புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
Page 1 of 1 •
![டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி Dr-SundarReddi-5](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2021/7/22/original/Dr-SundarReddi-5.jpg)
ஆசியாவின் முதல் பெண் மருத்துவர், சென்னையில் இன்றைக்கும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியவர், கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் என்பன போன்ற பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. |
பெண்கள் பள்ளிப் படிப்பை முடிக்க முடியுமா எனக் கேட்கும் அளவுக்கான காலம் அது. அப்போதே புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டமானிடம் சிறப்பு அனுமதி பெற்றுப் படித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியையும் முடித்தவர் அவர்.
புதுக்கோட்டையிலுள்ள இப்போதைய மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, அப்போது சமஸ்தானத்தின் உயர்கல்வி நிலையமாக இருந்தது. அதன் இயக்குநர் (முதல்வர் பதவியின் அப்போதைய பெயர்) நாராயணசாமி அய்யர். இவர் சந்திரம்மாள் என்ற இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
1886 ஜூலை 30ஆம் நாள், நாராயணசாமி- சந்திரம்மாளின் மூத்த மகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி. தொடர்ந்து நல்லமுத்து, சுந்தரம்மாள் என இரு தங்கைகள். கடைசியாகத் தம்பி ராமையா.
பிற்காலத்தில் நல்லமுத்து, சென்னையிலுள்ள ராணிமேரி கல்லூரியின் முதல் பெண் முதல்வர். சுந்தரம்மாள் தமிழ் இலக்கியம், இசை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவரானார். ராமையா, சட்டம் பயின்று வழக்குரைஞரானார்.
உதவித்தொகை வழங்கப்பட்டாலும் பெண்கள் பள்ளிக்கு வராத காலம் அது. அவ்வப்போது அடுத்தடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்டபோதும் 13 வயது வரை கீழ்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்தார் முத்துலட்சுமி.
அதன்பிறகு அவரது தந்தை நாராயணசாமி, மாதம் ரூ. 2 ஊதியம் கொடுத்து வீட்டுக்கே ஓர் ஆசிரியரை வரவழைத்து மகளுக்குக் கல்வி சொல்லித் தர வைத்தார். 1902இல் மெட்ரிகுலேசன் தேர்வில் முதல் மாணவியாக வந்தார் முத்துலட்சுமி.
தொடர்ந்து, கல்லூரிப் படிப்பு. மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் சிறப்பு அனுமதி பெற்றுத்தான் கல்லூரியில் சேர முடிந்தது.
மாணவர்கள் பகுதி திரைச்சீலையால் பிரிக்கப்பட்டிருக்குமாம். இந்தப் பகுதியில் முத்துலட்சுமி மட்டும்தான்- ஒரேயொரு மாணவி. கல்லூரிக் கல்வியின்போது, பார்வைக் குறைபாடு ஏற்பட்டுக் கண்ணாடி அணிந்து கொண்டே படித்து முடித்தார். இன்டர்மீடியேட் தேர்விலும் முதல் மாணவி.
தொடர்ந்து 1907இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் 'எம்பிசிஎம்' மருத்துவக் கல்வியில் சேர்ந்தார். படிப்புச் செலவுக்கும் புதுக்கோட்டை மன்னர்தான் உதவியிருக்கிறார்.
1912 இல் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, எழும்பூர் அரசு மருத்துவமனையிலும், டாக்டர் ஜிப்மர் நடத்திய மருத்துவமனையிலும் என சில காலம் சென்னையில் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, சொந்த ஊரான புதுக்கோட்டைக்கே வந்து மருத்துவச் சேவையாற்றினார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னைக்குத் திரும்பி, சொந்தமாக மருத்துவமனையை உருவாக்கினார்.
அரசியல் அறிஞர் நஞ்சுண்டராவ் குடும்பத்தினருடன் அம்மையாருக்குப் பழக்கம் ஏற்படுகிறது. ஒரு முறை நஞ்சுண்டராவின் வீட்டில்தான் மகாகவி பாரதியாரையும் சந்திக்கிறார் மருத்துவ மாணவியான முத்துலட்சுமி. இவரது திறமைகளைக் கண்ட பாரதியார், தனது 'இந்தியா' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதக் கேட்டுள்ளார்.
சென்னையில் சொந்த மருத்துவமனையுடன் ஐரோப்பாவைச் சேர்ந்த லேடி ஒயிட்லெர்டு என்பவரின் சமூக சேவை சங்கத்திலும், பிராமண விதவைப் பெண்களுக்கான சங்கத்திலும், ராணி மேரி கல்லூரி உள்ளிட்டவற்றின் தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதி, பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகளில் மருத்துவச் சேவையை வழங்கினார் முத்துலட்சுமி.
இந்தக் காலகட்டத்தில்தான் சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்பராயலு ரெட்டியின் சகோதரி மகன்- விசாகப்பட்டினத்தில் டாக்டராகப் பணியாற்றிய டி. சுந்தரரெட்டி, முத்துலட்சுமியின் பணிகளை அறிந்து அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, முத்துலட்சுமியின் தந்தை நாராயணசாமிக்குக் கடிதம் எழுதினார். சுந்தரரெட்டி அந்தக் காலத்திலேயே லண்டன் சென்று படித்து 'எப்ஆர்சிஎஸ்' முடித்த முதல் இந்தியர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்துலட்சுமி, சுந்தரரெட்டியைத் தொடர்பு கொண்டு 'என்னுடைய சமூகப்பணிக்கு எவ்வகையிலும் தடையாக இருக்கக் கூடாது' என்ற நிபந்தனையின்பேரில் திருமணத்துக்கு சம்மதித்தார்.
1914இல் அன்னிபெசன்ட் அம்மையாரின் பிரம்மஞான சபை வழக்கப்படி, அர்த்தமற்ற சடங்கு முறைகள் இன்றி, எளிய முறையில் சுந்தரரெட்டி- முத்துலட்சுமியின் திருமணம் நடந்தது.
இவர்களின் முதல் மகன் ராம்மோகன். தில்லியில் திட்டக் குழு இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தற்போதைய காப்பாளர்.
1917இல் அன்னிபெசன்ட் அம்மையார் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அம்மையார் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்திய மாதர் சங்கத்தில் முத்துலட்சுமி இணைந்து பணியாற்றினார். 1925இல் கணவர் சுந்தரரெட்டி மற்றும் குழந்தைகளுடன் மேல் படிப்புக்காக லண்டன் சென்றார் முத்துலட்சுமி.
அங்கிருந்தபடியே 1926இல் பாரிஸ் சென்று அங்கு நடைபெற்ற அகில உலக பெண்கள் மாநாட்டில் இந்திய மாதர் சங்கத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.
இளவயது திருமணம், விதவை மறுமணம் போன்றவை குறித்து அம்மாநாட்டில் முத்துலட்சுமி பேசியது மாநாட்டில் கவனம்பெற்றிருக்கிறது.
இந்திய மாதர் சங்கத்தின் மூலம் துணை அமைப்புகளைப் போல உருவாக்கப்பட்ட குழந்தைகள் உதவிச் சங்கம், சாரதா மகளிர் மன்றம், இந்தியப் பெண்கள் சமாஜம் போன்ற அமைப்புகளில் முத்துலட்சுமியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கிறது.
பெண்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்று முத்துலட்சுமி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். தொடர்ச்சியாக வாக்குரிமை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முத்துலட்சுமி அம்மையாரின் முயற்சியில்தான் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், விபசார ஒழிப்புச் சட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதில் கடுமையான எதிர்ப்புகளை முத்துலட்சுமி எதிர்கொண்டுள்ளார். நீதிக்கட்சித் தலைவர் பனகல் அரசர், பெரியார், திருவிக உள்ளிட்டோர் அப்போது இச்சட்டத்துக்கு ஆதரவளித்தனர்.
சட்டப்பேரவையில் தேவதாசி முறையை ஆதரித்து தீரர் சத்தியமூர்த்தி பேசியபோது, 'மிகக்கடுமையாக' வாதிட்டு வெற்றிபெற்றார் முத்துலட்சுமி. ஆம். 1929 பிப்ரவரி 2ஆம் நாளில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அம்மையாரின் பல்வேறு முயற்சிகளில் இச்சட்டம் மிக முக்கியமான ஒன்று.
1933இல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் முத்துலட்சுமி பங்கேற்று, பெண்ணுரிமைக்கான குரலை லண்டனில் ஒலித்தார்.
1937இல் சென்னை மாநகரத் தலைமையாளர்- 'ஆல்டன் உமன்' என்ற பதவி முத்துலட்சுமிக்கு கிடைத்தது. மாநகராட்சியில் உயர் பதவியைப் பெற்ற முதல் பெண்ணும் இவர்தான். சென்னையின் மேம்பாட்டில் முத்துலட்சுமியின் பங்குஅதிகமாக இருந்தது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலேயே இதுபோன்ற முக்கிய பதவிகளில் முத்துலட்சுமி இருந்தபோதுதான், அவையில் அலுவல் ரீதியாக -மிஸஸ் ரெட்டி- என அழைக்கப்பட்டு முத்துலட்சுமியின் பெயர் 'முத்துலட்சுமி ரெட்டி'யாக மாறியிருக்கிறது.
அன்னிபெசன்ட் அம்மையாரின் மறைவுக்குப் பிறகு இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் முத்துலட்சுமி ரெட்டிக்கு ஏற்பட்டுள்ளது. 1933 முதல் 1945 வரை இந்திய மாதர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
1956இல் முத்துலட்சுமி அம்மையாரின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மபூஷண் விருதினை வழங்கியது. வாழ்நாள் முழுவதும் பெண்கள் சேவைக்காகப் பணியாற்றி வந்த முத்துலட்சுமி அம்மையார், தனது 82ஆவது வயதில் 1968இல் ஜூலை மாதம் 22ஆம் நாளில் மறைந்தார்.
ஆனால், இன்றைக்கும் அம்மையார் பேசப்படுவதற்கு, நினைவு கூர்வதற்கு ஏராளமான அம்சங்கள் இருந்தாலும் கண்ணெதிர் சாட்சியாக காணப்படுபவை, முதலாவது சென்னையிலுள்ள அவ்வை இல்லம், இரண்டாவது அடையாறு புற்றுநோய் மருத்துவமனை.
கணவனால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், ஆதரவற்ற பெண்கள், ஆதரவற்ற சிறார்களுக்கான இல்லமாக 'அவ்வை இல்லம்' இன்றைக்கும் சென்னை அடையாறு பெசன்ட் அவன்யூவில் செயல்பட்டு வருகிறது.
1930 இல் இந்த இல்லத்தை முத்துலட்சுமி அம்மையார் தொடங்கினார். காலப்போக்கில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதி, ஏழை மாணவர்கள் பயில்வதற்கான தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என அவ்வை இல்லம் ஆலமரம் போல தன்னுடைய கிளைகளைப் பரப்பி நிற்கிறது.
தற்போது, முத்துலட்சுமி அம்மையாரின் இரண்டாவது மருமகள் மந்தாகினி கிருஷ்ணமூர்த்தி அவ்வை இல்லத்தை நிர்வகித்து வருகிறார்.
அடுத்து மிக முக்கியமானது புற்றுநோய் மருத்துவமனை. |
முத்துலட்சுமி அம்மையாரின் தங்கை சுந்தராம்பாள் 1923இல் புற்றுநோயால் காலமானார். மருத்துவரான முத்துலட்சுமி, தங்கையைக் காப்பாற்ற கடுமையாகப் போராடினார். கொல்கத்தாவுக்கும் அழைத்துச் சென்றனர். சிகிச்சை பலனிக்கவில்லை. தங்கையின் மரணம், முத்துலட்சுமி அம்மையாரைச் சற்றே சுருட்டிப் போட்டது. அப்போதே புற்றுநோய்க்கான சிறந்த மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என முடிவு செய்தார்.
1935ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்கவுள்ள நோக்கத்தை அறிவித்தார். பலரும் ஆதரவளித்தனர். படிப்படியாக பணிகளைத் தொடங்கி 1952இல் முடிவடைந்து, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார்.
மத்திய அரசு ரூ. ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கியது. 1954 ஜூன் 18ஆம் தேதி முதல் புற்றுநோய் மருத்துவமனை செயல்படத் தொடங்கியது. தென்னாட்டில் உருவாக்கப்பட்ட முதல் மருத்துவமனையாகவும், இந்தியாவில் தொடங்கப்பட்ட இரண்டாவது மருத்துவமனையாகவும் புகழ் பெற்ற இம்மருத்துவமனையில் தற்போது ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1902இல் புதுக்கோட்டையில் மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்று #முத்துலட்சுமி வென்றபோது ஏறக்குறைய எல்லோருமே கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்குமா, அதன்பிறகு முத்துலட்சுமி பெறப்போகும் உச்சங்கள் இன்னும் உயரமானவை என்று.
உண்மையில் முத்துலட்சுமி அம்மையாரின் பணிகள் ஈடு இணையற்றவை. அதனால்தான் அவரை இன்னமும் 'மாதர் குல மாணிக்கம்' என்றழைக்கிறார்கள். |
குறிச்சொற்கள் #டாக்டர்_முத்துலட்சுமி_ரெட்டி #மாதர்_குல_மாணிக்கம் |
தினமணி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
இந்தியாவின் முதல் மருத்துவரை வாழ்த்துவோம்.
நடிகர் ஜெமினி கணேசன் --மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களுக்கு உறவினர்
என்பது பலருக்கு தெரியுமா? என்பது எனக்கு தெரியாது..
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
நடிகர் ஜெமினி கணேசன் --மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களுக்கு உறவினர்
என்பது பலருக்கு தெரியுமா? என்பது எனக்கு தெரியாது..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
T.N.Balasubramanian wrote:
நடிகர் ஜெமினி கணேசன் --மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களுக்கு உறவினர்
என்பது பலருக்கு தெரியுமா? என்பது எனக்கு தெரியாது..
![]()
![]()
![]()
![]()
![]()
இதுவரை அறியாத தகவல் இது...
![டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முத்துலெட்சுமி அவர்களே உண்மையான சிங்கப்பெண்! மனித குல மாணிக்கம் ! என்றும் மறவோம் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|