவே குழந்தைகளுக்கு செல்போன் பயன்பாட்டை குறைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செல்போன் தொடர்ச்சியாக பார்ப்பதால் கண் நரம்புகள் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 12, 2023 12:54 am

பலாப்பழம்


கோடைக்காலத்தில் பிரபலமான உணவுகளில் பலாப்பழமும் ஒன்று. பல்வேறு நன்மைகளை கொண்ட பலாப்பழம் பல நன்மைகளை அள்ளித்தருகிறது. அதுகுறித்து அறிவோம்.

பலாப்பழம் சாப்பிடுவது உடலுக்கு இன்சுலின் வழங்குவதற்கு சமம். இது உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துகிறது. வாத நோய் பிரச்சனையை குறைக்கிறது.

தோல் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்க பலாப்பழம் உதவுகிறது. முடி உதிர்தல் பிரச்சினைகளை போக்க உதவுகிறது.

இரத்த சோகையால் அவதிப்படுபவர்கள் பலாப்பழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

பலாப்பழத்தில் உள்ள கால்சியம் உடலின் எலும்புகளை பலப்படுத்துகிறது.

பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, வளர்சிதை மாற்றத்தை சீராக இயங்கச் செய்து, வாயு மற்றும் வயிற்றில் புண்களைத் தடுக்கிறது.

பலாப்பழத்தில் உள்ள பைட்டோநியூட்ரியன்கள், ஐசோஃப்ளேவின்கள், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராடுகின்றன.

பலாப்பழத்தை உண்பதால் ஆண்களின் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 12, 2023 12:55 am

புரசு மரப்பூ கஷாயம்


புரசு மரமானது பல நோய்களை முறியடித்து முதுமை அடையாமல் நீண்ட ஆயுளை அளிக்கும் அதி சக்தி கொண்டது. இந்த மரத்தின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

புரசு மரப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் வாத சளி, மூல நோய்கள் மற்றும் பெண்களின் தனிப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது.

புரசு இலையில் சாப்பாடு செய்தால் வயிற்றுக் கட்டிகள், ரத்தத்தில் உள்ள சூடு, பித்தம் குறையும்.

புரசு மரத்தின் இலைகள், பூக்கள், மேல் பட்டை, வேர்ப்பட்டை, காய்களை சம பாகமாக இடித்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எல்லா நோய்களும் குறையும்.

1 கிராம் புரசு விதையுடன் 5 கிராம் வெல்லம் கலந்து பேஸ்ட் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் வலி குறையும்.

எலுமிச்சம்பழச் சாறுடன் புரசு விதைகளை அரைத்து சிரங்கு, படை போன்றவற்றின் மீது பூசி வந்தால் நாளடைவில் நோய் குறையும்.

புரசு விதையை இளநீர், குங்குமப்பூ சேர்த்து அரைத்து மாத்திரை அளவு செய்து உலர்த்தி நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.

புரசு மர விதைகளை உலர்த்தி தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் நீங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 13, 2023 12:54 am

பனங்கற்கண்டு


வெள்ளை சர்க்கரை என்பது உடலுக்கு தீங்கிழைக்கக் கூடியது என்று அனைவரும் கூறிவரும் நிலையில் பனங்கற்கண்டு சேர்த்தால் உடலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது.

பாலில் #பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் மார்பு சளி இளகி வெளியேறும் என்றும் இருதய நோயை குணமாகும் என்றும் கூறப்படுகிறது. பனங்கற்கண்டில் சுண்ணாம்பு சத்து அதிகம் இருக்கிறது என்றும் இரும்பு புரதச்சத்துக்கள் வைட்டமின்கள் அதிகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது

அனைத்து விதமான நோயும் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது. இருதய நோய் குணமாகும் என்றும் இதில் உள்ள கால்சியம் பற்களை உறுதிப்படுத்தும் என்றும் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படுவதை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கண் நோய் ஜலதோஷம் காச நோய் ஆகியவையும் பனங்கற்கண்டு நீக்குகிறது. சிறந்த ஆயுர்வேத மருந்தாக கூறப்படும் பனங்கற்கண்டை அனைத்து விதமான பானங்களிலும் கலந்து பருகி பயன்பெற வலியுறுத்தப்படுகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 13, 2023 12:55 am

ஆட்டுக்கால் சூப்


தாவரங்களில் பல மருத்துவ பயன்கள் உள்ளது போல அசைவ உணவுகளிலும் உள்ளது. இஞ்சி, கொத்தமல்லி உள்ளிட்ட மூலிகைகள் போட்டு செய்யப்படும் #ஆட்டுக்கால்_சூப் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.


ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் கொலாஜின் உற்பத்தி அதிகரித்து எலும்பு வலுவடைகிறது.

மிளகு சேர்த்த ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நெஞ்சுசலி, இறுமல் பிரச்சினைகள் தீரும். குளிர் காலங்களில் ஆட்டுக்கால் சூப் குளிரை போக்குவதுடன், ஜலதோஷ பிரச்சினைகளையும் நீக்குகிறது

குடலில் ஏற்படக்கூடிய எரிச்சல் மற்றும் செரிமான கோளாறுகளை ஆட்டுக்கால் சூப் குணமாக்குகிறது.

அதிகமான புரதம் கொண்ட ஆட்டுக்கால் சூப் பசியின்மையை ஏற்படுத்துவதால் எடை குறைக்க சிறந்தது. ஆனால் ஏற்கனவே உடல் எடை குறைவாக உள்ளவர்கள் சாப்பிடும் முன்னர் ஆட்டுக்கால் சூப் குடிக்காமல் இருப்பது நல்லது.

ஆட்டுக்கால் சூப்பில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் பற்களை ஆரோக்கியமாக்குகிறது

ஆட்டுக்கால் சூப்பில் உள்ள மூலிகைகள் உடலில் உள்ள நச்சுகள் வெளியேற உதவுகின்றன.

ஆட்டுக்கால் சூப்பில் உள்ள அர்ஜினைன், குளுட்டமைன் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 13, 2023 1:46 am

கொய்யா


கொய்யா மணமாக மட்டுமில்லாமல் அதிக வைட்டமின்களை கொண்டது. இதில் அதிக வைட்டமின் சி இருக்கிறது. இந்த நார்த்து, மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ரத்த சர்க்கரையை குறைக்கும். இந்நிலையில் நாம் சாப்பிடும் ஸ்நாக்ஸ்-க்கு சரியான மாற்று இதுதான்.

ஆரஞ்சில் இருக்கும் வைட்டமின் சி-யை விட இதில் 4 மடங்கு அதிகம்.

100 கிராம், கொய்யாவில் எவ்வளவு சத்துக்களை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

கலோரிகள்: 68, கார்போஹைட்ரேட்: 14 கிராம், நார்சத்து: 5 கிராம், புரத சத்து: 2.6 கிராம், கொழுப்பு சத்து: 0.9 கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலேட், பொட்டாஷியம், மெக்னீசியம் இருக்கிறது.

இதில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொலஜன் உற்பத்தியில் பங்குவகித்து ஆரோக்கியமான சருமம் தருகிறது.

இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து நல்ல கண் பார்வை கிடைக்க உதவும். இதில் இருக்கும் நார்சத்து ஜீரணத்திற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் நமது செல்களை பாதிப்பிலிருந்து பாதுகாத்துகொள்கிறது. மேலும் தீவிரமான நோய்கள் வராமல் பார்த்துகொள்கிறது.

கொய்யாவில் இருக்கும் நார்சத்து, ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். இந்நிலையில் சுகர் பேஷ்ண்ஸ் இதை தைரியாமாக எடுத்துகொள்ளலாம்.

மேலும் இதில் இருக்கும் நார்சத்து, நாம் வயிறு முழுக்க சாப்பிட்டதுபோல உணர்வை ஏற்படுத்துவதால், இது உடல் எடை குறைக்க உதவும்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக