புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலக்கிய நயம்
Page 1 of 1 •
"இலக்கியம்" என்றதும் நம் எண்ணத்தில் முதலில் தோன்றுவது "காதல்" என்ற பொருள் தானே? காரணம், "காதல்" மனித உணர்வுகளில் பின்னிப் பிணைந்து, உணர்வுகளை தட்டிச் சீக்கிரம் தூண்டி விடுகிறது. காதல் சுவை சொல்லாத இலக்கியங்களே இல்லை என்று கூறுமளவிற்கு இலக்கியத்தில் "காதல்" பின்னிப் பிணைந்து இழையோடுகிறது.
இங்கு காதலில் கட்டுண்டு, கன்னி ஒருத்தி தன் காதல் ஜெயித்து, திருமணத்தில் கொண்டு வந்து சேர்த்த சேதியை அறிந்து கட்டுக் கடங்காத மகிழ்வினில் துள்ளிக் குதிக்கின்றாள்.
"காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம் போல் கனிந்ததம்மா".....
என்று காத்திருந்த காதல், பழம் போல் கனிந்ததை கவிஞர் கூறுகிறார்.
"தாய்" ஒரு பெண்ணிற்கு பிறந்த போதிலிருந்து, அவளிற்குரிய தேவை அறிந்து, நேரம் அறிந்து, அன்பும் பாசமும் கலந்து கொடுத்து, அவள் மனதின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து, அரவணைத்து வளர்க்கின்றாள். அத்தகைய அன்பும் பாசமும், மண நாள் சேதியை காதலன் கூறுவதைக் கேட்ட மாத்திரத்தில் மறைந்து விடும் என்று கூறுகிறாள்.
இதையே கவிஞர்.....
"காதல் உன்பால் இல்லை என்றால்
கன்னி உள்ளம் கருகி விடும்
தேதி வைத்து சேதி சொன்னால்
தாய் முகமும் மறந்து விடும்".....என்று கூறுகிறார்.
அடுத்து, பெண்கள் கூந்தலுக்கு பூச்சூடும் அழகு, அந்தக் கூந்தலுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்து, அவர்கள் எழிலுக்கு மேலும் மெருகு சேர்த்து விடுகிறது. தாயானவள் தன் மகளிற்கு கூந்தலில் பூச்சூடி, தன் மகளின் அழகை இரசித்து மகிழ்வாள். அந்தப் பூச்சூடும் உரிமை கூட மணமானதும் கணவனுக்குச் சொந்தமாகி விடுகிறது.
இதையே மிக இயல்பாக, யதார்த்தமாக கண்ணதாஸன் அந்தப் பெண்ணின் உள்ளப் பாங்கில் நின்று....
"தங்க மகள் கூந்தல் என்று
தாய் முடித்துப் பூவும் வைப்பாள்
மங்கை மணம் முடித்து விட்டால்
மணவாளன் பூ முடிப்பான்"..... என்று வடித்து விடுகிறார்.
அடுத்து இன்னொரு தத்துவத்தை மிக அழகாக, நாமாக விரும்பிக் கொண்டு வந்து இவ்வுலகில் பிறந்து விடுவதில்லை என்பதையும், பிறந்தவர்கள் யாவரும் பெற்றவர்களாலே வளர்க்கப்படுகின்றார்கள் என்பதையும் கூறி, தம்மை விரும்பி மணம் முடிப்பவர்கள் தம்முடைய உயிரில் தம்மை இணைத்து வளர்ப்பார்கள். என்று "தம் கணவனே தமக்கு உயிர்" என்றும், ஒரு கணவனுக்கே மனைவியானவள் சொந்தமாகி விடுகிறாள் என்பதையும், மிக நயமாக, பண்பாடு, நாகரீகம் தவறாமல், காதலால் பிணைக்கப் பட்டு, உயிரோடு கலந்து கொண்ட உறவாக இணைத்து விடுகிறார்.
தாய்க்குப் பின் தலைவனே தனது வழிகாட்டி, வாழ்க்கை என்று கூறிவிடும் அழகு கண்ணதாஸனுக்கே உரிய நடையில் நான்கு வரியில் வடித்து கொடுத்திருக்கிறார்.
"நாம் விரும்பிப் பிறப்பதில்லை
பெற்றவளே வளர்ப்பதில்லை
தாம் விரும்பி மணமுடிப்பார்
தம் உயிரில் நமை வளர்ப்பார்".....என்று கூறுகிறார்.
அடுத்து வரும் வரிகளில் "காதல்" என்றாலே தோல்விதான், என்ற ஒரு உண்மையை நாம் உலகில் பரவலாக பார்க்கக் கூடியதாக இருக்கின்ற காலத்தில், இந்தக் கன்னி தன் காதல் ஜெயித்த பூரிப்பில் திளைக்கின்றாள்.
"காதலிலே தோல்வி கண்டோர்
கதைகளை நான் படித்ததுண்டு
காதலிலே வெற்றி கண்ட
கன்னி என்போல் யாருண்டு".....
என்று, களிப்பில், பெருமிதத்தில் இருக்கும் பெண்ணில் தன்னை நிலைப் படுத்தி கவிஞர் கூறுகிறார்.
அடுத்து, ஒரு பெண் ஒருவனுக்கு மனைவியாகி விட்டாலே, அவளைத் தென்றல் தீண்டுவதைக் கூட அவள் விரும்ப மாட்டாள். தன் கணவனன்றி தன் உடலை வருடுவதற்கு தென்றலுக்குக் கூட உரிமை கிடையாது, தன் உடல் முழுக்க முழுக்க தன் கனவனுக்கே சொந்தம் என்று கூறும் பாங்கு தமிழர் பெருமை கூறும் கற்பு நெறி நிலைப் படுத்தப் பட்டிருக்கும் பாங்கு, "கற்பு" என்னும் அணிகலன் பெண்ணிற்கு என்றும் பெருமை தேடித் தரும் என்பதை மிக நயமாக எளிய நடையில் கூறுவதில் கண்ணதாஸனுக்கு நிகர் கண்ணதாஸனே.
"தனித்திருந்த என்னுடலை
தழுவி வந்த தென்றலுக்கு
துணை அடைந்த என் உடலை
தொடுவதற்கும் உரிமை இல்லை".....என்று கூறுகிறார்.
அடுத்து வரும் வரிகளில் இலக்கியச் சிறப்பின் உச்சிக்கே நம்மை இழுத்துச் சென்று விடுகிறார்.
"கண் திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண் திறந்தால் போய் விடுவார்
கண் மூடிக் காத்திருப்பேன்".....
என்று, தன் கண்ணைத் திறந்து விட்டால் தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்ற பயம் கலந்த ஏக்கம் அந்தப் பெண்ணில் பின்னி நிற்கிறது. தன் கணவனை தன்னை விட்டுக் கணமேனும் பிரித்துப் பார்க்க இயலாதவளாக, கண்ணைத் திறந்த நேரத்தில் உள் புகுந்தவர், மீண்டும் கண்ணைத் திறந்து விட்டால் போய் விடுவாரோ என்ற பயத்துடனும், எங்கே கண் திறந்தால் கணவன் வேறு இடம் நாடி விடுவாரோ என்ற தாபமும் இணைந்து நிற்க, தன் கணவனை உள்ளத்தில் நிறுத்தி தனக்கே உரிமையாக்கி வைத்திருக்க விரும்புகிறாள் என்பதை நல்ல நயத்துடன் சிலேடையாக்கி, கவிதையாக்கி அந்தப் பெண்ணின் உணர்வுகளில், ஏக்கங்களில், களிப்பில் நின்று வடித்திருக்கும் நயம் அற்புதம்!... அற்புதம்!
இங்கு காதலில் கட்டுண்டு, கன்னி ஒருத்தி தன் காதல் ஜெயித்து, திருமணத்தில் கொண்டு வந்து சேர்த்த சேதியை அறிந்து கட்டுக் கடங்காத மகிழ்வினில் துள்ளிக் குதிக்கின்றாள்.
"காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம் போல் கனிந்ததம்மா".....
என்று காத்திருந்த காதல், பழம் போல் கனிந்ததை கவிஞர் கூறுகிறார்.
"தாய்" ஒரு பெண்ணிற்கு பிறந்த போதிலிருந்து, அவளிற்குரிய தேவை அறிந்து, நேரம் அறிந்து, அன்பும் பாசமும் கலந்து கொடுத்து, அவள் மனதின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து, அரவணைத்து வளர்க்கின்றாள். அத்தகைய அன்பும் பாசமும், மண நாள் சேதியை காதலன் கூறுவதைக் கேட்ட மாத்திரத்தில் மறைந்து விடும் என்று கூறுகிறாள்.
இதையே கவிஞர்.....
"காதல் உன்பால் இல்லை என்றால்
கன்னி உள்ளம் கருகி விடும்
தேதி வைத்து சேதி சொன்னால்
தாய் முகமும் மறந்து விடும்".....என்று கூறுகிறார்.
அடுத்து, பெண்கள் கூந்தலுக்கு பூச்சூடும் அழகு, அந்தக் கூந்தலுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்து, அவர்கள் எழிலுக்கு மேலும் மெருகு சேர்த்து விடுகிறது. தாயானவள் தன் மகளிற்கு கூந்தலில் பூச்சூடி, தன் மகளின் அழகை இரசித்து மகிழ்வாள். அந்தப் பூச்சூடும் உரிமை கூட மணமானதும் கணவனுக்குச் சொந்தமாகி விடுகிறது.
இதையே மிக இயல்பாக, யதார்த்தமாக கண்ணதாஸன் அந்தப் பெண்ணின் உள்ளப் பாங்கில் நின்று....
"தங்க மகள் கூந்தல் என்று
தாய் முடித்துப் பூவும் வைப்பாள்
மங்கை மணம் முடித்து விட்டால்
மணவாளன் பூ முடிப்பான்"..... என்று வடித்து விடுகிறார்.
அடுத்து இன்னொரு தத்துவத்தை மிக அழகாக, நாமாக விரும்பிக் கொண்டு வந்து இவ்வுலகில் பிறந்து விடுவதில்லை என்பதையும், பிறந்தவர்கள் யாவரும் பெற்றவர்களாலே வளர்க்கப்படுகின்றார்கள் என்பதையும் கூறி, தம்மை விரும்பி மணம் முடிப்பவர்கள் தம்முடைய உயிரில் தம்மை இணைத்து வளர்ப்பார்கள். என்று "தம் கணவனே தமக்கு உயிர்" என்றும், ஒரு கணவனுக்கே மனைவியானவள் சொந்தமாகி விடுகிறாள் என்பதையும், மிக நயமாக, பண்பாடு, நாகரீகம் தவறாமல், காதலால் பிணைக்கப் பட்டு, உயிரோடு கலந்து கொண்ட உறவாக இணைத்து விடுகிறார்.
தாய்க்குப் பின் தலைவனே தனது வழிகாட்டி, வாழ்க்கை என்று கூறிவிடும் அழகு கண்ணதாஸனுக்கே உரிய நடையில் நான்கு வரியில் வடித்து கொடுத்திருக்கிறார்.
"நாம் விரும்பிப் பிறப்பதில்லை
பெற்றவளே வளர்ப்பதில்லை
தாம் விரும்பி மணமுடிப்பார்
தம் உயிரில் நமை வளர்ப்பார்".....என்று கூறுகிறார்.
அடுத்து வரும் வரிகளில் "காதல்" என்றாலே தோல்விதான், என்ற ஒரு உண்மையை நாம் உலகில் பரவலாக பார்க்கக் கூடியதாக இருக்கின்ற காலத்தில், இந்தக் கன்னி தன் காதல் ஜெயித்த பூரிப்பில் திளைக்கின்றாள்.
"காதலிலே தோல்வி கண்டோர்
கதைகளை நான் படித்ததுண்டு
காதலிலே வெற்றி கண்ட
கன்னி என்போல் யாருண்டு".....
என்று, களிப்பில், பெருமிதத்தில் இருக்கும் பெண்ணில் தன்னை நிலைப் படுத்தி கவிஞர் கூறுகிறார்.
அடுத்து, ஒரு பெண் ஒருவனுக்கு மனைவியாகி விட்டாலே, அவளைத் தென்றல் தீண்டுவதைக் கூட அவள் விரும்ப மாட்டாள். தன் கணவனன்றி தன் உடலை வருடுவதற்கு தென்றலுக்குக் கூட உரிமை கிடையாது, தன் உடல் முழுக்க முழுக்க தன் கனவனுக்கே சொந்தம் என்று கூறும் பாங்கு தமிழர் பெருமை கூறும் கற்பு நெறி நிலைப் படுத்தப் பட்டிருக்கும் பாங்கு, "கற்பு" என்னும் அணிகலன் பெண்ணிற்கு என்றும் பெருமை தேடித் தரும் என்பதை மிக நயமாக எளிய நடையில் கூறுவதில் கண்ணதாஸனுக்கு நிகர் கண்ணதாஸனே.
"தனித்திருந்த என்னுடலை
தழுவி வந்த தென்றலுக்கு
துணை அடைந்த என் உடலை
தொடுவதற்கும் உரிமை இல்லை".....என்று கூறுகிறார்.
அடுத்து வரும் வரிகளில் இலக்கியச் சிறப்பின் உச்சிக்கே நம்மை இழுத்துச் சென்று விடுகிறார்.
"கண் திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண் திறந்தால் போய் விடுவார்
கண் மூடிக் காத்திருப்பேன்".....
என்று, தன் கண்ணைத் திறந்து விட்டால் தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்ற பயம் கலந்த ஏக்கம் அந்தப் பெண்ணில் பின்னி நிற்கிறது. தன் கணவனை தன்னை விட்டுக் கணமேனும் பிரித்துப் பார்க்க இயலாதவளாக, கண்ணைத் திறந்த நேரத்தில் உள் புகுந்தவர், மீண்டும் கண்ணைத் திறந்து விட்டால் போய் விடுவாரோ என்ற பயத்துடனும், எங்கே கண் திறந்தால் கணவன் வேறு இடம் நாடி விடுவாரோ என்ற தாபமும் இணைந்து நிற்க, தன் கணவனை உள்ளத்தில் நிறுத்தி தனக்கே உரிமையாக்கி வைத்திருக்க விரும்புகிறாள் என்பதை நல்ல நயத்துடன் சிலேடையாக்கி, கவிதையாக்கி அந்தப் பெண்ணின் உணர்வுகளில், ஏக்கங்களில், களிப்பில் நின்று வடித்திருக்கும் நயம் அற்புதம்!... அற்புதம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"காதல்" மனித உணர்வுகளில் பின்னிப் பிணைந்து, உணர்வுகளை தட்டிச் சீக்கிரம் தூண்டி விடுகிறது. காதல் சுவை சொல்லாத இலக்கியங்களே இல்லை என்று கூறுமளவிற்கு இலக்கியத்தில் "காதல்" பின்னிப் பிணைந்து இழையோடுகிறது. இதோ மீண்டும் ஒரு கண்ணதாசனின் பாடல் ஒன்று பற்றி சற்றுப் பார்ப்போமே..........
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.
உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன
பூ முகம் சிவந்தா போகும்
பாவை உன் முகத்தைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே கனவோ என்று
வாடினேன் தனியே நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு.
உலகத்தில் இனம், மதம், மொழி எல்லாவற்றையும் கடந்து தோன்றும் உணர்வுகளில் பின்னிப் பிணைந்து காணப்படுவது "காதல்" என்ற உணர்வே. முன் பின் தெரியாத ஓர் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது, தம் உணர்வுகளிற்குள் இனம் புரியாத பற்றுப் பாசம் பின்னிப் பிணைந்து; ஒரு வித துடிப்பு ஏற்படுகிறது! இந்தத் துடிப்பு முன் பின் உணராத துடிப்பாகவும், புதுமையான தாகவும் ஏற்பட்டு விடுகிறது. இத்தனைக்கும் இவர்கள் எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, எங்கேயோ சந்தித்திருப்பார்கள். இருப்பினும் இந்த உணர்வுகள் சந்தித்துக் கொள்கிறது. ஒன்றை ஒன்று கவ்வியும் கொள்கிறது.
குறுந்தொகைப் பாடல் ஒன்று இப்படிக் கூறுகிறது:.............
"யாயும், ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளீர்!
யானும் நீயும் எவ்வழி அறிந்தும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே"
"நான் யாரோ? நீ யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? எந்தவகை உறவும் இல்லாதவர்கள். ஆனாலும் நானும் நீயும் செம்பாட்டு மண்ணில் நீர் கலந்து, அந்த மண்ணில் ஒன்றாகி ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது போல்; நம் இருவருடைய அன்பும் ஒன்று கலந்து விட்டதே" என்கின்றான் அந்தத் தலைவன்.
இது உலகியல்."காதல்" உயிர் வாழும் எல்லா இனங்களிற்கும் இருந்து விடுகிறது. " காதல், காதல், காதல்! காதல் போயிற் சாதல், சாதல்"...என்றான் பாரதி.
காதல் இல்லாத இலக்கியங்களே இல்லை எனலாம். இலக்கியங்கள் யாவும் மனித வாழ்வைப் பின்னிப் பிணைத்துக் காட்டுகின்றன. சங்க கால இலக்கியங்களில் எங்கு பார்க்கும் போதும் காதல்தான் நிறைந்திருக்கின்றன.
சங்க கால இலக்கியத்தை எளிமைப்படுத்தி இலகு தமிழில் எடுத்து வருகின்றன அநேகமான திரை இசைப் பாடல்கள். பாமரரும் புரியும்படி கவி கொடுத்த, பாரதி வழிவந்த கண்ணதாசனும் பல திரை இசைப் பாடல்களில் இணைத்திருக்கிறார். அந்த வகையில் இந்தக் குறுந்தொகைப் பாடலை கண்ணதாசன் இப்படிக் கொடுத்திருக்கிறார்.
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.
என்று "வாழ்க்கைப் படகு" படத்தில் இலக்கியக் காதலைப் புகுத்தியிருக்கிறார்.
அதே வேளை இந்தப் பாடலில் கண்ணதாசன் வள்ளுவனின் குறள் தரும் இலக்கியத்தையும் இணைத்திருக்கிறார் இப்படி:............
"யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக் கால்
தான் நோக்கி மெல்ல நகும்.
என்றான் வள்ளுவன். காதலிற்கு மெருகூட்டுவது "நாணம்" என்ற பொருளாகும். காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் பேசிக் கொள்ளும் போது, ஆணானவன் நிமிர்ந்து பெண்ணின் முகம் பார்த்துப் பேசிக் கொள்வான். ஆனால் பெண்ணானவள் ஆண் தன்னைப் பார்க்கும் போது நிலம் பார்த்து காலால் கோலம் போட்டு கொள்வாள். அதேவேளை ஆண் தன்னைப் பாராத நேரம், அவனைப் பார்த்து சந்தோஷித்துக் கொள்வாள். இது காதலில் பெண்மையின் சிறப்பு. அவள் நாணுவதில் காதலில் பெருமை பின்னிப் பிணைந்து இருக்கிறது. அதுவே ஒரு பெண்மைக்கும் சிறப்பு என்கிறான் வள்ளுவன்.
இதையே கண்ணதாசன் இந்தப் பாடலில் இப்படிக் கூறுகிறார்.
"உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே !
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே !
என்று மிகவும் அழகாகவும், நல்ல நயத்துடனும் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறியிருக்கிறார்.
சத்தியா
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.
உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன
பூ முகம் சிவந்தா போகும்
பாவை உன் முகத்தைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே கனவோ என்று
வாடினேன் தனியே நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு.
உலகத்தில் இனம், மதம், மொழி எல்லாவற்றையும் கடந்து தோன்றும் உணர்வுகளில் பின்னிப் பிணைந்து காணப்படுவது "காதல்" என்ற உணர்வே. முன் பின் தெரியாத ஓர் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது, தம் உணர்வுகளிற்குள் இனம் புரியாத பற்றுப் பாசம் பின்னிப் பிணைந்து; ஒரு வித துடிப்பு ஏற்படுகிறது! இந்தத் துடிப்பு முன் பின் உணராத துடிப்பாகவும், புதுமையான தாகவும் ஏற்பட்டு விடுகிறது. இத்தனைக்கும் இவர்கள் எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, எங்கேயோ சந்தித்திருப்பார்கள். இருப்பினும் இந்த உணர்வுகள் சந்தித்துக் கொள்கிறது. ஒன்றை ஒன்று கவ்வியும் கொள்கிறது.
குறுந்தொகைப் பாடல் ஒன்று இப்படிக் கூறுகிறது:.............
"யாயும், ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளீர்!
யானும் நீயும் எவ்வழி அறிந்தும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே"
"நான் யாரோ? நீ யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? எந்தவகை உறவும் இல்லாதவர்கள். ஆனாலும் நானும் நீயும் செம்பாட்டு மண்ணில் நீர் கலந்து, அந்த மண்ணில் ஒன்றாகி ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது போல்; நம் இருவருடைய அன்பும் ஒன்று கலந்து விட்டதே" என்கின்றான் அந்தத் தலைவன்.
இது உலகியல்."காதல்" உயிர் வாழும் எல்லா இனங்களிற்கும் இருந்து விடுகிறது. " காதல், காதல், காதல்! காதல் போயிற் சாதல், சாதல்"...என்றான் பாரதி.
காதல் இல்லாத இலக்கியங்களே இல்லை எனலாம். இலக்கியங்கள் யாவும் மனித வாழ்வைப் பின்னிப் பிணைத்துக் காட்டுகின்றன. சங்க கால இலக்கியங்களில் எங்கு பார்க்கும் போதும் காதல்தான் நிறைந்திருக்கின்றன.
சங்க கால இலக்கியத்தை எளிமைப்படுத்தி இலகு தமிழில் எடுத்து வருகின்றன அநேகமான திரை இசைப் பாடல்கள். பாமரரும் புரியும்படி கவி கொடுத்த, பாரதி வழிவந்த கண்ணதாசனும் பல திரை இசைப் பாடல்களில் இணைத்திருக்கிறார். அந்த வகையில் இந்தக் குறுந்தொகைப் பாடலை கண்ணதாசன் இப்படிக் கொடுத்திருக்கிறார்.
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.
என்று "வாழ்க்கைப் படகு" படத்தில் இலக்கியக் காதலைப் புகுத்தியிருக்கிறார்.
அதே வேளை இந்தப் பாடலில் கண்ணதாசன் வள்ளுவனின் குறள் தரும் இலக்கியத்தையும் இணைத்திருக்கிறார் இப்படி:............
"யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக் கால்
தான் நோக்கி மெல்ல நகும்.
என்றான் வள்ளுவன். காதலிற்கு மெருகூட்டுவது "நாணம்" என்ற பொருளாகும். காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் பேசிக் கொள்ளும் போது, ஆணானவன் நிமிர்ந்து பெண்ணின் முகம் பார்த்துப் பேசிக் கொள்வான். ஆனால் பெண்ணானவள் ஆண் தன்னைப் பார்க்கும் போது நிலம் பார்த்து காலால் கோலம் போட்டு கொள்வாள். அதேவேளை ஆண் தன்னைப் பாராத நேரம், அவனைப் பார்த்து சந்தோஷித்துக் கொள்வாள். இது காதலில் பெண்மையின் சிறப்பு. அவள் நாணுவதில் காதலில் பெருமை பின்னிப் பிணைந்து இருக்கிறது. அதுவே ஒரு பெண்மைக்கும் சிறப்பு என்கிறான் வள்ளுவன்.
இதையே கண்ணதாசன் இந்தப் பாடலில் இப்படிக் கூறுகிறார்.
"உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே !
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே !
என்று மிகவும் அழகாகவும், நல்ல நயத்துடனும் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறியிருக்கிறார்.
சத்தியா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா அண்ணா உங்கள் இருவருகம்கும் வாழ்த்துக்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|