புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
7 Posts - 58%
heezulia
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
8 Posts - 2%
prajai
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரியாமருதீஸ்வரர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 24, 2023 8:17 pm


பரியாமருதீஸ்வரர் DAtRoK6

நந்திக்கு நெய்; சிவனுக்கு மூலிகைச்சாறு... நினைத்ததை நிறைவேற்றும் அபிஷேக வழிபாடுகள்!


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது பரியா மருதுபட்டி. விசேஷமான மருத விநாயகர், வேண்டுதலை நிறைவேற்றும் நெய் நந்தி, ஈசனுக்கு மூலிகைச்சாறு அபிஷேகம், நோய்களைத் தீர்க்கும் அதிசய தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் திகழும் ஊர் இது.

கிராமத்தின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது அருள்மிகு #பரியாமருதீஸ்வரர் ஆலயம். வாழ்வில் அவசியம் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய இவ்வூர் ஆலயத்தின் சிறப்புகள் ஒவ்வொன் றையும் தெரிந்துகொள்வோம்.

மருத விநாயகர்: முதலில் தரிசிக்கவேண்டிய தெய்வம் இவர்தான். வெளிப் பிராகாரத்தில், மருத மரத்தடியில் அருள் புரிகிறார் இந்த விநாயகர். இவரின் உருவம், வழக்கமாக நாம் பார்க்கும் உருவம்போன்று இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. இந்த மருத கணபதியும் கோயிலுக்குள் இருக்கும் கன்னிமூல கணபதியும் வாதாபி காலத்து விக்கிரகங்களாம்.

மருத மரம்தான் தல விருட்சம்; மருத்துவக் குணம் வாய்ந்தது என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தை எழுப்பும்போது, மண்ட பத்தின் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிக்காக இந்த மரத்தை வெட்ட முயற்சி செய்தனர். அப்போது மரத்திலிருந்து ரத்தம்போன்ற நீர் வடிந்ததால், வெட்டும் முயற்சி கைவிடப் பட்டது. பின்னர் தானாகவே அந்த மரம் முறிந்து விழுந்து, கோயில் சுவர் கட்டுவதற்கு உதவியது. இது இறைவனின் திருவிளையாடலே என்கிறார்கள் பக்தர்கள். அதன் பின்னர் மருத மரம் தானாக வளர்ந்ததாம்.

ஒரு முறை, இந்த மரத்தில் சிவ ரூபமே பிரத்யட்சமாகத் தோன்றியதைப் பேரதிசயமாக பக்தர்கள் சிலாகித்துச் சொல்கிறார்கள். இந்த மரத்திலிருந்து தானாகவே உதிரும் மருதம் பட்டையைப் பொடி செய்து நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆறாத புண், வயிற்று வலி போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு சர்ப்பம் வந்து வழிபட்டதால், ராகு - கேது தோஷம் நிவர்த்தி ஆகும். இங்கே வழிபட்டு, நிவர்த்தி ஆனவர்கள், ராகு கேது உருவங்களை வைத்து வழிபடுகிறார்கள்.

நான்கு யுகம் கண்ட சிவலிங்கம்: மூலவர் ஈசன் சுயம்பு மூர்த்தி; நான்கு யுகங்கள் கடந்து நிற்பவர். ஒவ்வொரு யுகத்திலும் இவருக்கு ஒவ்வொரு திருப்பெயராம். கிருத யுகத்தில் செல்ல நயினார், திரேதா யுகத்தில் நல்ல நாயனார், துவாபர யுகத்தில் பரம்தலை ஆண்டவர் ஆகிய பெயர்களோடு திகழ்ந்த இறைவனுக்கு, இந்தக் கலியுகத்தில் பறியா மருந்தீஸ்வரர் என்ற திருப்பெயர்.

‘பறியா மருந்து ஈஸ்வரர்’ என்றால், பறியாத மருந்தான ஈஸ்வரர் என்று பொருள். பறித்துப் பயன்படுத்தும் மருந்து - மூலிகைகள். பறிக்க அவசியம் இன்றி, தரிசித்தாலே நம் உடற் பிணியையும் மனப் பிணியையும் நீக்கும் அருமருந்து இந்த ஈசன். ஆகவே பறியா மருந்தீஸ்வரர் என்று பெரியோர்கள் இவரைப் போற்றுவர். ஸ்தல மரமான மருத மரத்தைக் கருத்தில் கொண்டு `பரியா மருதீஸ்வரர்' என்ற பெயர் தற்போது வழக்கத்தில் உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.

இந்த ஈசனின் மேல் வடிவம் மற்ற சிவலிங்கங்களைப் போல உருளை வடிவமாக இல்லாமல், சதுர வடிவமாகத் திகழ்கிறது. இதற்குக் கீழே தோண்டத் தோண்ட பெரிய, அகன்ற மலை மாதிரி போய்க்கொண்டே இருந்ததாம். ஆக, அதன் முனைதான் மேலே தெரியும் லிங்கம் என்கிறார்கள்.

திருபுவனத்தில் அவதரித்த சரபேஸ்வரரின் கோபம் தணிந்த திருத்தலமாகவும் இதைச் சொல் கிறார்கள். மூலிகைகள் நிறைந்திருந்த வனமாக இருந்தபடியால், இன்றும் சிவராத்திரியின் போது, மூன்றாம் கால பூஜையில் மூலவருக்கு 108 மூலிகைச் சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்தத் திருக்கோயிலில் இரண்டு அம்பாள்களை தரிசிக்கலாம். சுத்த பிரும்மமாகப் பரஞ்சோதி அம்பாளும் பர பிரும்மமாகப் பார்வதி அம்பாளும் இந்தக் கோயிலில் அருள்பாலிப்பது அதிசிறப்பு.

வேடர் உருவில் கண்ணபிரான்: பாரதப் போருக்குப் பிறகு கண்ணபிரான் வணங்கிய சிவன் என்பதற்குச் சான்றாக, கண்ணபிரான் இங்கே வேடர் உருவத்தில் சங்கு சக்ரபாணியாக, வலது கையில் புஷ்பத்தை ஏந்தி பூஜிக்கும் கோலத்துடன் இருக்கிறார்.

மகாபாரதப் போரில் காயமடைந்த பாண் டவர்கள், இந்தத் தலத்தின் மண்ணை அள்ளிக் காயங்களின் மேல் பூச, உடனே காயங்கள் ஆறிய தாகச் சில குறிப்புகள் திருவண்ணாமலையில் உள்ள ஏடுகளில் இருந்தன என்றும் தகவல்கள் உண்டு.

அதிசய நெய் நந்தி: இங்குள்ள நெய் நந்தீஸ்வரரும் வரப்பிரசாதியானவர். இவரிடம் வேண்டிக் கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நடைபெறும் என்று நம்பிக்கை. எப்போதும் நந்திமீது நெய் மூடியே இருந்தாலும், அதை ஈ, எறும்பு எதுவும் அண்டுவதில்லை என்பது ஆச்சர்யம்!

சர்வானந்தத் தீர்த்தம்: கோயிலுக்கு மிக அருகிலேயே உள்ளது சர்வானந்தத் தீர்த்தம். கிருஷ்ணரே உருவாக்கிய தீர்த்தமாம். உடலில் கட்டிகள் அல்லது தோல் வியாதிகள் இருந்தால், மருதீஸ்வரரை வேண்டிக்கொண்டு, வெல்லம் வாங்கி வந்து இந்தக் குளத்தில் கரைத்தால், உடலில் தோன்றிய கட்டிகள் விரைவில் மறைந்து விடும் என்கிறார்கள்.

மேலும், சுற்றுவட்டாரப் பகுதியில் தாய்மையுற்ற பெண்களுக்கு, ‘தீர்த்தம் அருந்துதல்’ என்ற மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது, இந்த சர்வானந்தத் தீர்த்தத்தைத்தான் குடத்தில் எடுத்து, சுவாமியிடம் வைத்து, அபிஷேகம், அர்ச்சனை செய்து எடுத்துச் செல்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை அந்தப் பெண்கள் அருந்தினால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக