புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10 
20 Posts - 3%
prajai
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 14, 2022 6:40 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’


1 . கைதி எண் 43! ஆம், இவர் பெயர் கடைசி வரை கூறப்படவே இல்லை! அவரை இப்படிக் காட்டுகிறார் ஆசிரியர் :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ BnQ4oa7

நெர் – 43! அந்தக் காலத்தில், number என்ற சொல் நம்மவர்களைப் படாத பாடு படுத்தியுள்ளது! பலர் ‘நிர்’ என்று முன்பு எழுதியுள்ளனர்! புதுமைப்பித்தன் ‘நெர்’ என்று எழுதியுள்ளார்; யாரும் ‘நர்’ என்று எழுதவில்லை! ‘நம்பர்’ என்பதன் சுருக்கம் ‘நர்’தானே? வெகுநாட்கள் கழித்துத்தான் ‘எண்’ என  ஒருமுகமாக எழுதலாயினர்!
கதையின்படி, எண்43, ஒரு புரட்சிச் சிந்தனை உள்ளவந்தான்; ஆனால் பயங்கரமான ஆள் அல்லன்! அதிலும் இவரைக் கொலைக்குற்றத்தில் சிறையில் அடைத்துள்ளனர்! அரசாங்கம் அதன் வசதிக்காக எடுத்த முடிவு இது ! எண்43இன் தோற்றத்தைப் பார்த்தாவது அரசின் தவற்றை உணர்ந்திருக்கலாம் ; உணரவில்லை! அரசு இயந்திரம் என்பது , எக்காலத்திலும் , ஒரு மோசமான இயந்திரம்! இந்தக் கருத்தையே புதுமைப்பித்தன் சொல்லவருகிறார்!

2 . எண் 43க்கு ஒரு ‘சிநேகிதை’! அவள் வருகைக்காகக் காத்திருக்கிறார் 43! இன்னும்15 நாட்களில் தூக்கு இருக்கும் நிலையில், அவர் எழுதி வைத்திருக்கும் கிரந்தத்தை (புத்தகத்தை) அவளிடம் ஒப்படைத்துவிட்டால் , அவருக்குத் திருப்தியாகிவிடும்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ P8gDJ1G

சிறையிலிருந்துகொண்டு அக் கைதி எழுதிய நூல் மக்களின் பார்வைக்குப் போகவேண்டும் என்பதால், சமுதாயத்திற்குத் தேவையான சிந்தனைகள் கொண்டது அஃது என்பது விளங்குகிறது!
கைதியின் ‘சிநேகிதை’யும், அக் ‘கிரந்த’மும் நமக்கு ஆர்வத்தைத் தூண்டி விடுவனவாக உள்ளன! அடிப்படைச் சிறுகதை உத்தி இது!
 
3 . இப்போது, சிறையில் அக் கைதியால் எழுதப்பட்ட புத்தகம் நமக்கு அறிமுகப்படுத்த வேண்டும்! இதற்கு என்ன செய்கிறார் ஆசிரியர்? சிறைக் காவலரைச் சோதனை போட அனுப்புகிறார்; அவர் ஏன் சோதனை போட விரும்பினாராம்? :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ 33jG5QI

 ‘சூப்பிரண்ட்’ பரமேஸ்வரனின் அந்தராத்மா சொல்லியதோ என்னவோ என்று குழப்பிவிட்டார் பாருங்கள்! இதுவும் ஒரு உத்திதான்! ஏனென்றால், உலகில் எல்லாமே ஒரு கணக்குவழக்கோடு நடந்துகொண்டிருப்பதில்லை! இஃது ஒரு சமுதாய உளவியல்தான்!

4 . சிறையிலிருந்த அக் கைதியிடமிருந்து  தாள் கற்றையை அதிகாரிகள் பிடுங்கிய காட்சியை இப்படிச் சித்திரிக்கிறார்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ ZmiHhrS

‘அதிகாரிகள் அடித்து உதைத்துப் பிடுங்கினார்கள்’ என எழுதவில்லை! அவர் எழுதியதை மீண்டும் ஒருமுறை மேலே பாருங்கள்!  இதுதான் புதுமைப்பித்தனைத் தேர்ந்த எழுத்தாளர் எனச் சாற்றவல்ல இடம்!
இங்கு மீண்டும் , கைதி ஓர் இலட்சியவாதி என்பதை உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர் கவனியுங்கள்! ஏனெனில், அப்போதுதான் அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்படும்போது ஓர் அவலச்சுவை தோன்றும்! இதுதான் உத்தி!

5 . கைதிக்குத் தூக்குத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது! அதனால், கைதியின் சிநேகிதைக்குக் கைதியைப் பார்க்க அனுமதி இல்லை!

6. இப்போது , கதை ‘சூப்பிரண்ட்’ பரமேஸ்வரன் பக்கம் திரும்புகிறது.
பரமேஸ்வரன் , அதிகாரியாக இருந்தாலும் , சதா சிறையிலேயே இருக்கவேடிய சூழல்! இவ்வகையில் இவரும் கைதிதான் என்கிறார் ஆசிரியர்! பரமேஸ்வரன் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் நமக்கு உண்டாகவேண்டும்; கதை இறுதிக்கு இது தேவை! அதனால் இப்படி எழுதுகிறார் ஆசிரியர்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ NJLAjTi

 ’நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!’ (மூதுரை 10) என்றார் ஔவையார்! இது பொதுவான நீதி மொழிதான்! ஆனால்,  ‘இது ஒரு தத்துவப் பிரமை’ என்று ஒரு போடு போடுகிறார் புதுமைப்பித்தன்! சரிதானே? தொடர்ந்து ஆசிரியர் , ‘தீயார்’களைத் தண்டிக்கிறேன் எனக் கிளம்பும் அரசு, நல்லவர்களையும்  , தெரிந்தோ தெரியாமலோ, தண்டித்துவிடுகிறது எனக் கூறுகிறார் ஆசிரியர்! இதுவும் சரிதானே?  இரண்டாம் வகைக்கு எடுத்துக்காட்டு, சிறை அதிகாரி பரமேஸ்வரன் என்கிறார் ஆசிரியர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தமாதிரி எல்லாம் பரமேஸ்வரன் நினைத்ததே இல்லையாம்!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ QE7siHM

துயருரும் மக்களுக்குத் தாம் ஏன் இப்படித் துயருருகிறோம் என்பது தெரியாது! உண்மையைச் சொன்னாலும், சொன்னவனைச் சந்தேகப்படுவார்களே ஒழிய உண்மை அவர்களுக்கு எட்டவே எட்டாது! இஃது ஒரு சமுதாய உளவியல்!  இதைத்தான் தொட்டுக் காட்டுகிறார் புதுமைப்பித்தன் வேறுவகையில்!

7 . அது சரி! சிறையில் , சிறையதிகாரி பரமேஸ்வரன் நம் கைதியிடம் கைப்பற்றிய தாள்களில் என்ன இருந்தது?:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ 7XzYMNa

கைதிக்கு முகம் காட்டாத அப் பெண், கைதியின் மனத்தை வெகுவாகப் பாதித்துள்ளாள்!  அது மட்டுமல்ல அவனின் புரட்சிக்கு ஈடுகொடுப்பவள் என்றும் நம்புகிறான்! ஆகவே, கைதி எழுதியது முழுவதும் காதற் செய்திகள்தான் என எண்ண வேண்டியதில்லை; அப்படி ஆசிரியர் காட்டவும் இல்லை. அத் தாள்களைப் படித்த அதிகாரி பரமேஸ்வரனின் மனமே மாறிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! பரமேஸ்வரனின் மன ஓட்டம் இதுதான்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ JaOK1sE

‘அந்நிய அரசாக இருந்தால் என்ன, நம் அரசாக இருந்தால் என்ன?எல்லாம் இப்படித்தான்’என்ற பாங்கில் கூறுவதைக் கவனியுங்கள் ! 1934இல் எழுதப்பட்ட கதை இது; அப்போது தமிழகத்தை ஜஸ்டிஸ் கட்சி ஆண்டது.
‘கடமை’பெரிதுதான்! ஆனால் , அதையும் பகுத்தறிவோடு பயன்படுத்தவேண்டும்! – என்ற அரிய கருத்தை இங்கு மொழிகிறார் புதுமைப்பித்தன்! அடிக்கடி, திரைப்படங்களில் வரும் மோதல் காட்சிதான் இது! இங்கே ,  ‘அரசுக் கடமையா? சமுதாயக் கடமையா ?’ என்று கேட்கப்படுகிறது சிறையதிகாரி பரமேசுவரனிடம்; பரமேசுவரன், ‘சமுதாயக் கடமையைத் தேர்ந்தெடுக்கிறார்!’; ‘பறிமுதல்’கதை , அர்த்தமுள்ளதாகி விட்டது!

8 . நம் கைதியைப் பார்க்கச் ‘சிநேகிதை’ப் பெண் , சுவர் ஏறிக்குதித்து, சிறைக்கு நுழைகிறாள்; ஆனால், பரமேசுவரன் பிடித்துக்கொள்கிறார்! ஆனால் , ‘சல்லடம்’ போட்ட  (சல்லடம் – கால் சட்டை ; டிரௌசர்) அவளைத் தண்டிக்கவில்லை! அவர்தான் கைதியின் எழுத்துகளைப் படித்து உண்மையைத் தெரிந்துகொண்டாரே!
கைதியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்தத் தாள் கற்றையை, அப் பெண்ணின் பைக்குள் போடுகிறார் பரமேசுவரன்; அதை எப்படித் தீட்டுகிறார் ஆசிரியர்?:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ QrNQssx

நாமாக இருந்தால், ‘தாள் கற்றையை அவள் பைக்குள் போட்டார் பரமேஸ்வரன்’என்றுதானே எழுதுவோம்? ஆனால், புதுமைப்பித்தன் எப்படி எழுதினார் பாருங்கள்!
இருவரும் ஏன் மௌனமாக நின்றனர்? அவள் இதை எதிர்பார்க்கவில்லை! ‘ஆமாம்! இதைத் தக்க வழியில் நீதான் பயன்படுத்த வேண்டும்!’ என்று பரமேசுவரன் மௌன மொழியால் தெரிவித்தார்! இதனைப் புரிந்துகொள்ளச் சிறிது நேரம் ஆகுமல்லவா? அதுதான் ‘மௌனம்!’

9 .அவ்வளவுதான்! கதை முடிந்தது! முடிக்கும்போது, ஒரு தொடரை உச்சமாக (climax)எழுதி முடிக்கிறார் ஆசிரியர்:

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ PJ05S2y

ஒன்றும் பறிமுதல் ஆகவில்லை!
வெளிப்படையாகத் தாள் கற்றை பறிமுதல் செய்யப்பட்டாலும், அது சேரவேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டதே! கைதியின் இலட்சியம் எல்லாம், ‘சல்லடம்’போட்ட பெண் மூலமாக இனி வளருமல்லவா? நிலைப்படுமல்லவா?
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக