புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
14 Posts - 70%
heezulia
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
4 Posts - 1%
mruthun
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_m10அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்..


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 2:57 am

நாம் எந்த ஒரு விழாவில் கலந்து கொண்டாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது. தமிழில் எத்தனையோ நல்ல பாடல்கள் இருந்தும் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலை மட்டும் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்தாக முதலில் பாடுகிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற மகாகவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வங்க மொழிப்பாடலை ஏன் தேசிய கீதமாகப் பாடுகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை. இவர் தமிழின் பெருமைகள் அனைத்தையும் மொத்தம் 15 பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இப் பாடல்களில் முதல் பாட்டினை மட்டும் எடுத்துக் கொண்டு 2-வது பாடலின் கடைசி வரியையும் சேர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தாக இந்தப் பாடல் அனைத்து அரசு விழாக்களிலும் ஒலிபரப்பாகிறது.

மொத்தமுள்ள 15 பாடல்களையும் பாடினால் நீண்ட நேரமாகிவிடும் என்பதால், சுருக்கமாகப் பாடிட வேண்டும் என்பதற்காக சுருக்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது.

முதல் பாடலின் முதல் வரி நீராருங் கடலுடுத்த என்று துவங்குகிறது. 2-வது பாடலின் கடைசி வரியான உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே என்ற வரியை முதல் பாடல் பாடி முடிக்கும் போது கடைசியாகச் சேர்த்துப் பாடப்படுகிறது. தமிழின் பெருமைகளை, உயர்வுகளைச் சொல்கிறது இப் பாடல்.

இறைவனுக்கு அடுத்து தமிழே தெய்வம் என்று இப் பாடல் சொன்னதால்தான், இதுவே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பட்டு வருகிறது.

தமிழின் பெருமைகளை அனைவரும் அறிந்து, மதித்துப் போற்ற வேண்டும் என்பதற்காகவே விழாக்களின் துவக்கத்தில் இப் பாடலை ஒலிபரப்புகிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற வங்க மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட பாடலே இன்று அரசு விழாக்களின் நிறைவில் பாடும் தேசீய கீதமான ஜன கண மன என்று துவங்கும் பாடல். இந்தியத் தாயே மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய் என்பது முதல் வரிக்கான பொருளாகும்.

பாடலின் முடிவில் இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே உனக்கு வெற்றி வெற்றி வெற்றி என்று முடிகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மாநில மக்களையும் ஒன்றிணைத்து இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதால் தான், இந்தப் பாடலை தேசிய கீதமாகத் தேர்வு செய்து அறிவித்தது அரசு.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நின்று தாய்க்கு வணக்கம் செலுத்துவதைப் போல, சிரத்தைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு பாட வேண்டும்.

அதேபோல, பெருமைக்குரிய நம் தேசத்தின் சிறப்புகளைச் சொல்லும் தேசிய கீதத்தைப் பாடும் போது கூனாமல், குனியாமல், ஆடாமல், அசையாமல் நேராக நின்று தலையை நிமிர்த்தி கம்பீரமாக பாட வேண்டும்.

இன்று எத்தனையோ விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பல வகைகளில் அவமதிக்கப்பட்டு வருகின்றன.

எந்த விழாவாக இருந்தாலும், மதிப்புமிக்க இரு பாடல்களும் அங்கு கூடியிருக்கும் மக்களால் பாடப்படுவதில்லை, குறுந்தகடுகள்தான் பாடுகின்றன.

பாடிக் கொண்டிருக்கும் போதே குறுந்தகடு சிக்கிக் கொண்டு பாடல் வரிகள் தடுமாறுவதும், வார்த்தைகள் தடுமாறுவதும் சகஜமாகவே நடக்கின்றன. மிகப் பழமையான குறுந்தகடுகளையே தொடர்ந்துபயன்படுத்துவதால், வார்த்தை தடுமாற்றங்கள் தொடர்கின்றன. சில விழாக்களில் முதலில் உள்ள இரு வரிகளை விட்டுவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடல் ஒலிபரப்பாகிறது.

இன்னும் சில விழாக்களிலோ பாடலின் கடைசி வரி முடிவதற்குள் குறுந்தகடு முன்பாகவே முடிந்து விடுகிறது. எத்தனையோ விழாக்களில் குறுந்தகடு ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே மின் தடை ஏற்படுகிறது.

ஒலி பெருக்கி வைத்திருப்பவரிடம் சம்பந்தப்பட்ட குறுந்தகடு இல்லை என்பதற்காகவே சில நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இல்லாமலேயே கூட முடிந்து விடுகின்றன. ஒலிபெருக்கிக்காரரும் முக்கியப் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாகவே பாடலை சரியாகத் தேர்வு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி போட்டுப் பார்த்து பாடல்களை கொஞ்சம், கொஞ்சமாகக் கொன்று பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.

பறவைகளும், விலங்குகளும் பாட நினைத்தால் பாட முடியாது. அவற்றுக்கெல்லாம் இல்லாத அற்புத சக்தி மனிதனிடம் இருக்கிறது. அதுதான் பாடும் சக்தி, பேசும் சக்தி. இந்த அற்புத சக்தி மனிதர்களிடம் இருந்தும் ஏன் பாடுவதில்லை? குறுந்தகடுகளை நம்பித்தான் இருக்க வேண்டுமா?

சின்னஞ்சிறு வயது திருஞானசம்பந்தரை வயது முதிர்ந்த திருநாவுக்கரசர் பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றது பாடலுக்காகத்தான். சகோதரர்களே, சகோதரிகளே என்று தொடங்கியதால் தானே சுவாமி விவேகானந்தரின் வாக்கை இந்த உலகம் மதித்து உயர்த்தியது அவர் வாய் திறந்து பேசியதால் தானே. எனவே பாடுவதும், பேசுவதும் இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள மகத்தான சக்திகள். இதனைப் பயன்படுத்தாமல் போவதால் எந்தப் பலனுமில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்தும்,தேசிய கீதமும் நம் நாட்டின் மதிப்பு மிக்க சொத்துகள். அவை நம்மால் பாடப்படும் போதும் தொடர்ந்து பேசப்படும் போதும் தேசப்பற்றும், மொழிப்பற்றும் வாழு ம். பாடல்களை மனப்பாடமாகப் பாட வேண்டும்.

சி.வ.சு. ஜெகஜோதி



அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Jan 24, 2010 3:28 am

வணக்கம்
தேசப் பற்றும் இனப் பற்றும் மொழிப் பற்றும் இல்லாத அரசிய்ல் வாதிகள் தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்தையும் பாடாதிருத்தலே நலம். எங்கோ படித்த ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது.(இதை எழுதியவர் திரு குஷ்வந்த் சிங் என்பதாக நினைவு)
இந்திய எல்லையைக் கடந்து ஒருவர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாகிஸ்தான் ஆமிக்காரர்கள் அவரைப் பிடித்து உளவாளி என்று கைது செய்து விடுகின்றனர், தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று கைது செய்யப் பட்டவர் வாதாடினார், அப்படியானால் உங்கள் நாட்டுத் தேசிய கீதத்தைப் பாடுங்கள் என்று சொன்னார்களாம் அந்த ஆமிக்காரர்கள், அதற்குஅவர் எம்முடைய தேசியகீதம் எனக்கு முழுமையாகத்தெரியாது என்றவுடன் அந்த ஆமிக்காரர் அப்படியானால் உண்மையிலேயே நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தாம் என்று அவரை விடுவித்தனராம், இது தான் இன்றைய அரசியல் வாதிகளின் உண்மையான முகம். மேலும் ஒரு விடயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன், இந்திய தேசிய கீதமான ஜன கண மன ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவுக்கு வந்த போது அவரைப் போற்றி எழுதப் பட்டது, ஒரு தேசத்தைப் பெண்ணாக அதுவும் தாயாக மதிக்க வேண்டும், ஆனால் இந்தப் பாடல் ஒரு ஆண்பாலைக் குறித்துத் தான் பாடப் பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது
அன்புடன்
நந்திதா

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sun Jan 24, 2010 9:54 am

என்ன கொடுமை சார் இது



அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. Riki
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக