புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10 
3 Posts - 5%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10 
1 Post - 2%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10 
41 Posts - 79%
dhilipdsp
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10 
1 Post - 2%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 28, 2022 5:50 pm

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’

1 . தலைவன் குறிச்சி எனும் ஊரின் இரணவீர முத்துமாரி அம்மன் கோயில் அவ் வட்டாரத்தில் பிரசித்தம் என்பதைக் கூறித்தான் கதை தொடங்குகிறது. ஐந்து வயதுக் குழந்தைக்கும் அம்மன் மகிமை ‘கரதலப்’ பாடமாகத் தெரியும்! இந்த அம்மனை முதலில் படிப்போர் மனத்தில் பதிய வைப்பதில் முதல் வெற்றியைப் பெறுகிறார் கு.அழகிரிசாம்!
மக்கள் எவ்வித ஆராய்ச்சியும் இல்லாமல், எவ்விதச் சிந்திப்பும் இல்லாமல், ‘ஒரு பழக்கமாகவே’ அம்மனைச் ‘சக்தி வாய்ந்தவள்’ என நினைத்துக் கொள்கிறார்கள்! உண்மையில், மிகப் பழங்காலத்துக் கிராமத்தை , பல இன்னல்களிலிருந்து காத்தவர்களே ‘காவல் தெய்வங்கள்’; இதை எனது புராண ஆய்வுகளில் எழுதியுள்ளேன்!
இயற்கையால்தான் மழை வருவதில்லை என்ற அடிப்படை அறிவியல்கூடத் தெரியாமல், ‘தெய்வக் குற்றம்’ என நம்பிக்கொண்டிருக்கும் மக்களைத்தான் நாம் பெற்றிருக்கிறோம்!
தலைவன் குறிச்சி மக்களிடம் அம்மன் பெற்றிருந்த செல்வாக்கை அச்சுக் களையாமல் வரைகிறார் ஆசிரியர்:

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ HxNqCPE


இதுவும் போதவில்லை ஆசிரியருக்கு; இன்னும் வலுவாக்க என்ன செய்கிறார்? மக்களுக்கும் தேவதைகளுக்கும் உள்ள மூட உறவு பற்றி மேல் உரைக்கிறார்!:

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ ANHEdCp

மக்கள் அன்று முதல் இன்றுவரை, மூட நம்பிக்கைகளிலேயே உழல்கிறார்களே அல்லாமல்,’ஆட்சி’ (governance) என ஒன்று இருப்பதாகவே நினைப்பதில்லை! திட்டத்தைக் ‘கமிசன்’ இல்லாமல் செயற்படுத்தினாலே மக்கள் உயர்வார்கள் என மக்க முதலில் உணரவேண்டும்!

2 . மாரியம்மனுக்கு வருடாவருடம் பொங்கல் வைத்துக் கொண்டாடுவது நின்று போனதாம்!
காரணம் , ஊர், ஒரு பெண் நிமித்தம் இரண்டு பிரிவாகி, ஒருவருக்கொருவர் வெட்டுக்குத்தாகி, இயல்பு வாழ்க்கை குலைந்து போனதுதான்! இதனைக் கதை விளக்குகிறது:

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ HkvZ7XD


3 . இந் நிலையில், ஊருக்குப் பொதுவான பூசாரிப் பண்டாரத்தின் மீது சந்தேகப்பட்டுக் கொல்ல முயலவே அவர் உயி ர்தப்பி, மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு வெளியூர்க்கு ஓடிவிடுகிறார்!
நிலைத்து ஒரு ஊரிலேயே வாழ்வோர் , ஒரு சிக்கல் வரும்போது, ஊரைக் காலி செய்துவிட்டு ஓடுவதுபோலக் கொடுமை வேறில்லை! தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு ஓடுவதும், மும்பைக்குப் போவதும், கொல்கத்தா போவதும் நீண்ட நாட்களாகவே நடைபெற்றுவரும் அவல நிகழ்வாகும்!
பூசாரி ஊரைவிட்டு ஓடியதைக் கதை இவ்வாறு விவரிக்கிறது! :

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ UekB35G

பூசாரிமீது இருந்த கோபத்தை, அவரின் பிள்ளைகள்மீது காட்டியது என்ன நியாயம்?
இதுபோன்ற பல வினாக்களை நமக்கு எழுதாமல் எழுதிச் சிந்திக்க விட்டுவிடுவது கு.அழகிரிசாமியின் அருமையான சிறுகதை உத்தி (technique of story)!

4 . தலைவன் குறிச்சி அம்மனுக்குப் பொங்கல் வைக்கப் பக்கத்து ஊர்க்காரர்கள் முன்வருகிறார்கள்! வந்தது கோபம் தலைவன் குறிச்சி ஊரார்க்கு! அதைச் சித்திரிக்கிறார் ஆசிரியர் :

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ RIWQn5y

எப்படிப் பாருங்கள்! ஊர் இரண்டுபட்டு, அறுபதுக்கும் மேற்பட்டோரைக் கைது செய்தது, நீதிமன்றத்துக்கு அலைந்தது, சிலருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தது, இவையெல்லாம் கிராமத்தார்க்கு இழிவு இல்லையாம்! பக்கத்து ஊர்க்காரன் தன் ஊரில் பொங்கல் வைப்பது மகா இழிவாகப் போய்விட்டதாம்! மக்களின் பார்வையில் உள்ள கோளாறு! இதைத்தான் சொல்லாமற் சொல்லவருகிறார் அழகிரிசாமி! இவ்வகையில் நல்ல சமுதாயச் சிற்பியாக நம் பார்வையில் மிளிர்பவர் ஆசிரியர்!

5 . ஒரு வருடம் கழிந்தபின், ஓரளவு ஊர் அமைதியான பிறகு, தலைவன் குறிச்சி ஊரார், மாரியம்மன் பொங்கலை வைக்கத் தலைப்பட்டார்கள்!
அப்போது, கோயிலைச் சுத்தம் செய்யும்போது, மாரியம்மன் புடவை இல்லாமல் இருந்ததைக் கண்டனர்! ‘யார் அம்மன் சேலையை எடுத்தது?’ என்று ஆங்காங்கே பேச்சாக இருந்தது!

6 . உண்மையில், பஞ்சத்தின்போது, பூசாரியின் மனைவிதான் உடுத்தத் துணி இல்லாமல், தன் மகனைக்கொண்டு அம்மன் சேலையை எடுத்தவரச் சொல்லி உடுத்திக்கொண்டவள்!
இதைச் சாடைமாடையாக உணர்ந்துகொண்டாள் சலவைக்காரி காளி!

7. அம்மன் பொங்கல் நாளன்று சாமியாடினாள் சலவைக்காரி காளி! அப்போது உண்மையைக் கூறிவிட முயல்கிறாள்!
ஆவேசமாகச் சாமியாடிக்கொண்டே, பூசாரி மனைவி அருகே வந்து, அவள் சேலையைப் பிடித்துக்கொண்டு , இவள்தான் அம்மன் சேலையைத் திருடியது என்று உண்மையை ஊரார்க்குக் கூறிவிடுகிறாள்!
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ QG2Pk5T

8 . ஊரார் சேர்ந்து பூசாரி மனைவியைக் கொல்லுவதுபோலக் காட்டியிருந்தால், கதையில் நல்ல உச்சம் (climax) கிடைக்காது! இதற்காக ஓர் உத்தியைக் கையாள்கிறார் ஆசிரியர்! இதற்குக் கிராமத்தார் இயல்பையே கருவியாக எடுத்துக்கொள்கிறார்! கிராமத்துப் பெரியவர் பேச்சாக இந்த உத்தி :

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ Gb8SQOR

9 . ஆனால், பூசாரி மனைவி மீது உள்ள சினம் மட்டும் யாருக்கும் குறையவே இல்லையாம்!
இதனை வெகு அழகாக, ஒரே வரியில் கூறிவிடுகிறார் அழகிரிசாமி!:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ WVz5PZz

கடலலை ,கரையைக் கடக்கவில்லையாம்! அது
கடலுக்குள்ளேயாதான் இருக்கிறதாம்! ஆனால் அந்த அலையின் உக்கிரமான வெளிப்பாடு மட்டும் இப்போது மட்டும் ஒடுங்கிக் காணப்படுகிறதாம்! அடடா!
நினைத்த கருத்தை இவ்வாறு துல்லியமாக நம்மால் வெளிப்படுத்த முடியுமா? முடியாது!
கு.அழகிரிசாமியின் எழுத்துக்களிலேயே பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய மேற்கோள் இந்த ஒரு வரிதான்!

10. சிக்கலில் பூசாரி மனைவி!
இதிலிருந்து எப்படி விடுபடுவது?
பூசாரி மனைவியைத் தன் எழுத்து ஆற்றலால் விடுவிக்கிறார் கு.அழகிரிசாமி!:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ IikVlRQ


காளியைச் சிறிது பேசவிட்டு, மீண்டும் பூசாரி மனைவி கையில் ‘மைக்’கைக் கொடுக்கிறார் அழகிரிசாமி!
காளி கேட்டது, பூசாரி மனைவி இடி போல , நெருப்பைக் கொட்டியது எல்லாவற்றையும் நீங்கள் கேட்கவேண்டாமா?:

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ CqFWN7R

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ F6zMXXT

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ N22ON7V

பூசாரி மனைவியின் சீற்றம்தான் அவளுக்கு ‘அக்கினிக் கவசம்’! ஊராரால் அடிபட்டுச் சாவதிலிருந்து தடுத்தது , இந்தக் கவசம்தான்! இதனால், ‘அக்கினிக் கவசம்’ என்ற தலைப்பு மிகச் சரியாகப் பொருதுவதைக் காண்கிறோம்!

11. கதை , முடிந்தாலும் , பூசாரி மனைவிக்குக் கைகொடுக்கிறார் ஆசிரியர்!
ஓராண்டு கழிந்து, பூசாரி மனைவி, புதிய சிற்றாடையை அந்த அம்மனுக்குச் சார்த்தித் தனது கறையை ஓரளவுக்குத் துடைத்துக்கொள்கிறாள்!
கதை முடிந்த பிறகும், ஒரு தமிழ்ப் பெண்ணின் மானத்தைக் காக்க ஆசிரியர் கையாண்ட சிறுகதை உத்தி இது! ஆகவே இதனைப் பாத்திரம் காக்கும் உத்தி (character-protecting technique) என்று புதிய பெயர் கொடுத்து நாம் அழைக்கலாம்!
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Thu Jun 02, 2022 10:20 am

கு.அழகிரிசாமியின் ‘அக்கினிக் கவசம்’ விமர்சனம் மிகச்சிறப்பாக இருக்கிறது. அருமையான தெளிவான திறனாய்வு. ஆசிரியருக்கு வாழ்த்துகள்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 02, 2022 12:53 pm

நன்றி பாரதிசந்திரன்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக