புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
95 Posts - 66%
heezulia
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Sathiyarajan
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Safiya
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
473 Posts - 52%
heezulia
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
20 Posts - 2%
i6appar
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
13 Posts - 1%
prajai
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_m102023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:29 pm

First topic message reminder :

மத்தியில் ஆளும் கட்சியும் --அந்த கட்சி ஆளும் மாநில கட்சிகள்.கூறப்போகிற விமரிசனம்.

Code:
ஆஹா --இது மாதிரி பட்ஜெட் -நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்தும்.
மற்ற நாட்டினரும் வரவேற்கும்படியான பட்ஜெட்.தொலை தூர பார்வை கொண்டது.

ஆளும் கட்சிக்கு எதிராக இருக்கும் மாநில கட்சிகள் , எதிர் கட்சியில் இருப்பவர்கள்.

Code:
இது மாதிரி அரைத்த மாவையே அரைக்கும் பட்ஜெட்,
ஏழைகள் மேலும் ஏழை ஆவார்கள்.பணமுதலைகள்தான் இதை வரவேற்ப்பார்கள்.

காத்திருந்து பார்ப்போம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 01, 2023 6:51 pm

Code:
*கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்கு பதில் 100 சதவீதம் இயந்திரம் பயன்படுத்தப்படும்

கழிவு நீர் சாக்கடையில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது அறவே நீக்கப்படவேண்டும்.

பாவம் அவர்கள்.

அதுமாதிரி செய்ய தூண்டும் அதிகாரிகளை, "முதலில் நீங்கள் செய்து காண்பியுங்கள்  என்று கூறும் 
நாள் எதுவோ , அதுவே, அவர்களுக்கு  சிறந்த நாள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 7:01 pm

T.N.Balasubramanian wrote:
Code:
*கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்கு பதில் 100 சதவீதம் இயந்திரம் பயன்படுத்தப்படும்

கழிவு நீர் சாக்கடையில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது அறவே நீக்கப்படவேண்டும்.

பாவம் அவர்கள்.

அதுமாதிரி செய்ய தூண்டும் அதிகாரிகளை, "முதலில் நீங்கள் செய்து காண்பியுங்கள்  என்று கூறும் 
நாள் எதுவோ , அதுவே, அவர்களுக்கு  சிறந்த நாள்.


வறுமை மற்றும் வேலையின்மையின் அவலம் இதுபோன்ற வேலைகளையும் செய்ய வேண்டிய கடடாயத்தில் உள்ளனர்.

60 வருடம் ஆட்சி செய்த பிறகும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமையை ஒழிப்போம் என ஓட்டுக் கேட்டு வரும் கட்சிக்காரனை மக்கள் செருப்பால் அடிக்கும் நாள் எதுவோ அன்றுதான் நாம் நாட்டின் உண்மையான மக்களாட்சி தினம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 7:15 pm

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அரிவாள் வடிவ செல் ரத்த சோகை அவ்வளவு கொடிய நோயா?



2047 க்குள் அரிவாள் வடிவ செல் இரத்த சோகையை அகற்றுவதற்கான பணி தொடங்கப்படும். பாதிக்கப்பட்ட பழங்குடியின பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

அதாவது, அரிவாள் வடிவ செல் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கான திட்டம் விரைவில் தொடங்கப்படும். மேலும், பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் 40 வயது வரை உள்ள 7 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி, இந்த நோய் தாக்கம் இருக்கிறதா என்று கண்டறியப்பட்டு, மக்களை ஒருங்கிணைத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டமைப்போடு மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல முக்கிய திட்டங்களில், இந்த அரிவாள் வடிவ செல் ரத்த சோகை இடம்பெற்றிருக்கக் காரணம் என்ன? அந்த நோயின் தாக்கம் என்ன?

அரிவாள் செல் நோய் (எஸ்சிடி) என்பது மரபணு இரத்த சிவப்பணு கோளாறுகளின் காரணமாக உருவாகிறது. இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உள்ளது, இது ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் புரதமாகும். ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் வட்டமாக இருக்கும். மேலும் அவை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல சிறிய இரத்த நாளங்கள் வழியாக நகர்ந்து செல்லும்.

எஸ்சிடி எனப்படும் அரிவாள் செல் நோய் பாதித்த ஒருவருக்கு, ஹீமோகுளோபின் அசாதாரணமாக இருக்கும். இந்த இரத்த சிவப்பணுக்கள் கடினமாகவும் ஒட்டும் தன்மையுடனும் மற்றும் ஆங்கில எழுத்தான சி- வடிவில் அரிவாள் கருவி போல் தோற்றமளிக்கும்.

இந்த அரிவாள் செல்கள் வெகு விரைவாக இறந்துவிடும், இதனால், சிவப்பு இரத்த அணுக்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தும். மேலும், அவை சிறிய இரத்த நாளங்கள் வழியாக செல்லும்போது, ​நாளங்களுக்குள் ​அவை சிக்கி இரத்த ஓட்டத்தையே அடைத்துவிடும் அபாயமும் உள்ளது.

இதனால், உடல் வலி மற்றும் தொற்றுநோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிற தீவிர நோய்களை ஏற்படுத்தும் அபாயமும் அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமல்லாமல், சுகாதாரத் துறை தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

அவற்றில், நாட்டின் முக்கிய இடங்களில் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் நிறுவப்படும்.

ஐசிஎம்ஆர் ஆராய்ச்சித் தகவல்கள் அனைத்தும் பொதுமக்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

உடல் நலத்துக்கு முக்கியமான சிறுதானிய உற்பத்தி, விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மருந்து துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 7:17 pm

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான சிறுசேமிப்புத் திட்டம் - முழு விவரம்



2023 - 24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார். அதில், பெண்களுக்கான ஒரு முறை பணம் செலுத்தும் சிறுசேமிப்புத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மகளிர் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ், ஒரு பெண் அல்லது சிறுமியின் பெயரில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலான ஒரு தொகையை வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் செலுத்தும் தொகைக்கு 7.5 சதவிகித வட்டி வழங்கப்படும். இந்த சிறுசேமிப்புத் திட்டத்தில் செலுத்தப்படும் தொகையில் பாதி தொகையை இரண்டு ஆண்டு காலத்துக்குள் பயனாளர் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.

இந்த திட்டம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

இது மட்டுமல்லாமல், அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அஞ்சலகங்களில் கணக்குத் தொடங்கலாம்.

இவர்களைத் தவிர்த்து, கட்டாய பணி ஓய்வு பெற்றவர்களும், உடல் நலக் குறைவால் ஓய்வுபெற்றவர்கள் 55 முதல் 60 வயதுடையவர்களாக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணையலாம்.

50 வயதுக்கு மேற்பட்ட, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருந்தால் இந்த திட்டத்தில் இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 7:21 pm

வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கு எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து


டெல்லி: டெல்லி மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 2023-24 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும். 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டுக்கு தொடரும் என்று பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு மீண்டும் டெல்லி மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் டெல்லி மக்கள் 1.75 லட்சம் கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தியுள்ளனர்.

அதிலிருந்து வெறும் 325 கோடி ரூபாயை மட்டும் டெல்லி வளர்ச்சிக்காக மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. டெல்லி மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. பணவீக்கத்திலிருந்து மீளும் வகையில் இந்த பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை. மேலும் பணவீக்கத்தை அதிகப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. மேலும் வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கு எந்தவித உறுதியான திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. கல்விக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் 2.64 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு 2.2 சதவீதத்திலிருந்து 1.98 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமானது. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 11:21 pm

இந்திய பட்ஜெட் 2023: ``ஏமாற்றத்தையே தந்திருக்கிறது" விவசாயிகள் கருத்து!



விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக ஆக்குவோம் என்றனர் ஆனால் அதற்கான திட்டங்கள் எதுவும் இதில் இல்லை. மேலும் சிறு,குறு விவசாயிகள் மேம்படுத்துவதற்கான அறிவிப்பும் இல்லை- மத்தியபட்ஜெட்



நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடி அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்தக் கூடிய வகையிலான திட்டங்களுடன் நிதி ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்கிற பெரும் எதிர்ப்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவியது. இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு பெருமளவில் ஏமாற்றத்தை தந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பட்ஜெட் திருப்தியளிக்கவில்லை ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக கூறி வருகின்றனர்.

இது குறித்து வழக்கறிஞரும், விவசாயியுமான ஜீவக்குமார் கூறுகையில், ``விவசாயத்திற்கு என தனிப் பட்ஜெட் நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். விவசாயத்தை தொழிலாக கருதாமல் பொதுசேவையாக அறிவித்து ஒன்றிய அரசு விவசாயிகள் வாழ்வு மேம்பட திட்டங்கள் மூலம் உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். பிரதமர் மோடி அரசினுடைய கடைசி பட்ஜெட் இது என்பதால் விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தோம்.

தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் கஜா புயல், நிவர், நிரவி புயல் ஆகியவற்றால் கடும் பாதிப்புக்குள்ளானது. அதிலிருந்து மீண்டு வர விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் தமிழகத்திற்கு என தனியாக நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு கர்நாடக மாநில விவசாய வளர்ச்சிக்கு மட்டும் ரூ 5300 கோடி ஒதுக்கியிருக்கிறது. இதன் மூலம் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் தடவியிருப்பதாக கருதுகிறோம். பிரதமரின் உழவர்கள் வெகுமதி திட்டம் தமிழகத்தில் 50 சதவீதம் குறைந்து விட்டது.

எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி செய்த பரிந்துரை குறித்து மூச்சு விடவில்லை. விவசாயிகளின் வளர்ச்சி என்பது உற்பத்தி கூடுவதில் இல்லை விவசாயிகள் வருமானம் பெருகுவதே உண்மையான வளர்ச்சி என்கிற நிலையில் ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட் தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவிலான விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறது." என்றார்.

வாழை விவசாயி மதியழகன் கூறுகையில், ``காவிரி கரையை ஒட்டியிருக்கும் திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில் வாழை விவசாயம் பெருமளவில் செய்யப்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் வாழை சார்ந்த பொருள்களை பாதுகாப்பதற்காக குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக வாழை விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அத்துடன் இடைத்தரகர்கள் இல்லாமல் வாழை இலை மற்றும் தார்களை மத்திய அரசே கொள்முதல் செய்து பதப்படுத்தி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதும் எங்களது நீண்ட நாள் கோரிக்கை.

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் வாங்கும் உரம் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் வாங்க கூடிய விவசாயம் சார்ந்த பொருள்கள் அனைத்தையும் வரி இல்லாமல் விற்பனை செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என நாங்கள் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது “என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் கூறுகையில், ``விவசாயிகள் வருமானத்தை பெருக்க கூடிய எந்த அறிவிப்பும் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கலில் இடம் பெறவில்லை. விவசாயிகளுக்கு 20 லட்சம் கோடி கடன் கொடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டதே தவிர சொன்ன மாதிரி முழுமையாக செயல்படுத்தியதாக தெரியவில்லை. விளை பொருள்களுக்கு குறைந்தபட்ட ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிறோம் அது குறித்த அறிவிப்பு இல்லை.

குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க தனிசட்டம் கொண்டு வரவேண்டும் என கூறியிருந்தோம். விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக ஆக்குவோம் என்றனர். ஆனால் அதற்கான திட்டங்கள் எதுவும் இதில் இல்லை. மேலும் சிறு,குறு விவசாயிகள் மேம்படுத்துவதற்கான அறிவிப்பும் இல்லை. நதிகள் இணைப்பு, நீர்ப்பாசனம் குறித்தும் இல்லாததால் விவசாயிகள் இந்த பட்ஜெட்டை ஏமாற்றம் நிறைந்திருப்பதாகவே பார்க்கின்றனர்.” என்றார்.

சுவாமிமலை விமல்நாதன் கூறுகையில், ``இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கின்ற இந்திய ஒன்றிய கோவர்தன் மற்றும் பிரணாம் திட்டங்களை பாராட்டுகின்றோம். இந்தியா விடுதலைப் பெற்று 75 ஆண்டுகாலம் கடந்தும் இந்திய வரலாற்றில் ஒரு முறை கூட வேளாண்மைக்கு என தனி நிதி நிலை அறிக்கையை இதுவரை இருந்த எந்த ஒரு அரசும் வெளியிடவில்லை. இந்த பட்ஜெட்டில் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம் நடக்கவில்லை.

விவசாயம், விவசாயிகள் வளம் பெற வேண்டும் என்றால் நீர்பாசன மேம்பாடு குறித்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். ஆனால் நீர்பாசனம் மற்றும் நீர் மேலாண்மைக்கான எந்த அறிவிப்பும் இல்லை. குறிப்பாக பேரிடர் காலங்களில் விவசாயிகள் பாதிக்கபடும் போது அவர்களை காப்பதற்காக நிதி ஒதுக்க வேண்டியது அவசியம். ஆனால் பேரிடர் மேலாண்மைக்கு என தனியாக நிதி ஒதுக்கியதாக தெரியவில்லை.

கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் தனியாக ரூ 5,300 கோடி ஒதுக்கியுள்ளனர். அந்த மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அதில் பா.ஜ.க வெற்றிபெற வேண்டும் என்கிற தேர்தல் லாபத்தை மட்டுமே மனதில் வைத்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இது ஏற்புடையது இல்லை. இந்தியாவின் பாதுகாப்புதுறைக்கு ஒதுக்குவதற்கு இணையாக விவசாயத்திற்கும் நிதி ஒதுக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறோம் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

பயிர்கடன் தள்ளுபடி, வட்டியில்லா பயிர்கடன் தர வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஒன்றிய அரசு வடமாநிலங்களில் உள்ள நதிகளை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவிட்டுள்ளது. தமிழகம், கேரளா புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநிலப் பகுதிகளின் மிக புனிதமான நதிகளாக கருதப்படும் காவிரி, தாமிரபரணி நதிகளை தூய்மைப்படுத்த பாதுகாத்திட ஒரு ரூபாய் கூட இதுவரை நிதி ஒதுக்கியதில்லை அது குறித்த அறிவிப்பு இந்த முறையும் இல்லை. இது போன்ற பல காரணங்களால் எங்களுக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது” என்றார்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 11:23 pm

மத்திய பட்ஜெட் 2023: முக்கிய அறிவிப்புகள் என்ன... நிதி ஒதுக்கீடு எவ்வளவு?



பழங்குடியின குழந்தைகளுக்கு 'ஏகலைவா' கல்வித்திட்டம் தொடங்கப்படும். அனைத்து பழங்குடியின மக்களுக்கும் குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

2023 -24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு `மத்திய பட்ஜெட் 2023 - 24' தாக்கலானது. கடந்த இரண்டு ஆண்டுகளை போலவே இந்த பட்ஜெட்டும் காகிதமில்லாமல் டிஜிட்டல் வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது.

அம்ரித் கால் என்ற வார்த்தையை பிரதமர் மோடி தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார். அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது பட்ஜெட் உரையில் 2023-24 பட்ஜெட் 'அம்ரித் கால்' இலட்சியத்தின் முதல் பட்ஜெட் என்று கூறியுள்ளார். அம்ரித் கால் என்பதற்கு 'புதிய தொடக்கம்' என்று பொருள்.

*தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.97 லட்சம் என இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 11.74 கோடி வீடுகளுக்கு டாய்லெட், 9.6 கோடி உஜ்வாலா கேஸ் கனெக்‌ஷன், 47.5 கோடி ஜன்தன் வங்கிக் கணக்கு, 44.5 கோடி பேருக்கு காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

*பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் உதவித்தொகை ரூ.2.2 லட்சம் கோடி செலுத்தப்பட்டது.

*4 மண்டலங்களில் 157 புதிய நர்ஸிங் கல்லூரிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

*விவசாயத் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படும். மீனவர் நலனுக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்து தரவு தளம் உருவாக்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும். தோட்டகலைத்துறைக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கப்படும்.

*மாணவர்கள், இளைஞர்களின் அறிவுத் தேடலை மேம்படுத்த தேசிய டிஜிட்டல் லைப்ரரி திட்டமிடப்படும். படிப்பறிவு வளர்ச்சியில் இயங்கும் என்.ஜி.ஓக்களுடன் இணைந்து லைப்ரரிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

* பார்மா துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 11:25 pm

எந்தெந்தப் பொருள்கள் விலை அதிகரிக்கும், குறையும்?



2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் சில பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகரித்தும், சில பொருள்களுக்கு வரி விதிப்பை குறைத்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் சில பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகரித்தும், சில பொருள்களுக்கு வரி விதிப்பைக் குறைத்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் எந்தெந்தப் பொருள்கள் விலை கூடும் அல்லது குறையும் என்பதைப் பார்ப்போம்.


விலை அதிகரிக்கும் பொருள்கள்.



புகையிலைப் பொருள்கள் மீதான வரி 16% வரை அதிகரிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட்டின் விலை கடுமையாக உயரும்.

தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. அதனால் இவற்றால் செய்யப்படும் அணிகலன்கள் மற்றும் பொருள்களுக்கு விலை அதிகரிக்கும்.

சமையலறை மின்சார புகைபோக்கிக்கான இறக்குமதி வரி 7.5%-லிருந்து 15% ஆக அதிகரித்துள்ளதால், இதன் விலை கூடும்.

எனவே மின்சார சமையலறை புகைபோக்கி, தங்கம், வெள்ளி, வைரம், செப்பு மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் மற்றும் பொருள்கள், ரப்பர்களால் செய்யப்பட்ட பொருள்கள் சிகரெட்டுகள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும்.


விலை குறையும் பொருள்கள்.



செல்போன் தயாரிப்புகளை ஊக்குவிக்க அதன் உபகரணங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைத்துள்ளது, இதனால் செல்போன்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், இறால் உணவுப் பொருள்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை அளிக்கப் பட்டுள்ளது. இதனால் இறால் தீவனத்தின் விலை குறையும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 11:28 pm

தொழிலதிபர்கள் கருத்துகள் என்ன?



இந்த பட்ஜெட்டை நான் பாசிட்டிவ் பட்ஜெட்டாகவும், அனைவருக்கும் சாதகமான பட்ஜெட்டாகவும் பார்க்கிறேன். விவசாயத்தை ஊக்குவிக்க வகுத்திருக்கும் திட்டங்களை பொறுத்தவரை, இது ஒரு நல்ல நகர்வு. - C.Kரங்கநாதன்

சென்னையில் இன்று மத்திய பட்ஜெட் 2023-24 தாக்கலை நேரலையில் காண தென்னக இந்திய தொழிலக கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கவின்கேர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் C.K ரங்கநாதன், காவேரி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் S.சந்திரகுமார், Sanmar Matrix Metals Limited நிர்வாக இயக்குனர் நாராயண் சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர், C.K ரங்கநாதன் உள்ளிட்ட பலர் தங்களது கருத்துகளை கூறினர்.

"இந்த பட்ஜெட்டை நான் பாசிட்டிவ் பட்ஜெட்டாகவும், அனைவருக்கும் சாதகமான பட்ஜெட்டாகவும் பார்க்கிறேன். விவசாயத்தை ஊக்குவிக்க வகுத்திருக்கும் திட்டங்களை பொறுத்தவரை, இது ஒரு நல்ல நகர்வு. ஜி.டி.பி வளர்ச்சியும் நன்றாக உள்ளது. SHG-கள் உற்பத்தியை அதிகரிக்கும்போது கிராமப்புற வளர்ச்சி மேம்படும்.

ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகள் அடிமட்டத்தில் இருப்பவர்களை மேலே கொண்டுவரும் நல்ல முயற்சியாக பார்க்கிறேன். மேலும் இந்த பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 2.4 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளனர். இது சாமனிய மக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று பல துறைகள் தானியங்கி முறையில் மேம்பட்டு வருகிறது. இந்த நிலையில் AI தொழில்நுட்ப சென்டர்களை தொடங்கவுள்ளது நல்ல நகர்வாகும்.

நகர்புற வளர்ச்சிக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கியுள்ளனர். இதில் இன்னமும் கொஞ்சம் நல்ல நகர்வுகளை எடுத்திருக்கலாமோ என்பது எனது கருத்து. பட்ஜெட்டில் குறிப்பிடுள்ள யூனிட்டி மால் சிறு, குறு, நடுத்தர தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பு உருவாக்கம், ஊரக வளர்ச்சி ஊக்குவிப்பு, நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு என அனைத்து தரப்பிற்க்கும் சாதகமான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட்டை பார்க்கிறேன்" என்று கவின்கேர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் C.K ரங்கநாதன் கூறினார்.

Sanmar Matrix Metals Limited நிர்வாக இயக்குனர் நாராயண் சேதுராமன், "இந்த பட்ஜெட்டை நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக பார்க்கிறேன்" என்று பேசினார்.

அடுத்ததாக காவேரி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் S சந்திரகுமார் பேசியதாவது, "கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளின் கொரோனா காலக்கட்டத்தின் அனுபவ பட்ஜெட்டாக இந்த பட்ஜெட்டை பார்க்கிறேன். மருத்துவத்துறை ஆராய்ச்சி, ICMR-ல் அரசு மற்றும் தனியாரின் கூட்டுப்பங்கு என நமது மருத்துவத்துறையை தேசிய அளவில் மேம்படுத்த வேண்டும் என பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளன" என்று பேசினார்.

Tractor and Farm Equipment Ltd இயக்குனர் S சந்திரமோகன், "கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக கட்டமைப்பு வசதிகளுக்காக அரசு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாக பார்க்கிறேன். இந்த பட்ஜெட்டால் உள்கட்டமைப்பு, திறன் வளர்ச்சி, விவசாயம் என அனைத்தும் வளர்ச்சி அடையும்" என்று பேசினார்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:51 pm

விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக ஆக்குவோம் என்றனர் ஆனால் அதற்கான திட்டங்கள் எதுவும் இதில் இல்லை.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக