by T.N.Balasubramanian Today at 18:30
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 18:27
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
மலர்களும் மங்கையரும்
சங்க இலக்கியங்கள் மகளிரை தாவரங்களோடும் பறவைகளோடும் ஒப்பிட்டிருப்பதோடு, அவர்களை மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறியிருக்கின்றன. மகளிரின் ஒவ்வொரு உறுப்பையும் சங்க இலக்கியம் வெவ்வேறு மலர்களோடு உவமித்துள்ளது.
முல்லைப்பூவை மகளிரின் பற்களுக்கு உவமித்துக் கூறுவது சங்க இலக்கியங்களில் மிகப்பரவலான வழக்காகும். மகளிரின் பற்களை விரித்து கூறுவதற்காகவே முல்லை மொக்கு உவமையாகக் கையாளப்படுகிறது. முல்லை மலர் வெண்மையாகவும், சிறந்த மனமுடையதாகவும், தூயதாகவும் காணப்படுவதால் முல்லை மலரை கற்புக்கு அடையாளமாகவும் [You must be registered and logged in to see this link.] கொண்டனர்.
குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்இயல்
(சிறுபாண் 29,30).
தமிழிலக்கியங்களில் பற்களுக்கும், கற்புக்கும் [You must be registered and logged in to see this link.] ஒப்பிடப்படும்.
பண்டிகை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் மகளிர் பூக்களைச் சூடுவது வழக்கமானது. இதனால் மகளிர் அழகாக தோன்றுவதுடன் அவர்களின் கூந்தல் நறுமணமுடையதாகவும் விளங்கும். சங்க கால மகளிர் தமது கூந்தலை நறுமணமுடையதாக்க குடசம் எனும் மலரை சூடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
குரற்றவைக் கூந்தற் குடசம் பொருந்தி
(சிலம்பு - ஊர்காண் காதை - 8)
இலக்கியங்களில் காந்தள் மலர் அழகிய மலராகவும், முருகக் கடவுளுக்குரிய மலராகவும் கருதப்பெற்றது. காந்தள் மலரின் மொக்கானது மகளிரின் நுனி சிவந்த விரல் போன்றிருப்பதாக இலக்கியங்கள் கூறுகின்றன. காந்தள் முனை புரைவிரல் (புறம் 144) நீண்ட காம்புடன் கூடிய காந்தள் பூவின் நீண்ட பூவிதழ்கள் முதலில் தலைகீழாகத் தொங்குவது போலிருக்கும். அப்போது காந்தள் பூவிதழ்கள் பச்சை, மஞ்சள், வெண்மை கலந்த சிவப்பு நிறமாக மாறிமாறித் தோன்றும். ஆனால், பூ முதிர்ந்த பருவத்தில் இதழ்கள் செங்குத்தாக மேல்நோக்கித் தோன்றும். அப்போது மகளிர் கைகூப்பித் தொழுவது போன்றிருக்கும்.
கொடிச்சியர் கூப்பி உரைதொழு கைபோல்
எடுத்த நறவின் குலையலங் காந்தள்
(கலி - 40)"
காந்தள் மலரானது மகளிரின் உடைந்த வளையல்கள் போன்று பூப்பதாகவும், அதன் இதழ் சோர்வடையும்போது கையிலுள்ள வளையல்கள் சோர்ந்து விழுவது போல் இருப்பதாகவும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்
(மலைபடு 519)
உடைவாளைக் கடுப்ப மலர்ந்த காந்தள்
(புறம் - 90)
[You must be registered and logged in to see this link.] மலர்கள் செழிப்புடன் இருக்கும்போது மகளிரின் கைவிரல்கள் போன்றிருக்குமாம்.
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்
(சிறுபாண் - 166).
இன்று புழக்கத்தில் இல்லாமல் போனாலும் சங்க காலத்தில் முடுக்கு, கவிர் எனும் மலர்கள் இருந்ததாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இவ்விரு மலர்களும் அமைப்பிலும், நறுமணத்திலும் சிறந்த மலர்களாகும்.
மகளிர் அழகுக்காக தங்களின் கைவிரல்களுக்கு செஞ்சாயம் ஊட்டும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்துள்ளது.
நகைமுக மகளி ரூட்டுகிர் கடுக்கு
(அகநூனூறு - 317)"
இன்றைய மகளிரும் குழந்தைகளும் தங்களின் கைகள், கை, கால் விரல்களின் நகங்களுக்கு நகச்சாயம் பூசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சங்க காலத்தில் முள்ளு முருங்கை என்றழைக்கப்படும் மலரின் இதழானது மகளிரின் சிவந்த வாய் போன்றிருக்குமாம்.
கவிரித ழன்ன காண்பின் செவ்வாய்
அந்தீங் கிளவி ஆயிழை மடந்தை
(அகநானூறு - 4).
அகநானூற்றில் தன்னை விட்டுப் பிரிந்த தலைவனை எண்ணி தலைவி வருந்திய நிலையில் தோழி தலைவியை நோக்கிக் கூறும்போது முல்லை அரும்பு போன்ற வளையலை அணிந்த தலைவியே, உன்னை உன் தலைவன் மறவாது நினைத்துக் கொண்டிருப்பார் என்று ஆறுதல் கூறுவதை,
முல்லை வைந்துணை தோன்ற இல்லமொடு
(அகநானூறு 4:1)
எனும் பாடல் வரி எடுத்துரைக்கிறது.
கொன்றை மரத்தின் பூங்கொத்துக்களைப் பார்க்கும் போது அதன் தோற்றமானது பொன் மாலைகள் அணிந்த மகளிரைப் போல் இருக்குமாம்.
வண்டுபடத் ததைந்த கொடியினர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங்கொன்றை
(குறுந்தொகை 21- 1-3)
[You must be registered and logged in to see this link.] மட்டுமின்றி கொன்றையின் நெடுங்கால் மகளிரின் கூந்தல் போன்றிருப்பதாக [You must be registered and logged in to see this link.] கூறுகின்றன. இதனை, கடுக்கையம் பொலந்தார்நிரை நிரை நாற்றி நெடுங்கால் மயிர் அமைத்து தோன்றி மரகதத் தண்டில் விளக்கெடுப்ப எனும் கல்லாடப் பாடல் வரிகள் விளக்குகின்றன.
பாணர்களின் இசைக்கருவியான யாழை அழகிய வேலைப்பாடுகள் கொண்ட போர்வையினால் போர்த்தியிருப்பர். அத்தகைய போர்வையின் நிறத்தைப் போன்று வேனிற்காலத்தில் பூக்கும் பாதிரி எனும் மலர் இருக்குமாம்.
சில மலர்களின் அமைப்பையும் நறுமணத்தையும் நாம் அறிந்திருப்போம். அத்தகைய மலர்களுள் ஒன்றுதான் தாழை. சிற்றோடைகளின் கரைகளில் வளைந்தும், நெலிந்தும் காணப்படும் தாழை மரமானது இன்றும் காணப்படுகிறது.
தாழை மரங்கள் நிறைந்த புதரில் சிதறிக் கிடக்கும் தாழை மலர்களின் நுண்ணிய தாதுவானது சங்க கால மகளிர் அணியும் சங்கு வளையல்கள் உடைந்து உதிர்ந்து கிடப்பதைப் போன்று இருந்ததாம். இதனை
கதர்பிணி யவிழ்ந்த தாழை வன்புதர்
தயங்கிருங் கோடை தாக்கலி னுண்டாது
வயங்கிழை மகளிர் வண்டிற் றாஅங்
எனும் பாடல் வரிகள் காட்டுகின்றன
(நற்றினை 299).
மகளிரின் அழகுக்கு மலர்கள் மேலும் அழகூட்டியிருப்பதை சங்க இலக்கியங்களில் காண முடிகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
![மலர்களும் மங்கையரும் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|