by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள். - Page 3 YmKjb69](https://i.imgur.com/YmKjb69.jpg)
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு சரியான காரணம் இல்லாமல் இருந்தாலும், உடல் பருமன் மற்றும் உடல் பயிற்சி இன்மை இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம் என்ற அறிகுறியை சர்க்கரை நோய் தருகிறது.
இந்நிலையில் பொதுவாக சுகர் நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள நாம் செய்யும் முக்கிய தவறுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது. இந்நிலையில் நாம் அதிக இனிப்பான உணவை சாப்பிடும்போது, அது நேரடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். மேலும் இது இன்சுலினை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படும்.
அதிகமான கார்போஹைட்ரேட் அல்லது அரோக்கியம் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்வு செய்வது. மைதா பிரட், பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ். இந்நிலையில் இந்த உணவுகள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும்.
நார்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது. நார்சத்து உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும், அதிகம் பசிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்நிலையில் நார்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
காலை உணவை தவிர்ப்பது, சிலர் சரியாக பசிக்கவில்லை என்று நாம் காலை உணவை தவிர்க்க கூடாது. காலை உணவுதான் அன்றைய நாளின் சர்க்கரை அளவை சீராக தொடங்க உதவும். காலை உணவை நாம் தவிர்க்கும்போது இன்சுலின் செயல்பாடை பாதிக்கலாம். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, அது கொலஸ்ட்ரால் ஆக மாறலாம். இதனால் இதயம் மற்றும் ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படும். மேலும் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.
குறிச்சொற்கள் #நீரிழிவு #சர்க்கரை_நோய் #diabetic #diabetes |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்
சர்க்கரை நோய் பாதிப்பை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை தவிர்ப்பது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
சர்க்கரை நோய் அதிகமாக இருந்தாலும் அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள்ளவும்.
பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் அதாவது 5 வேளை சிறிய அளவிளான உணவுகளை எடுத்து கொல்வது அவசியம்.
சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்க உதவும் வெந்தயம்!
கரையும் நார்ப் பொருள்தான் இதயத்தில் கொழுப்பு படியாத தன்மையை ஏற்படுத்தும். கரையாத நார்பொருளே மலச்சிக்கலை நீக்குவதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைத்திருக்கும். வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமானபொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்பு சத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
* வெந்தயம் சைவ உணவுகளில் நார்ச்சத்து கொண்ட பொருள். சாம்பார், இட்லி, ரசம் என நாம் சமைக்கும் அனைத்து உணவிலும் வெந்தயம் சேர்ப்பது நல்லது. அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் கசப்பு தன்மை அதிகரிக்கும்.
* நீரிழிவு, ரத்த கொதிப்பு, மாரடைப்பு ஆகிய மூன்று நோயுக்கும் ஒரு பொது மருந்தாகும் வெந்தயம் விளங்குகிறது. வெந்தயக் கீரை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் கெட்ட கொழுப்பு, சத்தான எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
* வெந்தயத்தை மோரில் ஊற வைத்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாக இருப்பதுடன் கண்ணிற்கும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் பொடுகு தொல்லை விரைவிலே குணமாகும்.
* 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.
* அரிசியுடன் சிறிது வெந்தயம் சேர்த்து பூண்டை தட்டி போட்டு கஞ்சி வைத்து குடித்தால் எளிதில் செரிக்கும். இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கும்.
* வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.
நீரிழிவு நோய்க்கு உகந்த காய்கறிகள்
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பாகற்காய்
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
வெந்தயக் கீரை
கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்தக் கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.
வெண்டைக்காய்
வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
சுரைக்காய்
இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.
லெட்யூஸ் (Lettuce)
இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.
காலிஃப்ளவர்
மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.
பூசணிக்காய்
அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.
பிரெஞ்சு பீன்ஸ்
பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்.
நீரிழிவு பாதிப்புகளை நீக்க உதவும் நாவல் பழம்...!
நாவல் மரத்தின் பட்டை, நாவற்பழம், விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது ஆகும்.
நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.
நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.
உள்ளூரில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படட நாவல் கோப்பியை ஒரு முறை உபயோகித்து பலன் பெறுங்கள். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.
நாவல் பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். அதிலும் இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.
நீரிழிவு நோயாளிகள் தாங்கள் உபயோகிக்கும் மருந்துகளுடன் நாவல் கோப்பியை காலை, பிற்பகல், இரவு தேநீர், கோப்பி பாவிப்பது போன்று பாவித்து வரும்போது இரண்டு வாரங்களில் உங்கள் ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவு குறைந்து காணப்படும்.
கரும்பு சாறு பருகுவது சர்கரை நோயை அதிகரிக்குமா??
கரும்பு சாற்றை பருகுவது உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்...
கரும்பு சாறு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளது.
சிறுநீரக தொற்றுகள், சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது.
கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது.
செரிமான பிரச்சனை மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைக்கு நீங்கள் தினமும் கரும்பு சாறு உட்கொள்ள வேண்டும்.
பற்களின் பற்சிப்பியை உருவாக்கவும் பற்கள் வலுவடையவும், ஈறுகளுக்கு வலிமை அளிக்கவும் உதவுகிறது.
இது இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும்.
கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.
சர்க்கரை நோய்க்கு தீர்வு தரும் இயற்கை மருந்து ஆவாரம்பூ
தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ - 200 கிராம் சுக்கு - 2 துண்டு ஏலக்காய் - 3 உலர்ந்த வல்லாரை இலை - 200 கிராம் சோம்பு - 2 டீஸ்பூன் |
செய்முறை:
மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும்வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.
மருத்துவப்பயன்;
சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து சிறுநீர்க் கோளாறுகளை நிவர்ந்த்தி செய்யும் இதய நோய் வாய்ப்புண் சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
சர்க்கரை நோயாளிகளின் கால்களில் ஏற்படும் எரிச்சலை போக்கும் பாகற்காய் இலை.
பாகற்காயில் வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்களும் இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்கள் இருக்கிறது.
பாகற்காயில் வைட்டமின் சி மிகுதியாக இருப்பதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக உள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன.
மாலைக்கண் நோய் உள்ளவர்கள் பாகல் இலைச் சாற்றுடன் சிறிதளவு மிளகை சேர்த்து அரைத்து கண்ணைச் சுற்றி பற்றிட மாலைக்கண் குறைபாடு படிப்படியாக நீங்கும்.
நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் பாகல் இலைச்சாற்றை 30மிலி அளவில் குடித்துவர வயிற்றுப் பூச்சி கழிந்து வெளியேறும். பாகல் வற்றலை வறுத்து சாப்பிட மூலம், காமாலை நீங்கும். இதை உண்ணும் காலத்தில் அசைவ உணவை முற்றிலும் விலக்கவேண்டும்.
பாகல் இலைச்சாற்றை வாரம் ஒரு முறை 100மிலி குடித்து வந்தால் சிறுநீர் சர்க்கரையின் அளவு குறையும். சிலருக்கு உள்ளங்கால்களில் காலையில் எப்பொழுதும் எரிச்சல் இருக்கும். இவர்கள் பாகல் இலைச் சாற்றை பிழிந்து இரவு படுக்கப்போகும்போது உள்ளங்கால்களில் தடவி வர எரிச்சல் நீங்கும்.
உடலில் ஏற்படும் கட்டி மற்றும் கண் நோய்களுக்கு சிறந்த மருந்தாய் பாகற்காய் விளங்குகிறது. பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன.
பாகற்காயை சாப்பிட்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும்.
காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வருமா?
காலை உணவை தவிர்ப்பதன் மூலம், குறைப்பதன் மூலம் பலவித நோய்கள் ஏற்படுமாம். சமீபத்திய ஆய்வு ஒன்றில் காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம்.
உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர் காலை உணவை தவிர்கின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறானது. காலை உணவை தவிர்ப்பதன் மூலம் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.
அதுவே மன அழுத்தம் ஏற்பட வழிவகுத்து நீரிழிவு நோய் உருவாக முதல்படியாக அமையும். ஆய்வின் படி வாரத்தில் குறைந்தது 4 நாட்களுக்கு காலை உணவு சாப்பிடாவிட்டால் நீரிழிவு நோய் ஏற்பட 55% வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது.
மேலும், நீரிழிவு பரம்பரை நோயாக கருதப்பட்டது. தற்போது உணவு பழக்க வழக்கம் மூலமும் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு காலை உணவை தவிர்ப்பதே ஒரு காரணம் என உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாமா?
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பலவிதமான உணவு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் அந்த நோய் உள்ளவர்கள் ஆப்பிள் ஜூஸ் குடிக்க கூடாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிளில் அதிக நார்ச்சத்து இருப்பதை அடுத்து அது செரிமானத்தை தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகமாகாமல் தடுக்கிறது. ஒரு ஆப்பிளில் 14 கலோரிகள் 27 கிராம் மாவுச்சத்து 14 கிராம் சர்க்கரை உள்ளது. ஆப்பிளில் மாவு சத்து அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் ஆப்பிளை அதிகம் சாப்பிடக்கூடாது.
குறிப்பாக ஆப்பிளை ஜூஸ் வடிவில் குடிக்கக் கூடாது என்று கூறப்படுகிறது ஆப்பிள் அனைவருக்கும் பிடித்தமான பழம் என்றாலும் ஆப்பிளை பழமாக ஓரளவு நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம் என்றும் ஜூஸ் வடிவில் கண்டிப்பாக குடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் பிரெட் சாப்பிடலாமா?
பிரெட் என்பது ஒரு பிரதான உணவு. இது பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. பிரெட்டில் கார்போஹைட்ரேட்கள் அதிகமாகவும் மற்றும் சுவையானதாக இருந்தாலும், எல்லா பிரெட்களும் சமமாக தயாரிக்கப்படுவதில்லை. வெள்ளை பிரெட் குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும், வெள்ளை பிரெட் என்ன மாதிரியான பக்கவிளைவுகளையும் ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கிறது என்பதை பார்ப்போம்:
வெள்ளை பிரெட் ரத்தத்தில் சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கிறது
வெள்ளை பிரெட்டில் அதிக கிளைசெமிக் குறியீட்டு (Glycemic Index) உள்ளது. அதாவது இது ரத்த சர்க்கரை அளவில் விரைவான அதிகரிப்பை ஏற்படுத்தும். நீங்கள் வெள்ளை பிரெட்டை உட்கொள்ளும்போது, உங்கள் உடல் அதை குளுக்கோஸாக உடைக்கிறது. இது உங்கள் ரத்த ஓட்டத்தில் நுழைகிறது. இது உங்கள் ரத்த சர்க்கரை அளவு விரைவாக உயர காரணமாகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, ரத்த சர்க்கரையின் இந்த விரைவான ஸ்பைக் ஆபத்தானது. ஏனெனில் இது நரம்பு சேதம், சிறுநீரக சேதம் மற்றும் பார்வை பிரச்னைகள் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
எடை அதிகரிப்பு வெள்ளை பிரெட்டில் கலோரிகள் அதிகம் அதேசமயம் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன. இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் தன்மை உடையது. நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக அதிகப்படியான எடையைக் கூட்டி இன்சுலின் எதிர்ப்பை மோசமாக்கும்.
இதய நோய் அதிகரித்த ஆபத்துதொடர்ந்து வெள்ளை பிரெட்டை உட்கொள்வது என்பது இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும். ஏனென்றால், வெள்ளை பிரெட்டில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம். இது வீக்கம் மற்றும் இதயம் தொடர்பான பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் பிரெட்டை சாப்பிட விரும்பினால், முழு தானிய பிரெட்டை தேர்வு செய்யலாம். முழு தானிய பிரெட்டில் வெள்ளை பிரெட்டை விட குறைந்த கிளைசெமிக் உள்ளது. அதாவது இது ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காது. இது நார்ச்சத்திலும் அதிகமாக உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|