புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆழ்வார் ஆயிரம்!
Page 1 of 1 •
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய குரு பரம்பரை பெரிய பெருமாளான அரங்கன், பெரிய பிராட்டியான தாயாரிலிருந்து ஆரம்பித்து வழி வழியாக நாதமுனிகள், ஆளவந்தார், ராமானுஜர் என்று வளர்ந்து மணவாள மாமுனிகளுடன் நிறைவு பெறுகிறது. மேற்படி குருபரம்பரையில் பகவத் ராமானுஜரின் முதல் சீடராக விளங்கியவர் கூரத்தாழ்வார். அவர் அவதரித்த ஆயிரமாவது ஜயந்தி உற்சவம் நெருங்கும் இவ்வேளையில், அம்மகானைப் பற்றி இங்கு காண்போம்.
கூரத்தாழ்வார், காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள "கூரம்' என்ற சிறு கிராமத்தில், கலியுகம் 4180 ஆண்டு (செüம்ய வருடம்) தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் "திருமறு மார்பன்' என்பதாகும்.
தக்க காலத்தில் தகுந்த சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முயற்சித்தனர். அப்போது, தான் பிரம்மசரியத்தைக் கடைபிடிக்கப் போவதாகச் சொல்லி மறுத்துவிட்டார் திருமறு மார்பன். மேலும் காஞ்சிப் பேரருளாளனுக்கு (வரதராஜப் பெருமாள்) ஆலவட்டக் (விசிறி வீசுதல்) கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகளின் அபிமானத்தைப் பெற்று வைணவத்தில் ஈடுபட்டு வாழப் போவதாகவும் கூறினார். உடனே இவரது பெற்றோர்கள் கூரம் நாட்டுப் பதவியை இவரிடம் ஒப்படைத்துவிட்டு திருப்பதி சென்று வாழத்தொடங்கினர்.
அரசனாகிய திருமறு மார்பன், நள்ளிரவில் வழக்கமாக நகர சோதனைக்குச் சென்றார். அப்போது ஓர் இரவு, அந்தணர் ஒருவர் வீட்டில் சிலர் உரக்க வாதாடிக் கொண்டிருப்பதைக் கேட்டார். அவ்வீட்டருகில் நின்று காது கொடுத்துக் கேட்டு விஷயங்களை அறிந்தார். அதன்படி அந்தக் குடும்பத்தில் திருமண வயதில் ஒரு பெண் இருப்பதையும், ஆனால் ஜோதிடர்களின் கருத்துப்படி அவளுக்கு திருமணம் செய்து வைத்தால் மணமகனுக்கு உடன் மரணம் ஏற்படும்; இவளும் விதவையாகிவிடுவாள் என்பது பற்றியும் அவ்வீட்டினர் விவாதித்துக் கொண்டிருந்தது, அரசரின் காதுகளில் விழுந்தது.
மறுநாள் அக்குடும்பத்தினரை தன் அவைக்கு அழைத்தார் திருமறு மார்பன். அவர்களின் மகளை தானே மணம் முடிக்கச் சித்தமாயிருப்பதாகக் கூறினார். இருந்த போதிலும் தங்களுக்குள் தாம்பத்ய உறவு இருக்காது என்று கூறி, "ஆண்டாள்' என்ற பெயருடைய அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார். தான் அளித்த வாக்குறுதிப்படி, பிரம்மசரிய நெறி தவறாமல் வாழ்ந்தார்.
அரசுப் பதவியும், உயர்ந்த செல்வமும் நிறைந்து விளங்கிய போதிலும் ஓர் துறவியாகவே வாழ்ந்தார் திருமறு மார்பன். தன் செல்வங்களையெல்லாம் ஏழை எளியோர்களுக்கு அள்ளித் தந்தார்.
தினமும் இவரின் அரண்மனை வாயிற் கதவுகள், காஞ்சி வரதராஜப் பெருமாளின் அர்த்த ஜாமபூஜை முடிந்தவுடன்தான் மூடப்படும். ஒரு நாள் தற்செயலாக தன் அரண்மனை வாயிற்கதவுகள் மூடப்பட்ட பின் காஞ்சிப் பெருமானின் திருக்கோயில் வாயிற் கதவுகள் மூடப்பட்ட ஓசையை மன்னர் கேட்டார். உடனே, "ஏதோ தவறு நேர்ந்துவிட்டது என்று வருந்தினார்.
அதே சமயம் காஞ்சியில் வரதராஜப் பெருமானுக்கு கூரத்தில் அரண்மனைக் கதவு மூடப்படும் ஓசை கேட்க, அவர் தம்மிடம் அளவளாவிக் கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகளிடம், "அது என்ன ஓசை?' என்று கேட்டார்.
நம்பிகளும் திருமறு மார்பனின் அரண்மனை வாயிற்கதவுகள் மூடப்பட்ட சத்தம் (அரண்மனை வாயிற்கதவுகளில் பெரிய வெங்கல மணிகள் கட்டப்பட்டிருக்கும்) என்று கூறி, திருமறு மார்பனின் சிறப்பியல்புகளை வர்ணித்தார். உடனே வரதராஜப் பெருமாள், "ஆழ்வானின் செல்வமோ நம்மை வியக்க வைத்தது?' என்று கேட்டாராம்.
இதையறிந்த திருமறுமார்பன், தம் செல்வங்களையெல்லாம் அனைவருக்கும் வாரி வழங்கினார்; "இனி வைணவ நெறிப்படி வாழ்வேனேயன்றி அரசனாக இருக்கமாட்டேன்' என்று கூறினார். தன் மனைவியுடன் காஞ்சி நோக்கி நடைப் பயணமாக இரவு வேளையில் கிளம்பினார். அவர் மனைவி, "வழியில் கள்ளர் பயம் உள்ளதோ?' எனக் கேட்டாள். அவள் அப்படிக் கேட்டதற்கான காரணத்தை விசாரித்தார் திருமறு மார்பன். அப்போது ஆண்டாள், "என் மடியில் உமது உபயோகத்திற்காக தங்க வட்டில் ஒன்றை எடுத்து வந்துள்ளேன்' என்று கூறினாள். இது கேட்ட திருமறு மார்பன், அந்தத் தங்கப் பாத்திரத்தினை வாங்கி தூரத்தில் வீசி எறிந்தார். பின் மனைவியிடம் "மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்?' என்று கூறி, பயணத்தைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தை அடைந்தார்.
விடிந்ததும், அங்கிருந்த ராமானுஜரை சரணடைந்தார். அவரும் இவரை ஏற்று, "கூரத்து ஆழ்வார்' என்று புதுப்பெயர் சூட்டி, தம் சீடராக ஏற்றுக் கொண்டார். (அது முதல்தான் இவர் "கூரத்தாழ்வார்' என்று அழைக்கப்படுகிறார்.)
அதே காலத்தில் முதலியாண்டான் என்பாரும் ராமானுஜரை ஸரணடைந்து சீடரானார்.
பின்னர் ஸ்ரீரங்கம் சென்றார் கூரத்தாழ்வார். அங்கே ஒரு நாள் உண்ண உணவேதும் கிடைக்காததால் பசியால் களைப்புடன் இருந்தார். இதனால் அவர் மனைவி ஆண்டாள் வருந்தி, ஸ்ரீரங்கநாதனை மனமுருக வேண்டினாள்.
"உன் தொண்டன் பசியோடு இருக்கும்போது நீர் அருள் செய்யாமல் இருப்பதேன்?' என்று மனதுக்குள் நினைத்தாள். அந்தச் சமயம் அரங்கனுக்கு இரவு பூஜை மணி அடித்தது. ஆண்டாளின் வருத்தத்தை அறிந்த அரங்கன், அர்ச்சகர்கள் மூலம் தான் அமுது செய்த பிரசாதங்களை ஆழ்வாரின் இல்லத்துக்கு அனுப்பி வைத்தார். பிரசாதங்களை எடுத்து வந்த அர்ச்சகர்களைக் கண்டு ஆழ்வார், நடந்ததை ஊகித்தறிந்தார். ஆண்டாளிடம், "நீ அரங்கனிடம் குறைப்பட்டுக் கொண்டாயா?' என்று கோபித்துக் கொண்டார்.
அந்த அளவு, இறைவனிடம்கூட எதையும் யாசித்துப் பெறக் கூடாது என்றெண்ணிய திட பக்தர் கூரத்தாழ்வார்.
அரங்கனின் அருளால் ஆழ்வாருக்கு இரண்டு பிள்ளைகள் அவதரித்தார்கள். அவர்களே வேத வியாச பட்டர் மற்றும் பராசர பட்டர் என்று பிற்காலத்தில் பிரபலமாக விளங்கினார்கள்.
ஒரு சமயம் கிருமி கண்டசோழ மன்னரால் ராமானுஜருக்கு உயிராபத்து ஏற்பட்டது. அப்போது கூரத்தாழ்வாரும், பெரிய நம்பிகளும் (இவர் ராமானுஜரின் ஆசார்யர்களில் ஒருவர்) சோழனிடம் சென்று, "நாராயணனே உயர்ந்த தெய்வம்' என்று வாதிட்டார்கள். ராமானுஜரைக் காக்க வேண்டி அவரின் காவி உடையையும், முக்கோலையும் தானே தரித்து மன்னர் சபைக்குச் சென்ற கூரத்தாழ்வாரை ராமானுஜரே என்று நினைத்தார் சோழ மன்னர்; அவருடைய கண்களைப் பிடுங்கிவிட உத்தரவிட்டான். ஆனால் கூரத்தாழ்வாரோ, "உன்னைப் போன்ற பாவிகளைக் காணாமல் இருப்பதே மேல்' என்று தன் கண்களை தாமே பிடுங்கிக் கொண்டார். பெரிய நம்பிகளும் அப்படியே செய்தார்.
பிறகு திருமாலிருஞ்சோலை சென்றடைந்து அங்கே சில காலம் வசித்தார் கூரத்தாழ்வார். முன்னதாக கூரத்தாழ்வார் சொல்படி ராமானுஜர் மேலக்கோட்டைக்குச் சென்று 12 ஆண்டு காலம் வசித்தார்; அங்கு திருநாராயணனுக்கு கோயில் கட்டி வைணவம் வளர்த்தார்.
சுமார் 12 வருடங்கள் கழித்து ராமானுஜரும், கூரத்தாழ்வாரும் காஞ்சியில் சந்தித்துக் கொண்டார்கள். கூரத்தாழ்வாரின் பார்வையற்ற நிலையறிந்த ராமானுஜர், காஞ்சி வரதராஜப் பெருமாள் அருளால் கூரத்தாழ்வாருக்கு மீண்டும் கண்கள் கிடைக்கும்படி செய்தார்.
கூரத்தாழ்வாருடைய உதவியில்லாமல் போனால் ராமானுஜர், ஸ்ரீபாஷ்யத்திற்கு சிறப்பான பொருளை எழுதியிருக்க முடியாது.
பின்னாட்களில் அரங்கனிடம் முக்திப் பேறைத் தருமாறு வேண்டினார் கூரத்தாழ்வார். பெருமாளும் ஒப்புக் கொண்டார். இதையறிந்த ராமானுஜர், "ஏன் இப்படிச் செய்தீர்? எனக்கு முன்பாக நீர் முக்தி அடைந்துவிட்டால் நான் எப்படி வாழ்வது?' என்று கூரத்தாழ்வாரிடம் வருத்தப்பட்டார்.
ஆழ்வாரோ, "உங்களுக்கு முன்னால் வைகுண்டப் பதவி பெற்று, நீங்கள் பிறகு வரும்போது அங்கே உங்களை எதிர்கொண்டழைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமே' என்று கூறி ராமானுஜரை சமாதானப்படுத்தினார். அது போலவே ஆழ்வார் சீக்கிரமே பரமபதம் அடைந்தார். ராமானுஜர் நில உலகில் 120 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்.
கூரத்தாழ்வார், "பஞ்ச ஸ்தவம்' என்ற நூலை அருளிச் செய்துள்ளார். இவ்வருடம் இவருக்கு ஆயிரமாவது ஆண்டாக அமைகிறது. (3.2.2010).
கூரத்தாழ்வாரின் அவதாரத் தலமான கூரம், காஞ்சியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவரின் ஆயிரமாவது அவதாரப் பெருவிழா, அத்தலத்திலும் மற்றைய திருமால் தலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. அன்பர்கள் அவசியம் இவ்வைபவங்களில் கலந்து கொண்டு குருவருள் பெற வேண்டும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|