by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
விழிப்புணர்வு என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிற இதுமாதிரியான செய்திகளில் பெரும்பாலானவை கற்பனையாகவும் உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன
தலைப்பைப் பார்த்தவுடன், ‘இதைத்தான் தினம்தினம் வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும் பார்க்கிறோமே... நீங்க என்ன புதுசாச் சொல்லப்போறீங்க’ என்று நீங்கள் கேட்கலாம்.
* இந்த உணவைச் சாப்பிட்டால் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் சீராகும்! * இதை எங்கே பார்த்தாலும் உடனடியாக வாங்கிச் சாப்பிடுங்கள்... உங்கள் வம்சத்துக்கே சர்க்கரை நோய் வராது! * இந்த நான்கையும் அரைத்துச் சாப்பிட்டால் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம், இதய பலவீனம் எல்லாமே சரியாகிவிடும்! * இறைவனின் அரிய படைப்பான இந்த விதையை மட்டும் அரைத்துச் சாப்பிட்டால் 48 மணி நேரத்தில் புற்றுநோய் குணமாகிவிடும்! |
வாட்ஸப்பைத் திறந்தாலே இப்படியான செய்திகள் வந்து கொட்டுகின்றன. எதையுமே யோசிக்காமல் இதையெல்லாம் பத்து குரூப்களுக்கு ஃபார்வர்டு செய்துவிட்டு, ஏதோ பெரும் சேவை செய்ததாகத் திருப்தி அடையும் வாட்ஸப் டாக்டர்கள் அதிகம் உண்டு நம்மிடையே!
உணவு பற்றிக் காலம் காலமாகப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். இன்று யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு இளைஞர்கள் சவர்மா, பக்லாவா பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்றால், சங்க காலக் கவிஞர்கள் ஊன்சோறு எனப்படும் பிரியாணி வரைகூட நிறைய பாடியிருக்கிறார்கள். திருவள்ளுவர்கூட, ‘சரியான உணவைச் சாப்பிட்டால் உடலுக்கு மருந்தே தேவையில்லை’ என்று சொல்கிறார். உடல் ஆரோக்கியமாக இயங்கவும், மனம் உற்சாகமாகச் செயல்படவும் உணவே அடிப்படையாக இருப்பதால்தான் அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை உணவு பற்றிப் பேசிக்கொண்டேயிருக்கிறோம். சமீப காலங்களில் அடுத்தடுத்து வந்து தாக்குகிற வைரஸ் நோய்களில் இருந்து மீளவும் தற்காத்துக்கொள்ளவும் ஆயுதமாகவும் கேடயமாகவும் இருக்கிறது உணவு. அதனால்தான் வாட்ஸப்பிலும் சமூக ஊடகங்களிலும் வருகிற உணவு பற்றிய செய்திகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே நம்புகிறோம்.
பிரச்னை என்னவென்றால், விழிப்புணர்வு என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிற இதுமாதிரியான செய்திகளில் பெரும்பாலானவை கற்பனையாகவும் உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன. அதுபற்றி விழிப்புணர்வு ஊட்டுவதற்காகத்தான் இந்தத் தொடர்.
புதிது புதிதாக உணவுப்பொருள்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் கிரீன் டீ; இன்னொரு பக்கம் நாம் பார்த்தும் சுவைத்தும் அறிந்திராத வண்ண வண்ணப் பழங்கள்; வெளிநாடுகளிருந்து வந்திறங்கும் ஓட்ஸ், பெனோவா, கிரனோலா போன்ற பேக்கிங் உணவுகள்; புரோட்டீன் பவுடர்கள், வைட்டமின் மாத்திரைகள் என உணவு, உணவு சார்ந்த பொருள்கள் சந்தைகளில் விதவிதமாகக் குவிகின்றன. இவற்றைப் பற்றி வசீகரமாகவும், ஆரோக்கியம் பற்றிய ஆசை அல்லது அச்சத்தைத் தூண்டும் விதத்திலும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இன்னொரு தரப்பினர், மரபு சார்ந்த நம் பாரம்பர்ய உணவுகளைத் தேடிச்சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களும், ‘இந்த உணவில் இந்த நோய்க்கு மருந்து இருக்கிறது’, ‘இந்த உணவைச் சாப்பிட்டால் இந்த நோயெல்லாம் வராது’ என்றெல்லாம் சொல்கிறார்கள்.
ஒருபக்கம் நவீன உணவுகள், இன்னொரு பக்கம் பாரம்பர்ய உணவுகள்... இவற்றைப் பற்றி வெளிவரும் செய்திகள் உண்மைதானா என்று அறிவியல்பூர்வமாக அலசி ஆராய்வதும் இந்தத் தொடரின் நோக்கம்.
‘டாக்டர், சரியோ தவறோ... எல்லாமே உணவுகள்தானே! அவற்றைச் சாப்பிடுவதால் என்ன பாதிப்பு வரப்போகிறது’ என்று நீங்கள் கேட்கலாம். ஓர் உணவு ஒரு நோய்க்கு மருந்தாகும் என்ற நம்பிக்கையில், அது மருந்தாக இல்லாவிட்டாலும்கூட சாப்பிடுவதால் எந்த பாதிப்புமில்லைதான். பிரச்னை எங்கேயென்றால், ஒரு நோய் இருக்கிறது. அதற்காக மருந்து சாப்பிடும் ஒருவர், அந்த மருந்தையே கைவிட்டுவிட்டு இந்த உணவுக்கு மாறுவது கண்டிப்பாக உடலியக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மலை விளிம்பில் தொங்கியபடி உயிர்ப் போராட்டம் நடத்தும் ஒருவர், வலுவான கிளையை விட்டுவிட்டு செடியைப் பிடித்துக்கொண்டு தப்பிக்க நினைப்பது போன்ற அபத்தம் இது!
நம் உடல் பற்றிய கற்பிதங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. அதற்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். கூடுதலாக ஒரு உணவை எடுத்துக்கொண்டால் நோய் குணமாகிவிடும் என்று நம்புகிறார். அதற்காக புதிய உணவுப்பழக்கத்துக்கு மாறுகிறார் என்றால் பெரிய பாதிப்பு இல்லை.
தீவிரமான இதய நோய் இருக்கும் ஒருவர், வாட்ஸப்பில் ‘இந்த உணவைச் சாப்பிட்டால் இதய நோய் குணமாகிவிடும்’ என்று ஒரு தகவலைப் பார்க்கிறார். அதுகுறித்த உண்மைத்தன்மையை ஆராயாமல் நோய்க்கு இதுவரை எடுத்து வந்த சிகிச்சையை நிறுத்திவிட்டு வாட்ஸப்பில் வந்த பரிந்துரையைப் பார்த்துப் புதிய உணவு அல்லது டயட்டுக்கு மாறுகிறார் என்றால், அவர் விபரீதமான பாதையில் செல்கிறார் என்று அர்த்தம். ஒருவேளை, அந்த உணவோ டயட்டோ அந்த நோயைக் குணமாக்கும் தன்மை கொண்டிருந்தால் பிரச்னையில்லை. அவை அந்த நோய்க்கு பலனளிக்காமல்போனால் அவரது இதயநோய் தீவிரமாகலாம். இறப்புகூட நேரலாம்.
சிலர், தான் கேள்விப்பட்ட, படித்த செய்திகளை எல்லாம் மற்றவர்களுக்குப் பரப்பிக்கொண்டே இருப்பார்கள். உறுதியாக நோய் குணமாகும் என்று சில உதாரணங்களையெல்லாம் சொல்லி மற்றவர்களின் உணவுப்பழக்கத்தை மாற்றிவிடுவார்கள். எதையும் தன்னளவில் பரிசீலித்துப் பார்க்காமல் மற்றவர்களுக்கு அள்ளிவிடுவார்கள். இந்த மூன்றாவது வகையினர்தான் இருப்பதிலேயே ஆபத்தானவர்கள். இது மிகப்பெரிய சமூகப் பிரச்னை.
உதாரணத்துக்கு நாட்டுச் சர்க்கரையை எடுத்துக்கொள்ளலாம். ‘வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவதால்தான் சர்க்கரை நோய் வருகிறது. அதை முற்றிலும் தவிர்த்துவிட்டு நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்துங்கள். நாட்டுச்சர்க்கரை எவ்வளவு சாப்பிட்டாலும் எதுவும் ஆகாது. ஐந்து டீஸ்பூன் போட்டு டீ குடிக்கலாம்’ என்று ஒரு கருத்து நம் மக்கள் மத்தியில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.
வெள்ளைச் சர்க்கரை கொஞ்சம் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுகிறது; நாட்டுச் சர்க்கரை சற்று இயற்கையானது என்பதைத்தவிர, சுக்ரோஸ் என்று சொல்லப்படுகிற மூலக்கூறு இரண்டிலும் ஒரேயளவுதான் இருக்கிறது. பாலீஷ் செய்யப்படுவதுதான் வித்தியாசம். ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுவதால் வெள்ளைச் சர்க்கரை 100 சதவிகிதம் கெடுதல் என்றால் நாட்டுச் சர்க்கரை 90 சதவிகிதம் கெடுதல். இதுதான் உண்மை.
இதுமாதிரி பல உணவுப்பொருள்கள் பற்றி மக்கள் மத்தியில் தவறான நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உணவையே மருந்தாக நினைக்கும் மனநிலை அதிகரித்து வரும் இந்தத் தருணத்தில் இதைப் பற்றிப் பேசியாக வேண்டும்.
நம் உணவு வரலாற்றைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால், இப்போது பயிற்றுவிக்கப்படுகிற உணவுப்பழக்கங்கள், நம்பிக்கைகள், டயட்கள் எல்லாம் எவ்வளவு அபத்தமானவை என்பது தெரியவரும். உணவு என்பது, உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்துக்கான சக்திக்கும் உதவும் பொருள். அவ்வளவுதான்.
கற்கால மனிதர்களுக்கு உணவு என்பது ஆடம்பரம். தினம் தினமெல்லாம் அவர்களுக்கு உணவு கிடைக்காது. காட்டுக்குப் போய் உயிரைப் பணயம் வைத்து வேட்டையாடினால்தான் உணவு. அல்லது விலங்குகள் நடமாடும் காட்டில் கிழங்குகள், பழங்களைத் தேடித் திரிந்து பறித்துவந்து சாப்பிட வேண்டும். ஒவ்வொரு நாளும் தேடல்தான். அன்று உணவு கிடைக்கவில்லையென்றால் பட்டினி. ‘இந்த உணவு விஷம்; இந்த உணவைச் சாப்பிட்டால் உயிர் போகாது’ என்ற அளவில்தான் அவர்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. உணவுக்கான தேடல்தான் மனிதர்களை நாகரிகமடையச் செய்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதர்கள் வேளாண்மையைக் கண்டறிந்தார்கள். ஆற்றங்கரையோரங்களில்தான் அறிந்த உணவுகளைத் தன் தேவைக்கு விளைவித்துக்கொண்டார்கள்.
இப்போது உணவில் நமக்கான வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. தமிழ்நாட்டின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு, வெளிநாட்டு உணவுகளைச் சாப்பிட முடிகிறது. உணவுப் பொருள்கள் பதப்படுத்தப்பட்டு கப்பலில் வந்திறங்குகின்றன. உலகத்தின் வகைவகையான உணவுகள் நம் வீட்டுக்கு அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பேக்கிங் செய்யப்பட்டுக் கிடைக்கின்றன.
அடித்தட்டு மக்கள் முதல் ஆடி காரில் பயணிப்போர் வரை எல்லோருமே உணவு விஷயத்தில் தேடல் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் தேர்வு செய்ய இங்கே விதவிதமான உணவுகள் இருக்கின்றன. யூடியூபில் வரும் வீடியோக்கள் தினம் தினம் புதுப்புது உணவுகளை அறிமுகம் செய்கின்றன. இந்தச் சூழலில் உணவு குறித்த சரியான விழிப்புணர்வு ரொம்பவே முக்கியம்.
இன்னொரு பக்கம், ‘இதெல்லாம் நம் பாரம்பரிய உணவுகள். இதைச் சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் பலசாலிகளாக இருந்தார்கள்’ என்றெல்லாம் சொல்லப்பட்டுப் பரிந்துரைக்கப்படும் பல உணவுகள் எளிய மக்கள் வாங்கமுடியாத விலையில் இருக்கின்றன.
உணவு என்பது தனி மனிதர்களின் பொருளாதாரத்தை மட்டுமன்றி, தேசத்தின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறது. புதிதாக ஒரு சமையல் எண்ணெய் அறிமுகமாகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘அது இந்த இந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாகும், இதயத்தைப் பாதுகாக்கும்’ என்றெல்லாம் விளம்பரம் செய்யப்படுகிறது. அதனால் மக்கள் அதைத் தேடி வாங்குகிறார்கள். ஆனால், அந்த எண்ணெய் தயாரிப்பதற்கான விதை இந்தியாவில் விளைவதில்லை என்றால் இன்னொரு நாட்டிலிருந்து அதை இறக்குமதி செய்யவேண்டியிருக்கும். நம் நாட்டில் கிடைக்கும் வளங்களையெல்லாம் விட்டுவிட்டு வெளிநாட்டில் இருந்து வாங்கிப் பயன்படுத்துவதால் நம்மூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவது ஒரு பக்கம். அந்நியச் செலாவணி இழப்பு இன்னொரு பெரிய பாதிப்பு.
இந்தியாவில் 135 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று வேளை சாப்பிட வேண்டும். அதற்கான உணவுச்சந்தை என்பது பிரமாண்டமானது. அதேபோல உணவைச் சார்ந்த மருத்துவச் சந்தையும் மிகப்பெரியது. உணவுக்குப் பின்னால் மிகப்பெரிய வணிகமும் சர்வதேச அளவிலான அரசியலும் இருக்கிறது. அதனால் உணவைப்பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
‘ட்ரெயிலர் எல்லாம் ஓகே... படம், பார்க்கும்படி இருக்குமா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாம் இந்தத் தொடரில் எதையெல்லாம் பேசப்போகிறோம் என்பதை இந்த இடத்திலேயே சொல்லிவிடுகிறேன். இது நல்லது, இது கெட்டது, இது ஆரோக்கியமானது என்று எதையும் ஒற்றை வரியில் உங்களுக்குப் பரிந்துரைக்கப் போவதில்லை. உணவு குறித்த நம்பிக்கைகள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
சர்க்கரை நோய் ஏன் சிலருக்கு வருகிறது; ஏன் சிலருக்கு வருவதில்லை; அந்த நோயின் உண்மையான இயல்பு என்ன; எந்தெந்த உணவில் சர்க்கரை நோய்க்கான ஊக்கிகள் அதிக அளவில் இருக்கின்றன; எவற்றையெல்லாம் குறைவாக உட்கொண்டால் சர்க்கரையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்?
புதிது புதிதாக உப்புகள் அறிமுகமாகின்றன. பொதுவாக உப்பில் என்னதான் இருக்கிறது?
எண்ணெய்களில் என்ன இருக்கிறது; அவற்றை உட்கொள்வதால் என்ன பயன்; என்ன இழப்பு?
இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப்பொருள்களையும் பகுத்தறியப்போகிறோம். நவீன உணவுகள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகள் குறித்த புரட்டுகளையும்கூட நாம் பேசலாம். உணவின் அறிவியலை மட்டுமல்ல, வரலாறு, புவியியல், கணிதம், அரசியல் என எல்லாவற்றையும் பேசுவோம்.
ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் அருண்குமார், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். குழந்தைகள் நலன், வாழ்வியல் நோய்கள், உணவுப்பழக்கங்கள் குறித்து சர்வதேச இதழ்களில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். இயல்பிலே உணவு குறித்துத் தேடல் கொண்ட இவர், உடல் பருமன், சர்க்கரை, அதீத ரத்தக் கொழுப்பு, குழந்தையின்மை போன்ற நோய்களை உணவுமுறை மூலமாகவே கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கிவருகிறார். சர்வதேச அளவில் உணவு அறிவியல், அரசியல் குறித்து மருத்துவர்களுக்கான பல்வேறு மாநாடுகளில் உரையாற்றியுள்ள இவர், பொதுவெளியில் இருக்கும் உணவு பற்றிய தவறான நம்பிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்.
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
கர்ப்ப காலத்தில்தான் ஒரு பெண் எப்போதும் சாப்பிடுவதைவிட 25-30 சதவிகிதம் வரை அதிக கலோரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், இதன் மூலமாகத்தான் கருவுக்கும் எரிசக்தி செல்கிறது. அதேபோல 25% அதிகமாகப் புரதங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். முட்டை, அசைவ உணவுகள் அல்லது சுண்டல் வகைகள் என இதை எதன் மூலமாக வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். மற்ற நாள்களைவிட கர்ப்ப காலத்தில்தான் இதை அதிகமாக சாப்பிட வேண்டும். இதனால் கரு எந்தப் பிரச்னையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாக வளரும்.
சரி, கர்ப்ப காலத்தில் இவை அனைத்தையும் சரியாகக் கடைப்பிடித்து ஆரோக்கி யமான முறையில் குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு குழந்தைக்கு என்ன மாதிரியான உணவுமுறை அவசியம்?
பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலை மட்டுமே கட்டாயம் கொடுக்கவேண்டும். இதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கிடையாது. தாய்ப்பால் என்பதை ஒரு குழந்தையின் முதல் தடுப்பூசி என்று கூறுவோம். ஏனென்றால், தாய்ப்பால் மூலம் குழந்தைகள் வெறும் சத்துகளை மட்டும் பெறுவதில்லை. அந்தக் கலோரிகளை நாம் எப்படி வேண்டுமானாலும் ஈடுகட்டிவிடலாம். தாய்ப்பாலில் ஊட்டச்சத்தைத் தாண்டி நோய் எதிர்ப்புத் திறன் தொடர்பான நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இதை ‘பேஸிவ் இம்யூனிட்டி' (Passive Immunity) என்று கூறுவோம். அதாவது 25-30 வருடங்களாக ஒரு பெண் பல்லாயிரக்கணக்கான நுண்கிருமிகளை எதிர்த்து உடலில் தேக்கிவைத்திருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தி முழுவதும் Anti-bodies வடிவில் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்குச் சென்றடைந்து பாதுகாப்பு அரணாக விளங்கும். இது வேறு எந்த பவுடர்கள் அல்லது பாலின் மூலமாகவும் கிடைக்க வாய்ப்பே இல்லை.
குழந்தைப் பிறப்புக்குப் பின் சுரக்கும் சீம்பாலில் தொடங்கி தாய்ப்பாலில் எக்கச்சக்க ஊட்டச்சத்துகளும் நோய் எதிர்ப்பு சக்திகளும் இருக்கின்றன. எனவே, தாய்ப்பால் கொடுப்பது கட்டாயம். இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. பால் போதிய அளவு சுரப்பதில்லை என சிலர் கூறுவதுண்டு. தாய்ப்பால் சரியாகச் சுரப்பதற்கு சுறாப் புட்டு சாப்பிடலாமா அல்லது எறாப் புட்டு சாப்பிடலாமா என்றெல்லாம் சிலர் கேட்பார்கள். எந்தப் புட்டும் தேவையில்லை என்றே நான் கூறுவேன். ‘ப்ரோலாக்டின்' (Prolactin), ‘ஆக்சிடோசின்' (Oxytocin) ஆகிய இரண்டு ஹார்மோன்களே தாய்ப்பால் சுரப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல லிட்டர் பாலைச் சுரக்கும் பசு எந்த ஒரு வித்தியாச உணவையும் தேடிச் சாப்பிடுவது கிடையாது. எனவே, தாய்ப்பால் சுரப்பதென்பது இயற்கையான விஷயம். குழந்தையின் பால் குடிக்கும் முறை சரியில்லாமல் இருப்பது, பழக்கமில்லாததால் தொடக்கத்தில் ஏற்படும் பிரச்னைகள், தொடக் கத்திலேயே பாட்டில் கொடுத்துப் பழக்குவதால் குழந்தைக்கு ஏற்படும் குழப்பம் எனப் பல காரணங்களால் குழந்தைகளால் சரியாகத் தாய்ப்பால் குடிக்க முடியாமல் போகலாம். குழந்தை சரியாகப் பால் குடிக்கவில்லையென்றால் அதுகுறித்த சிக்னல் தாயின் மூளைக்குச் சென்று பால் சுரக்கும் அளவு தானாகவே குறைந்துவிடும். குழந்தை பால் குடிக்காமல் இருப்பதால்தான் பால் சுரக்கும் அளவு குறையுமே தவிர, எந்தவித ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும் கிடையாது. உண்மையில், தாய்ப்பால் குறைவாகச் சுரக்கும் நிலை என்று ஒன்று மருத்துவப் புத்தகத்தில் கிடையவே கிடையாது. ஒவ்வொரு தாய்மாருக்கும் தாய்ப்பால் சுரக்கும் அளவுகளில் சிறிதளவு வித்தியாசம் இருக்குமே தவிர, குழந்தைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நிச்சயம் சுரக்கும். இதுகுறித்த ஐயம் ஏதும் இருப்பின் அருகிலுள்ள குழந்தை நல மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.
இரண்டாவது, முன்பு கர்ப்ப காலத்தில் தாய்க்கான ஊட்டச்சத்து மிகவும் முக்கியம் எனக் கூறினேன் அல்லவா? அதேபோல குழந்தை பிறந்தபின்பும் தாயின் உணவுமுறை இன்னும் முக்கியம். கிட்டத்தட்ட 500-1,000 கலோரிகள் கூடுதலாகச் சேர்த்துச் சாப்பிடவேண்டும். 30-40 கிராம் புரதங்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த உணவுகளையும் சரிவர சாப்பிட வேண்டும்.
தாய் சாப்பிடும் உணவுகள் குறித்தும் நம்மிடம் நிறைய தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன. குழந்தை அடிக்கடி அழுவது இயற்கையான ஒன்று. ஆனால் இதற்கும் தாயையே குற்றம் சாட்டுவார்கள். ‘நீ பூண்டு சாப்பிட்டாய்', ‘கீரை சாப்பிட்டாய்', ‘போண்டா சாப்பிட்டாய், அது ஜீரணமாகாததால்தான் குழந்தை அழுகிறது' என்றெல்லாம் கதை கட்டுவார்கள். இது மிகவும் தவறான விஷயம். குழந்தை அழுவதற்கும் தாய் சாப்பிடும் உணவுக்கும் பெரிதாக எந்தவிதத் தொடர்பும் கிடையாது. இயற்கையான காரணங்கள் பல இருப்பினும், தாய்ப்பால் மீதே குற்றம் சாட்டி சத்தில்லாத உணவைத் தாய்க்குத் தந்துவிடுவார்கள். தாய்க்கு எந்தச் சத்தும் கிடைக்கவில்லை என்றால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் எந்தச் சத்தும் கிடைக்காது. எனவே, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உணவில் அனைத்து சத்துகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.
இன்று பல பெண்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தாய்ப்பால் கொடுப்பதில்லை. அது நல்லதல்ல. முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பாலை மட்டுமே கொடுக்க வேண்டும். இதை ‘Exclusive Breastfeeding’ என்று கூறுவார்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு வேறு உணவுகளைக் கொடுக்கத் தொடங்கலாம். அதேநேரம் 2 வயது வரை தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். இந்தக் காலத்தில் வேறு விலங்குகளின் பால் கட்டாயமில்லை. 6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகளைத் தரலாம்
குழந்தைகளுக்குத் தாய்ப்பாலோடு இணை உணவுகளைச் சேர்த்துத் தரும்போது கவனமாக இருக்கவேண்டும். |
கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறை மற்றும் தேவையான ஊட்டச்சத்துகள் பற்றி பார்த்தோம். தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும் பேசினோம். இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்குத் தரவேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம். |
குழந்தைகளுக்கு ஆறாம் மாதத்திலிருந்து இணை உணவை (Complementary Feeding) கொடுக்கத் தொடங்க வேண்டும். குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை தாய்ப்பால் அளிப்பது நல்லது. அதுவரை மாட்டுப் பால் கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளைச் சேர்த்துக் கொடுப்பதால்தான் அவற்றை இணை உணவுகள் என்கிறோம். தாய்ப்பால் இல்லாமல் மாட்டுப்பால் அல்லது பவுடர் பாலைச் சிறு வயதிலேயே ஒரு குழந்தை குடித்து வளர்ந்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ரத்த சோகை, அலர்ஜி, வாந்தி, பேதி மட்டுமன்றி எதிர்காலத்தில் ஆஸ்துமா, ஆட்டோ-இம்யூன் நோய்கள், டைப்-1 சர்க்கரை நோய் எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால்தான் மாட்டுப்பாலை முடிந்தவரை தாமதமாகத் தொடங்குவது நல்லது எனச் சொல்கிறோம்.
குழந்தைகளுக்குத் தாய்ப்பாலோடு இணை உணவுகளைச் சேர்த்துத் தரும்போது கவனமாக இருக்கவேண்டும். முதல் விஷயம், நிறைய வகை தானியங்களை ஒரே உணவில் கலந்து கொடுத்தால் அதில் எந்த தானியம் ஒத்துக்கொள்ளாமல் போகிறது என்று அறிவது கடினம். எனவே ஒவ்வொரு தானியமாக தனித்தனியாகக் கொடுப்பது நல்லது. உதாரணத்துக்கு ராகிக்கூழ், உளுத்தங்கஞ்சி, அரிசிக்கஞ்சி... இவை ஒத்துக்கொண்டால் இவற்றோடு சிறிது பருப்பு சேர்த்துப் பருப்புக்கஞ்சி தரலாம். ஆறு மாதக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவுகள் நீர் போல் இருக்க வேண்டியது அவசியம். அவற்றை அவர்கள் எளிதில் விழுங்க இயலும். ரொம்பப் பசை போலவும் இருந்துவிடக்கூடாது.
தானியங்கள் ஒருபுறம் இருக்க, வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி போன்றவற்றை வேகவைத்து அரைத்துக் கூழ்போலக் கொடுக்கலாம். காய்கறிகளில் உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றை வேகவைத்துக் கூழாக்கித் தரலாம். நாள் ஒன்றுக்கு ஒரு வேளை, இரண்டு வேளை எனத் தொடங்கி எட்டு மாதங்கள் ஆவதற்குள் 3-4 வேளை இதுமாதிரியான உணவுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த இணை உணவுகளில் உப்பு, காரம் சேர்க்கலாமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதுகுறித்து இரண்டு விதக் கருத்துகள் நிலவுகின்றன. தாய்ப்பாலில் ஏற்கெனவே சிறிதளவு உப்பு இருக்கிறது. மேலும், குழந்தைகளின் உப்புத் தேவையும் குறைவு. எனவே, ஒரு வயது வரை உப்பு, சர்க்கரையே சேர்த்துக்கொள்ள வேண்டாம் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். இதிலிருந்து நான் சிறிதளவு மாறுபடுகிறேன். ஆறு மாதங்களில் தொடங்கி மிகச் சிறிதளவு உப்பு மற்றும் காரத்தைச் சேர்த்தால்தான் நாவின் அரும்புகள் சுவைக்குப் பழக்கப்படும். அப்படிச் செய்தால்தான் ஒரு வயதான பிறகு அவர்களை வீட்டு உணவுக்கு எளிதாகப் பழக்கப்படுத்தமுடியும். சுத்தமாகச் சேர்க்காமல் இருப்பது தவறான ஒரு மேற்கத்திய பார்வை. அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டால் போதும். உப்பு, சர்க்கரை இல்லாமல் பழக்கப்படுத்தப்படும் குழந்தைகள் நம் தினசரி வீட்டு உணவுகளைச் சாப்பிட மிகவும் கஷ்டப்படுவதைப் பார்க்கமுடிகிறது.
குழந்தைக்கு 7-8 மாதங்களான பிறகு உணவின் அளவைச் சற்று அதிகரிக்கலாம். உணவின் அளவுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. குழந்தை எவ்வளவு சாப்பிடுகிறதோ அவ்வளவு தரலாம். இன்னொரு பக்கம், உணவின் கெட்டித்தன்மையைச் சிறிது சிறிதாக அதிகரிக்க வேண்டும். இப்படிச் செய்தால், 10 மாதத்தில் ஓரளவு திட உணவை நாம் குழந்தைகளுக்குக் கொடுக்க முடியும். நிறைய வகை தானியங்களை உணவில் சேர்க்கையில் சத்து மாவையும் பழக்கப்படுத்தலாம். இதுதவிர பெரியவர்கள் சாப்பிடக்கூடிய ரச சாதம், தக்காளிக் கடைசல் சாதம், பருப்பு சாதம் எனப் பல்சுவைகளைப் பழக்கவேண்டும். 9 மாதங்கள் நிறைவடைந்ததும் நாம் வீட்டில் தினசரி செய்யும் உணவுகளை அப்படியே கொடுப்பது நல்லது. காரத்தின் அளவு வேண்டுமானால் குறைவாக இருக்கலாம்.
ஒன்பது மாதங்களுக்கு மேல் உணவுகளை மிக்சியில் போட்டு அடித்துக் கொடுப்பது தவறு. கைகளால் பிணைந்து ஊட்டினாலே போதுமானது. அதேபோல இந்தக் காலகட்டத்தில் அசைவ உணவுகளையும் தொடங்கிவிடலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டையில் முதலில் மஞ்சள் கரு, பின்னர் வெள்ளைப் பகுதியைப் பழக்கலாம். ஈரல், மீன் போன்ற மென்மையான உணவுகளையும் கொடுக்கலாம். சைவம் சாப்பிடுபவர்கள் மற்ற விதமான புரதங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் குழந்தைகள் 9-10 மாதங்களை அடையும்போது பெரியவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் ஜீரணிக்கும் திறன் பெற்று விடுகிறார்கள். எனவே, தவிர்க்க வேண்டிய உணவுகள் என்று எதுவும் கிடையாது. ஒரு வயது ஆனபிறகு அவர்களுக்கும் Family Pot Feeding-ஐ அளித்திடுங்கள். அதாவது, குழந்தைகளுக்கென்று தனியாகச் சமைக்காமல், மற்றவர்களுக்குச் சமைக்கும் உணவுகளையே தரத் தொடங்குங்கள்.
5-6 வயதான பிள்ளைகளுக்குத் தனியாகச் சமைப்பதை நம்மூரில் இப்போதும் பார்க்க முடிகிறது. இது மிகவும் தவறான போக்கு. என்னிடம் வரும் பலர் ஒன்றரை வயதான தன் குழந்தைக்கு டயட் சார்ட் கேட்பார்கள். நாம் வீட்டில் என்ன செய்கிறோமோ அதுவே குழந்தைகளுக்கான டயட் சார்ட். குறிப்பிட்ட சில பிரச்னைகள் இருந்தால் மட்டும் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அவர்களுக்கென்று எந்தச் சிறப்பு அட்டவணையும் தேவையில்லை. தாய்ப்பால் கொடுத்துவருபவர்கள் கூடவே அதையும் விடாமல் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் சுயமாக உணவு உண்பதை ஊக்கப்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியம். 8-10 வயதாகியும் பெற்றோர் ஊட்டுவதைப் பார்க்கமுடிகிறது. வெளிநாடுகளில் 9-10 மாதங்களில் இருந்தே குழந்தைக்கென்று தனியாக ஒரு சிறிய டேபிள் கொடுத்து அதில் அவர்களை அமரவைத்துவிடுகிறார்கள். பௌலில் இருந்து உணவை ஸ்பூன் கொண்டு சாப்பிடும் அக்குழந்தை ஒரு வயது ஆவதற்குள் தன் உணவைத் தானே எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை முழுமையாகப் பெற்றுவிடுகிறது. நம்மூரில் இதற்கு நேரெதிரான பழக்கம் இருக்கிறது. ஒரு வயதுக்கு மேல் ஊட்டுவதைச் சிறிது சிறிதாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். சுயமாகச் சாப்பிடப் பழக்காமல் ‘மிக்சியில் அடித்து ஊட்டிவிட்டாலும் குழந்தை சாப்பிடாமல் அடம்பிடிக்கிறது' என்று பல பெற்றோர் புகார் சொல்வார்கள்.
உப்பு, காரம் தெரியாமல் வளரும் குழந்தைக்கு ஒன்றரை வயதாகும்போது திடீரென்று சாம்பார், சட்னி கொடுத்தால் எப்படிச் சாப்பிடும்? அதேபோல மாவு போன்ற உணவுகளைச் சாப்பிட்டுப் பழகிய அவர்களால் எப்படி உடனே திட உணவுகளுக்கு மாற முடியும்? நிலாவைக் காட்டிச் சோறூட்டிய காலம் போய் இன்று மொபைலையும் டி.வி-யையும் காட்டி ஊட்டுகிறோம். குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் காண்பதற்கென்றே பல்வேறு யூடியூப் சேனல்கள் வந்துவிட்டன. அதைவைத்துதான் இன்று பெரும்பாலான தாய்கள் குழந்தைகளின் பசியாற்றுகிறார்கள். இது தவறு. இதை ‘Distraction Eating' என்று சொல்வோம். அதாவது குழந்தைகளுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தி உணவைக் கொடுப்பது. இதைப் பழக்கவே பழக்காதீர்கள். அவர்கள் உணவை அவர்களே எடுத்துச் சாப்பிடுவதுதான் ஆரோக்கியமான பழக்கம்.
குழந்தைகளின் உணவு எப்படி இருக்கவேண்டும்? எப்படி இருக்கக்கூடாது?
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் வரும் பிரச்னை, ஊட்டச்சத்து மிகுதியால் வரும் பிரச்னை... இந்த இரண்டுமே வரக்கூடாது. தேவையான கலோரிகளைக் கொடுப்பதோடு, அனைத்து சத்துகளும் சரிசமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நுண்சத்துகளுக்காகக் காய்கறிகள், கீரைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். காய்கறிகள், கீரைகளை குழந்தைகள் சரியாகச் சாப்பிடுவதில்லை என்று ஒரு புகார் உண்டு. அதை அப்படியே சமைத்துப் பொரியலாக மட்டுமே கொடுக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. குழந்தைகளின் போக்கிற்கு ஏற்றவாறு நாம் சிறிது மாறவேண்டும். தற்போது ஃபாஸ்ட் ஃபுட்டைத்தான் குழந்தைகள் விரும்புகிறார்கள். எனவே காய்கறிகள் சேர்த்த ஒரு போண்டாவோ அல்லது கட்லட்டோ செய்து தரலாம். நூடுல்ஸ்தான் பிடிக்கும் என்றால் சிறிதளவு நூடுல்ஸ் செய்து அதில் நிறைய காய்கறிகள் போட்டுக் கொடுக்கலாம். இதுபோன்ற ஜிகினா வேலைகளைப் பார்த்தால்தான் இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு நாம் சத்தான உணவுகளை அளிக்கமுடியும்.
அதேநேரத்தில் ஒட்டுமொத்தமாக நாம் கொடுக்கும் நுண்சத்துகளில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம், Junk Food என்று சொல்லப்படும் குப்பை உணவுகளுக்குக் குழந்தைகளைப் பழக்காதீர்கள். அதேபோல கூடுதல் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ள பிஸ்கட், கேக் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.
கூழ் செய்யும்போது அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரை போடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போதெல்லாம் ஒரு வயதில் இருந்தே பிஸ்கட், கேக், சிப்ஸ் போன்ற உணவுகளைக் குழந்தைகள் சாப்பிடத் தொடங்கிவிடுகிறார்கள். இதை முழுவதுமாகத் தவிர்ப்பது இயலாது. முடிந்தவரை குறைக்கலாம். அதேபோல மாவுச்சத்து மட்டும் இல்லாமல் புரதம், கொழுப்பு ஆகியவற்றையும் சரிசமமாக எடுத்துக்கொண்டால் ஊட்டச்சத்துக் குறைபாடும் வராது, மிகுதியும் ஏற்படாது. குழந்தைகளும் மிக ஆரோக்கியமாக வளர்வார்கள். இந்தச் சமன்பாடு மிகவும் முக்கியம்.
குழந்தை நல மருத்துவர்களிடம் சொல்லப்படும் பொதுவான புகார், ‘என் குழந்தை சாப்பிடவே மாட்டேன் என்கிறது' என்பதுதான். சாப்பிடாத குழந்தைகளைச் சாப்பிட வைக்க எந்த டானிக்கும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சாப்பிடுவதற்காகவோ அல்லது உடல் எடையைக் கூட்டுவதற்காகவோ டாக்டரிடம் போய் மருந்து கேட்பதைத் தவிர்த்துவிடுங்கள். அப்படிக் கேட்டால், வைட்டமின் டானிக்கையே பெரும்பாலும் டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். குழந்தை சரிவர சாப்பிடாமல் இருப்பதற்கு சிறிய வயதில் நாம் அவர்களுக்கு உணவு கொடுத்த முறையில் செய்த தவறுகள் காரணமாக இருக்கலாம். அதற்கேற்ற சில மாற்றங்களைச் செய்து ஆரோக்கிய உணவுகளை அளிக்கலாம். பசி என்பது ஓர் அடிப்படை உணர்வு. பிறந்த குழந்தையே பசியெடுத்து அழுது பால் குடிக்கும்போது, 2-3 வயதுக் குழந்தைக்கு இந்த உணர்வு எப்படி இல்லாமல்போகும்? 9 மணிக்கு உணவு கொடுத்துவிட்டு அடுத்து 12 மணிக்கு மதிய உணவு என்று நேரத்தைத் தீர்மானித்து அவர்கள் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது தவறு. அவர்களை நன்கு விளையாட விடுங்கள். மதிய சாப்பாட்டை குறிப்பிட்ட அந்த நேரத்தில்தான் கொடுக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சத்து குறையும்போது பசி தூண்டப்படும். பசியெடுத்த பிறகு சாப்பிடும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தினாலே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிடலாம்.
சில குழந்தைகளுக்கு உணவு எடுத்துக் கொள்வதில் உண்மையிலேயே சில பிரச்னைகள் இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நாம் முன்பு பார்த்த ‘Calorie Dense Foods' என்றழைக்கப்படும் ஊட்டச்சத்து அடர்த்தி உணவுகளைக் கொடுக்கலாம். குறைந்த அளவிலேயே அவர்களுக்குத் தேவையான எரிசத்து கிடைத்து எடை கூட வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்குப் பசியை அதிகரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை, அது சாத்தியமும் இல்லை. உடல்நிலை சரியில்லாதபோது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகளைக் கொடுப்பது என்ற இன்னொரு குழப்பம் நம்மிடையே உள்ளது. மேலும், இதுமாதிரி நேரங்களில் அவர்கள் முன்தினம் சாப்பிட்ட உணவுகளின் மீது பழிபோடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ‘கொய்யாப் பழத்தால் சளி பிடித்துவிட்டது', ‘முட்டை சாப்பிட்டதால் அஜீரணம் ஆகிவிட்டது' என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணத்தை வைத்திருக்கிறோம். இது தவறு. கிருமிகளால் ஏற்படும் நோய்களுக்கு நாம் உணவை வில்லனாக்குவது தவறு. அதன்பிறகு அந்தக் குறிப்பிட்ட வகை உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்காமல் தவிர்ப்பது, அதன்மூலம் கிடைக்கும் சத்தைக் கிடைக்கவிடாமல் செய்துவிடுகிறது.
இன்னொரு பக்கம், உடல்நலமில்லாதபோது உப்புச்சப்பே இல்லாத உணவுகளைத்தான் நாம் குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம். உண்மையில், உடல்நலமில்லாதபோதுதான் நம் உடலில் நிறைய புரதங்கள் உடைபடும். அக்கிருமிகளுக்கு எதிராக குழந்தைகளின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் சண்டையிடும். நோய் எதிர்ப்பு சக்திகள் என்று சொல்வதே புரதங்களைத்தான். எனவே, அந்த நேரத்தில்தான் உடலுக்குப் புரதங்கள் மற்றும் கலோரிகளின் அளவு அதிகம் தேவைப்படுகிறது. இயல்பாகச் சாப்பிடுவதைவிட அப்போது சற்று அதிகமாகச் சாப்பிட வேண்டும். அதுமாதிரி நேரங்களில் வாந்தி வருவது போன்ற உணர்வு அவர்களுக்கு இருக்கும்தான். அதற்காக அவர்களின் உணவை மொத்தமாக மாற்றுவது தவறு. இயல்பான உணவையே கொடுங்கள்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|