புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10செல்போன் ஆராய்ச்சி...! Poll_m10செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10செல்போன் ஆராய்ச்சி...! Poll_m10செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10செல்போன் ஆராய்ச்சி...! Poll_m10செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10செல்போன் ஆராய்ச்சி...! Poll_m10செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10செல்போன் ஆராய்ச்சி...! Poll_m10செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10செல்போன் ஆராய்ச்சி...! Poll_m10செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10செல்போன் ஆராய்ச்சி...! Poll_m10செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10செல்போன் ஆராய்ச்சி...! Poll_m10செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10செல்போன் ஆராய்ச்சி...! Poll_m10செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10செல்போன் ஆராய்ச்சி...! Poll_m10செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10செல்போன் ஆராய்ச்சி...! Poll_m10செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10செல்போன் ஆராய்ச்சி...! Poll_m10செல்போன் ஆராய்ச்சி...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் ஆராய்ச்சி...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 3:36 am

இன்றைக்கு பலருக்கும் செல்போன் அவர்களது உடம்பின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் ஒருநாளை ஓட்டுவதை அவர்களால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. உலக அளவிலான ஓர் ஆய்வு அதை உறுதிப்படுத்துகிறது. பலர், தங்கள் செல்போனை இழப்பதைவிட பர்ஸை இழக்கவும் தயார் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட, சந்தை ஆய்வு நிறுவனமான `சைனோவேட்', இன்று வாழ்க்கைக்கான `ரிமோட் கண்ட்ரோலாக' செல்போன் உள்ளது என்று தெரிவித்துள்ளது. தற்போது செல்போன் எல்லா இடங்களிலும் காணப்படும் ஒன்றாக ஆகிவிட்டது, ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன் வைத்திருப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் கனடா, டென்மார்க், பிரான்ஸ், மலேசியா, ஆலந்து, பிலிப்பைன்ஸ், ரஷியா, சிங்கப்பூர், தைவான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் பதில் கூறினர். அவர்களில் முக்கால்வாசிப் பேர், தங்களுடன் எப்போதும் செல்போனை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தனர். குறிப்பாக ரஷியர்களும் சிங்கப்பூர்காரர்களும் செல்போனை பிரிவதே இல்லை என்ற தகவல் ஆச்சரியமானது.

சிங்கப்பூர்காரர்களிடமும் தைவான் மக்களிடமும் இந்த ஆய்வை மேற்கொண்டபோது அந்த நாட்டு மக்களில் நான்கில் ஒருவர், தங்கள் பர்ஸை விட செல்போன் தொலைந்தால்தான் அதிகக் கவலைப்படுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

மூன்றில் இரண்டு பங்கினர், தாங்கள் செல்போனுடன்தான் படுக்கைக்குப் போவதாகவும், அதை `ஸ்விட்ச் ஆப்' செய்வதே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். `ஸ்விட்ச் ஆப்' செய்ய நினைத்தாலும், தாங்கள் ஏதாவது முக்கியமான அழைப்பை `மிஸ்' செய்துவிடுவோமோ என்ற பயத்தில் அணைப்பதில்லை என்று கூறியுள்ளனர்.

``சில நேரங்களில் செல்போன் நேரடியாகப் பார்த்துப் பேசுவதை விடச் சிறந்ததாக உள்ளது. அவை எங்களின் வாழ்க்கைக்கான தொடர்புகள் ஆகும்'' என்று தைவானைச் சேர்ந்த சைனோவெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜென்னி சாங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செல்போனை பயன்படுத்துவோரில் ஏறக்குறைய பாதிப் பேர், தாங்கள் விருமëபுபவரை தங்கள் ஆசை வலையில் விழ வைக்க எஸ்.எம்.எஸ்.-ஐ பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். `டேட்டிங்'குக்கான ஒப்புதலைப் பெற பலர் செல்போனை பயன்படுத்துவதாகவும், அதே அளவு எண்ணிக்கையிலானோர் தங்கள் காதலை முறித்துக்கொள்ள செல்போனை உபயோகிப்பதாகவுமë ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

செல்போன்கள் அவற்றின் பிரதான உபயோகமான பேசுவது, குறுந்தகவல் அனுப்புவது தவிர, அதிகமாகப் பயன்படுத்தப்படுவது அலாரம் வைக்க, படம் பிடிக்க மற்றும் `கேம்ஸ்' விளையாட ஆகும். மின்னஞ்சல் மற்றும் இணைய வசதியைப் பொறுத்தவரை 17 சதவீதம் பேர் தங்கள் செல்போன்களில் அதைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர். இவ்விஷயத்தில் முன்னணியில் இருப்பவர்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு மக்கள். பத்தில் ஒருவர், செல்போன் வழியாகத் தினமும் சமூக நட்பு இணையதளங்களான `பேஸ்புக்', `மைஸ்பேஸ்' ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

``செல்போன்களில் வசதிகள் பெருகப் பெருக, பல தொழில்களும் பெரும் சவாலை எதிர்நோக்க ஆரம்பித்திருக்கின்றன. அதேநேரம், செல்போன் தயாரிப்பாளர்களுக்கும், செல்போன் சேவை அளிப்பவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன'' என்கிறார், சைனோவெட் நிறுவனத்தின் சர்வதேச ஊடகத் தலைவர் ஸ்டீவ் கார்ட்டன்.

செல்போன்களில் வசதிகள் அதிகரித்தாலும், அதைப் பயன்படுத்துவோரில் 37 சதவீதம் பேர் தங்கள் செல்போனில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தத் தெரியாது என்று கூறியுள்ளனர்.

நீங்களும் செல்போன் உபயோகிப்பவராகத்தான் இருப்பீர்கள்.

ஒரு நாளாவது செல்போனை `ஆப்' செய்து ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு இருந்து பாருங்கள். நிச்சயம் உங்களால் முடியவே முடியாது. பளிச் பளிச் என்று அவ்வப்போது வந்து விழும் எஸ்.எம்.எஸ். தகவல்களை படித்த உங்கள் கண்களுக்கும்... அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்த கஞ்ச நண்பர்களை செல்லமாக திட்டித் தீர்த்த உங்கள் உதடுகளுக்கும்... அது என்னவோ போல் இருக்கும்.

அதுவும், காதலர்கள் என்றால்... அவர்களால் செல்போனை பிரிந்து ஒரு மணிநேரம்கூட இருக்க முடியாது. சிலநேரங்களில் அன்பு மழையை கொட்டிக்கொண்டும், பலநேரங்களில் கிளுகிளுப்பை சேர்த்துக் கொண்டும் வந்து சேரும் எஸ்.எம்.எஸ்.களை பார்த்து, படித்து, ரசித்து பழக்கப்பட்டவர்கள், செல்போன் இல்லை என்றால் திண்டாடித்தான் போவார்கள்.

சிலர் இருக்கிறார்கள்... ஏ.டி.எம். கார்டு பாஸ் வேர்டு முதல் கேர்ள் ப்ரெண்ட் அட்ரஸ் வரை எல்லாவற்றையும் தங்கள் மொபைலில் பதிவு செய்து வைத்திருப்பார்கள்.

இவர்களால் தகவல் களஞ்சியமாக மாறிப்போன செல் `மிஸ்' ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? தலையே வெடித்து விடும்போல் இருக்குமா இல்லையா?

இதாவது பரவாயில்லை. இன்னும் சிலரோ, தங்களது படுக்கையறை அந்தரங்கங்களைக்கூட செல்போனில் படம் பிடித்து பதிவு செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது பார்த்து ரசிக்கிறார்கள். இந்த அந்தரங்க காட்சிகளைக் கொண்ட செல்போன் `மிஸ்' ஆகி, அந்த காட்சிகள் உலகம் முழுவதும் உலா வந்துவிட்டால்... மானம் போய் விட்டால்...

இதை தவிர்க்க என்ன செய்யலாம்? என்பதை அலசும் முன், சென்னை வாசகி

அனிதாகுமார் செல்போன் பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் கேட்போம்...

"இப்போதெல்லாம் மாமனாரிடம் தலை தீபாவளி, தலைப் பொங்கலுக்கு எந்த மருமகனும் காரோ, பைக்கோ எதிர்பார்ப்பதில்லை. மார்க்கெட்டில் புதிதாக வந்து இறங்கியிருக்கும் செல்போனையே கேட்டு `டிமாண்ட்' செய்கிறார்கள்.

விதவிதமான செல்போன்களின் வருகையால் இன்றைய காதலர்களுக்குத்தான் கொண்டாட்டம். கிளாசைக்கூட கவனிக்காமல் எங்கோ இருக்கும் காதலனுக்கு மெஸேஜ் அனுப்புவதும், எங்கோ இருக்கும் முகம் தெரியாத ரகசிய சிநேகிதிக்கு மெஸேஜ் அனுப்பிக் கொண்டிருப்பதும் இன்றைய பேஷனாகிப் போய்விட்டது. தன்னை மறந்து, உலகத்தை மறந்து, மொட்டை மாடியில் நடந்தபடியே மணிக்கணக்காக செல்போன் மூலமாக பேசி இன்றைய காதலர்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி, எல்லாவற்றுக்கும் காரணமான செல்போன் தொலைந்துபோய்விட்டால்...? சொல்லும்போதே தலை சுற்றுகிறதே... ஒருவர் அவரது செல்போன் தொலைந்துபோய்விட்டது தெரிய வந்தால் பாதி பைத்தியக்காரனாகி விடுவார். எங்கே வெச்சோம்? அதன்பிறகு எங்கே போச்சு? என்று மீண்டும் மீண்டும் யோசிப்பார். குட்டி போட்ட பூனையாக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவார். நேரம் ஆக ஆக எரிச்சல் வரும்... கோபம் வரும்... உச்சக்கட்ட டென்ஷனுக்கு சென்று விடுவார். முக்கியமான தொடர்புகள் எல்லாம் போச்சே என்று மனிதர் புலம்ப ஆரம்பித்துவிடுவார். அவரது நம்பருக்கு அவரே தொடர்பு கொள்ள, `நீங்கள் தொடர்பு கொண்ட நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது' என்று பதில் வரும். அதிலேயே அவர் நொந்துபோய் விடுவார்.

என்னதான் புது மொபைல் பின்னர் வாங்கி உபயோகித்தாலும், கொஞ்ச நாட்களுக்காவது முதலில் பயன்படுத்திய மொபைலின் புராணத்தையே பாடிக் கொண்டிருப்பார். நமது வாழ்க்கையில் முதல்ல நடக்கும் எந்தவொரு விஷயத்தையும் மறக்க முடியாது இல்லியா..?'' என்று கேட்கிறார் அனிதாகுமார்.

இது ஒருபுறம் இருக்க... பாய் ப்ரெண்ட்களை விட செல்போன் மீதுதான் இன்றைய பெண்களுக்கு காதல்-மோகம் அதிகம் என்று கூறி திகைக்க வைக்கிறது ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு.

பாய் ப்ரெண்ட்களை பிரிவதால் ஏற்படும் சோகத்தைவிட, மொபைல் `மிஸ்' ஆனால் ஏற்படும் சோகமே அதிகம் என்று, அந்த ஆய்வில் கலந்துகொண்ட பெண்கள் கூறி, ஆய்வாளர்களையே திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள்.

இந்த உலகிலேயே உங்களுக்கு பிடித்தமானது எது? என்ற கேள்விக்கு, தங்களது அம்மாதான் என்று கருத்து தெரிவித்துள்ள பெரும்பாலான பெண்கள், இரண்டாவது இடத்தை தங்களது புகைப்படங்களுக்கும், மூன்றாவது இடத்தை மொபைல் போனுக்கும் கொடுத்திருக்கிறார்கள். தங்களது கேர்ள் ப்ரெண்டுக்கு நான்காவது இடத்தை அளித்துள்ள அவர்கள், பாய் ப்ரெண்ட்களுக்கு அதற்கு அடுத்த இடத்தையே கொடுத்து சப்பு கொட்டியுள்ளனர்.

செல்போன் பயன்படுத்துவதைக் காட்டிலும், அதை பாதுகாப்பாக வைத்திருப்பது இன்னும் முக்கியமான விஷயம்.

***




செல்போன் ஆராய்ச்சி...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 24, 2010 5:53 am

சிங்கப்பூர்காரர்களும் செல்போனை பிரிவதே இல்லை என்ற தகவல் ஆச்சரியமானது.

சிங்கப்பூர்காரர்களிடமும் தைவான் மக்களிடமும் இந்த ஆய்வை மேற்கொண்டபோது அந்த நாட்டு மக்களில் நான்கில் ஒருவர், தங்கள் பர்ஸை விட செல்போன் தொலைந்தால்தான் அதிகக் கவலைப்படுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

செல்போன் ஆராய்ச்சி...! 838572 செல்போன் ஆராய்ச்சி...! 56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக