புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
81 Posts - 65%
heezulia
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
26 Posts - 21%
வேல்முருகன் காசி
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
5 Posts - 4%
eraeravi
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
223 Posts - 37%
mohamed nizamudeen
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
18 Posts - 3%
prajai
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_lcapஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_voting_barஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 27, 2022 5:03 pm


நான் அரசியல்வாதியாக இருந்தது ஊரறிந்த விஷயம், கடந்த இரண்டரை வருடங்களாக ஆளுநராக பணியாற்றி வருகிறேன். கொரோனா நேரத்தில் தெலங்கானாவில் எனது பங்களிப்பு அதிகமாக இருந்தது. எனது நிர்வாகத் திறமையை புதுச்சேரியில் ஒரு மூன்று மாதங்களுக்கு வெளிப்படுத்த முடிந்தது. அதுவும் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்படி எல்லாம் செயல்படுமோ அவற்றை விட சிறப்பாக செயல்படுத்தி நிரூபிக்க முடிந்தது. எனது இரண்டரை வருட ஆளுநர் பணியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்ததில்லை. மக்களிடம் அன்பான ஆளுநராகவும் அணுகக் கூடியவராகவும் இருப்பது எனது பலம். தெலங்கானாவில் இப்போது நிலவும் பிரச்னை, கடமையை சரியாக செய்வதால் ஒரு சில எதிர்வினைகளை சந்தித்து வருகிறேன்.

என்ன பிரச்னைகளை எதிர்கொண்டீர்கள்?

உதாரணமாக சொல்வதென்றால், ஒரு மேலவை உறுப்பினரின் நியமனத்தை செய்ய என்னிடம் பரிந்துரை செய்தார்கள். அது சேவை பிரிவின்கீழ் செய்யக்கூடிய நியமனம். ஆனால், எனது பிரிவின்கீழ் அந்த நபரை நியமிக்க முடியாதபோது, அரசே வேறு நபரின் பெயரை முன்மொழிந்தது. அவரை நியமனம் செய்தேன். இதில் எனது தனிப்பட்ட விருப்பம் என எதுவும் இல்லை. அரசியலமைப்பு விதிக்கு உட்பட்டு அரசு செய்தால் அதை நான் ஏற்று நடவடிக்கை எடுப்பேன். ஆனால், நான் அரசின் நடவடிக்கை விதிகளின்படி இல்லாதபோது அதன் பரிந்துரையை ஏற்க மறுத்தால், உடனே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இப்படி எல்லாம் இருந்தால் எப்படி சுமூகமாக அரசு நிர்வாகம் நடக்கும் என்ற கேள்வியை பொதுப்படையாகவே நான் பொதுமக்களிடம் வைக்கிறேன். என் கடமையை சரியாகச் செய்ய தனிப்பட்ட முறையில் நான் பிறரது காழ்ப்புணர்ச்சியை எதிர்கொள்ள வேண்டுமா?
தொடருகிறது .....
நன்றி கோரா.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 27, 2022 5:06 pm

-----2-----

இரண்டாவது விஷயம், ஒரு ஆளுநராக நான் செல்லும்போது மாவட்ட ஆட்சியரோ கண்காணிப்பாளரோ வந்து வரவேற்க வேண்டியது தனிப்பட்ட தமிழிசைக்கு தர வேண்டிய மரியாதை கிடையாது. அது தமிழிசை வகிக்கும் ஆளுநர் என்ற அரசியலமைப்பு உயர் பதவிக்கு தரக்கூடிய மரியாதை. அந்த பதவிக்குரிய மரியாதை மறுக்கப்படும்போது அது சரியா என்ற கேள்வியையும் நான் பொதுமக்களிடமே விட்டு விடுகிறேன். இதைத் தவிர நான் மேலும் ஆழமாக இந்த விஷயத்தைப் பகிர விரும்பவில்லை.

தெலங்கானா முதல்வருடன் பேசி நீங்கள் பிரச்னையை சரி செய்ய முயலவில்லையா?

முதல்வரின் பிறந்த நாளுக்கு நான் பூங்கொத்து கொடுத்து அனுப்பினேன். தொலைபேசியில் சில நேரங்களில் பேச நான் முயற்சி செய்துள்ளேன். அந்த முயற்சியில் அவர் வெளிப்படையாக கலந்துரையாட வரவில்லை என்பதுதான் எனது கவலை.

கடந்த முறை டெல்லி வந்தபோது பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்தீர்கள். தெலங்கானா, புதுச்சேரி என இரு மாநில ஆளுநர் பொறுப்பை ஒருசேர கவனிப்பது உங்களுக்கு சோர்வைத் தரவில்லையா? உங்களுடைய பணிச்சுமையை குறைக்குமாறு அவர்களை கேட்டுக் கொண்டீர்களா?

எனது பொறுப்புகளை நான் சோர்வாகவே நினைக்கவில்லை. புதுச்சேரியிலும் சரி, தெலங்கானாவிலும் சரி எனது பணியை நான் விரும்பியே செய்கிறேன். ஒரு ஆளுநர் ஏழு நாட்களுக்கு ஒருமுறை விடுப்பு எடுக்கலாம், வேறு மாநிலம் செல்லலாம், சொந்த வேலையை பார்க்கலாம். ஆனால், இதுநாள்வரை நான் எந்த விடுப்பும் எடுக்காமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறேன். தெலங்கானாவில் தெலுங்கு மொழி பேசும் மக்களுடன் இணைந்து ஆரம்பம் முதல் பணியாற்றுகிறேன். ஆரம்பத்தில் பதுகமா, போனாலுவில் தொடங்கி எல்லா மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். புதுச்சேரியில் தமிழ் மக்களுடன் இணைந்து பணியாற்றும்போது எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். அங்கு முதல்வரும் ஆளுநரும் இணைந்து பணியாற்றும்போது மக்களுக்கு நல்லது நடக்கிறதே என எதிர்கட்சிகள் அதை சகித்துக் கொள்ளாமல் அரசியல் செய்கிறார்கள்.

இரண்டு மாநிலம் வேண்டாம், ஒன்றே போதும் என ஒருபோதும் நீங்கள் மத்தியில் உள்ள தலைவர்களிடம் கேட்டுக் கொள்ளவில்லையா?

இரண்டு மாநிலங்களையும் நான் எனது இரண்டு கண்களாகவே கருதுகிறேன். இரட்டை குழந்தைகள் பிறந்தால் எப்படி பேதைமை பார்க்காமல் வளர்ப்பார்களோ அப்படித்தான் நான் பார்க்கிறேன். ஏற்கெனவே தெலங்கானாவில் பழங்குடி மக்களுக்கு சார்பான அணுகுமுறையை நான் கடைப்பிடிக்கிறேன். புதுச்சேரியில் என் தமிழ் மக்களுக்காக பணி செய்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது அதை வாய்ப்பாகத்தானே கருதி செயல்பட முடியும்.

ஆனால், சமீப நாட்களாக தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானாவில் இருந்து மாற்றப்படுவார் என்பது போல ஊடகங்களில் செய்திகள் வருகின்றனவே... அதை எப்படி பார்க்கிறீர்கள்?

மாற்றப்படலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும் நான் தென் மாநிலத்திலேயே தான் நியமிக்கப்படுவேன் என்கிறார்கள். சிலர் கேரளாவுக்கு மாற்றலாவேன் என்கிறார்கள். ஆனால், எல்லா தகவல்களுமே அடிப்படை ஆதாரமற்றவை.

தொடருகிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 27, 2022 5:09 pm

------3------

புதுச்சேரியில் எதிர்கட்சிகள் உங்களுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிடுகிறார்கள். தெலங்கானாவில் ஆளும் கட்சியினரே விமர்சனங்களை வெளியிடுகிறார்கள். இந்த சூழல்களை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் தலையிடும் விஷயங்களில் எல்லாமே நன்றாக நடக்கிறது என்பதுதான் அவர்களுக்கு கவலையாக இருக்கலாம். புதுச்சேரியில் கூட தேநீர் விருந்தை புறக்கணித்தனர். இத்தனைக்கும் நான் தமிழால் இணைவோம் என்றுதான் அழைப்பு விடுத்தேன். அதில் கூட அரசியலை ஏன் புகுத்துகிறீர்கள் என்று நான் கேட்கிறேன். அந்த நிகழ்ச்சியில் கூட வந்தவர்களுக்கு வணக்கம், வராதவர்களுக்கும் வணக்கம் என்றுதான் நான் பேசினேன். இதுபோன்ற நிகழ்வில் கூட அரசியலைப் புகுத்தினோம் என்றால், எதிர்கால சமுதாயத்தினருக்கு நாம் என்ன சொல்ல வருகிறோம்? புதுச்சேரி முதல்வர் கூட இப்படிப்பட்ட ஆளுநர் கிடைத்ததற்கு நன்றி என மத்திய அரசிடம் கூறினார். இதுபோல தெலங்கானாவிலும் நடக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அரசியலை ஆளுநர் மீது புகுத்துகிறார்கள். எதிர்க்க வேண்டும் என ஒரு முடிவெடுத்துக் கொண்டு அவர்கள் செயல்படுகிறார்கள். ஆளுநருக்கும், அரசுக்கும் என சில அதிகாரங்கள் உள்ளன. அவை அரசியலமைப்பு ரீதியான பொறுப்புகளாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர தனிப்பட்ட நடவடிக்கைகளாக கருதப்படக் கூடாது. எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டால் நாங்கள் ஆளுநருக்கு இணக்கமாக இருப்போம். இல்லாவிட்டால் இணக்கமற்று இருப்போம் என சொல்வது எப்படி நியாயமாகும்? இத்தகைய நிலைமை, இங்கு மட்டுமல்ல, எங்கெல்லாம் எதிர்கட்சிகள் ஆளுகின்றனவோ அங்கெல்லாம் இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கவே செய்கிறது.

பொதுவாகவே மத்தியில் ஆளும் கூட்டணிக்கு எதிராக உள்ள கட்சி ஒரு மாநிலத்தில் ஆளுகிறதென்றால், அங்குள்ள கட்சிகள் ஆட்டுக்கு தாடி போல மாநிலத்துக்கு ஆளுநர் தேவையா என்று சொல்வதை கேட்டிருப்போம். இது பற்றிய உங்களுடைய பார்வை என்ன?

நமது அரசியலமைப்பு, கருத்து சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமையை வழங்கியிருக்கிறது. பாபா சாஹேப் அம்பேத்கரை உலக அளவில் போற்றக் காரணம் அவர் நமக்கு வழங்கிச் சென்ற அரசியலமைப்புதான். அவர் குறிப்பிட்டுள்ள அந்த குடியரசு தினத்தைக் கூட உதாசீனப்படுத்தினால் நாம் எப்படி இந்த சூழலை அணுகுவது? ஆளுநர் பதவி, முதல்வர் பதவி, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் பெரியவர்கள், நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் சிறியவர்கள் என்றெல்லாம் சிலர் கருதுவதுண்டு. எல்லா பொறுப்புக்கும் ஒரு கடமை வரையறுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு தராசில் எது பெரியது என்றெல்லாம் கூற முடியாது. அவரவர் பணிக்கென அவரவர் நியமிக்கப்படுகிறார்கள். அந்த நியமனத்தை நாம் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த இயல்பு நம்மிடம் இருந்து ஏன் போகிறது என்பதுதான் எனது கேள்வி. சாதாரண அழைப்பிதழ் விடுப்பதைக் கூட அரசியலாகப் பார்க்கிறார்கள். தமிழால் கூட நாம் சேராவிட்டால் எப்படி நாம் சேருவோம் என புதுச்சேரியில் பேசினோம். புதுச்சேரியில் சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களுக்கு புதுச்சேரியைப் பற்றி என்ன தெரியும்? அதனால்தான் முத்தரசன் பேசியதற்கு எதிர்வினையாற்றும்போது தினந்தோறும் புதுச்சேரி ஆற்றும் நிர்வாகப் பணி குறித்து உங்களுக்கு என்ன தெரியும் என கேட்டிருந்தேன்.

பல முக்கிய கட்சித் தலைமையில் உள்ளவர்களுடன் சிறந்த நட்புறவை கொண்டிருக்கிறீர்கள். அவர்களுடன் பேசினாலே நீங்கள் பணியாற்றும் புதுச்சேரியில் உள்ள அந்த கட்சிகளின் நிர்வாகிகள் எதிர்ப்புக்குரலை மட்டுப்படுத்திக் கொள்ளக்கூடுமே... அதை நீங்கள் முயற்சிக்கவில்லையா?

தொடருகிறது





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 27, 2022 5:11 pm

-------4------
அது என்னுடைய வேலை இல்லைதானே... புதுச்சேரியில் நான் எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். சென்னையில் எப்படி செயல்பட்டார்களோ அதுபோலவே புதுச்சேரியிலும் நடக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். இதே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புதுச்சேரி விமான நிலையத்துக்கு நிலம் ஒதுக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். நான்கு வழிச்சாலைக்கு நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தனர். கொரோனா காலத்தில் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட தமிழக மக்களுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது.. இதை அரசு தலைமை செயலாளர் சுட்டுக்காட்டியபோது, மாநிலவாரியாக மக்களை பிரித்துப் பார்க்கக் கூடாது என்று அவரிடம் நான் அறிவுறுத்தினேன். இப்படிப்பட்ட நிர்வாகம் நடக்கும் இடத்தில் அதற்கு உதவியாக இருக்கும் ஆளுநரை வேண்டுமென்றே இலக்கு வைக்கிறார்கள். பழுத்த மரத்தில்தானே கல்லடி படும் என்ற பழமொழி உண்டு. அப்படித்தான் எனக்கு எதிராக செயல்படுபவர்களின் செயல்பாடுகளை நான் பார்க்கிறேன்.

ஒரு பெண் ஆளுநராக இத்தகைய பிரச்னைகளை சந்திக்கும்போது அவை உங்களைக் காயப்படுத்தவில்லையா?

நான் காயப்படுத்தப்பட்டதாக உணரவில்லை. சிஸ்டம் பின்பற்றப்பட வேண்டும் என விரும்புகிறேன். ஆளுநர், முதல்வர் என ஒவ்வொரு பதவிக்கும் ஒரு நெறிமுறை உண்டு. அரசியலமைப்பு சட்டத்தில் அவற்றுக்கென ஒழுங்குமுறை நடவடிக்கைகள் உள்ளன. அவை மீறப்பட வேண்டுமென்றால் பிறகு அவை எதற்காக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு குடியரசு தலைவர் வருவதாக இருந்தாலோ ஆளுநர் வருவதாக இருந்தாலோ அந்த பதவிக்கென ஒரு நெறிமுறை விதிகள் உள்ளன. அது வெறும் வணக்கம் செலுத்துவது அல்ல. அந்த சிஸ்டத்தை மாற்ற முயற்சிக்காதீர்கள் என்பதுதான் எனது கோரிக்கை. தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்காக அதை மீறாதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

தொடருகிறது





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 27, 2022 5:16 pm

------5------

ஆளுநர் தமிழிசை அவர்கள் விளக்கம். Main-qimg-934eb390e253f82d3da26b999c75e433

என் நாட்டு மொழியா, வேற்று நாட்டு மொழியா என வரும்போது என் நாட்டில் அதிகம் பேசும் மொழியாக இந்தியை பார்க்கலாம். காரணம், அந்த மொழி பேசும் மக்களுக்கு அது தாய்மொழி. தெலுங்கு, தமிழ் பேசும் மக்களுக்கும் அவரவர் தாய்மொழியே பிரதானம். இதை ஊடகங்கள் முழுமையாக அறிந்து சரியான தகவலை போடாமல் விடுவதால்தான் பிரச்னைகள் பெரிதாகின்றன. பல நேரங்களில் தலைவர்கள் பேசும் கருத்துக்கள் தவறாக செய்திகளாகி விடுவது பல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது.

தொடருகிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 27, 2022 5:18 pm

------6-----
தொழில்முறை மருத்துவர் என்ற முறையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு அவசியமா? உங்களுடைய கருத்து என்ன?

இந்த விஷயத்தில் நான் ஒரு விஷயத்தை முதலிலேயே தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் நீட் வேண்டும் என்றால் உடனே நான் தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக பேசுவதாக கருதிக் கொள்ளக்கூடாது. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளில் சேர தேர்வு இருப்பது போல, உயிர் சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை படிப்புகளில் சேரவும் நீட் போன்ற தேர்வு அவசியம் என்பது எனது கருத்து. இந்த நடைமுறை உலக அளவில் இருக்கிறது. எல்லா மாநிலங்களும் அதை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. பாமர மக்களுக்கும் அது வாய்ப்பைத் தந்து கொண்டிருக்கிறது. எல்லா மாநிலங்களும் அதன் பயனை உணர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதை நாம் சரியாக புரிந்துள்ளோமா, மறுபடியும் மறுபடியும் இதை எதிர்ப்பதற்கு பதிலாக, நீட் தேர்வை எதிர்கொள்ள நாம் நமது மாணவர்களை தயார்படுத்துகிறோமா என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு. அது எல்லாவற்றையும் ஆலோசித்து எல்லா அம்சங்களையும் கவனத்தில் கொண்டு வழங்கிய தீர்ப்பு அடிப்படையில் நீட் தேர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. நமது கல்வி நிறுவன அமைப்பு சர்வதேச தர பட்டியலில் இடம்பெறவில்லை. அதை கருத்தில் கொண்டே இந்திய கல்வி முறையை சர்வதேச அளவில் அமல்படுத்த புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது பிரதமரின் உலகளாவிய பார்வை. ஆனால், நான் நீட் வேண்டும் என கூறியவுடனேயே ஒரு சிலர் சமூக ஊடகங்களில் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கி விடுவார்கள். ஆனால், அம்புகள் வந்து தைத்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் எங்களுடைய கருத்தை பிரதிபலித்து வருகிறோம்.

=======================




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 27, 2022 5:23 pm

பொறுமையுடன் படித்து இருப்பீர்கள் உறவுகளே.

நன்றி .

என்றுமே தமிழிசை அவர்களது நிதானம் /அணுகுமுறை /விஷய ஞானம்
என்னை கவர்ந்து உள்ளது. ஆகவே பகிர்ந்துகொண்டேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக