புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_m10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_m10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_m10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_m10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_m10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_m10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_m10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_m10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_m10தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 16, 2022 7:59 pm

தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Vikatan%2F2019-05%2F7e0d8766-65e0-4359-9dbf-df9a723a1241%2Fhoneymoon600.jpg?auto=format%2Ccompress&dpr=1
--
திருமணம் முடித்த கையோடு இளம் ஜோடி செல்லக்கூடிய தேனிலவுப் பயணம் என்பது, அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத இன்ப தருணமாக அமையும். சரியான இடங்களைத் தேர்வு செய்தால் மட்டுமே, தேனிலவுப் பயணம் இனிதாக அமையும். கூடுதலாக கொஞ்சம் திட்டமிட்டால் விதவிதமான அனுபவங்கள் கிடைக்கும்.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி என தமிழகத்தில் பல ஜில்லிடவைக்கும் தேனிலவு மையங்கள் இருப்பது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், தமிழ்நாட்டை ஒட்டிய கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், புதுமண தம்பதிகளின் தேனிலவைத் தித்திப்பாக்க ஏராளமான இடங்கள் உள்ளன. அவற்றில் டாப் 10 இடங்களை இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.

1. வர்க்கலா

‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் கேரளாவில் தேனிலவைக் கொண்டாட எழில்கொஞ்சும் பல கடற்கரைகள் உள்ளன. அவற்றில் ஒன்று வர்க்கலா. பப்பில் ஏரியில் போட்டிங் போகலாம். ஜோடியாக கைகோர்த்துக்கொண்டு அந்தக் கடற்கரையின் பேரழகை ரசித்தவாறு நடந்து செல்லலாம். வர்க்கலாவில் காஃபி ஷாப்-கள் மிகவும் பிரபலம். அங்கு கிடைக்கும் காஃபியின் வாசனையோடு சூரியன் அஸ்தமனமாகும் அழகையும் பருகலாம். அங்கு விற்பனையாகும் வெள்ளி நகைகள், உடைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை நினைவுப்பொருட்களாக வாங்கி வரலாம். விமானம், ரயில், கார் மூலமாகவும் வர்க்கலாவுக்குச் செல்லலாம். வர்க்கலாவுக்கு அருகே திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையமும், ஷிவகிரி ரயில் நிலையமும் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆடம்பர ஹோட்டல்களும், குறைந்த கட்டணத்தில் தங்கக்கூடிய ஹோட்டல்களும் நிறைய உள்ளன.

2. பெக்கல்

கேரள மாநிலத்தில் உள்ள அழகான இடம். கடற்கரையும் கோட்டை நகரமும் ஒருங்கே அமைந்த இந்த இடம், நகரங்களின் பரபரப்புமிக்க வாழ்க்கையில் இருந்து நன்கு இளைப்பாறுவதற்கு அமைதியாக இடம் இது. நகரத்தில் உள்ள வசதிகளையும், இயற்கையின் அழகையும் ஒருசேர அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற புதுமணத்தம்பதிகள் இங்கு தேனிலவு செல்லலாம். பெக்கல் கோட்டையில் இருந்து அரபிக்கடலில் சூரியன்மறையும் அற்புத அழகை ரசிக்கலாம். நொம்பிளி ஆறு மற்றும் அமைதியான கழிமுகப்பகுதியில் படகு சவாரி போகலாம். காசர்கோடு ரயில் நிலையமும், மங்களூர் விமான நிலையமும் பெக்கல் அருகில் அமைந்துள்ளன. தேனிலவு தம்பதிகள் தங்குவதற்கு நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப நிறைய ஓட்டல்கள் உள்ளன.

3. குமரகம்

தேனிலவு தம்பதிகளுக்கான சொர்க்கபூமி என்று கேரளாவில் உள்ள குமரகத்தைச் சொல்லலாம். காண்பவர் நெஞ்சை கொள்ளையடிக்கும் கழிமுகப்பகுதியில் படகு உலா போகலாம். பெரும்பாலும் இங்கு வரும் தேனிலவுத்தம்பதிகள், உலகத்தரம் வாய்ந்த படகு வீடுகளில் ஒரு நாள் முழுவும் தங்குகிறார்கள். கொச்சின் சர்வதேச விமான நிலையமும், கோட்டயம் ரயில் நிலையமும் குமரகம் அருகில் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப தங்கும் விடுதிகள் உள்ளன. குறைந்த கட்டணத்தில் கெஸ்ட் ஹவுஸ்கள் நிறைய உள்ளன.

4. கோவளம்

கேரளாவின் இந்த அழகிய கடற்கரை, தென் இந்தியாவின் சிறந்த தேனிலவு மையங்களில் ஒன்று. சூரியன் மறையும் அழகுக்காட்சியை ரசித்தவாறு கலங்கரை விளக்கம் பகுதியில் நடந்து செல்வது சுகானுபவம். சூரிய குளியலுக்கு சிறந்த இடம். புதுமணத்தம்பதிகள், மெழுவர்த்தியின் மங்களான வெளிச்சத்தில் அமர்ந்தவாறு விதவிதமான கடல் உணவு வகைகளை ருசிக்கலாம். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் போகலாம். திருவனந்தபுரம் விமான நிலையம், திருவனந்தபுரம் ரயில் நிலையம் அருகில் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஹோட்டல்களும், கெஸ்ட் ஹவுஸ்களும் உள்ளன.

5. ஆழப்புழா

தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கேரளப் பகுதிக்கு விரும்பி வருகிறார்கள். குறிப்பாக தேனிலவு கொண்டாடுவதற்கு புதுமண ஜோடிகள் இங்கு நிறைய வருகிறார்கள். படகு வீடுகளுக்கு பிரபலமான இடம் இது. இயற்கை சூழ்ந்த பேக்வாட்டரில் மிதக்கும் படகு வீடுகளில் பகலிலும், இரவிலும் பொழுதை அனுபவிக்கலாம். அது நம் வாழ்நாளில் மறக்க முடியாத பொழுதாக நிச்சயம் மாறும். கொச்சின் சர்வதேச விமான நிலையமும், ஆழப்புழா ரயில் நிலையமும் அருகில் உள்ளன. பட்ஜெட்டுக்கு ஏற்ப விதவிதமான படகு வீடுகள் உள்ளன. நம் விருப்பப்படி அதைத் தேர்வு செய்யலாம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm


6. தேக்கடி

தேனிலவு கொண்டாட சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று. தமிழ்நாடு-கேரளா எல்லையில் உள்ளது. இங்கு, பெரியார் வனஉயிரியல் சரணாலயம் உள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய வனஉயிரியல் சரணாலயம் இதுதான். பல புதுமண ஜோடிகளின் கனவுப்பிரதேசம் இது. இயற்கையை ரசித்தவாறு அமைதியாக தேனிலவைக் கொண்டாடலாம். தேயிலை தோட்டங்கள் வழியாக ஜோடியாக நடந்து செல்வது சுகமான அனுபவம். ஜீப் சவாரி மற்றும் படகு சவாரியும் செய்யலாம். மதுரை விமான நிலையமும், கோட்டயம் ரயில் நிலையமும் அருகில் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு ஹோட்டல்களும், கெஸ்ட் ஹவுஸ்களும் உள்ளன. வீடுகளில் பேயிங் கெஸ்ட்டாக தங்கும் வசதியும் உண்டு.

7. வயநாடு

கேரளாவில் அடர்த்தியான வனப்பகுதி இது. முழுக்க முழுக்க இயற்கை சூழ்ந்த பகுதியாக இருப்பதால், தேனிலவுக்கு உகந்த இடம். வாசனைமிக்க தோட்டங்கள் வழியாக ஜோடியாக நடந்து செல்வது சுகமான அனுபவம். ஒன்றாக டிரெக்கிங் போகலாம். கோழிக்கோடு சர்வதேச விமான நிலையமும், கோழிக்கோடு ரயில் நிலையமும் அருகில் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப தங்கும் இடங்கள் உள்ளன. ஹோட்டல்கள் முதல் வீடுகளில் பேயிங் கெஸ்டாக தங்குவது வரை பலவிதமான தங்கும் இடங்கள் உள்ளன.

8. ருஷிகொண்டா

ஆந்திராவில் உள்ள அழகிய கடந்கரை. பாறைகளால் அமைந்த கடற்கரை. மேல் பகுதியில் பசுமைப் பிரதேசம் காட்சியளிக்கிறது. அமைதியை விரும்பும் புதுமணத்தம்பதிகள் சென்றுவர தகுந்த இடம். விசாகப்பட்டினத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்தக் கடற்கரையில் இளம் ஜோடிகள் கைகோத்து உலாவுவது சுகானுபவம். ஜோடியாக கடலில் குளிக்கலாம். விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையமும், விசாகப்பட்டினம் ரயில் நிலையமும் அருகில் உள்ளன.

9. கபினி

கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. வனம் சூழ்ந்த அழகான தேனிலவுப் பிரதேசம். கபினி ஆற்றை ஒட்டிய வனப்பகுதி. பெங்களூரில் இருந்து 275 கி.மீ தொலைவில் உள்ளது. பந்திப்பூர் வனப்பகுதியின் அழகை ரசித்துக்கொண்டே த்ரில்லான பயணம் போகலாம். அமைதியும், அழகும் நிறைந்த இடம். நம் அன்புக்கு உரியவர்களுடன் அனுபவிப்பதற்கு உகந்த இடம். புதுமணத்தம்பதிகள் தோளில் கைபோட்டுக்கொண்டு கபினி ஆற்றங்கரையில் நடந்து செல்வது ஆனந்தமான அனுபவம். மைசூர் விமான நிலையம் 90 கி.மீ தூரத்தில் உள்ளது. மைசூர் ரயில் நிலையத்தில் இறங்கியும் செல்லலாம். இது ரொம்ப காஸ்ட்லியான இடம். குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கான ஓட்டல்கள் மிகக்குறைவு. நாள் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலான ரூம்களே அதிகம்.

10. கூர்க்

கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. தேனிலவு தம்பதிகளின் சொர்க்கம். இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும். அட்வெஞ்சரை விரும்பும் தம்பதிகளாக இருந்தால், தேனிலவு பயணத்தில் கொஞ்சம் த்ரில் அனுபவிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஏராளமான காபி தோட்டங்கள் உள்ளன. அதன் வழியாக டிரக்கிங் போகலாம். காவிரி ஆற்றில் பரிசல் பயணம் போகலாம். அரிய வகை பறவைகள் மற்றும் தாவரங்களைப் புகைப்படங்கள் எடுத்து ரசிக்கலாம். அபி அருவியில் குளித்து மகிழலாம். தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் ஓர் இரவு தங்குவது த்ரில்லான அனுபவம். மைசூர் விமான நிலையம், மைசூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளன. நம் பட்ஜெட்டை பொறுத்து தங்குவதற்கான இடங்கள் உள்ளன. விருந்தினரை உபசரிப்பது, நட்பாகப் பழகுவுது ஆகியவற்றுக்கு கூர்க் மக்கள் புகழ்பெற்றவர்கள். அவர்களின் வீடுகளில் பேயிங் கெஸ்ட் ஆக தங்கலாம்.
-
நன்றி: விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக