உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!by ayyasamy ram Today at 7:07
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 6:20
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 6:07
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 6:05
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 6:01
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 5:53
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 21:49
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 21:24
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 21:23
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 21:21
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 21:19
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 21:15
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 20:44
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 20:24
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 09/08/2022
by mohamed nizamudeen Yesterday at 20:06
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 17:06
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 11:28
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 11:23
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 11:22
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 11:19
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 11:12
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 11:10
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 11:10
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 11:04
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 11:03
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 11:02
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 11:00
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:59
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 10:56
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 10:56
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 10:54
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 10:54
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 10:53
» கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 10:53
» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:21
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Mon 8 Aug 2022 - 23:07
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Mon 8 Aug 2022 - 21:02
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Mon 8 Aug 2022 - 20:24
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 12:29
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 12:28
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 11:06
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 8:37
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 8:32
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:57
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:49
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:38
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:35
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
2 posters
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
1 . மகா மசானம் – பெரிய மயானம்; பெரிய சுடுகாடு
2 . வளர்ந்துவரும் சென்னை நகரைத்தான் ‘மகா மசானம்’ என்கிறார் ஆசிரியர். அவர் காட்டும் காட்சி!:

தவிர்க்க இயலாவாறு அமையும் பாதை முடிச்சுகள் ஒருபுறம், யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது, இடித்துத் தள்ளிக்கொண்டு போகும் மனிதர்கள் இன்னொரு புறம், இடையிலே தேவையற்ற செயல்களின் அரங்கேற்றம் என்று ,ஒரு பெருங் குழப்பச் சித்திரமே ஆசிரியர் தந்துள்ளது!
3 . நகரத்தின் ‘அவசரம்’ அடுத்துச் சுட்டப்படுகிறது!

( காபூலிவாலா – ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து அந்நாளில் உலர் திராட்சை , முந்திரிப் பருப்பு முதலியவற்றைக் கல்கத்தாவுக்குக் கொண்டுவந்து விற்ற பட்டானிய வியாபாரி; பிறகு சென்னையிலும் விற்றனர். சிலுமன் கொடுத்து – ‘காபுலிவாலா’ என்று கூவி ).
இதனை அடுத்துச், ‘சாவகாசமாகச்’ செத்துக் கொண்டிருப்பவரைக் காட்டப் போகிறார் ஆசிரியர்!அதனால் , நகரின் அவசரத்தினை இப்போது , முன்னதாக, விளக்குகிறார். இது ஒரு சிறுகதை உத்தி!
பலவிதச் செயல்களும் நடந்தாக வேண்டி இருப்பதால், நகரத்தில் அவசரம்!கிராமத்தில் செயற்பாடுகள் குறைவு , அதனால் அங்கு சாவகாசம்,அமைதி!
4 . இதோ ஆசிரியர் காட்டும் அந்தச் ‘சாவகாச’க் காட்சி!:

அங்கு என்ன நடக்கிறது என்பது அவ் வழியாகப் போவோர்க்குத் தெரியாது! மீதிப்பேர்க்குத், தெரிந்துகொள்ள எந்த விருப்பமும் இல்லை!
இதுதான் நகரம்! அன்றும்! இன்றும்!
‘சாவகாசமாக’ச் சாகும் அப் பிச்சைக்காரனின் நிலையை வெகு நுணுக்கத்துடன் இப்படிக் காட்டுகிறார்!:

5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!
6. அவசரப்பட்ட ‘ஜீவன்’ ஒன்றால், அச் சிறுமி, ‘சாவகாசமாக’ச் செத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அருகே தள்ளப்பட்டாள்! ( ‘ஜீவன்’ என்றது ஓர் ஆளைத்தான்!)
அங்கு , ஒரு குவளையிலிருந்து நீரைச், செத்துகொண்டிருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுக்க, ஓர் இளைய பிச்சைக்காரன் முயன்றுகொண்டிருந்தான். அது ஒரு வேடிக்கையாகக் குழந்தைக்கு இருந்தது!:

7 . படுத்திருக்கும் ஒருவரின் வாயில் நீர் ஊற்றுவதில் சிக்கல் இல்லை என நாம் நினைக்கிறோம்! அதில் ஒரு எழுத்துத் திறனைக் காட்டுகிறார் புதுமைப்பித்தன்!:

‘ஆமாமாம் … எல்லோருக்கும் இப்படித்தான்’ என்று நம்மைச் சொல்ல வைத்துவிட்டா ரல்லவா ஆசிரியர்?
8 . சாகும் பிச்சைக்காரனுக்குத் தண்ணீர் கொடுக்கும்போது, குழந்தை, ‘மெதுவா மெதுவா’ என்கிறது! அதை அப்படியே புகைப்படம் எடுத்து நம்மிடம் காட்டுகிறார் ஆசிரியர்!:

9 . ஆனால் , குழந்தைக்கு நிலைமையின் தீவிரம் எதுவும் தெரியவில்லை! ‘தள்ளிப்போ’ என்று இளம் பிச்சைக்காரன் சொன்னதின் பின், இருவருக்கும் இடையே நடந்த உரையாடலைப் பாருங்கள்!:

உயிர் பிரிவதைத் தலையைச் சாய்த்துக் காட்டி அவர் தெரிவித்ததில், ஒரு வேடிக்கையைத்தான் பார்த்தது அக் குழந்தை!
இன்னும் பாருங்கள்!:

குழந்தை உளவியலை இங்கு எழுதியுள்ளதைப் பாருங்கள்!
(தம்படி – ஓர் அணாவின் 12இல் ஒரு பங்கு மதிப்பு; 1836ஐ ஒட்டிப் புழக்கத்தில் இருந்தது. ‘தம்பிடி’ என்பதும் இதுவே; ‘தம்பிடிக்குப் பிரயோஜனமில்லை’ என்பார்கள்; இவ் வழக்கு இப்போது அருகி வருகிறது! )
சரி!குழந்தையின் அறியாமையை ஆசிரியர் நமக்குக் கூறுவது ஏன்?
சாகப்போகும் ஒருவனிடமும், ஏதுமறியாக் குழந்தையிடமும்தான் , நகரத்தில், ஒரு நிதானம் உள்ளது எனபதைக் காட்டவே!
10 . இளம் பிச்சைக்காரன் என்ன செய்தான்?
சாவிலிருக்கும் பிச்சைக்காரனுக்காகப் போடப்பட்ட இரண்டு தம்படிகள், அவசரமாக நடப்பவன் அறியாமல் கீழே போட்ட ஓரணா , குழந்தையிடம் கேட்டுவாங்கிய ஒரு தம்படி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ‘பால் வாங்கி வருகிறேன் பாவா’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்! திரும்பவே இல்லை!
இதுதான் மசானம்! மகா மசானம்!
11. சாகக் கிடந்த பிச்சைக்காரனின் உயிர் பிரிந்ததை இப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்!:

இளம் திரைப்பட இயக்குநர்கள் புதுமைப்பித்தனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன!
12 . இறந்த பிச்சைக்காரனின் உடலைச் சிலர் மட்டும் ஏறிட்டுப் பார்த்தார்களாம்!

‘ஏறிட்டுப் பார்த்தார்கள்!’ அவ்வளவுதான்! இதுதான் நகரம்! ஆகவேதான் ‘ மகா மசானம்’!
குழந்தை , கடைசிவரை அறியாக் குழந்தையாகவே இருக்கிறது! அதனால் அது ‘சாவகாச’ மன நிலையில் உள்ளது!
***
1 . மகா மசானம் – பெரிய மயானம்; பெரிய சுடுகாடு
2 . வளர்ந்துவரும் சென்னை நகரைத்தான் ‘மகா மசானம்’ என்கிறார் ஆசிரியர். அவர் காட்டும் காட்சி!:

தவிர்க்க இயலாவாறு அமையும் பாதை முடிச்சுகள் ஒருபுறம், யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது, இடித்துத் தள்ளிக்கொண்டு போகும் மனிதர்கள் இன்னொரு புறம், இடையிலே தேவையற்ற செயல்களின் அரங்கேற்றம் என்று ,ஒரு பெருங் குழப்பச் சித்திரமே ஆசிரியர் தந்துள்ளது!
3 . நகரத்தின் ‘அவசரம்’ அடுத்துச் சுட்டப்படுகிறது!

( காபூலிவாலா – ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து அந்நாளில் உலர் திராட்சை , முந்திரிப் பருப்பு முதலியவற்றைக் கல்கத்தாவுக்குக் கொண்டுவந்து விற்ற பட்டானிய வியாபாரி; பிறகு சென்னையிலும் விற்றனர். சிலுமன் கொடுத்து – ‘காபுலிவாலா’ என்று கூவி ).
இதனை அடுத்துச், ‘சாவகாசமாகச்’ செத்துக் கொண்டிருப்பவரைக் காட்டப் போகிறார் ஆசிரியர்!அதனால் , நகரின் அவசரத்தினை இப்போது , முன்னதாக, விளக்குகிறார். இது ஒரு சிறுகதை உத்தி!
பலவிதச் செயல்களும் நடந்தாக வேண்டி இருப்பதால், நகரத்தில் அவசரம்!கிராமத்தில் செயற்பாடுகள் குறைவு , அதனால் அங்கு சாவகாசம்,அமைதி!
4 . இதோ ஆசிரியர் காட்டும் அந்தச் ‘சாவகாச’க் காட்சி!:

அங்கு என்ன நடக்கிறது என்பது அவ் வழியாகப் போவோர்க்குத் தெரியாது! மீதிப்பேர்க்குத், தெரிந்துகொள்ள எந்த விருப்பமும் இல்லை!
இதுதான் நகரம்! அன்றும்! இன்றும்!
‘சாவகாசமாக’ச் சாகும் அப் பிச்சைக்காரனின் நிலையை வெகு நுணுக்கத்துடன் இப்படிக் காட்டுகிறார்!:

5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!
6. அவசரப்பட்ட ‘ஜீவன்’ ஒன்றால், அச் சிறுமி, ‘சாவகாசமாக’ச் செத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அருகே தள்ளப்பட்டாள்! ( ‘ஜீவன்’ என்றது ஓர் ஆளைத்தான்!)
அங்கு , ஒரு குவளையிலிருந்து நீரைச், செத்துகொண்டிருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுக்க, ஓர் இளைய பிச்சைக்காரன் முயன்றுகொண்டிருந்தான். அது ஒரு வேடிக்கையாகக் குழந்தைக்கு இருந்தது!:

7 . படுத்திருக்கும் ஒருவரின் வாயில் நீர் ஊற்றுவதில் சிக்கல் இல்லை என நாம் நினைக்கிறோம்! அதில் ஒரு எழுத்துத் திறனைக் காட்டுகிறார் புதுமைப்பித்தன்!:

‘ஆமாமாம் … எல்லோருக்கும் இப்படித்தான்’ என்று நம்மைச் சொல்ல வைத்துவிட்டா ரல்லவா ஆசிரியர்?
8 . சாகும் பிச்சைக்காரனுக்குத் தண்ணீர் கொடுக்கும்போது, குழந்தை, ‘மெதுவா மெதுவா’ என்கிறது! அதை அப்படியே புகைப்படம் எடுத்து நம்மிடம் காட்டுகிறார் ஆசிரியர்!:

9 . ஆனால் , குழந்தைக்கு நிலைமையின் தீவிரம் எதுவும் தெரியவில்லை! ‘தள்ளிப்போ’ என்று இளம் பிச்சைக்காரன் சொன்னதின் பின், இருவருக்கும் இடையே நடந்த உரையாடலைப் பாருங்கள்!:

உயிர் பிரிவதைத் தலையைச் சாய்த்துக் காட்டி அவர் தெரிவித்ததில், ஒரு வேடிக்கையைத்தான் பார்த்தது அக் குழந்தை!
இன்னும் பாருங்கள்!:

குழந்தை உளவியலை இங்கு எழுதியுள்ளதைப் பாருங்கள்!
(தம்படி – ஓர் அணாவின் 12இல் ஒரு பங்கு மதிப்பு; 1836ஐ ஒட்டிப் புழக்கத்தில் இருந்தது. ‘தம்பிடி’ என்பதும் இதுவே; ‘தம்பிடிக்குப் பிரயோஜனமில்லை’ என்பார்கள்; இவ் வழக்கு இப்போது அருகி வருகிறது! )
சரி!குழந்தையின் அறியாமையை ஆசிரியர் நமக்குக் கூறுவது ஏன்?
சாகப்போகும் ஒருவனிடமும், ஏதுமறியாக் குழந்தையிடமும்தான் , நகரத்தில், ஒரு நிதானம் உள்ளது எனபதைக் காட்டவே!
10 . இளம் பிச்சைக்காரன் என்ன செய்தான்?
சாவிலிருக்கும் பிச்சைக்காரனுக்காகப் போடப்பட்ட இரண்டு தம்படிகள், அவசரமாக நடப்பவன் அறியாமல் கீழே போட்ட ஓரணா , குழந்தையிடம் கேட்டுவாங்கிய ஒரு தம்படி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ‘பால் வாங்கி வருகிறேன் பாவா’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்! திரும்பவே இல்லை!
இதுதான் மசானம்! மகா மசானம்!
11. சாகக் கிடந்த பிச்சைக்காரனின் உயிர் பிரிந்ததை இப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்!:

இளம் திரைப்பட இயக்குநர்கள் புதுமைப்பித்தனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன!
12 . இறந்த பிச்சைக்காரனின் உடலைச் சிலர் மட்டும் ஏறிட்டுப் பார்த்தார்களாம்!

‘ஏறிட்டுப் பார்த்தார்கள்!’ அவ்வளவுதான்! இதுதான் நகரம்! ஆகவேதான் ‘ மகா மசானம்’!
குழந்தை , கடைசிவரை அறியாக் குழந்தையாகவே இருக்கிறது! அதனால் அது ‘சாவகாச’ மன நிலையில் உள்ளது!
***
Re: சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Dr.S.Soundarapandian likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|