Latest topics
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…by ayyasamy ram Today at 11:47 am
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சருமத்தை மென்மையாக்கும் இயற்கை மாய்ஸ்சுரைசர்
Page 1 of 1
சருமத்தை மென்மையாக்கும் இயற்கை மாய்ஸ்சுரைசர்
பப்பாளியில் சருமத்தைப் பொலிவாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. சூரிய ஒளியால் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்தும். பப்பாளியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் சரும வறட்சி நீங்கும். |
#மாய்ஸ்சுரைசர் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து, பொலிவை அதிகரிக்க உதவும். ஒரு சில மாய்ஸ்சுரைசர்களில் இருக்கும் ரசாயனக் கலவைகள் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க, வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களையே மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தும் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தேங்காய் எண்ணெய், தேன்:
தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள், சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். முகப்பரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் இதை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். #தேன் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி செப்டிக் பண்புகள் முகப்பருக்களை குணமாக்கும்.
பயன்படுத்தும் முறை:
#தேங்காய்_எண்ணெய் மற்றும் தேன் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாகக் கலந்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக, ஆலிவ் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.
பாலாடை, வாழைப்பழம்:
காய்ச்சி ஆறவைத்த பாலில் இருந்து உருவாகும் '#பாலாடை' (பிரஷ் கிரீம்) சிறந்த மாய்ஸ்சுரைசிங் பண்புகளைக் கொண்டுள்ளது. பழங்காலத்தில் இருந்தே பாலாடையை சரும பராமரிப்புக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதை வாழைப்பழத்துடன் கலந்து பயன்படுத்தும்போது, அதன் பலன் இரட்டிப்பாகும்.
பாலாடை மற்றும் #வாழைப்பழம் சேர்ந்த கலவை சருமத்துக்கு ஈரப்பதத்தை மட்டுமில்லாமல் தேவையான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. கடுமையான குளிர் கால நாட்களில், சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கும் இது உதவும்.
பயன்படுத்தும் முறை:
பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து, பிசைந்து கொள்ளவும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பாலாடையை சேர்க்கவும். இதை மிருதுவான பசை போல கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமான துணியை நனைத்து முகத்தை துடைக்கவும். வாழைப்பழத்தை சேர்க்க விரும்பாதவர்கள், பாலாடையை மட்டும் பயன்படுத்தலாம்.
பப்பாளி டோனர்:
பப்பாளியில் சருமத்தைப் பொலிவாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவும். பப்பாளி, சூரிய ஒளியால் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்தும். பப்பாளியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.
பயன்படுத்தும் முறை:
ஒரு பப்பாளிப் பழத்துண்டை பொடிதாக நறுக்கவும். பின்னர் அதை மிக்சியில் போட்டு கூழாக அரைக்கவும். முகத்தை நன்றாக சுத்தம் செய்த பின்பு, பப்பாளி கூழை பஞ்சில் நனைத்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவவும்.
இவற்றை தவிர ஆலிவ் எண்ணெய், ஷியா வெண்ணெய், கற்றாழை ஜெல், அவகேடோ பழம், சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய், வெள்ளரி காய், மோர், தயிர், விளக்கெண்ணெய், ரோஜாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பன்னீர் ஆகியவற்றையும் மாய்ஸ்சுரைசர்களாக உபயோகிக்கலாம். |
Re: சருமத்தை மென்மையாக்கும் இயற்கை மாய்ஸ்சுரைசர்
பொலிவான முகத்துக்கு சார்க்கோல் ஃபேஸ் மாஸ்க்!
பல்வேறு சருமப் பராமரிப்புக்கான அழகுசாதன தயாரிப்புகளில், முக்கிய உட்பொருளாக ஆக்டிவேட்டட் சார்கோல் (கரி) சேர்க்கப்படுகிறது. இந்த ஆக்டிவேட்டட் சார்க்கோல் என்பது கரித்துண்டுகளை மிருதுவான பொடியாக்கி, அதனுடன் ஒரு பங்கு கால்சியம் குளோரைடை சேர்த்து, அதனுடன் மூன்று பங்கு தண்ணீர் கலந்து, விழுதாக்கி, அந்த விழுதை உலரவிட்டு, அது காய்ந்தவுடன், சுத்தமான தண்ணீரால் அலசி, ஓவனில் 225 டிகிரி வெப்பத்தில் 30 நிமிடங்கள் வேகவைத்து எடுப்பதே ஆக்டிவேட்டட் சார்க்கோல் ஆகும். இந்த ஆக்டிவேட்டட் சார்க்கோல் தற்போது பல்வேறு பிராண்ட்களில் ஒரு அழகு சாதனப் பொருளாக கிடைக்கிறது. இதனை வாங்கி நாம் நேரடியாக பயன்படுத்தலாம்.
சார்க்கோல் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
சுற்றுச்சூழல் மாசு, சூரிய ஒளி, புற ஊதாக் கதிர்கள், வானிலை மாற்றம், உணவுப் பழக்கம், மன அழுத்தம், உறக்கமின்மை, அழகுக்காக முகத்தில் பூசும் வேதிப்பொருட்கள் என்று பலவும் நாளடைவில் முக அழகை கெடுக்கிறது. அதிலிருந்து முகத்தை பாதுகாத்து சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்கள், அழுக்கு, எண்ணெய்ப் பிசுக்கு போன்றவற்றை உறிஞ்சி விடுகிறது. இந்த நச்சுப்பொருட்கள், சருமத்தில் இருந்து அகற்றப்படும்போது, சருமம் பளபளப்பாக, பளிச்சென்று மாறி விடும். மேலும், இளம் வயதில் ஏற்படும் முதிர்ச்சியையும் இது தடுக்க உதவுகிறது. இதனால் சருமம் இளமையான தோற்றத்தில் காணப்படும்.
சார்க்கோல் ஃபேஸ் மாஸ்க் முகத்தில் உள்ள தேவைக்கதிகமான எண்ணெய்ப் பிசுக்கை உறிஞ்சிவிடுவதால், முகத்தில் பருக்களால் ஏற்பட்ட துவாரங்களையும் குறைத்து முகத்தைப் பொலிவாக்குகிறது. சார்க்கோல் ஃபேஸ் மாஸ்குகளின் முக்கியமான பலன்களில் ஒன்று, அவை சிறந்த ஆன்டிபாக்டீரியல் பண்புகள் கொண்டவை. அவை சிறந்த ஆன்டிமைக்ரோபியல் பொருளாகவும் செயல்படக்கூடியவை என்பதே.
இதன் பொருள், சருமத்தில் ஏதேனும் நோய்த்தொற்றுகள், பாக்டீரியா அல்லது கிருமிகள் இருந்தால் அவையும் சார்கோல் ஃபேஸ் மாஸ்கைப் பயன்படுத்தும்போது அழிக்கப்படும். முகத்தில் ஏதேனும் தடிப்புகள் இருந்தால் அல்லது பூச்சிக் கடி இருந்தால், ஆக்டிவேட்டட் சார்க்கோல் ஃபேஸ்மாஸ்க் மட்டுமே அவற்றை சரிசெய்ய பல நேரங்களில் போதுமானதாக இருக்கும்.சார்க்கோல் ஃபேஸ்மாஸ்க்கை வாரத்தில், இரண்டுமுறை பயன்படுத்தலாம். ஆனால், வறண்ட அல்லது செதில்களாக உதிரும் சருமம் இருப்பவர்கள், இதனை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.
நன்றி குங்குமம் டாக்டர்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» சருமத்தை மென்மையாக்கும் "நேச்சுரல் பட்டர்ஸ்"!!!
» சருமத்தை மென்மையாக்கும் ரோஸ் சுகர் ஸ்கிரப்
» களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க இயற்கை வைத்தியம்
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
» சருமத்தை பாதுகாக்க..
» சருமத்தை மென்மையாக்கும் ரோஸ் சுகர் ஸ்கிரப்
» களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க இயற்கை வைத்தியம்
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
» சருமத்தை பாதுகாக்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|