புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
66 Posts - 41%
T.N.Balasubramanian
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
4 Posts - 2%
Manimegala
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
2 Posts - 1%
prajai
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
432 Posts - 48%
heezulia
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
36 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
29 Posts - 3%
prajai
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_lcapதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_voting_barதமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 11, 2023 1:05 am

தமிழ் புத்தாண்டின் முதல் நாள் இரவு, சிறிய அளவிலான சுவாமி படத்தை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரித்துக் கொள்ளவும்.

ஒரு பெரிய தாம்பாளத்தில், சிறிய கிண்ணம் நிறைய அரிசி, துவரம் பருப்பு, நான்கு அச்சு வெல்லத் துண்டு, தங்க நாணயம் இருந்தால் ஒன்று, வெள்ளி நாணயம், சில்லரை நாணயங்கள், பலவிதமான பழங்கள், வெற்றிலை, பாக்குடன் தேங்காய் உடைத்து வைக்கவும்.

பிறகு, தாம்பாளத்தை சுற்றிலும் பூக்களால் அலங்கரிக்கவும். சுவாமியின் படம் மற்றும் தாம்பாளத்தில் வைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தெரியுமாறு, அதனருகே முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கவும். இப்படி வைப்பதற்கு பெயர், 'விஷு கனி' என்பர்.

மறுநாள் அதிகாலையில் எழுந்து குளித்து, சுவாமிக்கு விளக்கு ஏற்றவும். முதல் நாள் இரவு தாம்பாளத்தில் அலங்கரித்து வைத்த அனைத்து பொருட்களையும் கண்ணாடியில் பார்க்கும்போது மங்களகரமாக இருக்கும்.

'இதேபோல், எங்கள் வீடும், குடும்பமும் மங்களகரமாக சுபிட்சமாக இருக்க வேண்டும்...' என்று கடவுளை வணங்கி, வீட்டில் உள்ள பெரியவர்களை நமஸ்காரம் செய்து, அவர்களிடம் ஆசியும், அவர்கள் கையால் பணம் பெறுவது வழக்கம்.

இப்படி சிறியவர்களுக்கு நாம் கொடுப்பதும், பெரியவர்களிடமிருந்து நாம் வாங்குவதும், தனிச் சிறப்பு!

தேங்காய் அரிசி பாயசம்!


தேவையானவை:



தேங்காய் - ஒரு மூடி துருவிக் கொள்ளவும்,
பச்சரிசி - ஒரு கைப்பிடி,
பொடித்த வெல்லம் - 200 கிராம்,
முந்திரி பருப்பு - 10,
பால் - 30 மில்லி,
நெய் - ஒரு தேக்கரண்டி,
பலாச்சுளை - 2, சிறிதளவு
ஏலக்காய் துாள்.

செய்முறை:



பச்சரிசியை 30 நிமிடம் ஊற வைத்து களைந்து, தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில், தேங்காய், அரிசி விழுதை சேர்த்து, பாலுடன் தண்ணீரை கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இடையிடையே கிளறிக் கொண்டே இருக்கவும்.

அரிசி நன்றாக வெந்ததும், வெல்லத்தை பொடித்து சேர்க்கவும். அரிசி வேகாவிட்டால், கொஞ்சமாக பால் சேர்க்கலாம். கொதித்து வந்ததும், ஏலக்காய் துாளுடன் முந்திரியையும், பொடியாக நறுக்கிய பலாச்சுளை துண்டுகளையும் நெய்யில் வறுத்து சேர்த்து, இறக்கவும்.

குறிப்பு:

பால், தேங்காய், வெல்லம், பலாச்சுளை சேர்த்த சுவையான இந்த பாயசம், தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும்.

பருப்பு வடை!


தேவையானவை:



துவரம் பருப்பு - 50
கிராம், கடலை பருப்பு - 100
கிராம், காய்ந்த மிளகாய் - 4,
பெருங்காய துாள்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
முட்டைக்கோஸ் துருவல் - ஒரு சிறிய கப்,
எண்ணெய் - 250 மில்லி,
மஞ்சள் துாள் - ஒரு சிட்டிகை,
தேவையான அளவு உப்பு.

செய்முறை:



துவரம் பருப்பையும், கடலை பருப்பையும் ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, உப்பு சேர்த்து கெட்டியாக கொர கொரப்பாக அரைக்கவும்.

அரைத்த மாவுடன் கோஸ் துருவல், பெருங்காய துாள், மஞ்சள் துாள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வடைகளாக தட்டி போட்டு, இருபுறமும் திருப்பி பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

வேப்பம்பூ பச்சடி!


தேவையானவை:



காய்ந்த வேப்பம்பூ - ஒரு கைப்பிடி,
பொடித்த வெல்லம் - ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
மாங்காய் - ஒரு துண்டு,
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
உப்பு - ஒரு சிட்டிகை.
தாளிப்பதற்கு, எண்ணெய், கடுகு - ஒரு தேக்கரண்டி.

செய்முறை:



வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு தாளிக்கவும்.

பின்னர், வேப்பம்பூவை சேர்த்து வறுத்து, புளியை கரைத்து ஊற்றி, மாங்காயை தோல் சீவி நறுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மாங்காய் வெந்ததும், வெல்லத்தை போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிச்சொற்கள் #தமிழ்ப்புத்தாண்டு #புத்தாண்டு #தமிழ்ப்_புத்தாண்டு

தினமலர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 11, 2023 1:10 am

தமிழ் மாதங்களின் பெயர்க் காரணம்  


ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி திதி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ, அதுவே அந்த மாதத்தின் பெயராக உள்ளது.

சித்திரை மாதத்தில், பவுர்ணமி, சித்திரை நட்சத்திரத்தில் வருவதால், சித்திரை என்ற பெயர் ஏற்பட்டது.

வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தில், பவுர்ணமி வருவதால், வைசாகம் என்ற பெயர் ஏற்பட்டு, வைகாசி என, மருவியது.

ஆனியில், அனுஷ நட்சத்திரத்தில், பவுர்ணமி வருவதால், ஆன்ஹி மாதம் என அழைக்கப்பட்டு, ஆனி மாதம் என்று மருவியது.


பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் என அழைக்கப்பட்டு, பூராடம் என, மருவிய நட்சத்திரத்தில், ஆடி மாத பவுர்ணமி வருகிறது. இம்மாதம், ஆஷாடம் என அழைக்கப்பட்டு, ஆடி என மருவியது.

ஆவணியில், சிரவணம் எனப்படும், திருவோணம் நட்சத்திரத்தில், பவுர்ணமி வரும். இந்த சிரவண மாதமே, ஆவணி என, தமிழில் கூறப்படுகிறது.

உத்திர ப்ரோஷ்டபதம் என்ற நட்சத்திரம், உத்திரட்டாதி ஆனது. புரட்டாசியில் இந்த நட்சத்திரத்தில், பவுர்ணமி வருவதால், ப்ரோஷ்டபதி மாதம் என்றாகி, புரட்டாசி என மருவியது.

அஸ்வினி நட்சத்திரத்தை, அசுவதி என்கிறோம். இந்த நட்சத்திரத்தில், பவுர்ணமி வருவதால், அசுவதி மாதம், ஐப்பசி ஆனது.

கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில், பவுர்ணமி வரும். எனவே, இம்மாதம், கார்த்திகை ஆயிற்று.

மார்கசீர்ஷி என்ற நட்சத்திரம், மிருகசீரிஷம் ஆனது. மார்கழி மாதத்தில் இந்த நட்சத்திரத்தில், பவுர்ணமி வருவதால், மார்கசீர்ஷி மாதம், மார்கழி ஆனது.

தைஷ்யம் என்ற நட்சத்திரம், புஷயம் என்றாகி, தமிழில், பூசம் ஆனது. தை மாதத்தில் தைஷ்யத்தில், பவுர்ணமி வருவதால், தை என அழைக்கப்படுகிறது.

மாகம் என்ற நட்சத்திரம், மகம் ஆனது. மாசியில் இந்த நட்சத்திரத்தில், பவுர்ணமி வருவதால், மாகம் என்பது, மாசி என, மாற்றம் பெற்றது.

பங்குனி மாதத்தில், பூர்வ பல்குணம், உத்திர பல்குணம் என்ற இரு நட்சத்திரங்களில், பவுர்ணமி வரும். இவை, பூரம் என்றும், உத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த நட்சத்திரங்களில், பவுர்ணமி வருவதால், பல்குண மாதம் என பெயர் பெற்று, பங்குனி எனத் திரிந்தது.

Dhivya Jegan இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 13, 2023 4:01 am


சித்திரை முதல் நாள் - புத்தாண்டு தினத்தில் விசேஷ வழிபாடுகள்


புதியது தொடங்கும்போது கடவுள் நினைவுடன் தொடங்குவதைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ளார்கள் நம் முன்னோர்கள். ஆகவேதான், மாதப் பிறப்பு வருடப் பிறப்பு தினங்களில் சிறப்பு வழிபாடுகளைச் செய்கிறோம்.

கடவுள்மீது நாம் நம்பிக்கை வைத்துவிட்டோ மானால், இந்த உலகத்தின் மீதும் நமது நம்பிக்கை பெருகும். உலகில் உள்ள அனைத்தையும், ஒரே பரம்பொருளாக நினைப்பதே ஆன்மிக வழியில் உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. இந்த நிலையை அடைய வழிபாடுகள் உதவும்.

வேதங்களும் ஆகமங்களும் குறிப்பிடும் பரம்பொருளின் தன்மை அனைத்திலும்மேலானது. அதுபற்றி அறியவேண்டுமெனில்,நமக்கு முன்ஜன்மத்தின் நல்வினைகள் இருந்தால்தான் முடியும். உலகுக்கெல்லாம் மூலகாரணமான அந்தப் பரம்பொருளை அடை வதற்கான வழிமுறைகளே பூஜைகளும் விரதங்களும்.

இதுபோன்ற வழிபாடுகளின் பலன் களை அனுபவித்தால்தான் அவற்றின் முக்கியத்துவத்தை நம்மால் உணரமுடியும்.

பலமுறை கடுமையாக முயற்சி செய்தும் கிடைக்காத மன ஒருமைப்பாடு, பூஜைகளாலும் வழிபாடு மற்றும் விரதங்களாலும் நமக்குக் கிடைக்கும். இவை, நம் உடம்புக்கும் உள்ளத்துக்கும் பலம் கொடுக்கக்கூடிய அருமருந்துகள் ஆகும். அவை, ஆன்மிக வழியில் நமக்கு முன்னேற்றத்தைத் தரும்.

சித்திரை முதல் நாளில் `விஷுக்கனி’ வழிபாடு


`மேஷ விஷூவ புண்ணிய காலம்’ என்று சிறப்பிப்பார்கள். சித்திரை மாதப் பிறப்பன்று காலையில் கண் விழித்தவுடன் பழங்கள், காய்கறிகள், குங்குமம், மஞ்சள், புஷ்பங்கள், ஆபரணங்கள் என்று மங்கலப் பொருள்களைப் பார்க்கிறோம். அதனால் அந்த ஆண்டு முழுவதும் சுபிட்சமாக இருக்கும். இந்த நாளை விஷுக்கனி என்றும் கூறுவர். சித்திரை விஷுக்கனி நாளில் சூரியனை வணங்கி, புத்தாடை உடுத்தி, முடிந்தால் குடை, நீர், கோதுமை உணவு போன்றவற்றைத் தானம் கொடுக்கலாம். உணவில் வேப்பம்பூ சேர்த்துக் கொள்வது நலம்.

வருடப் பிறப்பன்று சூரிய வழிபாடு முக்கியத்துவம் பெறுவது ஏன்?


நாம் நேரடியாகக் காணக்கூடிய கடவுள் யார் எனில், அது சூரிய பகவானே. இவ்வுலகம் இயங்குவதற்கு மூலமாக இருப்பவர் சூரிய பகவான். அதனால், வருடத்தில் எல்லா நாள்களிலும் சூரியனை வழிபட வேண்டும். சித்திரை மாதம் முதல் நாள் - வருடத் தொடக்கத்தில் வழிபடுவது இன்னும் விசேஷம்.

சித்திரை மாதத்தில் சூரியன் உச்சத்தைப் பெறுகிறார். எனவே சித்திரை முதல் தேதி சூரியனைச் சிறப்பாக வழிபடுவது நம் மரபு. சூரியன் ஒரு ராசிக்குள் பயணிக்கும் காலத்தையே மாதம் என்கிறோம்.

சூரியனைக் கொண்டுதானே நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை என்று அனைத்தையும் கணக்கிடுகிறோம். ஆக புத்தாண்டு தினத்தில் ஞாயிறு வழிபாடு அவசியமாகிறது.

சூரியதேவனை எப்படி வழிபடவேண்டும்?


ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம:

ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:

ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:

ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:

ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:

ஓம் அர்காய நம: ஓம் பாஸ்கராய நம’

- எனும் மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம்.

தினமும் காலையில் இப்படிப் பன்னிரு நமஸ்காரங்கள் செய்பவர்களுக்கு இந்தப் பிறப்பு மட்டுமன்றி, இனி எடுக்கிற ஒவ்வொரு பிறப்பிலும் செல்வச் செழிப்பில் எந்தக் குறையும் ஏற்படாது; நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும் என்கின்றன சாஸ்திரங்கள். ஆகவே, இதுபோன்ற மரபுகளைக் கடைப்பிடித்து நல் வாழ்வைப் பெற்ற நம் முன்னோரை உதாரண புருஷர்களாகக் கொண்டு நாமும் வாழ்ந்தால், நம் வாழ்க்கை மட்டுமன்றி நம் சந்ததியினரின் வாழ்க்கையும் சிறக்கும்!

புத்தாண்டு தினத்தில் வேறு எந்தெந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?


முழுமுதற் தெய்வமான விநாயகரை வழிபட்டு, புத்தாண்டை வரவேற்கலாம். அதேபோல் அன்றைய தினம் உங்களின் குல தெய்வம், இஷ்டதெய்வம் மற்றும் மறைந்த முன்னோரை வழிபட்டு அருள் பெறலாம். அதேபோல் அன்றைய தினம் குருவையும் போற்றி வணங்கி அவர்களின் ஆசியைப் பெறலாம். ‘கு’ எனில் இருட்டு; ‘ரு’ எனில் இருளைப் போக்குபவர் என்று சொல்வர். `குரு என்பவர், நமது அக இருளைப் போக்கி ஞானத்தை அளிப்பவர்’ என்கின்றன சாஸ்திரங்கள். முழு நம்பிக்கையுடன் தன்னைச் சரணடையும் சீடனுக்கு, தமது தவ வலிமையாலும் அன்பாலும் ஞானத்தை அருள்வார் குரு என்பதே சாஸ்திரங்களின் முடிவு.

குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது குறித்து ஞான நூல்கள் தரும் வழிகாட்டல்கள்


நம் குலத்தைக் காக்கும் சாமிகளே நம் குலதெய்வம் ஆகும். புத்தாண்டு தினத்தில் குடும்பத்துடன் சேர்ந்து குலதெய்வத்தைச் சரணடைந்து வழிபடுவதால் தடைகள் யாவும் நீங்கும். ‘ஓம் குலதேவதாப்யோ நம:’ என்ற மந்திரத்தைச் சொல்லி எளிய நைவேத்தியங்கள் சமர்ப்பித்து வழிபடலாம். பின்னர், கொஞ்சம் பிரசாதத்தை நீங்கள் உண்பதுடன், மற்றவர்களுக்கும் தானம் கொடுப்பது சிறப்பு. `இதனால் குலதெய்வத்தின் அனுக்கிரஹம் பரிபூரணமாகக் கிடைக்கும்; நீங்கள் எண்ணிய நற்காரியங்கள் யாவும் எண்ணியபடி நிறைவேறும்’ என்கின்றன ஞானநூல்கள்.

நமக்குப் பிடித்த இறைவனின் வடிவத்தை வழிபடுவதுதான் இஷ்டதெய்வ வழிபாடு. `ஏகம் சத் விப்ரா: பஹுதா வதந்தி’ என்பது வேத வாக்கு. பரம்பொருள் என்பது ஒன்றுதான். எனினும் ஞானியர் அதைப் பலவாறாகக் கூறுகிறார்கள். நாம் நமக்கு இஷ்டமான ஒரு செயலைச் செய்யும்போது, மிகவும் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்வோம். அதனால் நமக்குக் கிடைக்கக்கூடிய பலனும் சிறப்பாக இருக்கும். அப்படித்தான் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதும்கூட. இஷ்டதெய்வத்தை வழிபடும்போது, நம்முடைய மனம் வழிபாட்டில் ஆத்மார்த்தமாக ஈடுபடுகிறது. அதனால் நமக்கு உடனடியான பலனும் கிடைக்கிறது.

விநாயகர், முருகன், அம்பிகை என ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு தெய்வம் இஷ்டதெய்வமாக இருக்கலாம். வரும் சோபகிருது புத்தாண்டு தினத்தில். `எதிர்காலம் சிறக்க வேண்டும்' என்று மனதாரப் பிரார்த்தனை செய்து இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். எந்த தெய்வம் உங்களுக்கு இஷ்டமோ, அந்தத் தெய்வத்துக்கு ஏற்ற மலர்கள், நைவேத்தியங்களைச் சமர்ப்பித்து, உரிய துதிப்பாடல்களைப் பாடி வழிபடுங்கள்... உங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலகும்; நன்மைகள் நாடி வரும்.

T.N.Balasubramanian and Dhivya Jegan இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 13, 2023 8:12 pm

தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  103459460
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  3838410834
தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு  1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dhivya Jegan
Dhivya Jegan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 17/02/2023

PostDhivya Jegan Thu Apr 13, 2023 8:22 pm

சிவா wrote:

சித்திரை முதல் நாள் - புத்தாண்டு தினத்தில் விசேஷ வழிபாடுகள்


புதியது தொடங்கும்போது கடவுள் நினைவுடன் தொடங்குவதைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ளார்கள் நம் முன்னோர்கள். ஆகவேதான், மாதப் பிறப்பு வருடப் பிறப்பு தினங்களில் சிறப்பு வழிபாடுகளைச் செய்கிறோம்.

கடவுள்மீது நாம் நம்பிக்கை வைத்துவிட்டோ மானால், இந்த உலகத்தின் மீதும் நமது நம்பிக்கை பெருகும். உலகில் உள்ள அனைத்தையும், ஒரே பரம்பொருளாக நினைப்பதே ஆன்மிக வழியில் உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. இந்த நிலையை அடைய வழிபாடுகள் உதவும்.

வேதங்களும் ஆகமங்களும் குறிப்பிடும் பரம்பொருளின் தன்மை அனைத்திலும்மேலானது. அதுபற்றி அறியவேண்டுமெனில்,நமக்கு முன்ஜன்மத்தின் நல்வினைகள் இருந்தால்தான் முடியும். உலகுக்கெல்லாம் மூலகாரணமான அந்தப் பரம்பொருளை அடை வதற்கான வழிமுறைகளே பூஜைகளும் விரதங்களும்.

இதுபோன்ற வழிபாடுகளின் பலன் களை அனுபவித்தால்தான் அவற்றின் முக்கியத்துவத்தை நம்மால் உணரமுடியும்.

பலமுறை கடுமையாக முயற்சி செய்தும் கிடைக்காத மன ஒருமைப்பாடு, பூஜைகளாலும் வழிபாடு மற்றும் விரதங்களாலும் நமக்குக் கிடைக்கும். இவை, நம் உடம்புக்கும் உள்ளத்துக்கும் பலம் கொடுக்கக்கூடிய அருமருந்துகள் ஆகும். அவை, ஆன்மிக வழியில் நமக்கு முன்னேற்றத்தைத் தரும்.

சித்திரை முதல் நாளில் `விஷுக்கனி’ வழிபாடு


`மேஷ விஷூவ புண்ணிய காலம்’ என்று சிறப்பிப்பார்கள். சித்திரை மாதப் பிறப்பன்று காலையில் கண் விழித்தவுடன் பழங்கள், காய்கறிகள், குங்குமம், மஞ்சள், புஷ்பங்கள், ஆபரணங்கள் என்று மங்கலப் பொருள்களைப் பார்க்கிறோம். அதனால் அந்த ஆண்டு முழுவதும் சுபிட்சமாக இருக்கும். இந்த நாளை விஷுக்கனி என்றும் கூறுவர். சித்திரை விஷுக்கனி நாளில் சூரியனை வணங்கி, புத்தாடை உடுத்தி, முடிந்தால் குடை, நீர், கோதுமை உணவு போன்றவற்றைத் தானம் கொடுக்கலாம். உணவில் வேப்பம்பூ சேர்த்துக் கொள்வது நலம்.

வருடப் பிறப்பன்று சூரிய வழிபாடு முக்கியத்துவம் பெறுவது ஏன்?


நாம் நேரடியாகக் காணக்கூடிய கடவுள் யார் எனில், அது சூரிய பகவானே. இவ்வுலகம் இயங்குவதற்கு மூலமாக இருப்பவர் சூரிய பகவான். அதனால், வருடத்தில் எல்லா நாள்களிலும் சூரியனை வழிபட வேண்டும். சித்திரை மாதம் முதல் நாள் - வருடத் தொடக்கத்தில் வழிபடுவது இன்னும் விசேஷம்.

சித்திரை மாதத்தில் சூரியன் உச்சத்தைப் பெறுகிறார். எனவே சித்திரை முதல் தேதி சூரியனைச் சிறப்பாக வழிபடுவது நம் மரபு. சூரியன் ஒரு ராசிக்குள் பயணிக்கும் காலத்தையே மாதம் என்கிறோம்.

சூரியனைக் கொண்டுதானே நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை என்று அனைத்தையும் கணக்கிடுகிறோம். ஆக புத்தாண்டு தினத்தில் ஞாயிறு வழிபாடு அவசியமாகிறது.

சூரியதேவனை எப்படி வழிபடவேண்டும்?


ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம:

ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:

ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:

ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:

ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:

ஓம் அர்காய நம: ஓம் பாஸ்கராய நம’

- எனும் மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம்.

தினமும் காலையில் இப்படிப் பன்னிரு நமஸ்காரங்கள் செய்பவர்களுக்கு இந்தப் பிறப்பு மட்டுமன்றி, இனி எடுக்கிற ஒவ்வொரு பிறப்பிலும் செல்வச் செழிப்பில் எந்தக் குறையும் ஏற்படாது; நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும் என்கின்றன சாஸ்திரங்கள். ஆகவே, இதுபோன்ற மரபுகளைக் கடைப்பிடித்து நல் வாழ்வைப் பெற்ற நம் முன்னோரை உதாரண புருஷர்களாகக் கொண்டு நாமும் வாழ்ந்தால், நம் வாழ்க்கை மட்டுமன்றி நம் சந்ததியினரின் வாழ்க்கையும் சிறக்கும்!

புத்தாண்டு தினத்தில் வேறு எந்தெந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?


முழுமுதற் தெய்வமான விநாயகரை வழிபட்டு, புத்தாண்டை வரவேற்கலாம். அதேபோல் அன்றைய தினம் உங்களின் குல தெய்வம், இஷ்டதெய்வம் மற்றும் மறைந்த முன்னோரை வழிபட்டு அருள் பெறலாம். அதேபோல் அன்றைய தினம் குருவையும் போற்றி வணங்கி அவர்களின் ஆசியைப் பெறலாம். ‘கு’ எனில் இருட்டு; ‘ரு’ எனில் இருளைப் போக்குபவர் என்று சொல்வர். `குரு என்பவர், நமது அக இருளைப் போக்கி ஞானத்தை அளிப்பவர்’ என்கின்றன சாஸ்திரங்கள். முழு நம்பிக்கையுடன் தன்னைச் சரணடையும் சீடனுக்கு, தமது தவ வலிமையாலும் அன்பாலும் ஞானத்தை அருள்வார் குரு என்பதே சாஸ்திரங்களின் முடிவு.

குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது குறித்து ஞான நூல்கள் தரும் வழிகாட்டல்கள்


நம் குலத்தைக் காக்கும் சாமிகளே நம் குலதெய்வம் ஆகும். புத்தாண்டு தினத்தில் குடும்பத்துடன் சேர்ந்து குலதெய்வத்தைச் சரணடைந்து வழிபடுவதால் தடைகள் யாவும் நீங்கும். ‘ஓம் குலதேவதாப்யோ நம:’ என்ற மந்திரத்தைச் சொல்லி எளிய நைவேத்தியங்கள் சமர்ப்பித்து வழிபடலாம். பின்னர், கொஞ்சம் பிரசாதத்தை நீங்கள் உண்பதுடன், மற்றவர்களுக்கும் தானம் கொடுப்பது சிறப்பு. `இதனால் குலதெய்வத்தின் அனுக்கிரஹம் பரிபூரணமாகக் கிடைக்கும்; நீங்கள் எண்ணிய நற்காரியங்கள் யாவும் எண்ணியபடி நிறைவேறும்’ என்கின்றன ஞானநூல்கள்.

நமக்குப் பிடித்த இறைவனின் வடிவத்தை வழிபடுவதுதான் இஷ்டதெய்வ வழிபாடு. `ஏகம் சத் விப்ரா: பஹுதா வதந்தி’ என்பது வேத வாக்கு. பரம்பொருள் என்பது ஒன்றுதான். எனினும் ஞானியர் அதைப் பலவாறாகக் கூறுகிறார்கள். நாம் நமக்கு இஷ்டமான ஒரு செயலைச் செய்யும்போது, மிகவும் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்வோம். அதனால் நமக்குக் கிடைக்கக்கூடிய பலனும் சிறப்பாக இருக்கும். அப்படித்தான் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதும்கூட. இஷ்டதெய்வத்தை வழிபடும்போது, நம்முடைய மனம் வழிபாட்டில் ஆத்மார்த்தமாக ஈடுபடுகிறது. அதனால் நமக்கு உடனடியான பலனும் கிடைக்கிறது.

விநாயகர், முருகன், அம்பிகை என ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு தெய்வம் இஷ்டதெய்வமாக இருக்கலாம். வரும் சோபகிருது புத்தாண்டு தினத்தில். `எதிர்காலம் சிறக்க வேண்டும்' என்று மனதாரப் பிரார்த்தனை செய்து இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். எந்த தெய்வம் உங்களுக்கு இஷ்டமோ, அந்தத் தெய்வத்துக்கு ஏற்ற மலர்கள், நைவேத்தியங்களைச் சமர்ப்பித்து, உரிய துதிப்பாடல்களைப் பாடி வழிபடுங்கள்... உங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலகும்; நன்மைகள் நாடி வரும்.
மேற்கோள் செய்த பதிவு: undefined


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா


சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக