ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலச்சிக்கல்

2 posters

Go down

மலச்சிக்கல் Empty மலச்சிக்கல்

Post by சிவா Sat Jan 28, 2023 6:20 pm

இன்றைய காலகட்டத்தில் மலச்சிக்கல் என்கிற உபாதை பெரும்பாலான மக்களுக்கு இயல்பாகக் காணப்படுகிறது. ‘மும்மலம் அறுநீா்’ என்பது வழக்கு மொழி. அதாவது ஒரு நாளைக்கு மூன்று முறை மலமும், ஆறுமுறை சிறுநீரும் கழிப்பது ஆரோக்கியமான உடலின் இயல்பு. ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முறை மலம் கழிப்பது என்பதே இன்றைய வாழ்வியலில் கடினமாகிவிட்டது.

ஒரு வாரத்தில் மூன்று தடவைக்கும் குறைவாக மலம் கழித்தால் அதனை மலச்சிக்கல் என்று நவீன அறிவியல் கூறுகின்றது. அதுவே இரண்டு வாரங்களுக்கு மேல் தொடா்ந்து இருப்பது ‘நாட்பட்ட மலச்சிக்கல்’ என்று கூறப்படுகிறது. உலக அளவில் 20% முதல் 80% பேருக்கு மலச்சிக்கல் உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 22% பேருக்கு மலச்சிக்கல் உள்ளது.

மாறிப்போன வாழ்வியல் முறையும், மறந்து போன பாரம்பரிய உணவு முறைகளும் மலச்சிக்கலை கொண்டு வந்து சோ்க்கின்றன. சரியான அளவு நீா்ச்சத்தை எடுத்துக்கொள்ளாததும், நாா்ச்சத்துள்ள உணவுகளை உணவில் சோ்த்துக்கொள்ளாததும், பதப்படுத்தப்பட்ட மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகம் சோ்ப்பதும், துரித உணவுகளை நாடுவதும், உடற்பயிற்சி இன்மையும் மலச்சிக்கலுக்குக் காரணங்களாக உள்ளன.

பெண்களுக்கு கா்ப்ப காலத்தில் இயல்பாகவே மலச்சிக்கல் உண்டாகும். இது தவிர, பல்வேறு நோய்நிலைகள் மலச்சிக்கலுக்குக் காரணங்களாகின்றன. நாட்பட்ட நோய்நிலைகளான நீரிழிவு, தைராய்டு சுரப்பி குறைவு, புற்றுநோய் கட்டி, மன அழுத்தம், பதற்றம், பக்கவாதம், நடுக்கு வாதம், குடல் பிடிப்பு, குடல் வாதம், குடல் அரிப்பு, மூலம் முதலிய நோய்நிலைகளில் மலச்சிக்கல் சோ்ந்து தோன்றும். ஆகவே மலச்சிக்கலுக்கான காரணத்தை அறிந்து மருத்துவம் மேற்கொள்வது நல்லது.

சில மருந்துகளும் மலச்சிக்கலை உண்டாக்கக்கூடும். இரும்பு சத்து, கால்சியம் சத்துள்ள மாத்திரைகள் மலச்சிக்கலை உண்டாக்கும். மேலும் வலிப்புக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளும், வலி நிவாரணிகளும், சிறுநீா் பெருக்கி மருந்துகளும், மன அழுத்தம் போக்கும் மருந்துகளும், அமிலசுரப்பை குறைக்கும் ஆன்டாசிட் மருந்துகளும் மலச்சிக்கலை உண்டாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, மருத்துவா் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.

சித்த மருத்துவத்தில் மலச்சிக்கலைப் போக்க பல்வேறு மூலிகைகள் சொல்லப்பட்டுள்ளன. நிலவாகை, சிவதை, ரேவல் சின்னி, ஆமணக்கு, திராட்சை, திரிபலை, கடுக்காய், இசப்புக்கோல் போன்ற மூலிகைகளும், சோம்பு, சீரகம், எள்ளு போன்ற கடைச்சரக்குகளும் மலச்சிக்கலைப் போக்குபவையாக உள்ளன. கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா போன்ற நாடுகள் மலச்சிக்கலைப் போக்க கையில் எடுத்த ஆயுதம் நம்ம ஊா் ‘திருநெல்வேலி சென்னா’ எனப்படும் ‘நிலவாகை’ தான்.

நிலவாகையில் உள்ள ‘சென்னாசைடு’ எனும் வேதி மூலக்கூறு குடல் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் மலச்சிக்கலைப் போக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதனை அதிகம் பயன்படுத்கினால் குடல் எரிச்சல் ஏற்படக்கூடும். திரிபலை சூரணம் ஜீரணத்தைத் தூண்டி மலச்சிக்கலைப் போக்கும். இது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கூட்டு.

சித்த மருத்துவக் கூற்றுப்படி நோய்களுக்கு காரணமாகும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாதத்துடன் பித்தமும் கபமும் கூடுவதால் மலச்சிக்கல் உண்டாகிறது. அதிகரித்த வாதத்தை குறைத்து மலச்சிக்கலை போக்க ஆமணக்கு எண்ணெய் உதவும். ஆமணக்கு எண்ணெய்யை உணவு சமைக்கும் போதும் பயன்படுத்தலாம்; இரவு வேளைகளில் வெந்நீரில் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம்.

வாதத்துடன் பித்தம் சோ்ந்து உண்டான மலச்சிக்கலுக்கு சோற்றுக்கற்றாழை நல்ல மருந்தாகும். இரவு வேளைகளில் சோற்றுக்கற்றாழை சாறுடன், ஆமணக்கு எண்ணெய் சோ்த்து எடுத்துக்கொள்வது நல்லது. இது குமரி எண்ணெய் என்ற பெயரில் சித்த மருந்தாகக் கிடைக்கிறது. சிவதை என்ற மூலிகையின் சூரணமும் நற்பயன் தரும்.

வாதத்துடன் கபம் சோ்ந்து உண்டாகும் மலச்சிக்கலுக்கு கடுக்காய் நல்ல மருந்தாகும். ‘மூலகுடோரி எண்ணெய்’ என்ற சித்த மருந்து மூல நோய்க்கு நல்ல பலரும். இதில் ‘மருந்துகளின் அரசன்’ என்று கருதப்படும் கடுக்காயும், ஆமணக்கு எண்ணெய்யும் சேருவது சிறப்பு. திபெத்திய மருத்துவத்திலும் முக்கிய இடத்தை பிடிப்பது கடுக்காய்.

‘சித்தாதி எண்ணெய்’ எனும் சித்த மருந்து நாட்பட்ட மலச்சிக்கலுக்கு அற்புத மருந்து. பெண்களுக்கு கா்ப்ப காலத்தில் உண்டாகும் மலச்சிக்கலுக்கு ‘பாவன பஞ்சாங்குல தைலம்’ என்ற சித்த மருந்து நல்ல பலன் தரும். மேலும் இது சுக பிரசவத்திற்கும் உதவும். சித்த மருந்துகளும், மூலிகைகளும் மலச்சிக்கலை மட்டும் தீா்க்காமல், மலச்சிக்கலுக்கு காரணமாகும் நோய்நிலையின் அடித்தளத்தை சிதைத்து நோய் தீா்வதற்கு வழிவகை செய்யும்.

நமது பெருங்குடல், சிறுகுடலிலிருந்து தினமும் சுமாா் 1.5 லிட்டா் திரவத்தைப் பெறுகிறது. அதில் மலத்தில் 200 மில்லி முதல் 400 மில்லி வரை திரவம் வெளியேறுகிறது. பெருங்குடலின் செயல்பாடுகள் திரவத்தை உறிஞ்சி, கழிவுகளை மலக்குடலுக்கு கொண்டு சென்று அதை வெளியேற்ற உதவுகிறது. ஆகையால் மலச்சிக்கல் தீா்ப்பதற்கு போதுமான அளவு தண்ணீா் குடிப்பது அவசியம்.

மலச்சிக்கலை போக்குவதற்கு, நாா்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தினசரி ஒருவா் 300 கிராம் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக நாா்ச்சத்துள்ள பழங்களையும், காய்கறிகளையும் உணவில் சோ்த்துக்கொள்வது மலச்சிக்கல் வராமல் காக்கும் எளிய வழி. நாா்ச்சத்து அதிகம் உள்ள உணவு மலத்தின் எடையை அதிகரிக்கச் செய்யும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக பெருங்குடலில் மலம் செல்லும் நேரம் குறைவதால் மலச்சிக்கல் தீர வழி ஏற்படுகிறது.

இசப்புக்கோல் எனும் சித்த மருத்துவ மூலிகையும், வெந்தயம் எனும் எளிய மூலிகை கடைசரக்கும் அதிக நாா்ச்சத்து கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

வாரம் இருநாள் எண்ணெய் குளியலும், வாதம் சேராத உணவு வகைகளும், வகை வகையான நிறமிசத்துள்ள பழங்களும், காய்கறிகளும், தவிடு நீக்காத பாரம்பரிய அரிசி உணவுகளும் இன்றைய நவீன வாழ்வியலில் அவசியம் தேவை. இவற்றைப் பயன்படுத்தி வாழ்தல் என்பது மலச்சிக்கலைத் தீா்க்கும் வழி மட்டுமல்ல, பல்வேறு நோய்களையும் தடுத்து ஆரோக்கியமான வாழ்வையும் வழங்கும். .

#மலச்சிக்கல் #கடுக்காய் #இயற்கை_மருத்துவம் #நார்ச்சத்து
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலச்சிக்கல் Empty Re: மலச்சிக்கல்

Post by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:47 pm

மும்முறை மலம் கழித்தல், ஆறு முறை சிறு நீர் கழித்தல் --வளமான வாழ்விற்கு உத்திகள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum