புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_m10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10 
10 Posts - 56%
heezulia
மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_m10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_m10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_m10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_m10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10 
10 Posts - 56%
heezulia
மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_m10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_m10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_m10மூக்கடைப்பு  - Nasal Congestion Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கடைப்பு - Nasal Congestion


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 13, 2023 7:34 pm

மூக்கடைப்பு  - Nasal Congestion Picsar34

சுவாசித்தல், மனித வாழ்வின் ஆதாரமாக விளங்குகிறது. இது ஆரோக்கியத்தின் மிக முக்கியமான அம்சம். சுவாசப்பாதைகளில் வரும் அடைப்பு நம் அன்றாட வாழ்க்கை முறையில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஆகையால், அதனை விரைந்து கவனித்து சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம்.நம்மில் சிலருக்கு ஒரு நிரந்தர பிரச்சினையாக இருக்கக்கூடிய ஒரு நோய் அல்லது அறிகுறி என ஒன்று உண்டு என்றால் அது இந்த மூக்கடைப்பு (Nasal Block) நோய் எனலாம்.  அதைப்பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

மூக்கு அடைப்பு என்பது பொதுவாக மூக்கின் உட்பூச்சில் உள்ள சவ்வுகளில் இருக்கும் ரத்த நாளங்கள் வீக்கமடைவதால் உண்டாகும் அடைப்பு. இது பலருக்கும் இருக்கக்கூடிய பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இந்நிலை பொதுவாக சிறு நோயாக இருப்பதோடு மருந்து ஏதுமின்றி குறுகிய காலத்திலேயே குணமாகக் கூடியது. இது அனைத்து வயதுடைய மக்களையும் பாதிக்கக்கூடியது, குறிப்பாக குழந்தைகளில் மிக பொதுவாக இருக்கக்கூடியது. இது பெரும்பாலும் இருமல் அல்லது சளி போன்ற பிற நோய்களை சார்ந்த நிலையாகும். இது நமது கேட்கும் திறனையும், பேசும் திறனையும் கூட பாதிக்கலாம். பெரும் சமயங்களில் நமது தூக்கத்தையும் கெடுத்து, குறட்டை விடுவதையும் உண்டாக்கும்.

மூக்கடைப்பின் காரணங்கள்


மூக்கடைப்பு உண்டாக பல காரணிகள் உள்ளன. அதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஒவ்வாமை.  ஒவ்வாமையினால் வரும் மூக்கடைப்பு நம்மில்  35 சதவீதம் முதல் 45 சதவீதம் பேருக்கு வரக்கூடும்.  நோய் தொற்றினால் வரும் சளி, குளிர் காய்ச்சல் போன்ற நோய்களினால் மூக்கடைப்பு வரலாம். மூக்கில் ரத்த நாளங்கள் உள்ளதால் அங்கு கிருமித் தொற்று ஏற்படும்போது மூக்கு சுவர்களுக்கு ரத்தம் அதிகமாக பாய்ந்து நாசி மத்தியில் வீக்கம் வர காரணமாகி அதுவே மூக்கடைப்பை ஏற்படுத்தலாம்.  

புரையழற்சியினால் (Sinusitis) வரும் மூக்கடைப்பு அடிக்கடி ஏற்படும் ஒரு நிலை.  இது மூக்கை சுற்றியுள்ள எலும்புகளில் உள்ள வெற்று காற்று இடைவெளிகளின் வீக்கத்தால் வரும் நோய் ஆகும். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 25 முதல் 64 வரை வயதுடைய பெரியவர்களுக்கு, குறிப்பாக வயதான பெண்களுக்கு இது ஏற்படுகிறது. புரையழற்சியின் ஒரு அறிகுறியாகவும் மூக்கடைப்பு ஏற்படலாம்.

மூக்கடைப்புக்கு மற்றொரு முக்கியமான காரணம் நேசல் பாலிப் என்கிற சதை வளர்ச்சி.  இது மூக்கின் உட்பூச்சில் வளரக்கூடிய மென்மையான, வலியில்லாத, திசு போன்ற பாதிப்பில்லாத கட்டி ஆகும். இவை பொதுவாக பாதிப்பில்லாதவைகளே, ஆனால் சிகிச்சையளிக்க தவறிவிட்டால், மூக்கில் அடைப்பை ஏற்படுத்துவதோடு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவும் காரணமாக இருக்கலாம். இந்நிலை, மக்கள் தொகையில் 4 சதவீதம் பேரை பாதிக்கிறது.

இத்தகைய பாலிப்பின் வளர்ச்சி 1,000 பேரில் ஒன்றிலிருந்து 20 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது சாத்தியமே. அதோடு 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. பாலிப்கள் (Polyps) ஏற்பட மூக்கின் நடு தண்டுவட பகுதி வளைந்திருப்பது (டிவியேட்டட் நேசல் சப்டம்), சாதாரண சளி, அலர்ஜி, பாக்டீரியா வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள், ஆஸ்துமா, சைனசைட்டிஸ் போன்ற பல காரணங்கள் உண்டு.

முதிர்ந்த நிலையில் இருக்கும் பாலிப்கள் (Polyps)சில நேரங்களில் சைனஸிற்குள் சென்று எலும்புகளை தாக்கவும் வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் அதிகப்படியான மூக்கடைப்பு நீக்கும் மருந்துகளின் உபயோகத்தினால் கூட மூக்கடைப்பு வரும்.

மூக்கடைப்பின் அறிகுறிகள்


மூக்கடைப்பு உண்டாகும் போது சுவாசிப்பதில் சிரமம் உண்டாகிறது, அதுவே மூக்கில் காற்றோட்டம் இல்லாத உணர்வை ஏற்படுத்தி நுகர் திறனை குறைக்கிறது. இதனால் வாசனையின்மை உருவாகி மேலும் சுவாச சிரமத்தை ஏற்படுத்துகிறது. இயல்பாக மூக்கடைப்பினால் இரவு நேரங்களில் தூக்கமின்மையும் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூக்கடைப்பு உண்டாகும் போது படுக்கவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் உட்காரவும் இயலாமல் மூச்சு விடுதலே சிரமத்துக்கு உள்ளாக்கும்.

மேலும் மூக்கு ஒழுகுதல், தலைவலி, கண்களில் நீர் வடிதல், தும்மல், சுவையின்மை, குறட்டை பிரச்சனை ஆகியவையும் சில நேரங்களில் மூக்கில் ரத்தக் கசிவும் ஏற்படலாம்.  பெரும்பாலான மனிதர்களில் மூக்கடைப்பு தானாகவே தணிந்து விடும். ஆனால் அது இருக்கும் தருவாயில் பெரும் தொந்தரவாக இருக்கும். மூக்கடைப்பின் மூல நோய் காரணத்தை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சை அளித்தால் மூக்கடைப்பிலிருந்து விரைவில் குணமடையலாம்.

மூக்கடைப்பின் சிகிச்சை


நாசி நெரிசலைப் போக்க பல சுய உதவி யுத்திகள் உள்ளன.  மூக்கடைப்பு ஏற்படும் பொழுது வீட்டிலேயே தைலம் காய்ச்சி உபயோகிக்கும் முறை இன்றும் பல வீடுகளில் பின்பற்றப்படுகிறது. அதில் ஒன்று கற்பூர தைலம். சுத்தமான தேங்காய் எண்ணெயில் சுத்தமான பச்சை கற்பூரத்தை பொடித்து சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் அதை மூக்கின் மேல் அல்லது கழுத்து மற்றும் மார்புப் பகுதியின் மேல் தடவும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் பின்பற்றப்படுகிறது.  

ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை சுத்தமான நீலகிரி தைலத்தை (யூகலிப்டஸ் எண்ணெய்) 2-3 சொட்டுக்கள் கலந்த நீராவியை உள்ளிழுத்தால் மூக்கடைப்புக்கு நிவாரணமும்  நாசி குழாயில் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

ஆயுர்வேதத்தில் மூக்கடைப்பு


கபம் மூச்சுக் குழாயில் அடைபட்டிருப்பதால் வரும் ஒரு அறிகுறியாக ஆயுர்வேதத்தில் மூக்கடைப்பை பார்ப்பதால் கபத்தை நீக்கும் சிகிச்சை மற்றும் பிராண வாயுவை  நிலைப்படுத்தும் மருத்துவமுறைகளைக் கொண்டு சிகிச்சையளிக்க நல்ல பலனைத் தரும்.  நிதான பரிவர்ஜனம் என்னும் காரணத்தை முதலில் தவிர்க்கும் வழிமுறைகளையே ஆயுர்வேதம் முதலில் அறிவுறுத்துகிறது. நோய்கள் பலவகையானாலும் அதற்கு காரணங்கள் பலவிதமானாலும் நிதான பரிவர்ஜனம் கடைபிடித்து நம் நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக வைத்துக்கொள்வதே தலையாய முறையாக ஆயுர்வேதம் கூறுகிறது.

இதனால்தான் கொரோனா போன்ற புதுப்புது வியாதிகள் அவ்வப்போது மனித இனத்தை பயமுறுத்தினாலும் ஆயுர்வேத தத்துவங்களும் சிகிச்சைகளும் மருந்துகளும் மிகவும் பலனுள்ளவைகளாகவே இருக்கின்றன. முக்கடைப்பிலும் இத்தகைய முறைகளை கையாள முழுமையான நிவாரணம் பெறலாம். ஆயுர்வேத சுத்திகரிக்கும் முறைகளில் சிலவற்றில் நசியம், தூம பானம், விரேசனம், கவளம், கண்டூஷம், க்ஷீரதும்மம் போன்ற மருத்துவ முறைகள் நல்ல பலனுள்ளவையாக விளங்குகின்றன.

உள் மருந்துகளாக தசமூல கடுத்ரயம் கஷாயம், வ்யாக்ராதி கஷாயம், நயோபாயம் கஷாயம் போன்ற கஷாயங்களும் தூதுவளை சூர்ணம், ஏலாதி சூர்ணம், திப்பிலி சூர்ணம் போன்ற சூர்ணங்களும் கஸ்துர்யாதி குளிகை, வியோஷாதி குளிகை, கோரோசனாதி குளிகை போன்ற குளிகைகளும் மூக்கடைப்பை போக்க உதவிகரமாக உள்ளன. வெளி மருந்துகளாக ராசனாதி சூர்ணம் வைத்து பத்துப் போடுவது நாசி ரோக நாச தைலத்தை மூக்கில் சொட்டு விடுவது போன்றவை நல்ல பலனளிக்கக்கூடிய முறைகளாக இருக்கின்றது.  

மூக்கடைப்பு வராமல் இருக்க நாம் பின்பற்ற வேண்டியவை


*பருவகால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

*குளிர் காற்றில் நடைப் பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.

*உணவில் மிளகு, இஞ்சி, பூண்டு, சீரகம், துளசி,  புதினா, சுக்கு, மல்லி  போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

*முக்கியமாக குளிர்காலத்தில் தூசி மூலமாக ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது முக்கியம்.

*குடிநீரை நன்கு காய்ச்சி ஆறியபின் வெதுவெதுப்பாக பருகுதல் மிகவும் நல்லது.

*பனிக்காலத்தில் வயதானவர்கள் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்கலாம் அல்லது குளிர் தாக்காத வகையில் மஃப்ளர், ஸ்வெட்டர் அணிந்துகொண்டு நடக்கலாம்.

*குடிக்கவும் குளிக்கவும் வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தவும்.

*ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இயல்பான வெப்பநிலைக்கு வந்தவுடன் அவற்றைப் பயன்படுத்தலாம்.

*இப்பிரச்னை இருப்பவர்கள், பகல் நேரங்களைத் தவிர, அதிகாலை, மாலை  நேரத்துக்குப் பிறகு  வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். மேலும், ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்யாமலிருக்கலாம்.

*தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப்பயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் ஒதுக்கலாம்.

*இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

*மூக்கின் துவாரங்களை சற்று ஈரத்தன்மையாக வைப்பது நன்று. இதற்காக ஆயுர்வேதத்தில் மூச்சனம் செய்யப்பட்ட நெய்யை நமது விரல் கொண்டு இரண்டு மூக்கு துவாரங்களின் நுனியில் தடவிக் கொண்டு செல்லலாம் என்று தினசர்யம் என்னும் நாளியியல் பகுதியில் ஆயுர்வேதம் விளக்குகிறது. அண்மையில், ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றில் கூட இதை ஆயுர்வேத மருத்துவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தினர். இதனால் மக்களும் பெரும் நன்மை அடைந்தனர்.

*வெந்நீரில் உப்பு கலந்து அதை வாயில் ஓரிரு நிமிடம் வைத்தோ அல்லது நன்கு கொப்பளித்தோ துப்புவதில் வாய் மற்றும் மூக்கில் உள்ள நுண்கிருமிகள் அழிக்கப்பட உதவும்.

*நீச்சல் குளங்களில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

*இரவில் உறங்கும் போது தலையணையை சரியான அளவு பயன்படுத்தி வந்தோமே ஆனால் சுவாசம் சீராக இருந்து மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்ச்சி போன்ற பிரச்சனைகள் வராது.

*ஆயுர்வேதத்தில் கூறப்படும் பிரதிமர்ச நசியம் என்னும் முறையை மேற்கொள்ளலாம். தினமும் இரண்டு சொட்டு அணுத் தைலம் போன்ற ஆயுர்வேத மருந்தை மூக்கின் துவாரம் வழியாக பயன்படுத்துவதன் மூலம் சளி மற்றும் அடைப்பை நீக்கி மூக்கின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கலாம்.

குறிச்சொற்கள் #மூக்கடைப்பு  #Nasal_Congestion #மூக்கு_அடைப்பு
குங்குமம் தோழி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக