புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்வார் ஆயிரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 2:53 am

ஆழ்வார் ஆயிரம்! Temple1

ஸ்ரீவைஷ்​ணவ சம்​பி​ர​தாய குரு பரம்​பரை பெரிய பெரு​மா​ளான அரங்​கன்,​​ பெரிய பிராட்​டி​யான தாயாரி​லி​ருந்து ஆரம்​பித்து வழி வழி​யாக நாத​மு​னி​கள்,​​ ஆள​வந்​தார்,​​ ராமா​னு​ஜர் என்று வளர்ந்து மண​வாள மாமு​னி​க​ளு​டன் நிறைவு பெறு​கி​றது.​ மேற்​படி குரு​ப​ரம்​ப​ரை​யில் பக​வத் ராமா​னு​ஜ​ரின் முதல் சீட​ராக விளங்​கி​ய​வர் கூரத்​தாழ்​வார்.​ அவர் அவ​த​ரித்த ஆயி​ர​மா​வது ஜயந்தி உற்​ச​வம் நெருங்​கும் இவ்​வே​ளை​யில்,​​ அம்​ம​கா​னைப் பற்றி இங்கு காண்​போம்.​

கூரத்​தாழ்​வார்,​​ காஞ்​சி​பு​ரத்​திற்கு அரு​கில் அமைந்​துள்ள "கூரம்' என்ற சிறு கிரா​மத்​தில்,​​ கலி​யு​கம் 4180 ஆண்டு ​(செüம்ய வரு​டம்)​ தை மாதம் ஹஸ்த நட்​சத்​தி​ரத்​தில் அவ​த​ரித்​தார்.​ இவ​ருக்கு பெற்​றோர்​கள் இட்ட பெயர் "திரு​மறு மார்​பன்' என்​ப​தா​கும்.​

தக்க காலத்​தில் தகுந்த சாஸ்​தி​ரங்​க​ளில் தேர்ச்சி பெற்ற இவ​ருக்கு திரு​ம​ணம் செய்து வைக்க பெற்​றோர்​கள் முயற்​சித்​த​னர்.​ அப்​போது,​​ தான் பிரம்​ம​ச​ரி​யத்​தைக் கடை​பி​டிக்​கப் போவ​தா​கச் சொல்லி மறுத்​து​விட்​டார் திரு​மறு மார்​பன்.​ மேலும் காஞ்​சிப் பேர​ரு​ளா​ள​னுக்கு ​(வர​த​ரா​ஜப் பெரு​மாள்)​ ஆல​வட்​டக் ​(விசிறி வீசு​தல்)​ கைங்​கர்​யம் செய்து கொண்​டி​ருந்த திருக்​கச்சி நம்​பி​க​ளின் அபி​மா​னத்​தைப் பெற்று வைண​வத்​தில் ஈடு​பட்டு வாழப் போவ​தா​க​வும் கூறி​னார்.​ உடனே இவ​ரது பெற்​றோர்​கள் கூரம் நாட்​டுப் பத​வியை இவ​ரி​டம் ஒப்​ப​டைத்​து​விட்டு திருப்​பதி சென்று வாழத்​தொ​டங்​கி​னர்.​

அர​ச​னா​கிய திரு​மறு மார்​பன்,​​ நள்​ளி​ர​வில் வழக்​க​மாக நகர சோத​னைக்​குச் சென்​றார்.​ அப்​போது ஓர் இரவு,​​ அந்​த​ணர் ஒரு​வர் வீட்​டில் சிலர் உரக்க வாதா​டிக் கொண்​டி​ருப்​ப​தைக் கேட்​டார்.​ அவ்​வீட்​ட​ரு​கில் நின்று காது கொடுத்​துக் கேட்டு விஷ​யங்​களை அறிந்​தார்.​ அதன்​படி அந்​தக் குடும்​பத்​தில் திரு​மண வய​தில் ஒரு பெண் இருப்​ப​தை​யும்,​​ ஆனால் ஜோதி​டர்​க​ளின் கருத்​துப்​படி அவ​ளுக்கு திரு​ம​ணம் செய்து வைத்​தால் மண​ம​க​னுக்கு உடன் மர​ணம் ஏற்​ப​டும்;​ இவ​ளும் வித​வை​யா​கி​வி​டு​வாள் என்​பது பற்​றி​யும் அவ்​வீட்​டி​னர் விவா​தித்​துக் கொண்​டி​ருந்​தது,​​ அர​ச​ரின் காது​க​ளில் விழுந்​தது.​

மறு​நாள் அக்​கு​டும்​பத்​தி​னரை தன் அவைக்கு அழைத்​தார் திரு​மறு மார்​பன்.​ அவர்​க​ளின் மகளை தானே மணம் முடிக்​கச் சித்​த​மா​யி​ருப்​ப​தா​கக் கூறி​னார்.​ இருந்த போதி​லும் தங்​க​ளுக்​குள் தாம்​பத்ய உறவு இருக்​காது என்று கூறி,​​ "ஆண்​டாள்' என்ற பெய​ரு​டைய அந்​தப் பெண்​ணைக் கல்​யா​ணம் செய்து கொண்​டார்.​ தான் அளித்த வாக்​கு​று​திப்​படி,​​ பிரம்​ம​ச​ரிய நெறி தவ​றா​மல் வாழ்ந்​தார்.​ ​

அர​சுப் பத​வி​யும்,​​ உயர்ந்த செல்​வ​மும் நிறைந்து விளங்​கிய போதி​லும் ஓர் துற​வி​யா​கவே வாழ்ந்​தார் திரு​மறு மார்​பன்.​ தன் செல்​வங்​க​ளை​யெல்​லாம் ஏழை எளி​யோர்​க​ளுக்கு அள்​ளித் தந்​தார்.​

தின​மும் இவ​ரின் அரண்​மனை வாயிற் கத​வு​கள்,​​ காஞ்சி வர​த​ரா​ஜப் பெரு​மா​ளின் அர்த்த ஜாம​பூஜை முடிந்​த​வு​டன்​தான் மூடப்​ப​டும்.​ ​ ஒரு நாள் தற்​செ​ய​லாக தன் அரண்​மனை வாயிற்​க​த​வு​கள் மூடப்​பட்ட பின் காஞ்​சிப் பெரு​மா​னின் திருக்​கோ​யில் வாயிற் கத​வு​கள் மூடப்​பட்ட ஓசையை மன்​னர் கேட்​டார்.​ உடனே,​​ "ஏதோ தவறு நேர்ந்​து​விட்​டது என்று வருந்​தி​னார்.​

அதே சம​யம் காஞ்​சி​யில் வர​த​ரா​ஜப் பெரு​மா​னுக்கு கூரத்​தில் அரண்​ம​னைக் கதவு மூடப்​ப​டும் ஓசை கேட்க,​​ அவர் தம்​மி​டம் அள​வ​ளா​விக் கொண்​டி​ருந்த திருக்​கச்சி நம்​பி​க​ளி​டம்,​​ "அது என்ன ஓசை?​' என்று கேட்​டார்.​

நம்​பி​க​ளும் திரு​மறு மார்​ப​னின் அரண்​மனை வாயிற்​க​த​வு​கள் மூடப்​பட்ட சத்​தம் ​(அரண்​மனை வாயிற்​க​த​வு​க​ளில் பெரிய வெங்​கல மணி​கள் கட்​டப்​பட்​டி​ருக்​கும்)​ என்று கூறி,​​ திரு​மறு மார்​ப​னின் சிறப்​பி​யல்​பு​களை வர்​ணித்​தார்.​ உடனே வர​த​ரா​ஜப் பெரு​மாள்,​​ "ஆழ்​வா​னின் செல்​வமோ நம்மை வியக்க வைத்​தது?​' என்று கேட்​டா​ராம்.​

இதை​ய​றிந்த ​ திரு​ம​று​மார்​பன்,​​ தம் செல்​வங்​க​ளை​யெல்​லாம் அனை​வ​ருக்​கும் வாரி வழங்​கி​னார்;​ "இனி வைணவ நெறிப்​படி வாழ்​வே​னே​யன்றி அர​ச​னாக இருக்​க​மாட்​டேன்' என்று கூறி​னார்.​ தன் மனை​வி​யு​டன் காஞ்சி நோக்கி நடைப் பய​ண​மாக இரவு வேளை​யில் கிளம்​பி​னார்.​ அவர் மனைவி,​​ "வழி​யில் கள்​ளர் பயம் உள்​ளதோ?​' எனக் கேட்​டாள்.​ அவள் அப்​ப​டிக் கேட்​ட​தற்​கான கார​ணத்தை விசா​ரித்​தார் ​ திரு​மறு மார்​பன்.​ அப்​போது ஆண்​டாள்,​​ "என் மடி​யில் உமது ​ உப​யோ​கத்​திற்​காக தங்க வட்​டில் ஒன்றை எடுத்து வந்​துள்​ளேன்' என்று கூறி​னாள்.​ இது கேட்ட திரு​மறு மார்​பன்,​​ அந்​தத் தங்​கப் பாத்​தி​ரத்​தினை வாங்கி தூரத்​தில் வீசி எறிந்​தார்.​ பின் மனை​வி​யி​டம் "மடி​யில் கனம் இருந்​தால்​தானே வழி​யில் பயம்?​' என்று கூறி,​​ பய​ணத்​தைத் தொடர்ந்து,​​ காஞ்​சி​பு​ரத்தை அடைந்​தார்.​ ​

விடிந்​த​தும்,​​ அங்​கி​ருந்த ராமா​னு​ஜரை சர​ண​டைந்​தார்.​ அவ​ரும் இவரை ஏற்று,​​ "கூரத்து ஆழ்​வார்' என்று புதுப்​பெ​யர் சூட்டி,​​ தம் சீட​ராக ஏற்​றுக் கொண்​டார்.​ ​(அது முதல்​தான் இவர் "கூரத்​தாழ்​வார்' என்று அழைக்​கப்​ப​டு​கி​றார்.)​

அதே காலத்​தில் முத​லி​யாண்​டான் என்​பா​ரும் ராமா​னு​ஜரை ஸர​ண​டைந்து சீட​ரா​னார்.​ ​

பின்​னர் ஸ்ரீரங்​கம் சென்​றார் கூரத்​தாழ்​வார்.​ அங்கே ஒரு நாள் உண்ண உண​வே​தும் கிடைக்​கா​த​தால் பசி​யால் களைப்​பு​டன் இருந்​தார்.​ இத​னால் அவர் மனைவி ஆண்​டாள் வருந்தி,​​ ஸ்ரீரங்​க​நா​தனை மன​மு​ருக வேண்​டி​னாள்.​

"உன் தொண்​டன் பசி​யோடு இருக்​கும்​போது நீர் அருள் செய்​யா​மல் இருப்​ப​தேன்?​' என்று மன​துக்​குள் நினைத்​தாள்.​ அந்​தச் சம​யம் அரங்​க​னுக்கு இரவு பூஜை மணி அடித்​தது.​ ஆண்​டா​ளின் வருத்​தத்தை அறிந்த அரங்​கன்,​​ அர்ச்​ச​கர்​கள் மூலம் தான் அமுது செய்த பிர​சா​தங்​களை ஆழ்​வா​ரின் இல்​லத்​துக்கு அனுப்பி வைத்​தார்.​ பிர​சா​தங்​களை எடுத்து வந்த அர்ச்​ச​கர்​க​ளைக் கண்டு ஆழ்​வார்,​​ நடந்​ததை ஊகித்​த​றிந்​தார்.​ ஆண்​டா​ளி​டம்,​​ "நீ அரங்​க​னி​டம் குறைப்​பட்​டுக் கொண்​டாயா?​' என்று கோபித்​துக் கொண்​டார்.​

அந்த அளவு,​​ இறை​வ​னி​டம்​கூட எதை​யும் யாசித்​துப் பெறக் கூடாது என்​றெண்​ணிய திட பக்​தர் கூரத்​தாழ்​வார்.

அரங்​க​னின் அரு​ளால் ஆழ்​வா​ருக்கு இரண்டு பிள்​ளை​கள் அவ​த​ரித்​தார்​கள்.​ அவர்​களே வேத வியாச பட்​டர் மற்​றும் பரா​சர பட்​டர் என்று பிற்​கா​லத்​தில் பிர​ப​ல​மாக விளங்​கி​னார்​கள்.​

ஒரு சம​யம் கிருமி கண்​ட​சோழ மன்​ன​ரால் ராமா​னு​ஜ​ருக்கு உயி​ரா​பத்து ஏற்​பட்​டது.​ அப்​போது கூரத்​தாழ்​வா​ரும்,​​ பெரிய நம்​பி​க​ளும் ​(இவர் ராமா​னு​ஜ​ரின் ஆசார்​யர்​க​ளில் ஒரு​வர்)​ சோழ​னி​டம் சென்று,​​ "நாரா​ய​ணனே உயர்ந்த தெய்​வம்' என்று வாதிட்​டார்​கள்.​ ராமா​னு​ஜ​ரைக் காக்க வேண்டி அவ​ரின் காவி உடை​யை​யும்,​​ முக்​கோ​லை​யும் தானே தரித்து மன்​னர் சபைக்​குச் சென்ற கூரத்​தாழ்​வாரை ராமா​னு​ஜரே என்று நினைத்​தார் சோழ மன்​னர்;​ அவ​ரு​டைய கண்​க​ளைப் பிடுங்​கி​விட உத்​த​ர​விட்​டான்.​ ஆனால் கூரத்​தாழ்​வாரோ,​​ "உன்​னைப் போன்ற பாவி​க​ளைக் காணா​மல் இருப்​பதே மேல்' என்று தன் கண்​களை தாமே பிடுங்​கிக் கொண்​டார்.​ பெரிய நம்​பி​க​ளும் அப்​ப​டியே செய்​தார்.​ ​

பிறகு திரு​மா​லி​ருஞ்​சோலை சென்​ற​டைந்து அங்கே சில காலம் வசித்​தார் கூரத்​தாழ்​வார்.​ முன்​ன​தாக கூரத்​தாழ்​வார் சொல்​படி ராமா​னு​ஜர் மேலக்​கோட்​டைக்​குச் சென்று 12 ஆண்டு காலம் வசித்​தார்;​ அங்கு திரு​நா​ரா​ய​ண​னுக்கு கோயில் கட்டி வைண​வம் வளர்த்​தார்.​

சுமார் 12 வரு​டங்​கள் கழித்து ராமா​னு​ஜ​ரும்,​​ கூரத்​தாழ்​வா​ரும் காஞ்​சி​யில் சந்​தித்​துக் கொண்​டார்​கள்.​ கூரத்​தாழ்​வா​ரின் பார்​வை​யற்ற நிலை​ய​றிந்த ராமா​னு​ஜர்,​​ காஞ்சி வர​த​ரா​ஜப் பெரு​மாள் அரு​ளால் கூரத்​தாழ்​வா​ருக்கு மீண்​டும் கண்​கள் கிடைக்​கும்​படி செய்​தார்.​

கூரத்​தாழ்​வா​ரு​டைய உத​வி​யில்​லா​மல் போனால் ராமா​னு​ஜர்,​​ ஸ்ரீபாஷ்​யத்​திற்கு சிறப்​பான பொருளை எழு​தி​யி​ருக்க முடி​யாது.​

பின்​னாட்​க​ளில் அரங்​க​னி​டம் முக்​திப் பேறைத் தரு​மாறு வேண்​டி​னார் கூரத்​தாழ்​வார்.​ பெரு​மா​ளும் ஒப்​புக் கொண்​டார்.​ ​ இதை​ய​றிந்த ராமா​னு​ஜர்,​​ "ஏன் இப்​ப​டிச் செய்​தீர்?​ எனக்கு முன்​பாக நீர் முக்தி அடைந்​து​விட்​டால் நான் எப்​படி வாழ்​வது?​' என்று கூரத்​தாழ்​வா​ரி​டம் ​ வருத்​தப்​பட்​டார்.​

ஆழ்​வாரோ,​​ "உங்​க​ளுக்கு முன்​னால் வைகுண்​டப் பதவி பெற்று,​​ நீங்​கள் பிறகு வரும்​போது அங்கே உங்​களை எதிர்​கொண்​ட​ழைக்​கும் பாக்​கி​யம் எனக்​குக் ​ கிடைக்​குமே' என்று கூறி ராமா​னு​ஜரை சமா​தா​னப்​ப​டுத்​தி​னார்.​ அது போலவே ஆழ்​வார் சீக்​கி​ரமே பர​ம​ப​தம் அடைந்​தார்.​ ராமா​னு​ஜர் நில உல​கில் 120 ஆண்​டு​கள் வாழ்ந்​தி​ருந்​தார்.​

கூரத்​தாழ்​வார்,​​ "பஞ்ச ஸ்த​வம்' என்ற நூலை அரு​ளிச் செய்​துள்​ளார்.​ இவ்​வ​ரு​டம் இவ​ருக்கு ஆயி​ர​மா​வது ஆண்​டாக அமை​கி​றது.​ ​(3.2.2010).​

கூரத்​தாழ்​வா​ரின் அவ​தா​ரத் தல​மான கூரம்,​​ காஞ்​சியி​லி​ருந்து சுமார் 8 கி.மீ.​ தொலை​வில் அமைந்​துள்​ளது.​ இவ​ரின் ஆயி​ர​மா​வது அவ​தா​ரப் பெரு​விழா,​​ அத்​த​லத்​தி​லும் மற்​றைய திரு​மால் தலங்​க​ளி​லும் சிறப்​பா​கக் கொண்​டா​டப்​ப​ட​வுள்​ளது.​ அன்​பர்​கள் அவ​சி​யம் இவ்​வை​ப​வங்​க​ளில் கலந்து கொண்டு குரு​வ​ருள் பெற வேண்​டும்



ஆழ்வார் ஆயிரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக