புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
2 Posts - 6%
heezulia
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 12, 2023 3:51 pm

15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை விதித்த தீர்ப்பு; மறுபரிசீலனை செய்யும் சுப்ரீம் கோர்ட்; சட்டம் என்ன சொல்கிறது?

ஒரு குற்றவாளியை கைது செய்யப்பட்ட முதல் தேதியிலிருந்து 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் வைக்கலாமா என்பது குறித்த தற்போதுள்ள நிலைப்பாட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஏப்ரல் 10) கூறியது.

நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்தால் 1992-ம் ஆண்டு வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியது. அந்த தீர்ப்பில், குற்றவாளியை கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் காவலில் வைக்க அனுமதிக்கப்படாது என்று கூறியது. உச்ச நீதிமன்றம் இண்த தீர்ப்பை ஏன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுகிறது. மறுபரிசீலனை செய்யப்பட்டால் என்ன மாற்றங்கள் ஏற்படும்?

என்ன வழக்கு?



திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் வினய் மிஸ்ராவின் சகோதரர் விகாஸ் மிஸ்ராவை கூடுதலாக காவலில் வைக்கக் கோரி சி.பி.ஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், நம்பிக்கை மீறல் மற்றும் சதித்திட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் விகாஸ், ஏப்ரல் 16, 2021 முதல் ஏழு நாட்களுக்கு சிபிஐ காவலில் இருந்தார். இருப்பினும், விகாஸ் இரண்டரை நாட்கள் காவலுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் வழக்கமான ஜாமீன் வழங்கப்படுவதற்கு முன்பு அவர் நீதிமன்ற காவலில் இருந்தார்.

விகாஸ் போலீஸ் காவலில் இருந்த போதிலும், முன்னதாக அவரை சி.பி.ஐ-யால் விசாரிக்க முடியாததால், விகாஸை புதிதாகக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பது சி.பி.ஐ-யின் வாதம்.

குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்கப்படாது என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 30 ஆண்டு கால முன்னுதாரணத் தீர்ப்பை மேற்கோள் காட்டி விகாஸின் வழக்கறிஞர்கள், அவரை புதியதாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோருவதை எதிர்த்தனர்.

கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குப் பிறகு ஒரு குற்றவாளியை போலீஸ் காவலில் வைக்க முடியாது என்று சி.பி.ஐ எதிரி அனுபம் ஜே. குல்கர்னி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விகாஸ் வழக்கில், உச்ச நீதிமன்றம் இறுதியில் அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ-க்கு அனுமதி வழங்கியது. “மேற்கண்ட உண்மைகள், சூழ்நிலைகள் மற்றும் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யும் போது கற்றறிந்த சிறப்பு நீதிபதியின் அவதானிப்புகளின் பார்வையில், அனுபம் ஜே. குல்கர்னி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய 1992-ம் ஆண்டு தீர்ப்பை பரிசீலிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

உச்ச நீதிமன்றத்தின் 1992-ம் ஆண்டு தீர்ப்பு, தற்போதைய தீர்ப்பு என இரண்டு தீர்ப்புகளும் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இப்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஒரு பெரிய அமர்வு இந்த பிரச்சினையை புதிதாக பரிசீலித்து சட்டத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

போலீஸ் காவல் பற்றி சட்டம் என்ன கூறுகிறது?



மாஜிஸ்திரேட்கள் இயந்திரத்தனமாக ஒவ்வொரு வழக்கிலும் போலீஸ் காவலை வழங்கினாலும், சிறப்புச் சூழ்நிலைகளில் மட்டுமே போலீஸ் காவலில் வைக்க சட்டம் அனுமதிக்கிறது. உத்தரவில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக ஒரு மாஜிஸ்திரேட்டால் போலீஸ் காவல் வழங்கப்படுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 167, போலீஸ் காவல் எப்படி செயல்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்துகிறது. உண்மையில், இந்த ஏற்பாடு “இருபத்தி நான்கு மணி நேரத்தில் விசாரணையை முடிக்க முடியாத நடைமுறை” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதாவது 24 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைப்பது என்பது விதிவிலக்காக இருக்கும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC)பிரிவு 167 (2) குற்றம் சாட்டப்பட்டவரை மொத்தமாக பதினைந்து நாட்களுக்கு மிகாமல் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அளவில் பதவியில் இருப்பவருக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்த விதி, 1992 அனுபம் குல்கர்னி வழக்கில், “சில அதீத ஆர்வமுள்ள மற்றும் நேர்மையற்ற காவல்துறை அதிகாரிகளால் பின்பற்றப்படும் முறைகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

கைது செய்யும் போது மட்டும் ஏன் போலீஸ் காவலுக்கு அனுமதி?



சி.ஆர்.பி.சி பிரிவு 167 என்ன கூறுகிறது என்றால், கைதானவர் 15 நாள் போலீஸ் காவலுக்குப் பிறகு, விசாரணைக் காலத்தில் நீதிமன்றக் காவலில் மட்டுமே இருக்க முடியும் என்று கூறுகிறது.

நீதித்துறை காவலில் ஒரு மாஜிஸ்திரேட் மேற்பார்வையின் கீழ் மத்திய சிறையில் வைப்பது ஆகும். அதேநேரத்தில், போலீஸ் காவல் என்பது குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்க அதிகாரிகள் காவல் நிலையத்தில் வைத்திருப்பார்கள்.

இந்த சட்டம் ஒரு தனிநபரின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் மாநிலத்தின் அதிகாரத்தை சவால் செய்கிறது. எனவே, காவல்துறை தங்களுக்கு பதினைந்து நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை அறிந்தால், அது விசாரணையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யும். இருப்பினும், 15 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான விதி, விதிவிலக்கைப் பயன்படுத்தி வழக்கமாக தவிர்க்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் வேறொரு வழக்கில் தொடர்புடையதாக இருந்தால், ஒரு தனி நடவடிக்கை காரணமாக 15 நாள்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரிக்கத் தடை விதிக்கப்படாது. அப்போது, ஒரு வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்தாலும், மற்றொரு வழக்கில் முறைப்படி கைது செய்யப்பட்டு, அவரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நாடலாம். இதையடுத்து, மேலும் ஒரு 15 நாள் போலீஸ் காவல் விசாரணை நடைமுறைத் தொடங்கும்.

எடுத்துக்காட்டாக, ஆல் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைரின் வழக்கில், 15 நாள் போலீஸ் காவல் சுழற்சி தொடர மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகள் பயன்படுத்தப்பட்டன. அவரை தொடர்ந்து காவலில் வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று கூறி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜுபைருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

15 நாள் காவலுக்குப் பிறகு என்ன நடக்கிறது?



குறிப்பிட்ட நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை ஜாமீனில் விடுவிக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் அனுமதிக்கிறது. இது பொதுவாக ‘இயல்பான ஜாமீன்’ அல்லது ‘சட்டப்பூர்வ ஜாமீன்’ என்று குறிப்பிடப்படுகிறது.

போலீஸ் காவலில் வைக்க முதல் வரம்பு 24 மணிநேரம் ஆகும். பின்னர், இதை ஒரு மாஜிஸ்திரேட் அதிகபட்சம் 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியும். பிரிவு 167(2) (ஏ) பதினைந்து நாட்களுக்கு மேல், குற்றம் சாட்டப்பட்ட நபரை காவல் துறையின் காவலில் அல்லாமல் காவலில் வைக்க அதிகாரம் அளிக்க மாஜிஸ்திரேட்டை அனுமதிக்கிறது. அவ்வாறு செய்வதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாக அவர் திருப்தி அடைந்தால், அந்த நபரை போலீஸ் காவலில் வைக்க அதிகாரம் அளிக்கிறது. இருப்பினும், அதுவும் 60-90 நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது.

முக்கியமாக, விசாரணையை முடிக்க குற்றம் சாட்டப்பட்டவரை மேலும் காவலில் வைத்திருப்பது அவசியமானால், மாஜிஸ்திரேட் அதை அனுமதிக்கலாம். ஆனால், மரண தண்டனைக்குரிய குற்றங்களுக்கு 90 நாட்களுக்கு மேல் அல்லது ஆயுள் தண்டனை மற்றும் மற்ற எல்லா குற்றங்களுக்கும் 60 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் வைத்திருக்கக் கூடாது என்று கூறுகிறது.

1975-ம் ஆண்டு ‘மதபர் பரிதா எதிரி ஒரிசா மாநிலம்’ வழக்கின் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் 60-90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க முடியாவிட்டால், கடுமையான மற்றும் கொடூரமான குற்றங்களில்கூட குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்று கூறியது.

இந்த ஏற்பாட்டின் நோக்கம், விசாரணை அமைப்பு சரியான நேரத்திற்குள் அதன் விசாரணையை விரைவாக முடிப்பதை உறுதி செய்வதாகும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்




15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக