புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
75 Posts - 54%
heezulia
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
70 Posts - 53%
heezulia
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சந்திரயான்-3  - Page 2 Poll_c10சந்திரயான்-3  - Page 2 Poll_m10சந்திரயான்-3  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரயான்-3


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 20, 2023 2:36 pm

First topic message reminder :

சந்திரயான்-3 ஆரம்ப கட்ட சோதனை வெற்றி: இஸ்ரோ



சந்திரயான்-3  - Page 2 Isroro10

இந்தியாவின் நிலவு பயணத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலமானது பெங்களூருவிலுள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த சோதனையானது கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெற்றதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.

மின்காந்த குறுக்கீடு மற்றும் மின்காந்த இணக்கத்தன்மை சோதனையானது, விண்வெளி சூழலில் செயற்கைக்கோள் துணை அமைப்புகளின் செயல்பாடு மற்றும் எதிர்பார்க்கப்படும் மின்காந்த நிலைகளுடன் அவற்றின் இணக்கத்தன்மையை உறுதிப்படுத்தும் பணிகளுக்காக இது நடத்தப்பட்டது.

இந்த சோதனையானது செயற்கைக்கோள்களை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் என இஸ்ரோ கூறியுள்ளது. அதே வேளையில் சந்திரயான்-3 இன்டர்பிளானட்டரி மிஷன் உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று முக்கிய தொகுதிகளை கொண்டுள்ளது.

இந்த பணி சிக்கலானதும், மேலும் தொகுதிகளுக்கு இடையே உள்ள ரேடியோ-அதிர்வெண் (ஆர் எஃப்) தொடர்பு இணைப்புகளை நிறுவுவதற்கான பணியை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2 இல் ஏற்பட்ட பிரச்னைகள் இதில் இருக்காது என்றும், சந்திராயன் 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை முன்னெடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைப்புகளின் செயல்திறன் திருப்திகரமாக இருப்பதாக இந்திய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 10, 2023 9:19 pm

சந்திரயான் 3 விண்கலம் எப்படி இருக்கும்?


சந்திரயான்-3  - Page 2 135781a0-1f0a-11ee-941e-23d1e9ab75fa

இந்த விண்கலத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. அதில் முதல் பகுதி ஒரு பொம்மை கார் போல இருக்கும். அதற்கு ஊர்திக்கலம்(Rover) என்று பெயர். இந்த ஊர்திக்கலம் அதன் நகர்வு மற்றும் இயக்கத்தின்போது, நிலவின் மேற்பரப்பில் ரசாயன பகுப்பாய்வை மேற்கொள்ளும்.

இந்த ஊர்திக்கலம், தரையிறங்கிக் கலம்(Lander) எனப்படும் இரண்டாவது பகுதியின் வயிற்றுக்குள் இருக்கும். இது நிலவின் தரைப்பரப்பில் மென்மையாக, பாதிப்பு ஏதுமின்றி தரையிறங்கி, அதன் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே அனுப்பும்.

இந்த இரண்டும் சேர்ந்து, மூன்றாவது பகுதியான உந்துக்கலம்(Propulsion unit) என்ற பகுதியின் தலைக்கு மேலே இருக்கும். இந்தப் பகுதிதான், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 100 கி.மீ தொலைவு வரைக்கும் தரையிறங்கி கலம், ஊர்திக்கலம் இரண்டையும் கொண்டு செல்லும்.

இந்த மூன்றும் சேர்ந்ததுதான் விண்கலம். இந்த அமைப்பைக் கொண்ட சந்திரயான் 3 விண்கலம்தான், எல்.வி.எம் 3 என்ற ராக்கெட்டின் தலைக்குமேல் ஒரு கலசம் போல் தெரியும் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும்.

உச்சியில் உள்ள கூம்பு போன்ற பகுதி திறந்து, சந்திரயான் 3 விண்கலம் விண்வெளியை அடைந்த பிறகு வெளியே வரும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 10, 2023 9:20 pm


சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவுவது எப்படி?


சந்திரயான்-3  - Page 2 64f2d7a0-1f08-11ee-941e-23d1e9ab75fa

விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்குச் சென்றதும், விண்வெளியில் அதற்கு ஓர் உந்துதலை வழங்குவார்கள்

முந்தைய சந்திரயான் விண்கலங்களை சுமந்து சென்ற ராக்கெட்டுகளை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 என்று அழைத்தார்கள். தற்போது சுமந்து செல்லும் ராக்கெட்டுக்கு எல்.வி.எம் 3 என்று இஸ்ரோ பெயரிட்டுள்ளது.

இந்த ராக்கெட் மூன்று அடுக்குகளைக் கொண்டது. அதன் இருபுறமும் இரண்டு தூண்களைப் போல் தெரிவது S200 இன்ஜின். அவற்றில் திட எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும்.

இரண்டுக்கும் நடுவே பெரிய ஒற்றைத் தூணாக இருப்பது, திரவ எரிபொருள் கொண்ட இன்ஜின். அதன் பெயர் L110.

அதற்கு மேலே தெரியும் இரண்டு கருப்பு பட்டைகளுக்கு இடையில்தான் உறைகுளிர் இன்ஜின் (Cryogenic Engine) இருக்கிறது.

உறைகுளிரில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் இரண்டுமே தண்ணீரை போன்ற திரவமாக மாறிவிடும். அந்த இரண்டையும்தான் அதில் வைத்துள்ளார்கள். அவைதான் அதில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும்.

அதற்கும் மேலே கலசம் போல் இருக்கும் இடத்தில்தான் விண்கலம் இருக்கும். இந்த இன்ஜின்கள் ஒவ்வொன்றாக எரிந்து ராக்கெட் விண்வெளிக்குச் செல்லும்.

முதலில், திட எரிபொருள் இன்ஜின்கள் எரிந்து ராக்கெட்டை மேலெழும்பச் செய்யும். அதன் வேலை முடிந்ததும் அது கழன்று கீழே விழுந்துவிடும். இரண்டாவதாக, திரவ எரிபொருள் எரிந்து இன்னும் உயரச் செல்ல உதவும். அதன் வேலை முடிந்ததும் அதுவும் கழன்றுவிடும். இந்த இரண்டின் செயல்பாடும் ராக்கெட்டை விண்வெளிக்குக் கொண்டு சென்றுவிடும்.

பிறகு விண்வெளியில், உறைகுளிர் இன்ஜின் தனது வேலையைச் செய்யும்.

இந்தச் செயல்முறைகளின் மூலமாக எல்.வி.எம் 3 ராக்கெட், பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிறுத்தும். அதுதான் முதல் கட்டம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 10, 2023 9:22 pm

விண்வெளிக்குச் சென்ற பிறகு என்ன நடக்கும்?


விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்குச் சென்றதும், விண்வெளியில் அதற்கு ஓர் உந்துதலை வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து, விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்.

அந்த நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ தூரத்தில் விண்கலம் இருக்கும். அதுவே தொலைவில் இருக்கும்போது, 36,500 கி.மீ. தூரத்தில் இருக்கும்.

விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தை இந்தப் பாதையில் சுற்ற வைப்பதுதான் இரண்டாவது கட்டம்.

புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைப்பது எப்படி?


அடுத்ததாக, புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைத்தால் மட்டும் போதாது, அந்தப் பாதையில் பூமிக்கு நெருக்கமான தூரத்தில் இருந்து, நெடுந்தொலைவுக்கு விண்கலத்தைத் தள்ளிவிட்டால்தான், நிலவின் சுற்றுப்பாதைக்கு அதைக் கொண்டுசெல்ல முடியும். அதுதான் மூன்றாவது கட்டம்.

இதை ஓர் எடுத்துக்காட்டு மூலம் எளிமையாக விளக்கலாம். தினசரி வீடுகளுக்கு நாளிதழ்களை விநியோகிப்பவரை சான்றாக எடுத்துக்கொள்வோம்.

அவர் ஒரு கட்டடத்தின் தரைத் தளத்தில் இருக்கும் வீட்டிற்கு நாளிதழைப் போடும்போது இயல்பாக கையை வீசி கதவுக்குள் எறிந்துவிடுவார். அதுவே வீடு இரண்டாவது மாடியில் இருந்தால், இரண்டாவது மாடிக்கே சென்று கொடுக்கமாட்டார், அதையும் கீழிருந்துதானே வீசுவார். அப்போது, தரைத்தள வீட்டிற்குள் நாளிதழை வீசும்போது எடுத்துக்கொண்ட ஆற்றலைவிட அதிக ஆற்றலைச் செலவழித்து, கையை நன்றாகச் சுழற்றி வீசுவார். நாளிதழ் இரண்டாவது மாடியில் வந்து விழும்.

இதேபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்தி தான் #சந்திரயான் 3 விண்கலமும் நிலவுக்குச் செல்லப் போகிறது.

இந்த மூன்றாவது கட்டத்தை ‘பாதை உயரம் உயர்த்து கட்டம்(Orbit raising)’ என்பார்கள். அதாவது விண்கலம் பயணிக்கும் சுற்றுப்பாதையின் உயரத்தை உயர்த்திக்கொண்டே போக வேண்டும்.

அப்படி உயரத்தை உயர்த்துவதற்கு, விண்கலம் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தில், அதாவது 170 கி.மீ தொலைவுக்கு ராக்கெட் வந்ததும், அதை எரித்து உந்துவிசை கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது முந்தைய சுற்றில் இருந்ததைவிட இன்னும் கூடுதலான உயரத்திற்கு விண்கலம் தள்ளப்படும்.

அதேபோல் ஒவ்வொரு முறை சுற்றுவட்டப் பாதையில் புவிக்கு நெருக்கமான தொலைவுக்கு வரும்போதும் ராக்கெட்டை தொடர்ந்து எரித்து உந்துவிசை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படியாக சுமார் 20 நாட்களுக்கு பாதையை விண்கலத்தின் உயர உயர உயர்த்தும் வேலையைச் செய்வார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 10, 2023 9:24 pm

சந்திரயான் 3 விண்கலம் பாதை மாறிவிடாமல் தடுக்க வேண்டும்


நான்காவது கட்டம் மிகவும் சுவையானது. பூமி, நிலா இரண்டையும் கற்பனையாக ஒரு நேர்கோட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இதில், பூமிக்கும் ஈர்ப்புவிசை உள்ளது, நிலவுக்கும் குறிப்பிட்ட அளவிலான ஈர்ப்புவிசை உள்ளது.

அப்படியென்றால், இரண்டுக்கும் இடையே ஏதாவது ஒரு புள்ளியில் பூமியின் ஈர்ப்புவிசையும் நிலவின் ஈர்ப்புவிசையும் சரிசமமாக இருக்கவேண்டும். அந்த சம ஈர்ப்பு விசைப் புள்ளி, நிலவில் இருந்து சுமார் 62,630 கி.மீ தொலைவில் இருக்கிறது.

அந்தப் புள்ளிக்கு சந்திரயான் 3 விண்கலத்தைச் செலுத்துவதான் நான்காவது கட்டம்.

ஆனால், இது அவ்வளவு எளிதானதல்ல. இதை மிக மிகத் துல்லியமாகச் செய்யவேண்டும். அதற்குத்தான் ஐந்தாவது கட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதாவது, அந்த சம ஈர்ப்புவிசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி மாறாமல் இருக்க, அந்தப் பிசிறுகளைச் சரிசெய்துகொண்டே இருக்கவேண்டும். இதுதான் ஐந்தாவது கட்டம்.

புவியின் ஈர்ப்புவிசைப் பிடியில் இருந்து சந்திரயான் 3 விடுபட வேண்டும்


சந்திரயான் 3 விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்போதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாகத் தூரத்தை அதிகரித்து தொலைவாகச் செல்கிறது. ஆரம்பத்தில் கூறிய இரண்டாவது, மூன்றாவது கட்ட செயல்முறைகள் அப்படி பூமியை விட்டு தூரமாகச் செல்ல மட்டும்தான் வழி வகுத்தன.

ஆனால் பூமியைவிட்டுத் தொலைவாகச் சென்றுகொண்டிருந்தாலும், விண்கலம் பூமியின் ஈர்ப்புவிசைப் பிடியில்தான் இன்னமும் இருக்கிறது.

இப்போது பூமியை சுற்றி வந்த விண்கலத்தை, நான்காவது, ஐந்தாவது கட்ட செயல்முறைகளின் மூலமாக பூமிக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள சம ஈர்ப்புவிசைப் புள்ளிக்கு விண்கலத்தை அனுப்பிவிட்டோம். ஆனாலும், அது இன்னமும் பூமியுடைய ஈர்ப்புவிசைப் பிடியில்தான் இருக்கிறது.

ஆகவே மேல்நோக்கி வீசிய கல் கீழே விழுவதைப் போல், அந்த சம ஈர்ப்புவிசைப் புள்ளிக்குச் சென்ற விண்கலம் மீண்டும் பூமியை நோக்கித் திரும்பிவிடக்கூடும்.

இந்த நிலையில், அந்தப் புள்ளிக்குச் சென்றதும் அங்கிருந்து உந்துவிசை கொடுத்து அதைத் தள்ளிவிட்டால், அதுவரைக்கும் அது இருந்த புவியின் ஈர்ப்புவிசைப் பிடியிலிருந்து விடுபட்டு, நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் சென்றுவிடும். இதுதான் ஆறாவது கட்டம்.

நிலாவின் நீள்வட்டப் பாதையில் விண்கலத்தை எப்படி செலுத்துவது?


ஆறாவது கட்டத்தின் முடிவில், சந்திரயான் 3 நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் வந்துவிடுகிறது. இப்போது, அதை நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், நிலவுக்கு அருகில் சென்றுவிட்டு பிறகு விலகி விண்வெளியில் சென்றுவிடும்.

அப்படிச் சென்றுவிடாமல், அதை நெறிப்படுத்தி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும்.

அந்த நேரத்தில் விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100கி.மீ தொலைவில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிறுத்தவேண்டும். அப்படிக் கொண்டுவந்து, அதே தொலைவில் நிலவைச் சுற்றி வட்டமாகச் சுற்ற வைப்பதுதான் எட்டாவது கட்டம்.

விண்கலத்தில், உந்துகலம், தரையிறங்கி கலம் என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. இதில் உள்ள தரையிறங்கி கலத்தில்தான் ஊர்திக்கலமும் அமைந்துள்ளது. இவற்றை அப்படியே தரையிறக்க முடியாது. உந்துகலத்தையும் தரையிறங்கி கலத்தையும் பிரிக்க வேண்டும்.

அப்படிப் பிரித்து, தரையிறங்கி கலத்தை அதிகபட்சமாக 100 கி.மீ முதல் குறைந்தபட்சமாக 30 கி.மீ வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 10, 2023 9:24 pm

நிலாவில் சந்திரயான் 3 எப்படி தரையிறங்கும்?


இதுவரை நாம் பார்த்த எட்டு கட்ட செயல்முறைகளை வெற்றிகரமாகக் கடந்த பிறகுதான், இந்த முயற்சியிலேயே மிக முக்கியமான சவால் தொடங்குகிறது.

நிலாவில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்குவதுதான் அந்தச் சவால்.

இந்த ஒன்பதாவது கட்ட செயல்முறை எடுத்துக்கொள்ளும் நேரம், வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அந்தப் பதினைந்து நிமிடங்களில்தான் இந்த முழு திட்டமும் வெற்றி பெறுமா இல்லையா என்பதே அடங்கியுள்ளது.

இருப்பதிலேயே மிகவும் கடினமான அம்சம் இதுதான். கடந்த முறை #சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததும் இந்த இடத்தில்தான்.

இதற்காக, தரையிறங்கி கலத்தின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து, தரையிறங்கி கலத்தை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும்.

கடந்த முறை சந்திரயான் 2 திட்டத்தின்போதும் எட்டாவது செயல்முறை வரைக்கும் இதேபோலத்தான் சென்றது. ஆனால், ஒன்பதாவது கட்டத்தில் தரையிறங்கி கலத்தை நிலவின் தரைப்பரப்பில் இறக்கும்போதுதான் தவறு நிகழ்ந்து, தரையிறங்கி கலம் மெதுவாக இறங்காமல், கீழே விழுந்து உடைந்துவிட்டது.

ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள். ஆகவே, பத்திரமாகத் தரையிறங்கும் என்று நம்புகிறார்கள்.

இந்தத் திட்டத்தின் இறுதிக்கட்டமாக, தரையிறங்கி கலத்தின் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே எடுத்து நிலாவின் தரையில் இயக்கவேண்டும். அதற்கு, தரையிறங்கி கலம் நிலவின் தரையில் இறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப் போல் திறந்து கீழ்நோக்கி இறங்கும்.

அந்த சாய்வுப் பலகையின் வழியே உருண்டு இறங்கி, நிலவின் தரையில் தடம் பதிக்கும் ஊர்திக்கலம் தனது வேலையைத் தொடங்கும். இதுதான் பத்தாவது கட்டம்.

இந்த பத்து கட்டமும் கச்சிதமாக நடந்தால் மட்டுமே சந்திரயான் 3 திட்டம் முழு வெற்றியைப் பெறும். இந்த நீண்ட பயணத்திற்கான முதல் அடி வரும் ஜூலை 14ஆம் தேதியன்று தொடங்குகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 10, 2023 9:25 pm



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 10, 2023 10:15 pm

விஞானிகளின் அர்பணிப்பிற்கு வெற்றி பெற வாழ்த்துகள்.






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 13, 2023 6:31 pm

சந்திரயான்-3: உதிரிபாகங்களை வழங்கிய எல்&டி நிறுவனம்



#சந்திரயான்-3 விண்கலத்திற்கு பல்வேறு உதிரிபாகங்களை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் வழங்கியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

போவாயில் உள்ள தொழிற்சாலையில், 'மிடில் செக்மென்ட் மற்றும் நாசில் பக்கெட் பிளேஞ்ச்' போன்ற உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டதாகவும், தரை மற்றும் விமான தகடுகள் போன்ற உதிரிபாகங்கள் கோவையில் உள்ள ஏரோஸ்பேஸ் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எல்&டி டிஃபென்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரும், தலைவருமான ராம்சந்தனி பேசுகையில், விண்வெளித் துறை இந்தியத் தொழில்துறைக்கு திறக்கப்பட்டு வருகின்ற நிலையில், இஸ்ரோவுடனான இந்த நீண்ட கால தொடர்பால், எதிர்காலத்தில் விண்வெளித் திட்டங்களில் நாங்கல் பெரிய பங்கை வகிப்போம்.

இஸ்ரோவின் #சந்திரயான் -1 மற்றும் 2, ககன்யான் மற்றும் மங்கள்யான் திட்டங்களுக்கான பலவிதமான மென்பொருள் தயாரிப்பிலும் எல்&டி ஈடுபட்டது என்றார்.

இந்தியாவின் சந்திரயான்-3, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில் இருந்து ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 13, 2023 7:16 pm

சந்திரயான்-3 வெள்ளிக் கிழமை ஏவப்படும்: இரண்டு நிலவு பயணங்களின் ஒப்பீடு



இந்தியாவின் மூன்றாவது நிலவுப் பயணம் (சந்திரயான்-3) வெள்ளிக்கிழமை மதியம் 2:35 மணிக்கு புறப்படும். முந்தைய நிலவுப் பயணங்களால் சாதிக்க முடியாததை, அதாவது சந்திரனின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறக்கி, அதை ரோவர் மூலம் ஆராய்வதை இந்த மிஷன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சந்திரனின் மேற்பரப்பில் ஒரு வெற்றிகரமான சாஃப்ட் லேண்டிங், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடாக இந்தியாவை மாற்றும். 2019 இல் இஸ்ரேல் மற்றும் இந்தியாவிலிருந்து சென்ற பயணங்கள் விபத்துக்குள்ளான பிறகு, ஜப்பானில் இருந்து லேண்டர்-ரோவர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஒரு ரோவரை ஏற்றிச் சென்ற விண்கலம் 2022 இல் தோல்வியடைந்த நிலையில் இந்த நான்காவது இடம் காலியாக உள்ளது.

மிஷனின் நோக்கங்கள் அப்படியே இருந்தாலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ – ISRO) விஞ்ஞானிகள் முந்தைய மிஷனிலிருந்து கற்றுக்கொண்டனர். தரையிறங்கும் இடத்தை அடைய இயலாமை, எலக்ட்ரானிக்ஸ் அல்லது சென்சார்களின் செயலிழப்பு, வேகம் தேவைக்கு அதிகமாக இருப்பது போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க, தொடர்ச்சியான சோதனைகளுக்குப் பிறகு லேண்டரின் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

மிஷன்


வெள்ளியன்று 179 கி.மீ உயரத்தில் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட பிறகு, விண்கலம் பூமியின் ஈர்ப்பு மற்றும் நிலவை நோக்கிய ஈர்ப்பு விசை விளைவில் இருந்து தப்பிக்க தொடர்ச்சியான கட்டுப்பாடான இயக்கத்தில் படிப்படியாக அதன் சுற்றுப்பாதையை அதிகரிக்கும். சந்திரனுக்கு அருகில் சென்ற பிறகு, விண்கலத்தை அதன் ஈர்ப்பு விசையால் சந்திரன் இழுக்க வேண்டும். அது நடந்தவுடன், மற்றொரு தொடர் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் விண்கலத்தின் சுற்றுப்பாதையை 100×100 கி.மீ வட்டமாக குறைக்கும். அதன்பிறகு, ரோவரை அதன் உள்ளே சுமந்து செல்லும் லேண்டர், உந்துவிசை தொகுதியிலிருந்து பிரிந்து அதன் இயங்கும் இறங்கலைத் தொடங்கும்.

இந்த முழு செயல்முறையும் சுமார் 42 நாட்கள் ஆகலாம், ஆகஸ்ட் 23 அன்று சந்திர விடியலில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. சந்திர பகலும் இரவும் 14 பூமி நாட்கள் நீடிக்கும். லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை ஒரே ஒரு சந்திர நாள் மட்டுமே நீடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன, அவை சந்திர இரவுகளில் வெப்பநிலையின் தீவிர வீழ்ச்சியைத் தக்கவைக்க முடியாது, எனவே விடியற்காலையில் தரையிறங்க வேண்டும்.

சந்திரயான்-3  - Page 2 CHANDRAYAAN-2-2

தரையிறங்கும் தளத்தைப் பொறுத்தவரை, இரண்டு பள்ளங்களுக்கு இடையில் ஒரு பீடபூமியில் முந்தைய இடத்திலிருந்து சிறிது தூரத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சுமார் 70 டிகிரி S இல் உள்ள தளம், நிழலில் நிரந்தரமாக இருக்கும் பல பள்ளங்கள் இருப்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டது, மேலும் நீர் பனி மற்றும் விலைமதிப்பற்ற கனிமங்களின் களஞ்சியமாக இருக்கலாம். நிலவின் மிகத் தெளிவான வரைபடத்தை வழங்கிய சந்திரயான்-2 ஆர்பிட்டரால் கைப்பற்றப்பட்ட படங்களின் அடிப்படையில் தற்போதைய தரையிறங்கும் தளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய மிஷன் ஆனது ஆர்பிட்டரை எடுத்துச் செல்லவில்லை ஏனெனில் இது சந்திரயான்-2 ஆர்பிட்டரிலிருந்து தரவைப் பயன்படுத்தும். இருப்பினும் பேலோடின் எடை முந்தைய மிஷனை விட சற்று அதிகமாக உள்ளது, லேண்டர் அதிக எடையைக் கொண்டுள்ளது. பாதுகாப்பான தரையிறக்கத்திற்காக செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்த எடை அதிகரிப்பு இருக்கலாம்.

மிஷன், வடிவமைப்பு மாற்றங்கள்


இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத், தற்போதைய மிஷனில் மாற்றங்கள் தோல்வியை அடிப்படையாகக் கொண்டவை என்று சமீபத்தில் கூறினார். “சந்திரயான் -2 இல் வெற்றியை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பிற்குப் பதிலாக, சந்திரயான் -3 இல் தோல்வி அடிப்படையிலான வடிவமைப்பை நாங்கள் செய்கிறோம், என்ன தவறு ஏற்படலாம், அதை எவ்வாறு சமாளிப்பது என்பதை நாங்கள் பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.

சந்திரயான்-2-ன் போது, ​​லேண்டர் மற்றும் ரோவர் சந்திரனில் மெதுவாக தரையிறங்குவதற்குப் பதிலாக அதன் மீது மோதியது. அதற்கான காரணத்தை விளக்கிய சோமநாத், லேண்டரில் உள்ள ஐந்து என்ஜின்களும் எதிர்பார்த்ததை விட சற்று அதிக உந்துதலை உருவாக்கியதுதான் முக்கிய பிரச்சினை என்று கூறினார். தரையிறங்கும் தளத்தை தீர்மானிக்க, லேண்டர் படங்களைக் கிளிக் செய்ய வேண்டியிருந்தது, அந்த சமயத்தில் லேண்டர் நிலையாக இருக்கும்போது பிழைகள் ஏற்பட்டது. பிழைத் திருத்தங்கள் தொடங்கியபோது, ​​விண்கலம் மிக வேகமாகத் திரும்ப வேண்டியிருந்தது, ஆனால் அதன் திருப்பும் திறன் அதன் மென்பொருளால் வரையறுக்கப்பட்ட அளவில் இருந்தது. மேலும், விண்கலம் அது கீழே வரும் வேகத்தை குறைத்து, ஆனால் சரியான தரையிறங்கும் தளத்தை அடைவதற்கு முன்னோக்கிச் செல்லும் முரண்பாடான தேவைகளை எதிர்கொண்டது. எனவே, அது தரையிறங்கியதும், அதிக வேகத்தில் தரையில் மோதியது.

இதை மனதில் கொண்டு தற்போதைய பணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒன்று, இறங்கும் பகுதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்-2 இலக்கின்படி தரையிறங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட 500m x 500m பேட்ச்சை அடைய முயற்சிப்பதற்கு பதிலாக, தற்போதைய பணியானது 4km x 2.4km பரப்பளவில் எங்கும் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டாவதாக, லேண்டருக்கு அதிக எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது, எனவே தேவைப்பட்டால் தரையிறங்கும் தளம் அல்லது மாற்று தரையிறங்கும் தளத்திற்கு நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

மூன்றாவதாக, தரையிறங்கும் தளத்தைத் தீர்மானிக்க, இறங்கும் போது அது கிளிக் செய்யும் படங்களை மட்டுமே லேண்டர் சார்ந்து இருக்காது. சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து உயர் தெளிவுத்திறன் படங்கள் லேண்டரில் செலுத்தப்பட்டுள்ளன, மேலும் அது சரியான இடத்தை அடைந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த படங்களைக் கிளிக் செய்யும்.

பின்னர், லேண்டரின் இயற்பியல் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. லேண்டரின் மத்திய உந்துதல் அகற்றப்பட்டு, எண்ணிக்கை ஐந்திலிருந்து நான்காகக் குறைக்கப்பட்டது. அதிக வேகத்தில் கூட தரையிறங்க முடியும் என்பதை உறுதிப்படுத்த கால்கள் உறுதியானதாக மாற்றப்பட்டுள்ளன. லேண்டரின் அமைப்பில் அதிகமான சோலார் பேனல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

போர்டில் சோதனைகள்


லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள பேலோடுகள் முந்தைய மிஷனைப் போலவே இருக்கும். நில நடுக்கங்கள், நிலவின் மேற்பரப்பின் வெப்ப பண்புகள், மேற்பரப்புக்கு அருகிலுள்ள பிளாஸ்மாவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக அளவிட உதவும் செயலற்ற சோதனை ஆகியவற்றை ஆய்வு செய்ய லேண்டரில் நான்கு அறிவியல் பேலோடுகள் இருக்கும். நான்காவது பேலோட் நாசாவிலிருந்து வருகிறது.

ரோவரில் இரண்டு பேலோடுகள் உள்ளன, அவை சந்திர மேற்பரப்பின் இரசாயன மற்றும் கனிம கலவையை ஆய்வு செய்வதற்கும், சந்திர மண் மற்றும் பாறைகளில் உள்ள மெக்னீசியம், அலுமினியம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்களின் கலவையை தீர்மானிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை சந்திரனைச் சுற்றி இருக்கும் உந்துவிசை தொகுதிக்கு ஒரு புதிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பெக்ட்ரோ-போலரிமெட்ரி ஆஃப் ஹேபிடபிள் பிளானட் எர்த் (SHAPE) என்று அழைக்கப்படும், இது பிரதிபலித்த ஒளியில் வாழக்கூடிய சிறிய கிரகங்களைத் தேடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 13, 2023 7:42 pm



Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக