புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
44 Posts - 41%
heezulia
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
5 Posts - 5%
prajai
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
3 Posts - 3%
Raji@123
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
2 Posts - 2%
Barushree
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
21 Posts - 5%
prajai
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_m10"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 03, 2023 11:51 pm

"கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் 587ef530-b9c3-11ed-89f4-f3657d2bfa3b

"மத வழிபாடு சார்ந்தோ, தனி நபர் பயன்பாட்டிற்காகவோ யானைகளை வாங்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை உறுதிசெய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஆனால், இந்த உத்தரவு வெளிவந்த பிறகு அதற்கு பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?

கோவில்கள் மற்றும் தனி நபர்கள் வளர்க்கும் யானைகளை அரசின் மறு வாழ்வு முகாம்களுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. இனி வரும் காலங்களில் யானைகளை வாங்க கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை செயலர் உத்தரவு பிறபிக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

தேனியைச் சேர்ந்த முகமது ஷேக் என்பவர் லலிதா என்ற பெண் யானையை வளர்த்து வருகிறார். அந்த யானை மீதான உரிமையை மாற்றக் கோரி 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை அப்போது விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன்., யானை லலிதாவை வளர்க்கும் பொறுப்பு அவரிடமே தொடர வேண்டும் எனவும், தேவைபட்டால் வனத்துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

தற்போது யானை லலிதாவிற்கு 60 வயதாகிறது. சமீபத்தில் கோவில் விழா ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை லலிதா அங்கேயே மயங்கி விழுந்தது. அதனை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த விஷயத்தை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். லலிதாவை நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதற்கு பிறகு, முந்தைய வழக்கை மீண்டும் எடுத்து விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன், “60 வயதான லலிதாவை ஓய்வு பெற்றதாக அறிவித்து முறையான உணவும், பராமரிப்பும் வழங்க வேண்டும். யானை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தினசரி சிகிச்சையளித்து கண்காணிக்க வேண்டும். லலிதா பூரண குணமடைந்ததும் தமிழ்நாடு அரசு யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பப்படும். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர், கோவில்கள் மற்றும் தனிநபர்கள் வளர்க்கும் யானைகளை அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும்” என கூறினார்.

மேலும் தனது உத்தரவில், “மத வழிபாடு சார்ந்தோ, தனி நபர் பயன்பாட்டிற்காகவோ யானைகளை வாங்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை இனி கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும், இனி யானைகளை வாங்ககூடாது என்பது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், அறநிலையத்துறை செயலர் இணைந்து விவாதித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவேண்டும்.

தற்போது கோவில்கள் மற்றும் தனியார்கள் வைத்திருக்கும் யானைகளை தமிழ்நாடு அரசு யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், அறநிலையத்துறை செயலருடன் இணைந்து செயல்படலாம். இனி யானைகளை வாங்க கூடாது என்பது குறித்து அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை செயலர் உத்தரவிட வேண்டும்” என்று கூறினார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன்.

யானைகளின் உடல் மற்றும் மன நலனை காக்கும் வகையில் நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக கோவில்களில் யானைகளை பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து திருவிழாக்களிலும் யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் இந்த உத்தரவிற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யானைகளுக்கு முறையான பராமரிப்பு இல்லை



உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது குறித்த கருத்தை கேட்பதற்காக, அறநிலையத்துறையின் முன்னாள் உதவி ஆணையர் முத்து பழனியப்பனை பிபிசி தமிழ் தொடர்புக்கொண்டது.

அப்போது பேசிய அவர், “ இந்த தீர்ப்பு நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை, ஆனால் இந்த தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. ஏனெனில்,கோவில்களில் யானைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை.

கோவில்களில் பசுக்கள், யானைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குகளை வளர்க்க வேண்டுமென்று கூறுகிறார்கள். கோவில்களில் பசுக்களை வேண்டுமானால் வளர்க்கலாம், ஆனால் பாலைவனத்தில் இருக்கும் ஒட்டகங்களையும், காட்டில் வாழும் யானைகளையும் இங்கே கொண்டு வந்து வளர்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது” என்று கேள்வியெழுப்புகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “யானைகளை ஆண்டுதோறும் முதுமலை முகாமிற்கு அழைத்துச் செல்வார்கள். அதற்காக அந்த யானைகளை வண்டியில் ஏற்றுவார்கள். சில யானைகள் மிரட்சியில் முதலில் வண்டியில் ஏறாது. இரவு முழுவதும் அவைகளை அடித்து துன்புறுத்தி வண்டியில் ஏற்றுவதை என் கண்களால் பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் வார்த்தைகளில் சொல்ல முடியாது. அதைவிட ஒரு யானையை மற்றொரு துணை யானை இல்லாமல், காலம் முழுக்க வைத்திருப்பது எவ்வளவு பெரிய கொடுமை” என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

”1960 களின் காலகட்டம் வரை கோவில்களில் வளர்க்கப்பட்ட யானைகளின் பராமரிப்பு நன்றாக இருந்தது. யானைகளை வளர்க்கும் முறைகள் நன்றாக இருந்தது. அப்போது யானைகளுக்கு உணவளிப்பதற்காகவே தனி புற்கள் வளர்க்கப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் சோற்று உருண்டைகளைத்தான் கொடுக்கிறார்கள்” என்றும் குறிப்பிடுகிறார்.

இந்துக்களின் கலாசாரங்களை அழிக்க நினைக்கிறார்கள்:



”கோவில்களில் யானைகளை இனி வாங்கக்கூடாது என்பது குறித்த நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் வேதனை அளிக்கிறது” என்கிறார் அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில தலைவர் சிவக்குமார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மன்னர் காலத்திலிருந்து யானைகளை வழிபாட்டு முறைக்கு பயன்படுத்துவது தொடர்ந்து வருகிறது. சாமிகளுக்கு அபிஷேகம் செய்வதிலும், பண்டிகை காலங்களில் சாமிகளுடன் வீதி உலா செல்வதிலும் யானைகள் மிகப்பெரிய பங்கு வகித்து வந்திருக்கிறது. ஆனால் இன்றைய மக்களாட்சியில் இது போன்ற தீர்ப்பு வந்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது” என்று கூறுகிறார்.

மேலும், “கோவில்களில் யானைகள் தனியாக ஒரே இடத்தில் இருப்பதால் அதனுடைய உடல்நலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள். அதற்காகத்தானே அதனை ஆண்டுதோறும் முதுமலை முகாமிற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே மருத்துவ சிகிச்சை அளிக்கிறார்கள். கோவில்களில் யானைகளுக்கு அளிக்கப்படும் உணவுகளால் யானைகளுக்கு நோய் வருகிறது என்று மற்றொருபுறம் குற்றம் சுமத்துகிறார்கள். யானைகளுக்கு அளிக்கப்படும் உணவு மருத்துவர்களின் ஆலோசனையுடன் தான் கொடுக்கப்படுகிறது என்பது அவர்களுக்கு தெரியாதா. இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அரசுகள்தானே இதை கவனித்துக் கொண்டு இருந்தன.

யானைகள் கோவில்களில் வருமானத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. யானைகளை விநாயகப்பெருமானாக நினைத்து நாங்கள் வழிபட்டு வருகிறோம். அப்படிபட்ட யானைகளை கோவில்களில் வளர்க்க கூடாது என கூறுவது மிகவும் வேதனையளிக்கிறது. அரசுக்கு கட்டுப்பட்ட அறநிலையத்துறை ஆலயங்களில்தானே யானைகள் இருக்கிறது. இந்து மத கலாசாரங்களை அழிப்பதற்காகவே இதுபோன்ற உத்தரவுகள் வருகின்றன. எந்தவொரு மத வழிபாட்டு முறைகளிலும், ஆலய வழிபாட்டு விஷயங்களிலும் அரசாங்கங்கள் தலையிடக்கூடாது என்பது எங்கள் கோரிக்கை. ஆனால் இந்த தீர்ப்பு நடைமுறைக்கு வருவது குறித்து தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்தால் அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெறும்” என கூறுகிறார்

அந்த காலம் வேறு; இந்த காலம் வேறு :



”கோவில்களில் யானைகள் இருக்க வேண்டும் என இந்துக்கள் விரும்பினால் போதாது, முதலில் இந்த கோவில்களில் இருப்பதற்கு யானைகளுக்கு விருப்பம் இருக்குமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்” என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை காளிதாஸ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “யானை ஒரு வனவிலங்கு என்பதை நாம் உணர வேண்டும். அதற்கு வேர்வை சுரப்பிகள் கிடையாது. காடுகளிலியே வெயில் ஏற துவங்கினால் அது நிழலுக்கு சென்று ஒதுங்கி விடும். இப்படியிருக்கையில் அதனை அதே முறையில்தான் நாம் கோவில்களிலும் பராமரிக்கிறோமா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். அதேபோல யானைகளின் பாதங்கள் மிகவும் மென்மையானது. நீண்ட நேரம் அதனை சிமெண்ட் தரைகளிலோ, தார் சாலைகளிலோ நிறுத்துவது அதனுடைய கால்களில் புண்களை ஏற்படுத்துவதோடு, அதனுடைய கால்களை பலவீனமாக்கிவிடும்.

அதேபோல் யானை என்பது ஒரு சமூக விலங்கு. எப்போதும் கூட்டத்தோடு வாழ பழகிய ஒரு விலங்கை, கோவில்களில் கொண்டு வந்து தனியாக நிறுத்துவதே அதற்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரும் கொடுமை. அதுவே அதற்கு உளவியல் ரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோல் மருத்துவர்களின் ஆலோசனைகளுடன் உணவு வழங்கப்பட்டு வந்தாலும், முகாம்களில் உள்ள யானைகளுக்கு வழங்கப்படும் உணவு என்பது வேறு, கோவில் யானைகளுக்கு வழங்கப்படும் உணவு என்பது வேறு. முகாம்களில் உள்ள யானைகள் தொடர்ச்சியாக மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றன. ஆனால் கோவில் யானைகளுக்கு அப்படியான மருத்துவ கண்காணிப்பு கிடையாது.

காலம்காலமாக யானைகளை போர்களிலும், வழிபாட்டு முறைகளிலும் பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்றாலும், அன்றைய காலம் என்பது வேறு, இன்றைய காலம் என்பது வேறு என்பதை நாம் உணர வேண்டும்.

யானைகள் ஒரு நாளைக்கு பல கிலோமீட்டர்கள் நடக்க கூடிய விலங்கு. அவற்றை ஒரே இடத்தில் நிற்க வைப்பதே தவறு. இன்று கோவில்களில் இருக்கும் பெரும்பாலான யானைகளுக்கு காசநோயும், சர்க்கரை நோயும் இருக்கிறது.

யானை ஒரு மிகப்பெரிய உயிர். அதனை இப்படியெல்லாம் நாம் துன்புறுத்த வேண்டுமா என்பதை நாம் ஆழமுடன் சிந்திக்க வேண்டும்.

இதை ஒரு மதம் சார்ந்த விஷயமாக பார்க்காமல், அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு உயிரினத்தின் நலன் சார்ந்த விஷயமாக பார்க்க வேண்டும்.கடவுளாக நினைக்கும் ஒரு உயிரை இவ்வளவு துன்புறுத்தல்களுடன் கோவில்களில் வைத்திருக்க வேண்டுமா என்பதை அறம் சார்ந்து சிந்திக்க வேண்டும்” என்கிறார் ஓசை காளிதாஸ்.

அதேபோல்,”ஆகம விதிகளின்படிதான் கோவில்களில் யானைகள் வளர்க்கப்படுகிறது என்கிறார்கள். அதே ஆகம விதிகளின்படிதான் தேவதாசி முறை இருக்கிறது என்றார்கள் அதனை நாம் மீறவில்லையா. அதே ஆகம விதிகளின்படிதான் குறிப்பிட்ட சாதியினர் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றார்கள், அதனை நாம் மீறவில்லையா. எனவே ஆகமவிதிகள் என்று கூறப்படும் எதுவுமே நிரந்தரமானது கிடையாது. காலத்திற்கு ஏற்றாற் போல் அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறார் ஓசை காளிதாஸ்.

பிபிசி தமிழ்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக