புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
68 Posts - 45%
heezulia
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
5 Posts - 3%
prajai
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
1 Post - 1%
kargan86
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
9 Posts - 4%
prajai
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
2 Posts - 1%
viyasan
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரத்தில் ஒருவன்


   
   
k.mani
k.mani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 24/01/2010

Postk.mani Sun Jan 24, 2010 2:14 pm

This is taken from another website URL : http://tamil.webdunia.com/entertainment/film/review/1001/16/1100116014_2.htm

ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரக்கணக்கானவர்களின் 3 ஆண்டு உழைப்பில் 32 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் உருவாகியிருக்கும் படம். ஆதிவாசிகள், நீண்ட பாலைவனப் பயணம், சோழர் பரம்பரை, போர் என்று இதுவரை தமிழ் சினிமா தொட்டிராத விஷயங்கள். ஓபனிங் எல்லாம் சரிதான், ஆனால் ஃபினிஷிங்...?

பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும்
நடக்கும் போரில் சோழன் தோற்கடிக்கப்படுகிறான். பாண்டியர்களுக்கு தேவை
சோழர்களிடம் இருக்கும் பாண்டியர்களின் குலதெய்வ சிலை. சோழனோ அந்த சிலையை
தனது மகனிடம் கொடுத்து சில வீரர்களுடன் பாண்டியர்கள் கையில் சிக்காமல்
தப்ப வைக்கிறான். வியட்நாம் நாட்டிற்கு அருகில் இருக்கும் பெயர் தெரியாத
தீவுக்கு தப்பிச் செல்கிறான் சோழ இளவரசன்.

அவனை
கண்டுபிடித்து தங்களது குலதெய்வ சிலையை மீட்டுவர பாண்டியர்கள் எடுக்கும்
முயற்சிகள் பலனளிக்கவில்லை. சோழ இளவரசன் இருக்கும் இடமே அவர்களுக்கு
தெரியவில்லை. அவன் இருப்பதாக சொல்லும் இடத்துக்கு சென்றவர்கள் உயிருடன்
திரும்பியதில்லை. இந்த தேடுதல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து
கொண்டிருக்கிறது.


இந்த
செய்திகள் அனைத்தும் புகைப்படங்களாக படத்தின் தொடக்கத்தில் சில
நிமிடங்களில் சொல்லப்பட்டு விடுகிறது. படம் நிகழ்காலத்தில் தொடங்குகிறது.


ஆயிரத்தில் ஒருவன் Img1100116014_1_1





சோழன்
சென்றதாக நம்பப்படும் இடத்திற்கு செல்லும் ஆராய்ச்சியாளர் (பிரதாப்
போத்தன்) காணாமல் போகிறார். அவரை கண்டு பிடிக்கும் பொறுப்பை அரசு ரீமா
சென் தலைமையிலான டீமுக்கு அளிக்கிறது. அந்த டீமுடன் பிரதாப் போத்தனின்
மகள் ஆண்ட்ரியாவும் இணைந்து கொள்கிறார். வியட்நாம் செல்லும் இவர்களுக்கு
சுமை தூக்கும் போர்டர் குழுவின் தலைவராக வந்து சேர்கிறார் கார்த்தி.


சோழர்கள் தப்பிச் சென்றதாக நம்பப்படும் இடத்தை அடைய ஆண்ட்ரியாவிடம் ஒரு ஓலைச் சுவடி இருக்கிறது. கடல், ஆதிவாசிகள், பாம்பு, பசி தாகம், புதை மணல், கிராமம் என ஏழு ஆபத்துகளை அவர்கள் கடந்தாக வேண்டும். ஆபத்துகளை சாகசத்துடன் கடந்து சென்றால் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.

சோழர்கள்
இன்றும் அங்கு தங்கள் பூர்வ நிலத்திலிருந்து அழைப்பு வரும் என
காத்திருக்கிறார்கள். அவர்களது அரசர் பார்த்திபன். இதில் “நான்தான் தூதுவன
்” என்கிறார் ரீமா சென். அரசர் நம்புகிறார். கிளம்பும் போதுதான் தெரிகிறது அவர் பாண்டிய குலத்தின் வாரிசு என்பதும், பாண்டியர்களின் குலதெய்வ சிலையை எடுத்துப் போக வந்தவர் என்பதும்.

அப்படியானால் உண்மையான தூதுவன் யார்? சோழர்கள் தங்களது ஆசைப்படி பூர்வீக நிலத்தைச் சென்றடைந்தார்களா? நெடிய போருடன் பதிலளிக்கிறார் செல்வராகவன்.

ஒளிப்பதிவு, ரீமா சென்னின் நடிப்பு, கார்த்தியின் மேனரிஸம், அரசர் பார்த்திபன், பின்னணி இசை, இரம் அலியின் காஸ்ட்யூம், சந்தானத்தின்
கலை இயக்கம் அனைத்தும் ஆச்சரியமான அசத்தல்கள். கண்டிப்பாக பாராட்ட
வேண்டியவர்கள் படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்கள். நிறத்தை கொடுத்து
உழைத்திருக்கிறார்கள்.

காருக்குள் இருந்து டாப்லெஸ்ஸாக வெளிவரும் அறிமுக காட்சியிலேயே அசத்துகிறார் கார்த்தி. ஆண்ட்ரியா, ரீமா
இருவருக்கும் ரூட் விடும் ஏரியாக்கள் கலகல. ஒரு துண்டு கறியை
ஆண்ட்ரியாவிடம் கொடுத்துவிட்டு எடுத்துக்கோ என்பது போல் தலையசைக்கிறாரே, அசத்தல். ஆனாலும்... கறிவேப்பிலை மாதிரிதான் வருகிறார் கடைசிவரை.

நிஜ
ஹீரோ ரீமா சென்தான். கவர்ச்சியுடன் துவேசத்தையும் கலந்து அவர் காட்டுகிற
ஆவேசம் இதற்குமுன் பார்த்திராதது. ரீமாவின் நிஜ உருவம் தெரிந்ததும்
கண்ணில் நீர் ததும்ப நடக்கும் பார்த்திபன் கவர்கிறார். அவர் பாடும்
நெல்லாடிய நிலமெங்கே உணர்வை அறுக்கும் பேரிசை.


நிழல் சிவதாண்டவமாக விரிவதும், அந்த நிழலில் புதை மணிலில் இருந்து தப்பிக்க ஓடுவதும் ரசிக்க வைக்கும் பிரமாண்டம். அதேபோல் பார்த்திபனின் அறிமுக காட்சி.

ஆயிரத்தில் ஒருவன் Img1100116014_2_1
webdunia photo
FILE

வகிடெடுத்தது
போன்ற கதையை திரைக்கதை கத்தியால் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்
செல்வராகவன். அதுவும் இரண்டாம் பகுதி காட்சிகளில் குழப்பமோ குழப்பம்.
நிகழ்காலத்தில் நடக்கும் கதைக்கு மாயாஜாலம் எல்லாம் தேவைய
ா? சோழர்கால தமிழ் காதுக்கு இனிமை. பாதி புரியவில்லை என்பதுதான் சோகம்.

ஏதோ ஒரு நாட்டில் இந்திய ராணுவம் சர்வ சாதாரணமாக வருவதும், தண்ணியடித்து
பெண்களை மானபங்கப்படுத்துவதும் டூ மச். அதேபோல் சிவப்பு நிற ஆதிவாசிகளை
ஒட்டு மொத்தமாக போட்டுத் தள்ளுகிறார்கள். எப்படிப்பா?

சாகச காட்சிகள் கிங் சாலமன்ஸ் மைன்ஸ், மெக்கனஸ் கோல்டு, கிளாடியேட்டர், 300 மம்மி, க்ரோஞ்சிங் டைகர்... என பல படங்களை நினைவுப்படுத்துகிறது. பெரிய கற்களை பொறித்து அதை எதிரிகள் மீது வீசுவது, அடிமைகளையும்
கைதிகளையும் வீரர்களுடன் மோத விடுவது என சோழர்களுக்கு சம்பந்தமில்லாத ரோம
பேரரசின் போர் கலைகளை படத்தில் காட்டுகிறார்கள். தொ.பரமசிவம்
போன்றவர்களிடம் ஆலோசித்திருக்கலாம்.

ராணுவ அதிகாரி அழகம்பெருமாள் உட்பட பலரும் பாண்டிய குல வாரிசு என்பதும், சிலையை மீட்க ராணுவத்தில் சேர்ந்ததாக ஜல்லியடிப்பதும் இன்ஸ்டன்ட் பூ.

ராணுவம்
சோழர்களை கொன்று அவர்களது பெண்களை மானப்பங்கப்படுத்தும் போது ஈழம்
மனக்கண்ணில் விரிவதை தவிர்க்க முடியவில்லை. காயம்பட்ட பார்த்திபன்
கடற்கரைக்கு ஊர்ந்து சென்று உதவி வேண்டி பூர்வீக சோழர்களை அழைப்பதும
், உதவி செய்ய கப்பல்கள் அணிவகுத்து வருவது போல் கனவு காண்பதும் ஈழ சித்திரத்தை முழுமையாக்குகிறது.

செல்வராகவனின் முயற்சியும் பிரமாண்ட உழைப்பும், கை நழுவிப்போன திரைக்கதையால் கலகலத்துப் போனது, துரதிர்ஷ்டமின்றி வேறென்ன.

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sun Jan 24, 2010 2:21 pm

வாங்க k.mani ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கின்றது. என்னா வந்ததும் ஆயிரத்தில் ஒருவன் செய்தியுடன் வந்திருக்கிங்க! இது ஈகரையில் இருக்கிறதென்று நினைக்கின்றேன் இருந்தாலும் உங்கள் ஆர்வத்துக்கு நன்றி! மேலும் உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கின்றோம்



ஆயிரத்தில் ஒருவன் Riki

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக