புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
Page 1 of 1 •
மகா சிவராத்திரி வைபவத்துக்கு விசேஷமான தலம் #ஸ்ரீசைலம். ஜோதிர்லிங்க சொரூபனாக இங்கு அருளும் ஈசனின் திருநாமம் ஸ்ரீமல்லிகார்ஜுனர்; அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீபிரமராம்பிகை.
புராண காலத்துக்கு முன்பிருந்தே ஸ்ரீசைலம் தலத்தின் தோற்றம் வெகு பழைமையானது. ஸ்ரீசைலத்தின் அடிவாரம்தான் கிருஷ்ணாநதி. இது பாதாள கங்கை என வணங்கப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை எண்ணற்ற மகான்கள் போற்றி, நீராடி உள்ளனர். குறுக்கே மிகப் பெரிய அணை கட்டி இருக்கிறார்கள். இந்த ஆற்றின் தென்கரையில் ஸ்ரீசைலம் இருக்கிறது. இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 476 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
‘ஸ்ரீசைலம் சிகரத்தை தரிசித்தால் முன்ஜன்மங்களில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும். அடுத்த ஜன்மம் என்பது இருக்காது’ என வேதம் கூறுகிறது.
`#வசுஸ்ரீ’ என்ற பெண் துறவி, இங்கு தவம் இருந்ததால் அவளது பக்தியைப் பாராட்டி, ‘உன் பெயரால் இது ஸ்ரீசைலம் எனப்படும்’ என்று வரம் தந்தாராம் #சிவபெருமான். அதேபோல், நந்தியின் தந்தையான சிலாத முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இடம் என்பதால், அவர் பெயரைக் கொண்டு ‘ஸ்ரீசைலம்’ ஆனதாகவும் ஒரு தகவல் உண்டு.
குப்த வம்சத்தில் வந்த இளவரசி ஒருத்தி இந்தப் பகுதிக்கு ஸ்ரீசைலம் என்று பெயரிட்டதாகவும், இத்தல இறைவனை #மல்லிகார்ஜுனன் என அழைத்ததாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது. அதற்கு முன் இங்குள்ள ஈஸ்வரனை ‘பர்வத லிங்கன்’ என்றே அழைத்தனராம்!
ஸ்ரீசைலம், ‘பூலோகக் கயிலாயம்’ என்றும் வழங்கப் படுகிறது. சக்தி பீடங்களுள் ஒன்று. ஸ்ரீநாகா, ஸ்ரீபர்வதம், மல்லிகார்ஜுனம், ஸ்ரீகிரி, ஸ்ரீநகரம் ஆகிய பெயர்களும் இந்தத் தலத்துக்கு உண்டு.
கிருத யுகத்தில் இரண்யகசிபும், திரேதா யுகத்தில் ராவண வதம் முடிந்தபிறகு ஸ்ரீராமனும், துவாபர யுகத்தில் பாண்டவர்களும் இங்கு வந்து தரிசித்துச் சென்றதாகப் புராணங்கள் சொல்கின்றன. ராமபிரானும் பாண்டவர்களும் இங்கே லிங்க பிரதிஷ்டையும் செய்திருக்கிறார்கள்.
கலியுகத்தில் ஆதிசங்கரர், நாகார்ஜுனாச்சார்யர், சத்ரபதி சிவாஜி, கிருஷ்ணதேவ ராயர் ஆகியோர் இங்கு வருகை தந்திருக் கிறார்கள். வீரசிவாஜி, இந்த க்ஷேத்திரத்தில் சில காலம் தங்கி, அன்னை பிரமராம்பிகையைத் துதித்து வழிபட்டாராம். இங்குள்ள ‘ப்ரகாரபு உத்தர கோபுர’த்தை அவர்தான் கட்டினார் என்கிறார்கள்.
ஜோதிர்லிங்கத் தலங்கள் 12. அவற்றில் மூன்று மட்டுமே தேவாரப் பாடல் பெற்றவை. அதில் ஸ்ரீசைலமும் ஒன்று. மற்றவை ராமேஸ்வரம், கேதார்நாத். தேவாரப் பதிகங்களில் இந்தத் தலம் ‘திருப்பருப்பதம்’ என்றும், ‘சீபர்ப்பதம்’ என்றும் குறிப்பிடப் படுகிறது.
மகாபாரதம், ராமாயணம், சிவ புராணம், மத்ஸ்ய புராணம், அக்னி புராணம், வாயு புராணம், ஸ்கந்த புராணம் என்று ஏராள மான நூல்களில் ஸ்ரீசைலம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
வேள்விகள், விரதங்கள் ஆகியவற்றில் சங்கல்பம் எடுத்துக் கொள்ளும்போது சொல்லும் மந்திரத்தில் ஸ்ரீசைலத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதாவது வேள்வி செய்பவர், தான் இருக்கும் இடம், ஸ்ரீசைலத்துக்கு எந்தத் திசையில் இருக்கிறது என்பதைச் சொல்லி சங்கல்பம் எடுத்துக் கொள்வதாக அமைந்துள்ளது இந்த மந்திரம்.
பிரம்மனின் புத்திரரான சனத்குமாரர் ஸ்ரீசைலத்தின் மகிமையை வேதவியாசருக்கு உபதேசித்து அருளியதாக தலபுராணம் சொல் கிறது. பார்வதிதேவியிடம் சிவனார் ``இந்தத் தலம் எனக்கு மிகவும் பிரியமான இடம். என் சக்தி அனைத்தும் இங்குதான் பிரகாசிக் கிறது. நம்மை இங்கு வந்து வணங்குவோருக்கு அருள்புரிவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று கூறினாராம். இதிலிருந்து இந்தத் தலத்தின் மகிமையை நாம் அறியலாம்.
குப்த அரசன் ஒருவனின் மகள் சந்திரவதி. சிவபக்தியில் சிறந்த வள். இவளுக்காகவே லிங்கத் திருமேனியராக தன்னை வெளிப் படுத்திக் கொண்டவர் மல்லிகார்ஜுனர் என்கிறது தலபுராணம். இவளின் பசுக்கூட்டத்திலிருந்த பசு ஒன்று, வனப்பகுதியில் இருந்த லிங்கத் திருமேனியின் மீது தாமாகவே பால் சொரிந்து அபிஷேகித்து வந்ததாம். ஒருநாள் இந்த அதிசயத்தைக் கண்ட சந்திரமதி, மறுநாள் முதல் தானே வழிபடத் தொடங்கினாள்.
அவளின் பக்தியில் வியந்த சிவபெருமான், சந்திரவதியின் கனவில் வந்து, தனக்கு ஒரு மண்டபம் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி சந்திரவதி கட்டிய மண்டபமே ஆதியில் அமைந்த ஸ்ரீசைலம் கோயில் என்கிறார்கள். அவள், தினமும் மல்லிகைப் பூக்களை மாலையாகத் தொடுத்து, லிங்கத் திருமேனிக்கு அணிவித்த காரணத்தால், இங்குள்ள இறைவன் ‘மல்லிகார்ஜுனர்’ எனப்பட்டார்.
பெரிய கோயிலுக்குள் வெகு சிறிய வடிவில், ஜோதிர்மயமாகத் தரிசனம் தருகிறார் ஸ்ரீமல்லிகார்ஜுனர். தரையோடு தரையாக ஆவுடை காணப்படுகிறது. அதன் நடுவே சிறிய உருவிலான லிங்க வடிவில் ஈசன் அருள்கிறார். இங்கே... இறைவனுக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம்; மலர்களை சாத்தலாம். இறைவனை வலம் வர முடியும்.
அம்பாள் பிரமராம்பிகையும் வரப்பிரசாதியானவள். சிவ பக்தரான பிருங்கி முனிவர் வண்டு உருவம் கொண்டு ஈசனை மட்டுமே வலம் வந்து வழிபட்டதையும், அதனால் கோபம் கொண்ட அம்பிகை அவரைத் தண்டித்த கதையையும் நாமறிவோம். பிறகு, ஈசனின் வேண்டுகோள்படி, பிருங்கி முனிவரின் பக்தியைக் கண்டு வியந்து, அவருக்கு சகல வரங்களும் அருளினாளாம் அம்பிகை. இங்ஙனம், வண்டு உருவில் இருந்த பிருங்கி முனிவருக்கு அருளியதால் இந்த தேவி ‘பிரமராம்பிகா’ என்று பெயர் பெற்றாள் என்பர்.
வடமொழியில் ‘பிரமரம்’ என்றால் `வண்டு’ என்று பொருள். இன்றும் ஸ்ரீசைலம்- ஸ்ரீபிரமராம்பிகா கருவறைக்குப் பின்னால் உள்ள சிறு துவாரத்தில், காதை வைத்துக் கேட்டால், வண்டின் ரீங்காரம் போன்று ஒலி வருவதாகச் சொல்கிறார்கள்.
ஆலயத்தில் பிரமாண்டமான தனிச் சந்நிதியில் அருள்கிறாள், அன்னை பிரமராம்பிகை. பழைய முகம் ரொம்பவும் உக்கிரமாக இருந்ததால், மேலே தங்கக் கவசம் சாற்றி வழிபடுகிறார்கள்.
ஸ்ரீசைலத்தைச் சுற்றிலும் உள்ள நவநந்தி சோத்திரங்கள், தரிசிக்கப்பட வேண்டியவை. ப்ரம்ம நந்தி, நாக நந்தி, விநாய நந்தி, கருட நந்தி, சிவ நந்தி, மஹா நந்தி, சூரிய நந்தி, விஷ்ணு நந்தி, ஸோம நந்தி ஆகியவையே நவநந்தி என வழங்கப்படும். பெரும்பாலான சோத்திரங்கள் நந்தியாலுக்கு அருகே அமையப் பெற்றுள்ளன.
சென்னையிலிருந்து சுமார் 500 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீசைலம். ஆந்திர மாநிலம் - ஓங்கோல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 187 கி.மீ. தூரம். சிவபக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புத ஜோதிர்லிங்க திருத்தலம் இது!
திருக்கல்யாண சீர்!
ஸ்ரீசைலத்தில், சிவராத்திரி மட்டுமல்ல... அந்த வைபவத்தின்போது ஸ்ரீமல்லிகார்ஜுனருக்கும் பிரமராம்பிகைக்கும் நடைபெறும் திருக்கல்யாண உற்ஸவமும் விசேஷம். இதற்கு ஒரு கதை இருக்கிறது. இந்தக் கதை பிரமராம்பிகையை மானுடப் பெண் போன்று சித்திரிக்கிறது.
கன்னட தேசத்தைச் சேர்ந்த பிரமராம்பிகா, தான் தினமும் தொழும் ஈசனையே மணாளனாக அடைய வேண்டும் என்று விரும்பினாள். ஒரு நாள் அவள் கனவில் வந்த ஈசன், ‘ஒரு மரத்தின் அடியில் நாளை காத்திருப்பேன். அங்கு வந்தால் உன்னை மணந்து கொள்கிறேன்’ என்றாராம். அதன்படியே வந்துசேர்ந்தாள் பிரமராம்பிகா.
அவளின் பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய ஈசன், முதியவர் கோலத்தில் அங்கு வந்தார். பிரமராம்பிகையை நெருங்கினார். ஆனாலும் ‘முதியவராக வந்திருப்பது ஈசனே’ என்பதை உணர்ந்த பிரமராம்பிகை, தானும் ஈசனை நெருங்கினாள். அவளது இந்த தூய பக்தியை, பார்வதி தேவிக்கு உணர்த்தி, தேவியாரின் சம்மதத் துடன் பிரமராம்பிகாவைக் கரம் பிடித்தாராம் ஈசன். இந்தக் கதையையொட்டி வணங்கப்படும் லிங்கத் திருமேனியை ‘விருத்த மல்லிகார்ஜுனர்’ என்ற பெயரில் சைலம் ஆலயத்தில் தரிசிக்கலாம்.
இதைத் தொடர்ந்து அவளின் உற்றார் - உறவுகள் `எவரோ ஒருவர் வந்து தங்கள் குலப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு போவதா’ என்று சீற்றம் கொண்டார்களாம். சிவனாருடன் போர் புரியவும் துணிந்தார்களாம். ஆனால் பிரமராம்பிகா அவர்களைத் தடுத்து, எனது பரிபூரண சம்மதத்துடன்தான் இவரை மணந்துள்ளேன்’ என்று எடுத்துக் கூறினாளாம். அதனால் சீற்றம் தணிந்தவர்கள், தங்களின் ஆசியையும் ஆதரவையும் மணமக்களுக்குத் தெரிவித்தார்களாம்.
இன்றைக்கும் கொங்கணம், மைசூர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள், சிவராத்திரி அன்று நடைபெறும் மல்லிகார்ஜுனர்- பிரமராம்பிகா திருக்கல்யாண உற்ஸவத்துக்கு, சொந்தக்காரர்கள் என்ற முறையில் சீர் எடுத்து வந்து, காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் இருக்கிறது.
விகடன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|