புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
100 Posts - 49%
heezulia
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
7 Posts - 3%
prajai
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
2 Posts - 1%
Barushree
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
2 Posts - 1%
cordiac
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
227 Posts - 52%
heezulia
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
18 Posts - 4%
prajai
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
2 Posts - 0%
Barushree
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தனிமை X தன்னுணர்வு  Poll_c10தனிமை X தன்னுணர்வு  Poll_m10தனிமை X தன்னுணர்வு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமை X தன்னுணர்வு


   
   
selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Mon Jan 02, 2023 8:58 am

தனிமை X தன்னுணர்வு

தனிமை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மிடையே வரும் ஒரு உலகம்-தனிமை.

ஒரு கூட்டத்தில் , குடும்ப விழாவில், அலுவலகத்தில் , பள்ளிப் பருவத்தில் என பல வேறு சந்தர்பங்களில் நாம் நம்மை கடக்க முடியாமல் தனிமையில் வாடி இருப்போம்.

இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

நம் வலி, நம் குடும்பம், நம் சந்தோஷம் , நம் வாழ்வு என்று இருப்பவர்களுக்கு இந்த வலி "அதிகம்" வரும்.

இதுவே ஒரு சந்நியாசி யின் நிலையில் இருந்து பார்த்தால், அவர் உலகமே இதற்கு எதிர்மறையாக இருக்கும்.

காரணம் ; அவர்தம் தன்னுணர்வு


நாம் தன் உணர்வு கொள்ளும்போது நம்மிடையே

ஒரு மீட்சி,

ஒரு அறம்,

ஒரு முழுமை ;

தோன்றுவதை உணரலாம்.

அதுவே பரிபூரண வாழ்வு;
இதைத்தான் "பாகவதம்" கூறுவதாக "ஜெய மோகன்" - தமிழில் இன்றைய இலக்கிய வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் எழுத்தாளர்- தன் "Magnum opus " என்று அறியப்படும் "வெண்முரசில் " கூறுகிறார்.


எப்போது உங்கள் தனிமை
தன்னிறைவு பெறும்.

Eg. Mahatma Gandhi,

சராசரி இந்தியனின் அடையாளமாக இருந்தார்-Simple Attire - ஒரு கோமணத் துண்டு.


அவர் கூறுகிறார்: " நான் காட்டில் இருந்து கொண்டு 'ஜிலேப்பிக்கு '
ஆசைப்பட்டது இல்லை. ஜலேப்பிக் கடையில் இருந்து கொண்டு ஜிலேப்பியை ஜிலேப்பியாக பார்ப்பவன்.

சாவி - எழுத்தாளர்-நவகாளியாத்திரை.

அவ்வாறாக தன் உணர்வு கொள்பவர்களுக்கு,

குடும்பத்தில்,
வாழ்க்கையில்,
சமூகத்தில்,
அலுவலகத்தில்,
நண்பர்கள், உறவுகள் மற்றும் இன்ன பிற ஜீவன்களிடமும் ஒரு "உன்னத உணர்வு மூலம் உறவு"
கொண்டு வாழ்வாங்கு வாழ்வார்கள்.

"முதுமை என்ற தனிமை " வரை காத்துக் கிடக்கத் தேவை இல்லை.


இரண்டு உதாரணங்கள்.

முதுமையிலும் இளம் துடிப்புடன் செயல் பட்ட

1.மகாத்மா காந்தி;

இளமையிலேயே தன்னை மறந்து சமூக மேம்பாட்டிற்காக காலத்தை வென்ற

2. மகாகவி பாரதி.

இதே நம் மகாகவி சொல்கிறார்.

"காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள

கடலும் , மலையும் எங்கள் கூட்டம்,

நோக்கம் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக் களி யாட்டாம்".

கடலையும், மலையையும் நம் இனமாகவே பார்த்தார். பரவசம் அடைந்தார்.

இதுவே இன்று " Global warming" என்ற பட்டத்துடன் " Green-Revolution" என்ற அடைச் சொல்லுடன் ஒரு சொல்லாடலாகப்பட்டு தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

பாரதி போன்ற ஒரு கவிஞன் இனி பிறக்கப் போவது இல்லை. ஜாதி, மதம் ,இனம் ,மொழி கடந்து எல்லோரையும் நேசித்த மகாத்மாவாக பாரதி வாழ்ந்தார்.

வாழ்க்கையில் , சிந்தனையில் காந்தியத்தையும், பாரதியையும் தன் உணர்வாகக் கொண்டு செய்கிற வேலையில் முழுமை பெறுவோம்.


தனிமை என்று தனித்து ஒன்று இல்ல.

அது ஒரு மன நிலை.

இரா.செ.




சிவா, T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 02, 2023 12:06 pm

நல்லதோர் அலசல்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9716
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 02, 2023 12:21 pm

தனிமையை ஒரு வியாதியாக முதிய தலைமுறை பார்த்துச் , சாமியார்களிடம் அடைக்கலமாகிறது! இளைய தலமுறைகளுக்குப் பாடம் என்பதைவிட , முதிய தலைமுறைகளுக்குத்தான் அதிகப் பாடம் தேவைப்படுகிறது!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Mon Jan 02, 2023 2:14 pm

சான்றோருக்கு என் பணிவான வணக்கங்கள்.

ஈகரை மூலம் என் "மனிதம்" வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

இது சத்தியம்.

மீண்டும் நன்றிகள்.

திரு Dr. Sounderapandian ஐயா,

திரு T N Balasubramanian ஐயா

திரு இரமணியன் ஐயா.

வாழ்வில் முழுமை காண விழைகிறேன்.
A person becomes complete by 50%reading and 50%shared experience.

Unanimously


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 02, 2023 3:11 pm

தனிமை என்பது ஒருவித வரம்.

தனிமையின் தேடல் நல்லதாக இருந்தால் நம் வாழ்வு சிறக்கும்.

அதே தனிமை சிலருக்கு சாபமாக மாறி தவறான தேடல்களை உருவாக்கி வாழ்க்கையையும் சீரழித்து விடுகிறது.

நம் தனிமையில் எழும் ஆழ்மன சக்திகளின் எண்ணம் தான் உன்னுடைய உண்மையான சுபாவம். மற்ற நேர வாழ்க்கை சமூகத்திற்கான நடிப்பு மட்டுமே.

ஈகரை தமிழ் களஞ்சியம் என்ற இணையதளம் உருவானதன் காரணம் என் தனிமையின் உந்துதல். என் தனிமையைத் தவிர்க்க உருவான தளம் இன்று பலரது தனிமையின் தேடலுக்கு வடிகாலாக மாறியிருக்கிறது.


சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



தனிமை X தன்னுணர்வு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

selvanrajan இந்த பதிவை விரும்பியுள்ளார்

selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Mon Jan 02, 2023 3:45 pm

நிருவனர் திரு சிவா ,

அவர்களுக்கு.
உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
அந்த பல குரல்களில் நானும் என் தனிமையை தன்னகப்படுத்த முயற்சிக்கிறேன்.

நம் எழுத்தில் , எண்ணத்தில் ஒரு களங்கம் (கல்லம் கபடம்)அற்ற நிலை வரும் போது வெற்றி தோல்விகளுக்கு அப்பால் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

தங்களின் "தளம்". ஈரமானதாகவே எல்லேரையும் அரவைணக்கும் ஒரு மாபெரும்  இயக்கமாக விளங்குகிறது.

தனிமையில் இனிமை சாத்தியம் தான்.

நன்றிகள் நிருவனருக்கு.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 02, 2023 4:49 pm

selvanrajan wrote:நிருவனர் திரு சிவா ,

அவர்களுக்கு.
உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
அந்த பல குரல்களில் நானும் என் தனிமையை தன்னகப்படுத்த முயற்சிக்கிறேன்.

நம் எழுத்தில் , எண்ணத்தில் ஒரு களங்கம் அற்ற நிலை வரும் போது வெற்றி தோல்விகளுக்கு அப்பால் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

தங்களின் "தளம்". ஈரமானதாகவே எல்லேரையும் அரவைணக்கும் ஒரு மாபெரும்  இயக்கமாக விளங்குகிறது.

தனிமையில் இனிமை சாத்தியம் தான்.

நன்றிகள் நிருவனருக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1370653
நன்றி செல்வராஜன்.
தொடர்ந்து இணைந்து பயணிப்போம். நன்றி



தனிமை X தன்னுணர்வு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Tue Jan 17, 2023 2:53 pm

ஆச்சரியம் ; ஆனால் உண்மை


" இப்பத்தான் உன்னைப் பற்றி பேசிக்கொண்டு. இருந்தோம் ;நீ வந்து விட்டாய் !!உனக்கு100வயது " இந்த சொல்லாடல் பல முறை நாம் சொல்லி. இருப்போம் ; அல்லது நாம் சொல்லப்பட்டு இருப்போம்- இது எப்படி சாத்தியம்.

இது எல்லாம் எப்படி நடக்குது-எனக்கு தெரியலே !

இதைத்தான் மைண்ட்ரீடிங் என்று சொல்கிறார்கள். இது எல்லோருக்கும் நடக்கும் ஒரு நிகழ்வு.

நாம் ஒருவரை பல முறை சந்திக்காமல் இருக்கலாம். ஒரு சினிமா தியேட்டரிலோ , ஒரு கிளப் மீட்டிங்கிலோ, ஒரு அரசியல் கூட்டத்திலோ, ஒரு முறை சந்தித்த நபரை வெகுநாள் கழித்து சந்திக்கும்போது எங்கேயோ பார்த்து இருக்கோமே இந்த நபரை என்று நமக்கு ஒரு சிந்தனை வரும்.

அதை நாம் சிந்தனையில் வைத்துக்கொள்ளாமல் மேலோட்டமாக விட்டுவிடுவோம்.

ஆனால் நாம் ஒரு விஷயத்திற்காக ஒருவரை சந்திக்க முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து அதில் பயணம் செய்யும்போது இந்த நிகழ்வு நடந்து இருக்கும்.

அவரும் ஏதோ ஒரு காரணமாக அந்த இடத்திற்கு வந்து இருப்பார் :- அது ஒரு பஸ் ஸ்டாப் , ரயில் நிலையம், விமாண நிலையம் ; அல்லது ஒரு கோயில், குளம், டீ கடையாக கூட இருக்கலாம்.

இதற்கு எல்லாம் பதில் தேடும்போது அது ஒன்றை உணர்த்தும்; அது தன்னுணர்வு..

அதை கண்டு கொண்டால் , பறவைப் போல் உல்லாசமாக பறக்கலாம். பறக்கும் போது விதைகளை தூவி பல விருட்சங்களை உண்டாக்கலாம்.

இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கும்போது பிறப்பிற்கும் இறப்பிற்கும் உள்ள இடைவெளி என்பது ஒரு சுவாரஸ்யம் நிறைந்த நித்ய கல்யாணமாக இருக்கும்.

அந்த கல்யாணத்தில் ஆர்ப்பாட்டம் இருக்காது; அமைதி இருக்கும்; ஆனந்தம் கைகூடும். அலைகள் வந்து போகும்; ஆனால் ஆழமான நிசப்தம் உருவாகும்.

அந்த உணர்வு நம்மை படைத்தவன் நமக்கு உணர்த்தும் உண்மை.

இது ஒரு படைப்பாளிக்கு வந்தால் அது நாவல்; புதினம்; கவிதை.

செயலில் வெளிப்பட்டால் - புரட்சி;

அமைதியாக அமைந்தால் அது ஆன்மீகம் !!!



சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக