புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாந்தி - Vomiting Poll_c10வாந்தி - Vomiting Poll_m10வாந்தி - Vomiting Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
வாந்தி - Vomiting Poll_c10வாந்தி - Vomiting Poll_m10வாந்தி - Vomiting Poll_c10 
3 Posts - 7%
heezulia
வாந்தி - Vomiting Poll_c10வாந்தி - Vomiting Poll_m10வாந்தி - Vomiting Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
வாந்தி - Vomiting Poll_c10வாந்தி - Vomiting Poll_m10வாந்தி - Vomiting Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வாந்தி - Vomiting Poll_c10வாந்தி - Vomiting Poll_m10வாந்தி - Vomiting Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாந்தி - Vomiting Poll_c10வாந்தி - Vomiting Poll_m10வாந்தி - Vomiting Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
வாந்தி - Vomiting Poll_c10வாந்தி - Vomiting Poll_m10வாந்தி - Vomiting Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வாந்தி - Vomiting Poll_c10வாந்தி - Vomiting Poll_m10வாந்தி - Vomiting Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வாந்தி - Vomiting Poll_c10வாந்தி - Vomiting Poll_m10வாந்தி - Vomiting Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாந்தி - Vomiting


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 11:48 pm

வாந்தி - Vomiting VQY0dUr

நம் வாழ்நாளில் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் ஒரு உபாதை வாந்தியாகும். இந்த #வாந்தி பொதுவாக ஒரு அறிகுறியாக மட்டுமே இருந்தாலும் பல நேரங்களில் நோயாகவும் உருவாகலாம். பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், குழந்தைகளுக்கு சளி அதிகமாக பிடித்திருந்தாலும், பலருக்கு உண்ட உணவு செரிக்காவிட்டாலும், சிலருக்கு அதிகமாக சாப்பிடுவதாலும் அல்லது சிலருக்கு சாப்பிடாமலே இருப்பதாலும், காரமான உணவுகளை உட்கொண்டு வந்தாலும், தரமற்ற கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் வாந்தி ஏற்படலாம்.

சில சமயங்களில் துர்நாற்றங்களை நுகர்வதாலும், சிலருக்கு பெரிய நோய்கள் இருக்கும்போதும், புற்றுநோய் போன்ற நோய்களாலும் அதற்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளாலும் கூட வாந்தி வரலாம். ஏன், ஒரு சிலருக்கு ஒவ்வாமையால் கூட வாந்தி ஏற்படலாம்.

வேறு சிலருக்கு வயிற்று வலி கூட வாந்தி ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் மன அழுத்தம், பித்தப்பை நோய்கள், மண்ணீரல் மற்றும் கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை, அநேக நோய்த்தொற்றுகள், குடல் அடைப்பு, கல்லடைப்பு, அதிக மதுபானம், மூளையில் அடிபடுதல்/ கட்டி / பாதிப்பு போன்ற சந்தர்ப்பங்களில் கூட அடிக்கடி வாந்தி ஏற்படலாம். ஒரு சிலர் வாட்டம் சாட்டமாக இருப்பர். ஆனால், பயணம் செய்தாலே அவர்களுக்கு வாந்தி ஏற்படும். இதன் காரணமாகவே ‘இஞ்சி மரப்பா’ பேருந்து நிலையங்களில் விற்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தி…கர்ப்ப காலத்தில் ஒரு சிலருக்கு முதல் மூன்று மாதங்கள் வாந்தி, மயக்கம் போன்றவை உண்டாகும். சாப்பிடுவதில் ஆர்வம் இருக்காது. ஒரு சிலருக்கு இந்த அனுபவம் முதல் 5 மாதங்கள் வரைகூட இருக்கலாம். இது காலையில் மட்டும் இல்லாமல் முழுநேரமும் ஏற்பட்டு சத்து குறைபாடு ஏற்படலாம். இதற்கான சிகிச்சை பற்றி கர்ப்பகால நோய்கள் தலைப்பில் கூறியிருந்தேன்.

நோயா, அறிகுறியா?


வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் வாந்தி என்பது ஒரு அறிகுறியாக மட்டும் பார்க்கப்படாமல் ஒரு தனித்த நோயாகவும் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் வாந்தி ஒரு நோயாகவும் அல்லது பல நோய்களின் அறிகுறியாகவும் வரலாம். எதுவாக இருந்தாலும் வாந்தி என்பது ஒரு சாதாரண அறிகுறியிலிருந்து ஒரு அபாய அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம். அத்தகைய சமயங்களில் அடிக்கடி வரும் வாந்திகளை நாம் ஒரு அபாய எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அதற்கு காரணம் என்னவென்று அறிந்து அதற்கு தக்க சிகிச்சையை தக்க நேரத்தில் செய்து கொள்வது முக்கியமாகும்.

மேலும் ஆயுர்வேதத்தின் பஞ்சகர்மா முறைப்படி வாந்தி, ஒரு சுத்திகரிப்பு முறையாகவும் பார்க்கப்படுகிறது. சமகால அறிவியல், நம் உடலுக்கு சேராத, தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை உட்கொள்ளும் போது நமது மூளை தன்னிச்சையாக செயல்பட்டு அப்பொருட்களை வெளியேற்றவே வாந்தியை உருவாக்குகிறது என்று கூறுகிறது. இதையே ஒரு மருத்துவ சுத்திகரிப்பு முறையாக ஆயுர்வேத மருத்துவம் 3000 வருடங்களுக்கு முன்னரே உணர்ந்து வாந்தியை ஒரு மருத்துவ முறையாக கருதி பஞ்சகர்மா உடல் சுத்தி முறைகளில் வாந்தி எடுக்கச் செய்வதை ஒரு முக்கியமான சுத்திகரிப்பு முறையாகவும் அதற்கு தக்க கோட்பாடுகளையும் மருந்துகளையும் கூறியுள்ளது.

இந்த காரணங்களில் தொடர்பு இல்லாமல் அடிக்கடி வாந்தி எடுப்பது சிலருக்கு வழக்கமாக இருக்கும். இதற்கு சுழற்சி (recurrent) வாந்தி என்று சமகால மருத்துவம் கூறுகிறது. இந்த நிலை 10 நாட்கள் வரை இருக்கலாம். இது பொதுவாக குமட்டலுடன் சேர்ந்தே வருகிறது. இது முக்கியமாக குழந்தை பருவத்தில் அடிக்கடி வருவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

குமட்டல்…


பல நேரங்களில் வாந்திக்கு முன் குமட்டல் ஏற்படும். குமட்டல் என்பது வயிற்றில் ஏற்படும் ஒரு அசௌகரியம். இது வாந்தி எடுக்கும் உணர்வையும், பின் வாந்தியையும் ஏற்படுத்துகிறது. குமட்டலின் அறிகுறிகளாக வாயில் எச்சில் ஊறுவது, வயிற்றை புரட்டி போடுவது, புளித்த ஏப்பம் போன்றவை பொதுவாக வரும்.

வாந்தியின் விளைவுகள்…


பெரும்பாலும் வயிற்றில் ஏதேனும் நச்சுப் பொருள்கள் இருந்தால் அதை வெளியேற்ற ஒரு முறை அல்லது இருமுறை வாந்தி வருவது இயல்பு. ஆனால் ஒரு நாளில் ஐந்து அல்லது ஆறு முறைக்கு மேல் வந்தால் அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்க கூடும். இதனால் உடலில் உள்ள நீர் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்து, தலைசுற்றல் மற்றும் மயக்கம் கூட ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இது ஆபத்து.

வாந்தி திரவம் எவ்வாறு இருக்கும்?


*ரத்தக் கோடுகள் அல்லது ரத்தம் தோய்ந்த வாந்தி பொதுவாக உணவுக்குழாய் அல்லது வயிற்றில் ரத்த கசிவை அல்லது கீரலைக் குறிக்கும்.

*சில வாந்திகள் காபியை ஒத்திருக்கும். வயிற்றில் உள்ள அமிலங்களும் ரத்தமும் சேர்ந்து இவ்வாறு இருக்கும்.

*மஞ்சள் வாந்தி பித்தத்தின் இருப்பைக் குறிக்கிறது, இது பொதுவாக உணவுக்குப் பிறகு நடக்கும்.

*குடல் அடைப்பு மற்றும் குடல் செயல்பாடுகளில் பிரச்சனை உள்ளவர்கள், ஓரளவு செரிமானம் செய்யப்பட்ட உணவு அல்லது மிகவும் அரிதாக, மலத்தைக்கூட வாந்தியாக எடுக்கலாம்.

வாந்தியுடன் ஏற்படும் பொதுவான மற்ற அறிகுறிகள்…


*குமட்டல்
*வயிற்று வலி, வயிற்றுப்போக்கு
*லேசான தலைவலி, தலைசுற்றல் (வெர்டிகோ)
*காய்ச்சல்
*விரைவான இதய துடிப்பு, அதிக வியர்வை
*வறண்ட வாய், நெஞ்சு வலி
*மயக்கம், குழப்பம்
*அதிக தூக்கம்

மன அழுத்தத்தால் ஏற்படும் வாந்தி…


இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி படிக்கும் பிஞ்சு குழந்தைகள் கூட மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து மீள்வதற்குள், அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து சுமையாக இறங்கும்போது, ‘ஸ்ட்ரெஸ்’ என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இப்படி மன அழுத்தம் அடுத்தடுத்து அழுத்தும் போது உடல் சார்ந்த பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. மன அழுத்தம் அதிகரிக்கும் போது வாந்தி, மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்சனைகளும் வரலாம்.

உடற்பயிற்சி, தியானம், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவற்றை மேற்கொண்டு மன அழுத்தத்தினால் உருவாகக்கூடிய குமட்டல் மற்றும் வாந்தியை தடுக்கலாம்.

பயணத்தினால் வரும் வாந்தி…


உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு பயணம் செய்யும் பொழுது, பயணம் ஒவ்வாத உடல்நலக் குறைவு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். ஆட்டம், குலுக்கல் நிறைந்த பயணங்கள் சிலரை மிகவும் பாதிக்கும். இப்பாதிப்பு கப்பல், ஊர்திகள், விமானப் பயணங்களிலும் ஏற்படும். இவ்வாறு பயணங்கள் மட்டும் அல்லாது இராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டிலும், வேகமாக பயணிக்கும் திரைப்படக் காட்சிகளைக் காண்பதிலும் கூடப் பயணப்பிணி உடல்நலக் குறைவு ஏற்படுவதுண்டு. இதில் முக்கியமாக அவர்களுக்கு வரும் அறிகுறி வாந்தி.

மூளைக்குக் குழப்பம் தரும் இயக்கம் நின்று போனாலும், அல்லது நாம் அதைத் தவிர்க்கும் பொழுதும் பயணப்பிணி நிலைமை பெரும்பாலும் மாறிவிடும். மேலும் இதை தவிர்க்க, பயணிக்கும் பொழுது தொடுவானத்தில் பார்வையை நிலை நிறுத்தவும், அல்லது பயணம் செல்வதற்கு எதிர்திசையை நோக்கி அமர்ந்து பயணிப்பதையும் தவிர்க்கலாம். பிரயாணம் செய்யுமுன் உணவு அருந்துவதையும் அல்லது மிகவும் லகுவான உணவை மூன்று மணி நேரம் முன்னரே எடுத்துக்கொள்வதையும் பின்பற்றலாம். மேலும் பயணங்களில் இஞ்சியை மெல்லுவது இப்பிரச்சனையை கட்டுப்படுத்தும். பேருந்து நிலையங்களில் இன்றளவிலும் ‘இஞ்சி மரப்பா’ விற்கப்படும் காரணமும் இதனால்தான்.

சிகிச்சை முறைகள்…


*வாந்தியை நிறுத்துவதற்கு முதலில் நாம் வாந்திக்கான காரணங்களை தவிர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக மக்கள் கூட்டம் நிரம்பிய மற்றும் இறுக்கமான இடங்களில் இருப்பது, அல்லது அடைத்த சூழ்நிலைகள் குமட்டல் மற்றும் வாந்தியை அதிகரிக்கலாம். எனவே, சில நிமிடங்களுக்கு அறையை விட்டு வெளியேறி புதிய காற்றை பல முறை சுவாசிப்பது வாந்தியை குறைக்கும்.

*நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய ஏலக்காய் தண்ணீர், சோம்பு நீர், எலுமிச்சை சாறு, இஞ்சி நீர் மற்றும் கிராம்பு துண்டை வாயில் போட்டு சப்புவது போன்ற முறைகள் மூலம் நாம் வாந்தியை குறைக்கலாம்.

*ஆயுர்வேதத்தின்படி வாந்திக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் செரிமானக்குறைவு ஒரு காரணமாக இருப்பதால் உண்ணாவிரதம் மட்டுமே ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கும். பின்னர் செரிக்க எளிமையான உணவுவை சிறிது சிறிதாக எடுத்துக்கொள்ள மெதுவாக செரிமானமாகி வாந்தி நின்று விடும்.

*திராட்சாதி கசாயம், திராக்ஷாதி சூரணம், பாலசத்தூர்பத்ரிக சூரணம், திரிக்கடு சூரணம், இங்வாஷ்டக சூரணம், வில்வாதி லேகியம், சிவ குடிகா, மயூரா பிச்ச பஸ்மம், பிரபல பஸ்மம் போன்ற மருந்துகளை தகுதி வாய்ந்த ஆயுர்வேத பட்டதாரி மருத்துவரை அணுகி நோய் காரணத்தை முழுமையாக அறிந்துகொண்டு அவரின் அறிவுரையின் அடிப்படையில் பயன்படுத்த நல்ல பலன் காணலாம்.

*மேலும் சர்பிகுடம், கல்யாணக க்ருதம், ஜீவணீய க்ருதம், த்ரயுஷ்ன க்ருதம் ஆகிய ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளலாம். இது வாந்தியை கட்டுப்படுத்த உதவும்.

வாந்தியை தடுப்பது எப்படி?


*பசித்து புசி என்கிற பழமொழியின் வழியில் பசி எடுத்த பின்னரே உணவு உட்கொள்வது அவசியம்.

*உணவு செரிமானத்தில் பிரச்சனை இருந்தால் உண்ணாவிரதம் இருந்து அடிக்கடி வெந்நீர் பருகி, பசி வந்த பிறகு சூப்புகளில் ஆரம்பித்து பின்னர் மெதுவாக உணவுகள் பக்கம் போவது நல்லது.

*உணவு அருந்தும் போது உணவில் கவனம் செலுத்தி நன்கு மென்று பின் உணவை விழுங்குவது சாலச்சிறந்தது.

*வறுத்த மற்றும் காரமான உணவுகளை தவிர்ப்பது அவசியம்.

*சாப்பிடாமல் வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருக்க வேண்டாம்.

*உணவு சாப்பிட்ட பிறகு குறுநடையோ அல்லது லேசான சில உடற்பயிற்சிகளோ செய்யலாம்.

நன்றி குங்குமம் தோழி


கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக