புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
6 Posts - 60%
Dr.S.Soundarapandian
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
2 Posts - 20%
heezulia
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
1 Post - 10%
Ammu Swarnalatha
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
372 Posts - 49%
heezulia
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
25 Posts - 3%
prajai
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பெருஞ்சீரகம் Poll_c10பெருஞ்சீரகம் Poll_m10பெருஞ்சீரகம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருஞ்சீரகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 8:26 pm

பெருஞ்சீரகம் Fennel-seeds-benefits

உணவே மருந்து என்னும் நமது பாரம்பரிய சமையல் முறையில் எந்த ஒரு உணவிலும் வாசனைக்காகவே சில பொருட்கள் சேர்க்கப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட பொருட்கள் மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் இருக்கும். வாசனைக்காக சேர்க்கப்படும் பொருட்கள் என்றாலும் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலில் இருக்கும் பல வித நோய்களுக்கு தீர்வாக இருக்கும் திறன் கொண்டவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட திறனுள்ள ஒரு பொருள் தான் நம் வீட்டு சமையலறையில் தவறாமல் இடம்பெற்றிருக்கும் சோம்பு என்றழைக்கப்படும் பெருஞ்சீரகம். பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் அதேசமயம் இதை அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி பார்க்கலாம். முதலில் பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்:

பயன்கள்:


சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் நெஞ்செரிச்சல் ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு வாயு தொல்லை, வயிற்று உப்பசம் போன்ற கோளாறுகளும் ஏற்படும். அந்த நேரங்களில் சிறிதளவு சோம்பை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து விட்டு, பின் மிதமான சூட்டில் அந்த சோம்பு நீரை ஒரு டம்ளர் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

காலநிலை மாறும்போது ஆஸ்துமா நோய்வாய்பட்டவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே குளிர் அல்லது மழை காலத்தில் தினமும் சிறிது பெருஞ்சீரகத்தை மென்று தின்று, சிறிது வெண்ணீரை குடித்தால் சுவாச பிரச்சனை சீராகும். சோம்பில் உள்ள இரும்புசத்து மற்றும் வைட்டமின் C உடலின் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. கண்பார்வை சக்தியை அதிகப்படுத்தும் திறனும், உயர்ரத்த அழுத்தத்தை குறைத்து சீர்படுத்தும் திறனும், சிறுநீரை சுத்தப்படுத்தும் திறனும், தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. இது மலச்சிக்கலை போக்கவல்லது.

இரைப்பை பிரச்னை, மாதவிடாய்க்கோளாறு, செரிமானக் கோளாறுகள், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணி பிரச்சனை, பெருங்குடல் கோளாறுகள் உள்ளிட்ட இன்னும் பலவற்றுக்கு பெருஞ்சீரக டீ நன்மை தர கூடியது. இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அசைவ உணவுகள் சாப்பிட்ட பின் சிலருக்கு உள்ள உடல்நல குறைபாடுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் எப்போது சாப்பிட்டு முடித்தாலும் சிறிது பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும். மேலும் பற்களில் கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும்.

பக்க விளைவுகள்:


அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதற்காக அதிகப்படியான அளவு பெருஞ்சீரகம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து தற்போது பார்க்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பிணிப் பெண்கள் பெருஞ்சீரகத்தை அதிகம் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் பெருஞ்சீரகம் கருப்பைச் சுருக்கங்களைத் தூண்டும் தன்மை உடையதால் முன்கூட்டியே பிரசவம் ஆகும் நிலை ஏற்பட்டு விடும்.

நாம் முன் கூறியபடி சுவாச பிரச்சனை உள்ளவர்கள் பெருஞ்சீரகம் பயன்படுத்தலாம். ஆனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே எப்போதும் அவர்கள் சிறிதளவே பயன்படுத்த வேண்டும். இன்னும் சிலருக்கு தொடர்பு தோல் அழற்சி என்ற ஒரு வகை தோல் நோய்த்தொற்று பெருஞ்சீரகம் எடுத்துக்கொள்வதால் வரலாம். தோல் அழற்சி மற்றும் கொப்புளங்கள் இதன் அறிகுறி. அதிகப்படியான பெருஞ்சீரகம் அல்லது பெருஞ்சீரகஎண்ணெய் நுகர்வு காரணமாக இந்த அலர்ஜி வரலாம்.

முக்கியமாக நீங்கள் ஏற்கனவே கால்-கை வலிப்புக்காகவும், நரம்பு பிரச்சனைக்காகவும் சில மருந்துகள் எடுத்து கொண்டிருப்பின் பெருஞ்சீரகத்தை அறவே தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அவை நிலைமையை மோசமாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளவர்கள் , சோம்பினை உணவில் மட்டும் பயன்படுத்தலாம் அதிகப்படியான சோம்பு சேர்த்து கொள்வதால் சிறுநீரகம் மேலும் பாதிப்படைய வாய்ப்பு அதிகம்.

#பெருஞ்சீரகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 8:28 pm

பெருஞ்சீரகம் விதைகளுக்கும், சீரக விதைகளுக்கும் இடையே என்ன வித்தியாசம்?


பெருஞ்சீரக விதைகள் இனிமையான அதிமதுரம் சுவையை கொண்டிருக்கும். சீரக விதைகள் ஒருவித நறுமண வாசனையை கொண்டிருக்கும். பெருஞ்சீரகத்துடன் ஒப்பிடும்போது சற்று கசப்பு தன்மை கொண்டிருக்கும். மேலும் பெருஞ்சீரகம் விதைகள் பச்சை நிறத்தில் காணப்படும். சீரகம் பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். சிலருக்கு இரண்டும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருப்பது போல் தெரியும். சீரகத்தை விட பெருஞ்சீரகம் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே அறுவடை செய்யப்படுவதால் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. சீரக விதைகள் நன்றாக உலர வைக்கப்படுவதால் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

அளவில் வேறுபாடு



இரண்டின் தோற்றமும், வடிவமும் ஒரே மாதிரியாக தெரியலாம். ஆனால் அளவு அடிப்படையில் அடையாளம் காண்பது எளிதானது. பெருஞ்சீரக விதைகளை விட சீரகம் சிறியதாகவும், மெல்லியதாகவும் இருக்கும். இரண்டையும் ஒன்றாக வைத்து பார்த்தால் எளிதாக வேறு படுத்தி விடலாம். சீரகம், பெருஞ்சீரகம் இரண்டும் 0.2 மி.மீ. முதல் 0.3 மி.மீ. வரையே இருக்கும்.

சுவையில் வேறுபாடு



பெருஞ்சீரகம் விதைகள் சீரக விதைகளை விட இனிப்பு சுவை கொண்டவை. இந்த இனிப்பு சுவை வாய் புத்துணர்ச்சிக்கு ஏற்றதாக அமையும். பல நூற்றாண்டுகளாக வாய் புத் துணர்ச்சிக்காக பெருஞ்சீரகம் பயன்படுத்தப் படுவது குறிப்பிடத்தக்கது.

சீரகம் பெரும்பாலும் குழம்புக்கு பயன்படுத்தப்படும் பொதுவான மசாலா பொருளாகும். மேலும் சீரகத்தில் மிளகு போன்ற கசப்பு சுவை சிறிது வெளிப்படும். பெருஞ்சீரகமோ சற்று இனிப்பான சுவை மூலம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். இரண்டையும் அப்படியே கூட சாப்பிடலாம். எனினும் பெருஞ்சீரகம்தான் பெரும்பாலும் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. சீரகம் வேகவைத்தே உட்கொள்ளப்படுகிறது.

வாசனையில் வேறுபாடு



பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் இரண்டும் நறுமணத்தில் வேறுபடுகின்றன. சீரக விதையின் மணம் காரமான குழம்பு வகைகளுக்கு மிகவும் ஏற்றது. அதேசமயம் பெருஞ்சீரகம் விதையின் நறுமணம் புத்துணர்ச்சிக்கு ஏற்றது. இதன் இலைகள் மற்றும் தண்டுகள் கூட இனிமையான நறுமணத்தை கொண்டவை. அவை சாலட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

பயன்களில் வேறுபாடு



பெருஞ்சீரகம், சீரகம் இவை இரண்டுமே உலகம் முழுவதும் பிரபலமான மசாலாப் பொருட்களாகும். பெருஞ்சீரகம் இயற்கையாகவே நறுமணத்தை பரப்பு வதால் அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் வாசனை திரவியத்தில் சேர்க்கப்படுகிறது. பல அத்தியாவசிய எண்ணெய்களில் இந்த மசாலாப் பொருட்கள் இரண்டுமே இடம்பெற்று உள்ளன. பெருஞ்சீரகம் இனிப்பு உணவுகளிலும், சீரகம் காரமான குழம்புகளிலும் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

சீரக விதைகளுக்கு மாற்றாக பெருஞ்சீரகம் விதைகளை பயன்படுத்தலாமா?



முடியாது. ஏனெனில் இந்த இரண்டு மசாலாப் பொருட்களும் வெவ்வேறு சுவைகள் கொண்டுள்ளன. அவற்றின் வாசனையும் கூட மிகவும் வித்தியாசமானது. இரண்டின் சுவையும், பயன்பாடும் வேறுபடுவதால் ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்றை கருதமுடியாது.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 8:28 pm


கோடை காலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிரவைக்கும் உணவுப் பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகிறோம். அதுதான் பெருஞ்சீரகம். இதனை பயன்படுத்தி கோடை காலத்தில் புத்துணர்வூட்டும் பானங்களை தயார் செய்து பருகலாம்.

செலினியம், துத்தநாகம் போன்ற முக்கிய கனிமங்கள் இதில் நிரம்பி இருக்கிறது. அதனால் ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதிலும், மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதிலும் பெருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டிஸ்ப்ராஸ்மோடிக் என்னும் வேதிப்பொருள் மாதவிடாய் கோளாறுகளை சீரமைக்க உதவுகிறது. வழக்கமாக பருகும் டீ, காபிக்கு பதிலாக பெருஞ்சீரக டீ பருகலாம். இது கோடை காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் வயிறு உபாதை சார்ந்த பிரச்சினைகளையும் போக்கும்.

சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை மெல்வது வாய்க்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

பல்வேறு உணவுகள், பானங்களில் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்துக்கொள்ளலாம். கோடை காலத்தில் பாலுடன் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்து பருகி வர, பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

பெருஞ்சீரகத்தை நீரில் காய்ச்சியும் பருகி வரலாம். இது இரைப்பை பிரச்சினைகளை தடுத்து செரிமானத்தை மேம்படுத்தும். காலை பொழுதை உற்சாகத்துடன் தொடங்குவதற்கும் வழிவகுக்கும். அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி சிறுதீயில் கொதிக்க விடவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகத்தை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். அந்த நீரை வடிகட்டி குளிரவைத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். தினமும் 2 கப் பருகுவது நல்ல பலனை கொடுக்கும். கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்தும் பருகி வரலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக