புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
5 Posts - 63%
heezulia
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவிகளுக்கு கிடைத்த நீதி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2022 6:09 pm

மாணவிகளுக்கு கிடைத்த நீதி! சென்னை தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடி அபராதத்துடன் தடை

சென்னை: கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவிகளின் வருகை பதிவேட்டை மாற்றி தேர்வெழுத அனுமதி மறுத்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடியை சென்னை உயர்நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது.
சென்னை குன்றத்தூரில் மாதா பல் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு படித்து வந்த மாணவிகளிடம் கல்விக் கட்டணம் அல்லாமல் கூடுதலாக கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

பல மாணவிகள் கூடுதல் கட்டணம் செலுத்திய நிலையில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் படித்து வந்த ராஜ ராஜேஷ்வரி மற்றும் ரம்ய பிரியா ஆகிய 2 மாணவிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் வழக்கு
இதனால் கல்லூரி நிர்வாகம் தங்களின் வருகைப் பதிவேட்டில் திருத்தம் செய்து வருகை நாட்களை குறைத்து தேர்வெழுத அனுமதிக்கவில்லை எனக்கூறி மாணவிகள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக பல் மருத்துவப் படிப்பை முடிக்க விடாமல் கல்லூரி நிர்வாகம் தடுத்துவிட்டதாகவும் இருவரும் குற்றம்சாட்டினர். ”A" என்று மாறிய "P" இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கல்லூரி நிர்வாகத்திடம் வருகைப் பதிவேட்டை சமர்பிக்க உத்தரவிட்டது.
மாணவிகள் கல்லூரிக்கு வந்தால் "P" (PRESENT) எனவும் கல்லூரிக்கு வராவிட்டால் "A" (ABSENT) எனவும் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் குறித்து இருந்தனர். அதில் இந்த 2 மாணவிகளுக்கு "P" என குறிக்கப்பட்டிருந்த பெரும்பாலான நாட்கள் "A" என மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
மாட்டிக்கொண்ட கல்லூரி நிர்வாகம்
இதன்மூலம் மாணவிகளின் வருகை நாட்களை குறைத்து அவர்களை தேர்வெழுத மாதா பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காததை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிபடுத்தியது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கல்லூரி நிர்வாகம் தரக்குறைவான வேலைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மாணவிகளுக்கு கிடைத்த நீதி
கல்லூரி நிர்வாகத்தின் இச்செயலால் 4 ஆண்டுகளை இழந்த மாணவிகள் ராஜ ராஜேஷ்வரி, ரம்ய பிரியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.24 லட்சத்தை கல்லூரி நிர்வாகம் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல் மாணவிகள் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவர் என பட்டம் பெறும் வகையில் கல்லூரி நிர்வாகம் படிப்பு நிறைவு சான்றிதழ் (Course completion certificate) வழங்கவும் உத்தரவிட்டார்.

கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை
மாணவிகளின் வருகைப் பதிவேட்டில் மோசடி செய்ததற்காக மாதா பல் மருத்துவக் கல்லூரி எம்.ஜி.ஆர். அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.3 கோடி அபராதத்தை 8 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த கல்லூரி குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்வி இயக்குநரகம், எம்.ஜி.ஆர். அரசு மருத்துவப் பல்கலைக்கழகம், இந்திய பல் மருத்துவக் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அனைத்துக் கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு
இதுபோன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டு முறையை கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இதை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் தனது ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளில் உறுதிபடுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2022 6:24 pm

சுய நிதி கல்லூரிகளில் இதெல்லாம் சகஜம்.
அவர்களுக்கு தேவை எல்லாம் பணம் பணம்.
அதிலும் நான் கேள்வி பட்ட வரையில் (deemed university)
பல்கலைக்கழகம் என கருதப்படும் சில பொறியியல் கல்லூரிகளில்
கேள்வித்தாள்கள் முதலிலேயே கொடுக்கப்பட்டு விடுமாம்
அதற்கு தக்கபடி பதில் எழுதி பாஸாகிவிடலாமாம்.
campus நேர்காணலில் சரியாக பதில் அளிக்கமுடியாத
நூற்று கணக்கான பொறியியல் பட்ட மாணவர்கள்
சம்பந்தமில்லா வேலைகள் செய்துவருகின்றனர்.

கல்விக்கூடம் ????



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2022 7:40 pm

பயோமெட்ரிக் வருகை பதிவேட்டு முறையை கொண்டு வர வேண்டும்
என்ற நீதிமன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த வேண்டும்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2022 8:01 pm

T.N.Balasubramanian wrote:சுய நிதி கல்லூரிகளில் இதெல்லாம் சகஜம்.
அவர்களுக்கு தேவை எல்லாம் பணம் பணம்.
அதிலும் நான் கேள்வி பட்ட வரையில் (deemed university)
பல்கலைக்கழகம் என கருதப்படும் சில பொறியியல் கல்லூரிகளில்
கேள்வித்தாள்கள் முதலிலேயே கொடுக்கப்பட்டு விடுமாம்
அதற்கு தக்கபடி பதில் எழுதி பாஸாகிவிடலாமாம்.
campus நேர்காணலில் சரியாக பதில் அளிக்கமுடியாத
நூற்று கணக்கான பொறியியல் பட்ட மாணவர்கள்
சம்பந்தமில்லா வேலைகள் செய்துவருகின்றனர்.


கல்விக்கூடம் ????
@T.N.Balasubramanian
படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று 'அலம்பல்' செய்து கொண்டு திரிபவர்கள், பெரும்பாலும் இந்த ரகத்தை சேர்ந்தவர்கள் தான்..கோபம் ....இண்டர்வூவில் ஒன்றும் செய்யமுடியாதே மோசடி பேர்வழிகளால்... அது தான் வேலை கிடைப்பது இல்லை...'கட்டிக் கொடுத்த சோறு' எத்தனை நாளுக்கு வரும் ஐயா? .........வரும் கம்பெனிக்காரர்கள் தங்கள் கம்பெனி வளர ஆட்கள் எடுப்பர்களா அல்லது ............. ஆட்களை எடுப்பார்களா?
.

.
.
.
இதே நிலமை தான் டாக்டர்களுக்கும்... நிறைய பணம் கொடுத்து , உள்ளே போய்விடலாம்..ஆனால் அப்புறம் படிப்பது எப்படி???? 'நீட்' எழுதவே தகுதி இல்லை அல்லது கஷ்டமாக இருக்கிறது எனும் போது அடுத்த 4 -5 வருடங்கள் எப்படி புரிந்து படித்து, (நல்ல )மருத்துவராவார்கள்?.... எனக்கு புரியவில்லை..... அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2022 8:39 pm

டாக்டர்கள் கேஸ் வேறே.
பெரும்பான்மை டாக்டர்கள், மெடிக்கல் ரெப் சொல்லுகின்ற மருந்துகளை எழுதுகிறார்கள்.நாம்தான் அவர்களுக்கு பலியாடுகள். இது மாற்று மருந்து.
சீக்கிரம் குணமாகிறதாம். நீங்களும் இதை 7 நாட்கள் சாப்பிட்டுவிட்டு குணம் உள்ளதா என சொல்லுங்கள்.என்பார்கள்.
கிராமங்களில் பல ரெப்கள் டாக்டர்களாக பணியாற்றுகிறார்கள்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக