புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_m10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10 
30 Posts - 50%
heezulia
புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_m10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_m10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_m10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10 
72 Posts - 57%
heezulia
புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_m10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_m10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_m10புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 19, 2023 10:58 am

புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Fb_img16

சென்னையில் நடுத்தர குடும்பம் ஒன்றின் மூத்த மகள் சாந்தா. நான்கு தங்கைகள், இரண்டு தம்பிகள். நோபல் பரிசு வென்ற சர் சி.வி.ராமன் சாந்தாவின் இளைய தாத்தா. நோபல் பரிசு வென்ற மற்றொரு விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர் தாய்மாமா. அப்பா ரயில்வே அதிகாரி. அம்மாவிடம்தான் ஆரம்ப கல்வி பயின்றார். நன்றாகப் படித்தார் சாந்தா. தனது விருப்பப்படியே மருத்துவர் ஆனார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றினார். பெரும் முயற்சிக்குப் பிறகு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய புற்றுநோய் நிறுவனத்தில் தானும் இணைந்தார் சாந்தா. அதற்காகவே, அரசு மருத்துவர் பணியில் இருந்து விலகினார்.

1954-ம் ஆண்டு. இரண்டு படுக்கை, இரண்டு மருத்துவர்கள் மற்றும் நான்கு ஊழியர்களுடன் குடிசையில் தொடங்கப்பட்டதுதான் புற்றுநோய் நிறுவனம். மருத்துவ வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில், புற்றுநோய் வருவதற்கான காரணமும், உரிய சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களுக்கே அதிகம் தெரியவில்லை. இதனால், குழந்தைகள் உட்பட பலரும் உயிரிழப்பது அதிகமாக இருந்தது. அதைக் கண்டு வருந்திய சாந்தா, உயரிய, உரிய சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொண்டார். முத்துலட்சுமி ரெட்டி மற்றும் அவரின் மகனும் மருத்துவருமான கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் இணைந்து, புற்றுநோய் நிறுவன வளர்ச்சிக்காக மட்டுமே உழைத்தார். தமிழகம் தவிர, வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் இந்த மையத்தை நாடி வந்து பயன்பெற்றுள்ளனர்.

புற்றுநோய் என்றாலே பலரும் அஞ்சி நடுங்கிய காலகட்டத்தில், `இது குணப்படுத்தக்கூடிய நோய்தான்' என்று நம்பிக்கையூட்டியதுடன் திறமையான சிகிச்சை முறையால் அதை மெய்ப்பித்தும் காட்டினார். புற்றுநோய்க்கான மேம்பட்ட சிகிச்சை முறைகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தி, மத்திய மாநில அரசுகளுக்கு இணைப்புப் பாலமாகவும் இருந்தவர். ஆயிரக்கணக்கான திறமையான மருத்துவர்களையும் செவிலியர்களையும் உருவாக்கி மருத்துவ ஆசிரியராகவும் திகழ்ந்தார்

இந்த சேவைப் பணிக்காகவே, திருமணம் உள்ளிட்ட தனது தனிப்பட்ட நலன்களைத் தவிர்த்தார். முத்துலட்சுமி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்குப் பிறகு, 1997-ம் ஆண்டு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவரானார் சாந்தா. புற்றுநோயாளிகளைக் குணப்படுத்துவதில் பெரும் முனைப்பு காட்டியவர், அரசு மற்றும் தனியாரிடம் நிதியுதவி பெற்று, புற்றுநோய் நிறுவனத்தைப் படிப்படியாய் விரிவுபடுத்தினார். 130 மருத்துவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் சிகிச்சைபெறும் அளவுக்கு பெரும் விருட்சமாக வளர்ந்துள்ளது இந்த மையம். ஓரளவுக்கு வசதி படைத்தோரிடம் மட்டும் சிகிச்சைக்காகக் கட்டணம் பெறுகின்றனர். புற்றுநோய் பாதித்த ஏழைகளுக்கு இலவசமாகவே சிகிச்சை வழங்குகின்றனர்.

இத்தனை மாற்றங்களை நிகழ்த்திக்காட்டினாலும், எளிமை, எல்லோரிடமும் மென்மையாகப் பழகக்கூடிய தன்மை, முதுமையைப் பொருட்படுத்தாத இடைவிடாத உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவச் சேவை ஆகியவைதான் டாக்டர் சாந்தாவின் 67 ஆண்டுக்கால அடையாளம். குடும்ப விழாக்களில் மட்டும் சொந்த பந்தங்களைச் சந்திப்பார். தங்கை சுசீலா தவிர, யாருடனும் அதிக நேரம் செலவிட மாட்டார். பண்டிகைக் காலம் உட்பட எப்போதும் வெளியிடங்களுக்கும் செல்ல மாட்டார். கொண்டாட்டங்களிலும் அதிக நாட்டமில்லாதவர். விருந்தினர்கள் வந்தால்தான் அலுவலக குடியிருப்பின் வரவேற்பறைக்கு வருவார். மற்றபடி தனது அறையில்தான் எப்போதும் இருப்பார். ஓய்வு நேரத்தில் அதிகம் வாசிப்பார். தவிர, புற்றுநோயாளிகளின் நலனுக்கும் புற்றுநோய் நிறுவன வளர்ச்சிக்காவும் மட்டுமே அதிகம் சிந்தித்தார்.

ஆசியாவின் உயரிய விருதான மகசேசே விருது, இந்தியாவின் உயரிய பத்ம விருதுகள் அனைத்தையும் வென்றவர். `விருதுகள் நம்மைத்தேடி வர வேண்டும். நாம் அவற்றுக்கு ஆசைப்படக் கூடாது' என்பார்கள். சாந்தா அதற்கும் ஒருபடி மேலே சென்று, `வாங்கிய விருதுகள் போதும்' எனத் தன்னைத் தேடிவந்த விருதுகள் பலவற்றையும் வாங்க மறுத்தார்.
இந்தியாவின் உயரிய விருதான `பாரத ரத்னா' விருதையும் இவருக்கு வழங்குவதற்கு மத்திய அரசு பலமுறை முயன்றும் சாந்தா மறுத்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு சாந்தாவுக்கு அவள் விகடனின் `தமிழன்னை விருது' வழங்கிய தருணம் இங்கே குறிப்பிடத்தக்கது.

, தனக்குக் கிடைக்கும் பரிசு, பணம் உள்ளிட்ட அனைத்தையும் புற்றுநோய் நிறுவனத்துக்கே பயன்படுத்தினார்.

நகைகளின்மீது துளியும் நாட்டமில்லாதவர். தனிப்பட்ட சென்டிமென்ட் காரணத்தால் மெல்லிய தங்க செயின் ஒன்றை மட்டும் எப்போதும் அணிந்திருந்தார். மற்றபடி பழுப்புநிற காட்டன் புடவைகளை மட்டுமே உடுத்துவார்.

ஆன்மிகத்தில் அதிக நாட்டமில்லாதவர். உதவும் மனங்கள்மீது அதிக மதிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணிக்கு எழுந்தால், இரவு 10 மணிவரை அவரது சிந்தனை எல்லாம் மருத்துவம் சார்ந்த பணிதான். ஒரு வேலையைக் கையில் எடுத்தால் வெற்றி கிடைக்கும் வரை இடைவிடாமல் போராடுவார். வயோதிகத்தைப் பொருட்படுத்தாமல், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் புற்றுநோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வந்தார்.

#மருத்துவர் சாந்தா ருசிக்கு இல்லாமல், பசிக்கு மட்டும் அளவாகவே உணவு உண்பார். ஒரு பருக்கை சாதம்கூட வீணாகக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையோடு இருப்பார். பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிக்கு மழலைத் தன்மை ஆர்வத்துடன் விடை காண்பார். அப்துல் கலாம் மீது அதிக அன்பு கொண்டவர். அவரைப் பற்றித் தன் உரைகளில் தவறாமல் குறிப்பிடுவார். உடன் பிறந்த தங்கை சுசீலா மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். தங்கையுடன்தான் தினமும் மதிய உணவு சாப்பிடுவார்.......வாழ்ந்தாலும் இவர் போல் வாழ வேண்டும். மனிதருள் மாணிக்கம்.





புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 19, 2023 11:44 am

“பண்டிகைக் காலம் உட்பட எப்போதும் வெளியிடங்களுக்கும் செல்ல மாட்டார். கொண்டாட்டங்களிலும் அதிக நாட்டமில்லாதவர். ”

“ஆன்மிகத்தில் அதிக நாட்டமில்லாதவர். ”

“நகைகளின்மீது துளியும் நாட்டமில்லாதவர்.” -
- புற்றுநோய் மருத்துவர் சாந்தா !

மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் நாரீமணிகள் கவனிக்க!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm

Code:
மருத்துவர் சாந்தா ருசிக்கு இல்லாமல், பசிக்கு மட்டும் அளவாகவே உணவு உண்பார். ஒரு பருக்கை சாதம்கூட வீணாகக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையோடு இருப்பார். பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிக்கு மழலைத் தன்மை ஆர்வத்துடன் விடை காண்பார். அப்துல் கலாம் மீது அதிக அன்பு கொண்டவர். அவரைப் பற்றித் தன் உரைகளில் தவறாமல் குறிப்பிடுவார். உடன் பிறந்த தங்கை சுசீலா மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். தங்கையுடன்தான் தினமும் மதிய உணவு சாப்பிடுவார்.......வாழ்ந்தாலும் இவர் போல் வாழ வேண்டும். மனிதருள் மாணிக்கம்.

தமிழகம் பெற்ற மாணிக்கம். அவர் மறைந்து இரெண்டாண்டு முடிந்தாலும் அவர் சேவை என்றென்றும் நிலைத்து நிற்கும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக