புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_m10ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2023 9:22 pm

ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் QOMUCoL

அஹோபிலம் என்ற திவ்ய தேசத்தில் ஆதிசங்கரர் இயற்றிய ‘ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்ப’ ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் நாம் எதிரிகள் பகை நீங்கி, நிம்மதியான, வளமான வாழ்க்கை அமையப் பெறுவோம்:



ஸ்ரீமத் பயோநித நிகேதன சக்ரபாணே
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



திவ்யமான பாற்கடலில் பள்ளி கொண்ட சக்ரபாணியே! ஆதிசேஷனின் உடல் ஒளிபொருந்திய மணிகளாக ஒளிர அந்த ஒளியின் நிறத்தை மேற்கொண்ட பேரழகுத் திருமேனி கொண்டவரே, கனிந்த முனிவர்களுக்கும், அடைக்கலம் என்று உமை அடைந்த பக்தருக்கும் நிரந்தர சரணாகதி அளிக்க வல்லவர் நீரே அல்லவா! வாழ்க்கை எனும் பெருங்கடலைக் கடக்க பாதுகாப்பான படகாக அருள்புரியும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மனே, என் கரம் பற்றி தூக்கிவிட்டு அருள வேண்டும்.

ப்ரஹ்மேந்த்ரருத்ர மருதர்க கிரீட கோடி
ஸங்கட்டிதாங்க்ரிகமலாமல காந்திகாந்த
லக்ஷ்மீ லஸத்குசஸரோருஹ ராஜஹம்ஸ
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



பிரம்மா, இந்திரன், ருத்ரன், மருதர்கள், சூரியன் ஆகியோர் தம் கிரீடங்கள் தங்கள் பாதம் பட வணங்க விரும்பும் பேரழகுத் தாமரைகளையே திருவடிகளாகக் கொண்ட பெருமாளே! எழில் மிகுந்தவரே, லக்ஷ்மியின் மார்பகங்களாகிய தாமரை மீது உறையும் ராஜ அன்னம் போன்றவரே, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மனே, என் கரம் பிடித்து என்னை முன்னேற்ற வேண்டுகிறேன்.

ஸம்ஸார தாவதஹனா குல பீகரோரு
ஜ்வாலாவலீபி ரதிதக்ததனூருஹஸ்ய
த்வத்பாத பத்ம ஸரஸீம் சரணாககதஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



வாழ்க்கை என்பது ஒரு பெரிய காட்டுத் தீயாக, பயங்கரமானதாகத் தோன்றி என்னைப் பொசுக்கி, திகைக்க வைத்து, குழப்பத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. அதிலிருந்து விடுபட குளிர்ச்சி பொருந்திய உமது திருவடியாகிய குளத்தை நான் நாடி வந்துள்ளேன். எனக்கு கை கொடுத்து உதவி, என்னை மேம்படுத்துமாறு வேண்டுகிறேன்.

ஸம்ஸார ஜால பதிதஸ்ய ஜகத் நிவாஸ
ஸர்வேந்த்ரியார்த்த படிசாக்ரஜஷோபமஸ்ய
ப்ரோத்கம்பித ப்ரசுரதாலுக மஸ்தகஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



அனைத்து உலகையும் ஆளும் உத்தம புருஷரே, ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா, அனாவசிய புறக் காரணங்களுக்காக, வாழ்க்கை எனும் பெருங் கடலில் தூண்டில் நுனியிலுள்ள இரையைத் தேடி வந்து சிக்கிக்கொண்டு துவளும் மீன் போன்றவனாக நான் தவிக்கிறேன். என் உடலே நடுங்குகிறது. என்னைக் கைப்பற்றி கரை சேர்ப்பாயா பெருமாளே!

ஸம்ஸார கூட மதிகோர மகாத மூலம்
ஸம்ப்ராப்யது:கசதஸர்ப ஸமாகுலஸ்ய
தீனன்ய தேவ க்ருபயா பதமாகதஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



மிகவும் ஆழமான, அதி பயங்கரமான உலக வாழ்க்கை என்ற பாழுங்கிணற்றில் வீழ்ந்திருக்கிறேன். என்னை நூற்றுக்கணக்கான துன்பப் பாம்புகள் சூழ்ந்து கொண்டு அச்சுறுத்துகின்றன. நான் உம்மையே நாடி வந்திருக்கிறேன். என்னைக் கை தூக்கி காத்தருள வேண்டும், ஐயனே.

ஸம்ஸார பீகர கரீச கராபிகாத
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷஸ் ஸகலார்த்திநாச
ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



மதங்கொண்ட கொடிய யானையைப் போன்றது என் வாழ்க்கை அந்த யானையின் துதிக்கையால் அடிபட்டு உடல் நசிந்தவனாக நான் நிற்கிறேன். உயிர்போகும் தருவாய் இது, உலகியல் துன்பமும் மிகுந்திருக்கிறது. என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துத் தவிக்கும் என்னை, லக்ஷ்மி நரசிம்மரே, நீதான் கை தூக்கிவிட வேண்டும். அனைவரது துன்பத்தையும் போக்கவல்லவரல்லவா நீங்கள்!

ஸம்ஸாரஸர்ப விஷதிக்த மஹோக்ரதீவ்ர
தம்ஷ்டாக்ர கோடி பரிதஷ்ட விநஷ்டமூர்தே
நாகாரிவாஹன ஸுதாப்தி நிவாஸ சௌரே
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



விஷம் தோய்ந்த கொடிய பல்லைக் கொண்டிருக்கும் வாழ்க்கையென்னும் பாம்பினால் கடிக்கப்பட்டு தவிக்கிறேன். அழியவிருக்கும் சரீரத்தைக் கொண்டிருக்கும் எனக்கு, கருட வாகனரே, அம்ருதக் கடலில் மிதந்து ஆனந்திப்பவரே, லக்ஷ்மி நரசிம்மா, என்னைக் கை கொடுத்து காப்பாற்ற வேண்டும்.

ஸம்ஸாரவ்ருக்ஷ மகபீஜ மனந்தகர்ம
சாகாயுதம் கரணபத்ர மனங்கபுஷ்பம்
ஆருஹ்ய து:க பலிநம் பததோ தயாலோ
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



வாழ்க்கை என்பது ஒரு மரம், அது பாபங்களை விதையாகக் கொண்டது. கணக்கில்லாத கர்மாக்களாகிய கிளைகளையும், புறக்கரணங்களாகிய இலைகளையும், காமமாகிய புஷ்பத்தையும், துன்பமாகிய பழங்களையும் கொண்டது. அதன் மீது ஏறி, தடுமாறி கீழே விழ இருக்கிறேன். தயாபரனே, லக்ஷ்மி நரசிம்மா, என் கரம் பற்றி என்னைக் காக்க வேண்டும்.

ஸம்ஸாரஸாகர விசால கரால கால
நக்ரக்ரஹ க்ரஸித நிக்ரஹ விக்ரஹஸ்ய
வ்யக்ரஸ்ய ராக நிசயோர்மி நிபீடிதஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



வாழ்க்கை எனும் பெருங்கடலில் பயங்கரமான காலம் என்ற முதலையால் பிடிக்கப்பட்டிருக்கிறேன். எப்படியாவது அதனிடமிருந்து தப்பிக்க வேண்டுமே என்று திகைத்து நிற்கிறேன். முதலை தவிர பற்று, பாசம் ஆகிய பேரலைகளாலும் நான் அலைக்கழிக்கப்படுகிறேன். என்னைக் கை கொடுத்து தூக்கிவிட வேண்டும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மா.

ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந முஹ்யமானம்
தீனம் விலோகய விபோ கருணாநிதே மாம்
ப்ரஹ்லாத கேத பரிஹாரக்ருதாவதார
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



ஸம்ஸாரமாகிய கடலில் மூழ்கி மயக்கமும் துன்பமும் அடைந்திருக்கிறேன்.கருணைக் கடலே, என்னை நீர்தான் காப்பாற்ற வேண்டும். அரியன புரிவதில் வல்லவரே, பிரஹலாதனின் துயரைப் போக்கவே அவதரித்தவரே, லக்ஷ்மி நரசிம்மா, எனக்கு கை கொடுத்து காத்தருள்வீர்  ஐயா.

ஸம்ஸாரகோரகஹநே சரதோ முராரே
மாரோக்ரபீகர ம்ருக ப்ரசுரார்திதஸ்ய
ஆர்தஸ்ய மத்ஸர நிதாக ஸுது:கிதஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



வாழ்க்கை என்பது கொடியதொரு காடு. அதில் அலைந்து திரிந்து தவிக்கிறேன். காமம் என்ற பயங்கரமான மிருகத்தால் பெருந்துன்பம் அடைந்திருக்கிறேன். அது மட்டுமா பொறாமை, கர்வம் ஆகிய சுடு வெயிலும் என்னை வாட்டி வதைக்கின்றனவே! இவ்வளவு துயரங்களை அனுபவிக்கும் என்னை, லக்ஷ்மி நரசிம்மா, கை கொடுத்து, அரவணைத்து காப்பாய் அப்பா.

பைத்வா கலே யமபடா பஹு தர்ஜயந்த:
கர்ஷத்தி யத்ர பவபாசசதைர்யுதம் மாம்:
ஏகாகிநம் பரவசம் சகிதம் தயாலோ
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



யம தூதர்கள் கயிற்றால் என் கழுத்தைக் கட்டி அதட்டியபடி இழுத்துச் செல்கிறார்கள். ஆனால், ஸம்ஸார பாசங்களோ என்னைப் பின்னோக்கி இழுக்கின்றன. நான் தன்னந்தனியனாக நிற்கிறேன். பிறருக்கு அடிமைப்பட்டும் ஒடுங்கி, நடுங்கி பெருந்துன்பம் அனுபவித்துக்கொண்டும் இருக்கிறேன். லக்ஷ்மி நரசிம்மரே, தயை நிறைந்தவரே, எனக்குக் கைகொடுத்து காத்தருளுங்கள் பரம்பொருளே.

லக்ஷ்மீபதே கமலநாப ஸுரேச விஷ்ணோ
யஜ்ஞேச யஜ்ஞ மதுசூதன விச்வரூப
ப்ரஹ்மண்ய கேசவ ஜனார்தன வாஸுதேவ
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



மஹாலக்ஷ்மியின் திருக்கணவரே, கமல நாபி உடையவரே, பேரழகரே, மஹாவிஷ்ணுவே,  ஆன்றோர் வளர்க்கும் யக்ஞங்களைப் பாதுகாப்பவரே, யாகமாகியும் நிற்பவரே, மது என்ற அரக்கனை அழித்தவரே, உலகே வடிவானவரே, வேதங்களை நேசிப்பவரே, கேசவா, ஜனார்த்தனா, வாஸுதேவா, லக்ஷ்மி நரசிம்மா, என்னை கை தூக்கி விடுங்கள் பரமாத்மாவே.

ஏகேந சக்ரமபரேண கரேண சங்கம்
அந்யேந ஸிந்து தநயா மவலம்ப்ய திஷ்டன்
வாமேதரேண வரதாபய பத்மசிஹ்நம்
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



ஒரு கரத்தால் சக்கரத்தையும், மற்றொரு கரத்தால் சங்கையும், இன்னொரு கரத்தால் லக்ஷ்மியை அரவணைத்தும், வலது கையில் வரத-அபய முத்திரை தாங்கியவாறும் காட்சிதரும் லக்ஷ்மிநரசிம்மா, என்னை ஒருபோதும் கை விட்டுவிடாதீர்கள்.

அந்தஸ்ய மே ஹ்ருதவிவேக மஹாதனஸ்ய
சோரைர்மஹா பலிபிரிந்த்ரிய நாமதேயை:
மோஹாந்தகார குஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



நான் பார்வையற்றவனாகி விட்டேன். மிகுந்த பலம் வாய்ந்த புறக்காரணங்கள் என்ற திருடர்கள் எனது விவேகம் என்ற பெரும் செல்வத்தைக் களவாடி விட்டனர். இதுபோதாதென்று மோஹம் என்ற பேரிருள் சூழ்ந்த குகையில் தள்ளப்பட்டும் வேதனைப்படுகிறேன். லக்ஷ்மி நரசிம்மா எனக்கு கைகொடுத்து காப்பாற்றுங்கள்.

ப்ரஹ்லாத நாரத பராசரபுண்டரீக
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ
பக்தானு ரக்த பரிபாலன பாரிஜாத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்



பிரஹலாதன், நாரதர், பராசரர், புண்டரீகர், வியாஸர் முதலிய பரம பக்தர்களின் இருதயத்தில் வசிப்பவரே, பக்தர்களையும், உம்மை நேசிப்பவர்களையும் பாதுகாப்பதில் பேரார்வம் கொண்டவரே, லக்ஷ்மிநரசிம்மா, எனக்கு கை கொடுத்து, பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்.

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ சரணாப்ஜ மதுவ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருதம் சுபகரம் புவி சங்கரேண
யே தத்படந்தி மனுஜா ஹரிபகத்தியுக்தா:
தே யாந்தி தத்பதஸரோஹமகண்ட ரூபம்



லக்ஷ்மி நரசிம்மரின் திருவடித் தாமரைகளில் மொய்க்கும் தேனியாக இருக்கும் நானாகிய இந்த சங்கரனால் இயற்றப்பட்ட இந்த மங்களகரமான ஸ்தோத்திரத்தை பக்தியுடன் படிப்பவர் அனைவருமே ஸ்ரீமந் நாராயணனின் திருவடித் தாமரையை தொல்லை எதுவுமின்றி அடைவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக