புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Poll_c10ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Poll_m10ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Poll_c10ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Poll_m10ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Poll_c10 
2 Posts - 6%
heezulia
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Poll_c10ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Poll_m10ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Poll_c10ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Poll_m10ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 10, 2023 8:26 pm

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Gallerye_160604924_3290033.jpg?w=640&dpr=1

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஆளுனர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து, தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19- ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்தார். இதனையடுத்து ஆளும் கட்சி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுரை வலியுறுத்தின. இந்தநிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6- ஆம் தேதி, சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி, கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கடந்த 23-ம் தேதி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.

இந்தநிலையில், 2 ஆவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா கவர்னருக்கு அனுப்பப்பட்ட நிலையில் மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார் என்றால், அதற்கு நிராகரிக்கப்பட்டது என்று பொருள் என ஆர்.என்.ரவி அண்மையில் பேசியிருந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். சட்டப்பேரவையில் கவர்னருக்கு எதிராக முதலமைச்சர் தனி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கவர்னரின் ஒப்புதலை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் தடைச்சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. சட்டத்தின்படி ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனையுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 10, 2023 8:33 pm

கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்


ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; தமிழக ஆளுனர் ஒப்புதல் Tamil_News_large_329000620230410150019.jpg?w=640&dpr=1

சென்னை: சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க கவர்னருக்கு, ஜனாதிபதியும், மத்திய அரசும் அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் அரசின் தனித்தீர்மானம் சட்டசபையில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கவர்னர் மீது தாக்குதல் கணைகளை தொடுத்தார். அரசியல்வாதியாக பேசுகிறார். தமிழக அரசுக்கு எதிராக பேசுகிறார் என குற்றம் சாட்டினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னரின் பணிகள் குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து கவர்னர் ரவி கூறும்போது, சட்டசபை அதிகாரம் முதல் ஸ்டெர்லைட் ஆலை வரை தெரிவித்த பல கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தீர்மானம்


இந்நிலையில், கவர்னரின் செயல்பாடு தொடர்பாக அரசு சார்பில் தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. கவர்னர் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்கக்கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின் ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தில், சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், ஜனாதிபதியையும் வலியுறுத்தும் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அரசியல்வாதியாக பேசுவதா ?


இந்த தீர்மானத்தை முன்மொழித்து ஸ்டாலின் பேசியதாவது: மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு.மக்கள் நலனுக்கு கொண்டு வரும் மசோதாக்களை கிடப்பில் போடுவதால் வருத்தம் ஏற்படுகிறது. நாட்டுக்கு கவர்னர் தேவையில்லை என்ற போதும், பதவிக்கான மரியாதையை கொடுக்க தவறவில்லை. மக்களுக்கும் அரசுக்கும் வழிகாட்டியாக, நண்பராக கவர்னர் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அரசியல் கட்சி கண்ணோட்டத்தில் செயல்பட்டு வருகிறார். கவர்னர் என்ற நிலையை தாண்டி அரசியல்வாதியாக பேசுகிறார். தமிழக அரசுக்கு எதிராக பேசுவதை நோக்கமாக கொண்டுள்ளார். கவர்னர் பற்றற்ற அடையாளம் உள்ளவராக இருக்க வேண்டும்.

சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். கவர்னர் என்ற நிலை மாறி அரசியல்வாதியாக கவர்னர் பேசுகிறார். தமிழக மக்களின் நலனுக்கு குறுக்கே நிற்கிறார். மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார். சட்டசபையை அவமதிக்கிறார். வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக உள்ளார். ராஜ்பவனை அரசியல்பவனாக மாற்றி வருகிறார். கவர்னரின் தனிப்பட்ட செயல்பாடுகளை தான் விமர்சிக்கிறோம்.

வேடிக்கை பார்க்க மாட்டோம்


கவர்னர் பேசி வந்த கருத்துகளுக்கு பதிலுக்கு பதில் சொல்ல சட்டசபையை அரசியல்மன்றமாக மாற்ற விரும்பவில்லை. சட்டசபைக்கு அரசியல்நோக்கத்தோடு இடைஞ்சல் கொடுக்க நினைத்தால், வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம். கவர்னர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.

மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட காலக்கெடு வழங்க ஜனாதிபதி, மத்திய அரசுயை வலியுறுத்துவது என்றும், சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு உரிய அறிவுரைகளை, ஜனாதிபதியும் , மத்திய அரசும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

நிறைவேற்றம்

தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்கள் பேசியதை தொடர்ந்து அரசின் தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது.

அதிமுக வெளிநடப்பு


சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என தெரிவித்தும், சபாநாயகர் கண்டுகொள்ளவில்லை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசுவது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதை கண்டித்தும் அ.தி.மு.க., வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி தலைவர் பேசுவது நேரடி ஒளிபரப்பு செய்வது இல்லை. முதல்வர், அமைச்சர்கள் பேசுவது மட்டும் தான் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினர்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக