புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
11 Posts - 73%
heezulia
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
2 Posts - 13%
வேல்முருகன் காசி
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
1 Post - 7%
viyasan
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
203 Posts - 41%
heezulia
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
21 Posts - 4%
prajai
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_m10வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84057
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 15, 2022 12:32 pm

தினசரி மார்க்கெட் போவதும், பழம் வாங்குவதும் வழக்கமாக நடப்பது.

ஒரு ஆயா பல வருடங்களாக ஒரே இடத்தில், ஒரு டிபார்மெண்ட் ஸ்டோர் முன்பு பழ வியாபாரம் செய்து கொண்டு இருப்பார்.

ஆபிஸ் போகவர பார்ப்பேன்.
ஆயாவும் பார்க்கும்.

சரி. இந்த ஆயாவிடம் இன்று வாங்கலாம் என்று முடிவு செய்து போனேன்.

“மாம்பழம் எப்படி ஆயா..?”

“எடு ராசா. உனக்கென்ன எச்சாவ கண்ணு சொல்ல போறேன்”

குதாதத் மாம்பழம் நன்றாக இருந்தது.

“எடு கண்ணு. கல்கண்டு மாதிரி இருக்கும்”.

“எவ்வளவு..?”

கிலோ 70 ரூபா. நீ 60 ரூபா கொடு போதும்.”

60 அதிகமோ.? மனசு பேரம் பேசியது. “அம்பது போட்டு 2 கிலோ கொடு ஆயா”

“கட்டாது சாமி. அசலே 55 ரூபா வருது.”

சரி, வேண்டாம். அப்புறம் வர்றேன்.

நகர முற்படும்போது “சரி எடு ராசா. காலைல மொத வியாபாரம்”

3 கிலோ வாங்கினேன். ஆஹா. நல்ல பேரம். மனசு குதூகலித்தது.

சில நாட்கள் கழித்து என் ஏரியாவில் இருக்கும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு போனேன்.

அதனுடன் சேர்ந்த மாதிரி ஒரு கார்ப்ரேட் பழ விற்பனை நிலையம்.

பழங்கள் நேர்த்தியாக அடுக்கி அழகாக இருந்தன.

அதோ. குதாதத். ஆயாவிடம் வாங்கியது போலவே இருந்தது. என்ன விலை.?

கிலோ 80 என்று எழுதியிருந்தது. “ஏம்மா குதாதத் கிலோ என்ன விலை?” 80 ரூபா”

இங்கே பேரம் பேச முடியாது. ஒரே விலைதான்.

அப்போ, ஆயாவிடம் 50 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கி, அதை பெருமையாக வீட்டில் சொல்லி, ஏனோ மனசு வலித்தது.

மாலை வரும்போது ஆயாவை பார்த்தேன். மெலிதான தேகம். சுருக்கம் நிறைந்த முகம். நடுங்கும் கைகள். ரோட்டில் பழ வியாபாரம்.

என்னை அறியாமல் கால்கள் நின்றது. ஆயாவுடன் இன்னும் 2 வயதான ஆயாக்கள்.

டீ குடித்து கொண்டு இருந்தார்கள். சரி. ஆயாவிடம் வேறு ஏதாவது வாங்கலாம். கவனித்தேன்.

ஆயா பக்கத்து புரோட்டா கடையிலிருந்து இரண்டு பார்சல் வாங்கி அவர்களிடம் கொடுக்க அவர்களும் வாங்கி கொண்டு தடுமாறி எங்கோ நடந்து போனார்கள்.

யார் இவர்கள்.?
ஆயாவிடம் விசாரித்தேன் அவர்களைப் பற்றி.

“அவுங்களா.? நம்ம ஊருதான்.

என்ன மாதிரி போக்கத்தவிங்க. நல்லா வாழ்ந்து கெட்டவிங்க. புருஷன் போனதும் புள்ளமார்கள் கண்டுக்கல.

பணத்தையெல்லாம் புடுங்கிகிட்டு முடுக்கி விட்டுட்டாங்க.

ஒருத்தி என்னோட நாத்தனாரு. வயல் வேலைக்கு போயிட்டிருந்தாங்க. இப்ப முடியல. அவ்வளவா வேலை இல்லைப்பா.

பகல்ல கோவில் அன்னதானம் சாப்பிடுவாங்க.

ராத்திரி இங்க வருவாங்க. ஏதோ நான் முடிஞ்சத வாங்கி தருவேன்.

என் குடிசைல தான் அண்டி இருக்குதுங்க. வரவர என் கையிலயும் ஓட்டம் இல்ல. அதுக்காக அதுங்கள பட்டினி நபோட முடியுமா? அதான் முடிஞ்சத வாங்கி தாரேன். இதுகளுக்கு நான் தொணை. எனக்கு இவங்க தொணை.

ஏதோ உசிரு இருக்கிற வரைக்கும் ஒதவியா, ஒன்னுமண்ணா இருப்போம்.”

உனக்கு புள்ளைங்க இருக்கா.?

எனக்கு அந்த வரம் கெடக்கல கண்ணு. எனக்கு புள்ள இல்லேனு எம்புருஷன் அப்பவே என்னை வுட்டுபுட்டு போயிட்டான்.

அப்பனும் ஆத்தாளும் போனபொறவு ஒண்டிகட்டையா காலத்தை ஓட்டிகிட்டு இருக்கேன்.

அதுக்காக செத்தா போகமுடியும் கண்ணு.?

பொறவு, இதுங்க எங்கிட்ட வந்து ஒட்டிக்கிச்சுங்க. ஏதோ பழவியாபாரம் பண்ணி, கெடைக்கிறத வச்சு வயித்த கழுவிட்டு இருக்கோம்”

மனது வலித்தது. ஆயா சொன்னது ஆயிரம் பாடங்களை கற்று கொடுத்தது. வலிகளே வாழ்க்கையாகி போனது இந்த ஆயா மாதிரி பலருக்கும் இங்கே.?

“வறுமையிலும் நேர்மை. ஏழ்மையிலும் தர்ம சிந்தனை. என் MBA என்னை பார்த்து சிரித்தது.!”

இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். வாழ்க்கை பாடம் ஒன்றை எனக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.

“ஆயா ஏதாவது உதவி வேணுமா” பணம் ஏதாவது தரட்டுமா”

வேண்டாம் கண்ணு. ஏதோ கடவுள் கொஞ்சம் படியளக்கறார் ..

அவங்களுக்கு தான் மாத்து துணி இல்ல. அவங்களுக்கு வேணா ஏதாவது பண்ணு”

சரி. செய்வோம். “ஆயா! இதுல 2000 இருக்கு. இதுல வாங்கி கொடுத்துரு”

“எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு? 500 போதும்”.
மீதியை திருப்பிக்கொடுத்தது ஆயா என்னிடமே!

“இல்ல ஆயா. இருக்கட்டும். எங்க அம்மா இருந்தா வாங்கி தர மாட்டேனா?”

கண்கள் கலங்கியபடி வாங்கிக் கொண்டது ஆயா.

மனசு கொஞ்சம் லேசானது.

என் அம்மா சொல்வாள். “மற்றவர்கள் துன்பங்களை கேட்டால் மட்டும் போதாது. முடிந்த உதவிகளை செய்யணும்”

கிளம்பும்பொழுது ஆயாவிடம் கேட்டேன்,”ஆயா ஆப்பிள் எப்படி.?

கிலோ 120. நீ 110 கொடு சாமி.”

100 ரூபா போட்டு 3 கிலோ போடு”

தமாசுக்குதான் கேட்டேன். ஆயாவின் முகம் சட்டென்று வாடி விட்டது.

“சரி கண்ணு. ஏதோ மகராசன் எங்கிட்ட வந்து வாங்குறியே”

3 கிலோ வாங்கி 450 ரூபாய் கொடுத்தேன்.

“எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு.?”

இல்ல ஆயா. இதையே அதோ அங்கே இருக்கிற கார்ப்பரேட் பழக்கடையில் வாங்குனா ரூ450 கொடுத்திருப்பேன்.”

பரவாயில்லை,புடி ஆயா என்று உரிமையோடு அந்தப் பணத்தையும் அதன் கையில் கொடுத்து விட்டேன் இல்லை திணித்து விட்டேன்.

என் பிடிவாதம் பார்த்து, ஆயா முகத்தில் முதன்முறையாக சிரிப்பு. அது என்றும் மறக்காது எனக்கு.

இனி வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது.

பாவம் அவர்கள்.

வெளியே சொல்ல முடியாத பல விதமான வலிகளோடு அவர்களில் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

வலிகள் தான் வாழ்க்கை அவர்களுக்கு.?

படித்ததில் பிடித்தது

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 15, 2022 2:41 pm

"வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது."-
அருமை! வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! 3838410834

நான் அடிக்கடி பலரிடம் சொல்லியிருக்கிறேன்; ‘’பட்டுப்புடவை 50000 ரூ. சொல்வான்; பேசாமல் கொடுத்துவிட்டுக் , கும்பிட்டுவிட்டு வருவீர்கள்! ஆனால் ஆட்டோக்காரன் ஐந்துரூபாய் கூடக் கேட்டால் ஒருமணிநேரம் அவனோடு மல்லாடுவீர்கள்! ”



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 15, 2022 5:00 pm

மிக்க உண்மை. 

சிறிய ரோட்டோர கடை வியாபாரிகளிடம் 

பேரம் பேசுதல் சரியான அணுகுமுறை அல்லவே அல்ல.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 16, 2022 11:25 am

Dr.S.Soundarapandian wrote: "வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது."-
அருமை! வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது! 3838410834

நான் அடிக்கடி பலரிடம் சொல்லியிருக்கிறேன்; ‘’பட்டுப்புடவை 50000 ரூ. சொல்வான்; பேசாமல் கொடுத்துவிட்டுக் , கும்பிட்டுவிட்டு வருவீர்கள்! ஆனால் ஆட்டோக்காரன் ஐந்துரூபாய் கூடக் கேட்டால் ஒருமணிநேரம் அவனோடு மல்லாடுவீர்கள்! ”
மேற்கோள் செய்த பதிவு: 1368624

ரொம்ப சரி ஐயா!...பாவம் அவர்கள்...தலைக்கு மேல் சுமையாக பொருள் கொண்டுவருபவர்களிடம் பேரம் பேசவே கூடாது என்றும் எங்க அப்பா சொல்வார்..புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக